
பாடல்
தானென்ற முப்பாழில் மும்மலமும் நீக்கித்
தற்பரத்துக் கப்பால் மயிர்ப்பாலமீதில்
வானென்ற நெருப்பாறுக்கு அப்பாற்சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கி
கோனென்ற வெளியொளியில் தானே தானாய்
குவிந்திருந்த சிவயோக ஞானந்தானாய்
ஊனென்ற வாதியந்தந் தானே தானாய்
உகந்திருப்பார் சிவஞான முணர்ந்தோர்காணே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து – சிவஞானம் உணர்ந்தவர்கள் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
மேம்பட்டவைகளுக்கு அப்பால்(புற நிலைகள்) மயிர்ப்பாலம், நெருப்பாறு ஆகிய உயருணர்வு கடக்கும் நிலைகளை உணர்த்து (அக நிலைகள்), ஆகாயத்தில் மனதை ஒடுங்கச் செய்து, தூய வெளியின் ஒளியாய் தானே அதுவுமாய்(அஃதாவது அதன் சாரங்களைப் பெற்று) மனதைக் குவித்து சிவயோக ஞானமும் தன்னுள் உணர்ந்து, ஊன் என்ற உடலின் தொடக்கம் மற்றும் முடிவு அறிந்து அதன் வழியில் (மாறாமல்) அதனுடன் இணக்கமாக இருப்பார்கள் சிவஞானம் உணர்ந்தவர்கள்.
விளக்கஉரை
- மயிர்ப்பாலம் – சுழிமுனை, புல்லாங்குழல் ,நதி , நெருப்பாறு ,ராமர் , பாலம், ஜோதி ஸ்தம்பம்
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
![]()
