
பாடல்
அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே வைத்தமலை நாயேனைத் தன்அடியார் கூட்டத்தில் வைத்தமலை அண்ணாமலை
அண்ணாமலைவெண்பா – குருநமசிவாயர்
கருத்து – அண்ணாமலையின் சிறப்புகளை உரைக்கும் பாடல்.
பதவுரை
உரைக்கவும், உணர்ந்து ஒதுவற்கு உரித்தான ஐந்து எழுத்தாகவும், வேத வடிவமாகவும், அதனோடு தொடர்பு உடைய ஆகமங்களாகவும் நின்ற மலை; பரந்து விரிந்த ஞானம் கொண்டு இருந்தாலும் அதன் நுட்பத்தில் ஒன்றாக விளங்கும் மலை; மனதில் நினைவு அகலாமல் வைத்த மலை; தாழ்ச்சி உடைய நாயைப் போன்ற என்னை தன்னுடைய அடியார் கூட்டத்தில் வைத்த மலை; இவ்வாறான பெருமைகள் உடையது அண்ணாமலை.
விளக்கஉரை
- விஞ்செழுத்து – பரந்து விரிந்த ஞானம்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #அண்ணாமலைவெண்பா # குருநமசிவாயர்
![]()