அமுதமொழி – விளம்பி – மாசி – 19 (2019)

பாடல்

வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துசிவாய நம என்று ஓதாமல் அவன் அருள் பெறல் இயலாது எனக் கூறும் பாடல்.

பதவுரை

மெய்யுணர்வு  இல்லாத அறியாமையை உடைய மனமே! நமக்கு என்று எக்காலத்திலும் காவலாகவும், அரணாகவும், புதையல் போன்ற பொருளாகவும் இருப்பவன் சிவபெருமானே என்று உணர்ந்து, அவனை மனத்தில் தியானித்து, மனத்தை ஒருவழிப்படுத்தி ‘சிவாய நம’ என்று திரு ஐந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தல் அல்லாது, செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனும், குருவாகவும், முனிவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கும்  அவனுடைய  அருளைப் பெறுதல் இயலுமோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 18 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

விளக்க உரை

  • காட்டுவது – ஞானம்.
  • காண்பது – காணப்படுவது.
  • ஞாதுரு = காண்பவன் –  ஆன்மா / சீவன்
  • ஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்
  • ஞேயம் = காணப்படும் பொருள் –  சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 15 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள்  மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 14 (2019)

பாடல்

பேருகாரணியத்தில் யான் சென்ற போதும் பெரும் பொருளால்
வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் இம்மண்டலத்தில்
துருவாதியர்கள் சபையில் செல்போதும் துணையெனக்கு
வருவாயுனைநம்பினேன் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஎந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய்  என்று நம்பினேன் என்று உறுதி பற்றி கூறியப் பாடல்.

பதவுரை

தோற்றத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கின்ற பெரியதான காடுகளில் யான் சென்ற போதும், பொருள் வருதல் கண்டு, அதன் பொருட்டு மகிழ்வு கொண்டும், யாகத்தை விரும்புதல், ரிஷிகள், தேவர்கள், தேவதை, துருவாதி கிரகங்கள், பிதுர்க்கள், ஆகிய இவ்விதமாக பிறத்தலை சத்துவ குணத்தில் மத்யமகதியில் பிறந்தாலும்  நீ எனக்கு துணையாக வருவாக என உனை நம்பினேன்.

விளக்க உரை

  • உலகவாழ்வினை அடர்கானகத்திற்கு உவமையாக கூறுதல் இயல்பு. முதல் உவமை இகலோக வாழ்வில் துயறுற்று நின்ற போதும் என்பது பற்றியது. இரண்டாவது உவமையில் சற்று மேன்மை உற்று சத்துவ குணத்தில் நின்ற போதும் என்பதை பற்றியது. எந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய்  என்று நம்பினேன்
  • பொருளால் வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் – பொருள் மீது பற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து இறத்தல் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 13 (2019)

பாடல்

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஈசன் தாயாகவும், தந்தையாகவும், உறவுகளாகவும், அவன் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலப் பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு, உயிரைப்பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் எங்களின் ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாகவும்,  தந்தையாகவும், உடன்பிறந்த  சகோதர சகோதரியாராகவும் அமைந்து, பூமி, பாதாளம், சுவர்க்கம் ஆகிய  மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாகவும், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாகவும் தேவர்களுக்கும் அன்பனாகியவன் சிவபெருமான் ஆவான்.

விளக்க உரை

  • உடன்தோன்றினர் – திலகவதி அம்மையார்
  • தோன்றாத்துணை  – திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குப் பெயர்
  • தோன்றாமை – உணர்விலும் உளத்திலும் தோன்றிப்புறத்தே விழிக்குத் தோன்றாமை
  • சிவன் மூன்று உலகங்களுக்கும் தந்தையாக இருப்பதை முன்வைத்து அவரை’ திரிலோகநாதர்’  என்று அழைப்பது கொண்டு ஒப்பு நோக்கி உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 12 (2019)

பாடல்

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளையும், அவன் வீற்றிருக்கும் திருப்புனவாயில் திருத்தல பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

ஊக்கம் மிகுந்தவனும் செருக்குடைய மனம் உடையவனும், வேல் வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு செய்தவனும், அழகும், பெருமையும் ஊடைய கயிலை மலையால் வீற்றிருந்து அருளும் சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடமாவதும், பழமையான அவனுடைய புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகு பெறுமாறு விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமானதுமான திருத்தலம் திருப்புனவாயில் ஆகும்.

விளக்க உரை

  • புனம் – காடு
  • வேலன் – இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு  எனவே வேலன்
  • மனம்மிகு – ஊக்கம் மிகுந்த
  • வலிஒல்கிட – வலிமை குறையும்படி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 11 (2019)

பாடல்

புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
   புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
   கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
   மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
   நம்பினேன் கைவிடேல் எனையே

ஆறாம் திருமுறை – திருஅருட்டா – வள்ளலார்

கருத்துகைவிடாது இருக்க வேண்டி விண்ணப்பம்.

பதவுரை

எனது கண்ணிலும், கருத்திலும் கலந்து நின்ற கடவுளே! மண்ணில்  தோன்றியும், மிகுந்தும் இருப்பவர்களையும், வானில் இருப்பவர்களையும் மதிக்கவில்லை; அவ்வாறு மதிப்பவர்கள் தம்மிடத்தில் பொருந்தி இருக்கவில்லை; உடலில்  காயம் ஏற்படுத்திய புண்ணிலே அம்பு தைத்தது போன்று துயரம் ஏற்படுத்தி என்னை கலங்கச் செய்தது போதும்;  உன்னை மட்டும் நம்பியதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை ஆகவே என்னை கைவிடாது இருப்பாயாக.

விளக்க உரை

  • கருத்தன் – செய்வோன், தலைவன், கடவுள்
  • வயங்குதல் – ஒளிசெய்தல், விளங்குதல், தெளிதல், தோன்றுதல், மிகுதல், நடத்தல்
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 8 (2019)

பாடல்

மூலம்

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே

பதப்பிரிப்பு

அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும்  எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.

விளக்க உரை

  • அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
  • அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
  • தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
  • தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 7 (2019)

பாடல்

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

காட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது  ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

விளக்க உரை

  • ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.
  • உறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெஞ்சமாக்கூடல்

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருவெஞ்சமாக்கூடல்

  • மூலவர் சந்நிதி வாயிற்கதவுகளில் கொங்கு நாட்டிலுள்ள ஏழு தேவாரத் தலங்களின் மூல வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ள தலம்.
  • வெஞ்சமன் என்ற வேடர்குல மன்னன் அரசாண்ட தலம்
  • இந்திரன் அகலிகை சாபநிவர்த்திக்காக வழிபட்டு அருள்பெற்ற தலம்
  • குடகனாற்று வெள்ளப்பெருக்கால் பழைய கோயில் சிதிலமானதால் தற்போதைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது புதிய கோயில்
  • சுந்தரரின் தேவாரப் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் கிழவராகவந்து, தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் ( பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கியத் தலம். ( குறிப்பு – கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் )
  • முருகப்பெருமான், ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி
  • அருகில் கருவூர் ஆனிலை தேவாரத்தலம்.

 

தலம் திருவெஞ்சமாக்கூடல்
பிற பெயர்கள் வெஞ்சமாங்கூடலூர்
இறைவன் கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்
இறைவி பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷிணி, விகிர்த நாயகி)
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் குடகனாறு, விகிர்த தீர்த்தம்
விழாக்கள் மாசிமகத்தில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் , திருக்கார்த்திகை , மகா சிவராத்திரி
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை ௦7:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦7:3௦ வரைஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
வழி மூலப்பாடி, அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம். PIN – 639109
04320-238442, 04324-238442, 99435-27792, 9443362321, 9894791878
வழிபட்டவர்கள் இந்திரன்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் கரூர் – அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள சீத்தப்பட்டி சாலையில் சுமார் 8 கிமீ தூரம். மற்றைய வழிகள் – கரூர் – ஆற்றுமேடு சாலை வழி , கரூர் – திண்டுக்கல் சாலை வழி

கரூரில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவு

இதர குறிப்புகள் கொங்குநாட்டுத்தலங்களில் 7 வதுதலம்.

 

பண்ணேர் மொழியம்மை உடனாகிய கல்யாண விகிர்தீஸ்வரர்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           42
திருமுறை எண்  4

 

பாடல்

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

பொருள்

இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும்,  குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           42
திருமுறை எண்  7

 

பாடல்

கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

 

பொருள்

உடல்கள் எரிக்கப்படுவதால் கருமை நிறம் படிந்த  சுடுகாட்டை இடமாக கொண்டு நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே, ரிஷபத்தின் மீது விரும்பி ஏறி வருபவனே, இயல்பாய் பிற உயிர்களுக்கு நன்மை செய்பவனே, மணம் உடைய கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, ஆயிரம் புள்ளிகளை உடைய படங்கள் பொருந்தியதும், பருத்ததும், நெருப்பு போன்ற கண்களை உடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்றதும் ஆன நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே,  திருவெஞ்சமாக் கூடலில் எழுந்து அருளியிருக்கின்ற இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 6 (2019)

பாடல்

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மரணிக்கும் தருவாயில் ‘இங்கிருக்கிறேன்’ என்று இருப்பிடத்தைக் காட்டி அருள் புரிய வேண்டுதல்.

பதவுரை

முதற்கடவுளாகவும், அனைவருக்கும்  மேம்பட்டனும் ஆகிய இறைவனே, திருமேனி முழுதும் நீறு பூசப்பட்டதால் சங்கினை ஒத்த வெண்ணிறமான மேனியை உடைய செல்வனே, வெட்கத்தை கொடுப்பதும், குற்றத்தினையும், கேட்டினை உடையதும் ஆன இந்த உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் நீக்கி, அதன் மூலம் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, இந்த உடல் மண்ணுடன் பொருந்தி கலக்குமாறு செய்து, உன்னைப்பற்றி ஆர்வம் கொண்டு, விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்து, மனதினில் உன்னை தியானித்து, என் உயிர் போய் இறக்கும் தருவாயில், இறைவனே, நாய் போன்றவனாகிய அடியேன் உன்னை ‘எங்கிருக்கின்றாய்’ என்று வினவினால், ‘இங்கிருக்கிறேன்’ என்று  உனது இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியவேண்டும்.

விளக்க உரை

  • அங்கம் – உடம்பு
  • மண்ணுக்கு ஆக்கி –  புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடல் நீங்குதல்
  • விழுந்து தொழும்போது – உடம்பு மண்ணில் கழிக்கப்பட்ட பிறகு,  உயிர் அந்த உடம்பில் இருந்து நீங்கிச் சிவத்தில் கலத்ததாக  எண்ணுதல் சைவ மரபு .
  • பரமன் – முதற்கடவுள்
  • பங்கம் – தோல்வி, குற்றம், அவமானம், வெட்கம், விகாரம், கேடு, நல்லாடை, சிறுதுகில், இடர், துண்டு, பங்கு, பிரிவு, குளம், அலை, சேறு
  • பிறவியளறு –  பிறவிச் சேற்றினை; பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா  எனும்  கந்தரலங்கார பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 5 (2019)

பாடல்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும்  சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்

பதவுரை

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு,  சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து  வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய  இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.

விளக்க உரை

  • கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 4 (2019)

பாடல்

மூலம்

சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி யலைகொண்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே

பதப்பிரிப்பு

சொல்லக் கருதியது ஒன்று உண்டு கேட்கில், தொண்டாய் அடைந்தார்
அல்லல் படக்கண்டு பின்என் கொடுத்தி, அலைகொள் முந்நீர்
மல்லல் திரைச்சங்கம் நித்திலம் கொண்டுவம்பு அக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந்து எற்று ஒற்றியூர்உறை உத்தமனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – அடியவர்கள் துன்பத்தை நீக்க திருவுள்ளம் கொண்டது பற்றி வினா எழுப்பியது

பதவுரை

முந்நீர் எனும் கடலின் வளமான அலைகள் கொண்டதும், கடலின் கரையில் இருப்பதும், திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு வந்து சேர்பதும், பழமையானதும், வேகமாக வந்து அலைகளை ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! திருச்செவியினை கொடுத்து நீ கேட்பதற்குத் தயாரானால், ‘உனக்கு தொண்டு செய்வதற்காக வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீ, இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்’ என்பதே அடியேன் கேட்க நினைக்கும் கேள்வி ஆகும்.

