அமுதமொழி – விளம்பி – தை – 29 (2019)

பாடல்

மூலம்

அரம்பிடிக் கும்கண்ணினாராசை மேற்கொண் டலைவதெல்லாம்
வரம்படிக் கும்கருத் துண்மைகண் டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக் கும்துட்ட வேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம்பிடிக் கும்வடுகா காழியாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

அரம்பிடிக்கும் கண்ணினாராசை மேண்கொண்டலைவதெல்லாம்
வரம்படிக்கும் கருத்துண்மை கண்டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக்கும் துட்டவேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம் பிடிக்கும் வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வலிமைமையும், திண்மையும், திடமும், ஊக்கமும் உடையதும் தீமை தர தக்கதும் ஆன பேய், பிசாசு வகையில் சேர்ந்த வேதாளம் இவற்றோடு இறந்தவர்களின் பேய் உருவம் கொண்டதுமான பூதத்தை வெட்டியும், ஓட்டியும் அவற்றின் வினைகளை நிலைகளை கண்டறிந்து அவைகளுக்கு விடுதலையத் தரும் வடுகனே, சீகாழிபதியி வாழும் ஆபதுத்தாரணனே! இரையை பாம்பு பிடிப்பது போல், விழுங்கி விடுவதான கன்னியர் மேல் ஆசை ஆகிய பெண்ணாசை  கொண்டு அலைவது எல்லை இல்லாமல் இழுத்து சென்றுவிடும் என்னும் கருத்து உண்மையை கண்டவர்கள் எவரும் இல்லை.

விளக்க உரை

  • வேதாளம், பூதம் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு அவற்றிக்கு பிறவியைத் தரும் ப்ரமாவின் நிலையை தரம் பிடிக்கும் வடுகனே எனவும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உரம் – வலிமை, திண்மை, திடம், ஊக்கம், நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *