விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த வனன்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவமக மாகவே
விந்துவு மாளுமெய்க் காயத்தில் வித்திலே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – யோக மார்கங்களின் வழி சிவத்தை அடையும் வழியினைக் கூறும் பாடல்
பதவுரை
விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடலில் பொருந்துமாறு மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி செய்து, நெஞ்சத்தின் இயல்பு காரணமாக மாறும்படியாக இருக்கும் உலகியலை நோக்காது பயிற்சிவயத்தால் இடையறாது (குருவால் உபதேசம் செய்யப்பட்ட) சிவ நாமத்தை எண்ணிக் கொண்டிருப்பச் செய்து சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும்.
விளக்கஉரை
- கனன் மூல – மூல அனல், குண்டலினி, வீணாத் தண்டம்
- மூல அனல் தன்மைகள், சிறப்புகள், பூஜை முறைகள், வசிய முறைகள், போன்றவற்றை குருமுகமாக அறிக.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #சித்த(ர்)த்_துளிப்பு, #பத்தாம்_திருமுறை – #திருமந்திரம் #திருமூலர்
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குருவருள்)