விளக்க உரை

  • முந்நீர் – கடல், ஆழி
  • மல்லல் – வளம்
  • நித்திலம் – முத்து
  • ஒல்லை – வேகமாய், காலதாமதமின்றி , சீக்கிரமாக, சீக்கிரம், சிறுபொழுது, தொல்லை, தொந்தரவு, பழமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 1 (2019)

பாடல்

மூலம்

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
யேற்குமனல் முக்கோண மெப்போது- மார்க்கு
மறுகோணங் கால்வட்ட மாகாய மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று

பதப்பிரிப்பு

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் – ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று

உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்

கருத்து – சரீரம்  பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருப்பதை விளக்கும் பாடல்

பதவுரை

பூமி எனும் பிருதிவியானது நாலு கோணம் கொண்டதாக இருக்கும்; நீர் எனும் அப்புவானது அரைச் சந்திரனைப் போல இருக்கும்; தீ எனும் தேயுவானது மூன்று கோணம் கொண்டதாக இருக்கும்; காற்று என்றும் வாயு என்றும் அழைக்கப்படும் கால் அறுகோண வடிவமாக இருக்கும்; ஆகாயமானது வட்ட வடிமாக இருக்கும்; ஆன்மா இவை எல்லாவற்றுடன் கூடி சரீரத்திலும் பொருந்தி நிற்பதால், இந்த சரீரம் எனப்படும் உடலானது பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருக்கிறது.

விளக்க உரை

  • உறுதியாதல், நிகழ்தல்
  • உறுகாய – சேர்ந்திருக்கும் உடல்
  • கால் – 1. மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. 2. ஒன்றை ஈடாக பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு; 3. காற்று 4. நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி. 5. காடு, கான், கானகம், அடவி 6. பிறப்பிடம், தோன்றும் இடம், தோற்றம் 7. வமிசம், இனமுறை 8. கறுப்பு நிறம் 9. இருள் 10. வினையெச்ச விகுதி 11. ஏழனுருபு 12. உருளை, சக்கரம், ஆழி 13. வண்டி 14. முளை 15. பூந்தாள் 16. மரக்கால் 17. அடிப்பகுதி 18. காலம், பொழுது 19. குறுந்தறி 20. வழி 21. மரக்கன்று 22. மகன் 23. வலிமை 24. வாய்க்கால் நீர்க்கால் 25. எழுத்தின் சாரியை 26. வாதம் 27. காம்பு  28. தடவை (முறை) 29. கழல் 30. சரண் 31. இயமன் 32. பிரிவு 33. மழைக்கால் 34. நடை 35. சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக்கொண்ட தலம் 36. கிரணம் 37. வெளியிடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 29 (2019)

பாடல்

மூலம்

அரம்பிடிக் கும்கண்ணினாராசை மேற்கொண் டலைவதெல்லாம்
வரம்படிக் கும்கருத் துண்மைகண் டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக் கும்துட்ட வேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம்பிடிக் கும்வடுகா காழியாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

அரம்பிடிக்கும் கண்ணினாராசை மேண்கொண்டலைவதெல்லாம்
வரம்படிக்கும் கருத்துண்மை கண்டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக்கும் துட்டவேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம் பிடிக்கும் வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வலிமைமையும், திண்மையும், திடமும், ஊக்கமும் உடையதும் தீமை தர தக்கதும் ஆன பேய், பிசாசு வகையில் சேர்ந்த வேதாளம் இவற்றோடு இறந்தவர்களின் பேய் உருவம் கொண்டதுமான பூதத்தை வெட்டியும், ஓட்டியும் அவற்றின் வினைகளை நிலைகளை கண்டறிந்து அவைகளுக்கு விடுதலையத் தரும் வடுகனே, சீகாழிபதியி வாழும் ஆபதுத்தாரணனே! இரையை பாம்பு பிடிப்பது போல், விழுங்கி விடுவதான கன்னியர் மேல் ஆசை ஆகிய பெண்ணாசை  கொண்டு அலைவது எல்லை இல்லாமல் இழுத்து சென்றுவிடும் என்னும் கருத்து உண்மையை கண்டவர்கள் எவரும் இல்லை.

விளக்க உரை

  • வேதாளம், பூதம் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு அவற்றிக்கு பிறவியைத் தரும் ப்ரமாவின் நிலையை தரம் பிடிக்கும் வடுகனே எனவும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உரம் – வலிமை, திண்மை, திடம், ஊக்கம், நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 28 (2019)

பாடல்

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
   கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
   சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
   கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
   நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மிகச் சிறந்ததான பொன் போன்ற திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிபவனும், கரிய நிறம் கொண்ட கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத இன்பத்தை தருபவனாகிய சிவன் ஆனவனும், நெருப்பை உள்ளங்கைகளில்  ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், குடம் போன்று பெரிய தலையுடன் இருப்பதும், பெரியதும் ஆன யானைனையின்  தோலை உடையவனும், ரிஷபத்தின் மேல் ஏறிவரும் சக்ரவர்த்தி போன்றவனும், எங்களுக்கு அருந்துணை ஆகி எங்களால் விரும்பப்படுபவனும், திருநள்ளாறு திருத்தலத்தில்  எழுந்து அருளி உள்ளவனும், அமுதம் போன்றவனை மறந்து, நாய் போன்ற  அடியேன் ஆகிய யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்க மாட்டேன்.

விளக்க உரை

  • நம்பன் – நம்பி, ஆண்களில் சிறந்தோன், கடவுள், சிவன், விரும்பப்படுபவன்
  • சம்பு – இன்பத்தை ஆக்குபவன்

 

ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு  –  இன்று

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 27 (2019)

பாடல்

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை தன் திருமேனி முழுதும் பூசியவனும், அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்றுமாறு இருப்பவனும், மான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கைகளைக் கொண்டவனாக, நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

விளக்க உரை

  • ஆன் முறையால் – பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட,
  • அணியிழை – உமாதேவியார்
  • விபூதி தயாரிக்கும் முறை ஆகிய (சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி,2. அனுகற்ப விதி, 3. உப கற்ப விதி படி தயாரித்தல்.
  1. கற்ப விதி – பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்டி, அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுதல்.
  2. அனுகற்ப விதி – காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
  3. உப கற்ப விதி – காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.

 

ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு -11-Feb-2019

Loading

சமூக ஊடகங்கள்

ஓங்காரம் எனும் ஒர் புள்ளி – 1

*அன்னையை உபாசிக்கும் நிறை மாந்தர் ஒருவர் தன் பெயரை சத்திசிவம் என்று உரைத்தார். அவர் உரைத்தவாறே இந்த எழுத்துகள். மானுடப் பிறவி சார்ந்து எழுதுவதால்  சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.*

ப்ராமணன்

ப்ரமம் உணர்ந்தவன் பிராமணன். பொது நலத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவன் என்றே தொடங்குவோம்.

ப்ரமம் என்பது என்ன?

விவரிக்க முற்படும் போது ஏழு சமுத்திரம் தாண்டி விவரிக்க வேண்டும். அவ்வாறு அதைத் தாண்டிய நிலையே ப்ரமம்.

ஏழ் சமுத்திரத்தினையும் தாண்டி, ஏழு புவனம் தாண்டி, ஏழு நிலை தாண்டி என விரியும்.

ஸ்ரீ சக்தியின் சொரூபமான சக்தி ரூபம் ஆகும்.

இது மொத்தம் 14 கலைகளைக் கொண்டது. சிவத்திற்கு ஏழு கலைகளையும், சக்திக்கு 7 கலைகளையும் கொண்டது.  இதுவே சிவசக்தி ஐக்கியம் ஆகும்.

அன்னை ஆகிய ஸ்ரீக்கு 7 கலைகள் ஆகும்.

அவை லயம், வாவண்யம், அர்த்தம், சாஸ்திரம், அலங்காரம், வசியம், மோகனம்

  • லயம் – ஒடுங்கும் நிலை

உ.ம்

  1. குதிரை லாயத்தில் ஒடுங்குதல்
  2. ஆடுகள் பட்டிகளில் ஒடுங்குதல்
  3. பறவைகள் கூட்டில் ஒடுங்குதல்
  4. ஆதி மனிதன் காட்டில் ஒடிங்கினான்.
  • லாவண்யம் – சிருங்காரம் ஆகிய மயக்கும் நிலை

உ.ம்

  1. பூ அழகு மயக்கும்
  2. வண்டு பூ அழகில் வாசனையில் மயங்கும்
  3. எதிர்பால் மயக்கும்
  4. இசை மயக்கும்
  5. மகுடி நாகத்தை மயக்கும்
  • அர்த்தம் – அறிவு – ஆசானான் கற்பிக்கப்படுவது. முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதி. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஏற்கும் நிலை என்றும் கூறலாம்.

உம்

  1. தீ சுடும்
  • சாஸ்திரம் – முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதிகள்.இந்த நிலையில் அறிவு மலராமல் மொக்காக இருக்கும்.
  • அலங்காரம் – நாத மற்றும் ரூப வடிவமாகும் (கண்ணால் காணப்படும் காட்சி, காதால் கேட்கப்படும் ஒலி). நிறம் , ரூபம் ஒளி வடிவானவை
  • வசியம் – வாசி, வாசி என்பது மாறி சிவா. இது ராம நாமத்திற்கும் பொருந்தும்
  • மோகனம் – அன்னை மோகன நிலை மாற்ற இயலா எண்ணம் கொள்ளாவரையில் மோகனம் திறக்காது
  • இது விஷ்ணு மாயா, சிவ மாயா, ப்ரம மாயா என மூன்றாகும். இது ரஜோ, தமோ மற்றும் சத்துவ குணத்தின் கூறுகளாகும்

மனிதன் அறிவு நிலையை அடைந்து மீண்டும் எண்ணங்களால் குழந்தை நிலை அடைய வேண்டும்.  தாயாகி குழந்தையை ரசிப்பதும், குழந்தையாகி தாயை ரசிப்பதும் ஆன்ம விடுதலை அளிக்கும்.

7 சிவ கலைகள்  பற்றிய பதிவினை அடுத்துக் காண்போம்.

தொடரும்.,

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 26 (2019)

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

முழு முதல் ஆனவனே, பொற்சபையில் ஆடுகின்ற நாதனாகவும், தலைவனாகவும் இருப்பவனே! அயன், அரி அரன் ஆகிய மூவர்க்கும், மெய் வாய் கண் மூக்கு மற்றும் செவி ஆகிய ஐம்புலன்களுக்கும், நீ வகுத்து நின்ற பாதையில் செல்லும் எனக்கும் முதலானவே, உன்னுடைய பழைய அடியார் திருக்கூட்டத்தோடு சேர்ந்து, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்திருத்தலைத் திருவருளால் கொடுத்தருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

விளக்க உரை

  • ‘மூவர்க்கும் ஐம்புலனுக்கும் முதல்’ – மூவர் தொழில் செய்பவர்கள், ஐம்புலன்கள்  செயப்படுபொருள். ஆகவே அவை எல்லாவற்றிற்கும் ஆன பெரும் தலைவன்.
  • ‘மற்றென் செய்கேன்’ –  உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்’ என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
  • ‘முழு முதல் ஆனவனே’ என்பதை சிவனின் எண் குணங்களோடு ஒப்பிட்டு உய்க.
  • கெழுமுதல் – கூடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 24 (2019)

பாடல்

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை

கடுவெளிச் சித்தர்

பதவுரை

இந்த உடலானது நல்லதொரு நாடு போன்றதுஞான நிலை அடையவொட்டாமல் தடுப்பதாகியதும், மனதால் மட்டும் வசப்படுத்தப்படுவதும்  ஆன  காமம், குரோதம், மத மாற்சரியம் என்னும் நால்வகை தீமையும், பகைக் குணங்களையும் கொண்டு யாரு அசைக்க முடியாதபடி கோட்டையாக  நாட்டைனைச் சுற்றி அமைத்துள்ளது. இந்த நால்வகைப் பகைகளையும் ஓடாதவாறு செய்து விட்டால் உடல் என்னும் நாட்டினை நம் வசப்படுத்தி ஆளலாம். வஞ்சனையை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய புலன்களைம் ஞானத்தீயினால் எரித்து விட்டால் மெய்வீடானதும், பிறவாமை ஆகியதும் ஆன முக்தி / வீடு பேறு கிடைக்கும்.

விளக்க உரை

  • மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் கோட்டையாக இருக்கின்றன என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. புத்தியும், சித்தமும் நல்லவற்றை சிந்திக்கும் திறனுனையது ஆனதாலும், அகங்காரம் நல் விஷயங்களை அகங்காரம் உறுதிப்படுத்துவதாலும், பகை என்று அடுத்து வரும் வரிகளால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்தர்க்கரணங்கள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்