சைவத் திருத்தலங்கள் 274 – சிறு குறிப்பு

திருஞான சம்மந்தர் தனது எல்லா பாடல் அமைப்புகளிலும் ஒரு ஒழுங்கு முறையைக் கையாண்டிருக்கிறார்.

8 வது பாடல்இராவணன் பற்றிய நிகழ்வு

9 வது பாடல்ப்ரம்மா மற்றும் திருமால்

10 வது பாடல்சமணர்

11 வது பாடல்நூல் பயன்

இராவணன் சிறந்த சிவபக்தன் என்றாலும் அவனிடத்தில் அதிகமாக ஆணவமும், மாயையும், கண்மமும் இருந்தது.

இதனால் சிவத்தலங்கள் பற்றிய பாடல்கள்களில், திருஞான சம்மந்தர் பாடி இருப்பின் அதில் 8 பாடலை விளக்கப் பாடலாக எடுக்க உள்ளேன்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 7 – கனவு காணும் வாழ்க்கையாவும்..

படம் : நீங்கள் கேட்டவை
கண்கள் அற்றவனின் பாத்திரத்தில் உருளும்ஒற்றை நாணயத்தின் ஒலிகளாய், மரணமும் மயானம் நோக்கி நகர்தலில் துவங்குகிறது பாடல்.
எதிர் எதிர் நிகழ்வுகளை ஒன்று படுத்தி காட்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாலு சார்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
மனிதனின்அழுகை பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் பிணம் எரிகிறது. நாய்கள் தனது தாயிடம் பால் அருந்துகின்றன.
மயானத்திலிந்து மனிதன் நடந்து வருகிறான்.சிறிய குழந்தை தனது கண்களை உருட்டிப் பார்க்கிறது. அடுத்த காட்சியில் கல்லறைகள்.
பிறக்கின்ற  போதே, பிறக்கின்ற  போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே
பாடுபவன்பாடிக் கொண்டே நடந்து வருகிறான். லாட்டரி சீட்டு வியாபாரம் நடக்கிறது. காமம் அரங்கேற்றம் கொள்கிறது.
ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே
அசைவுகள்அற்று வயதானவன் படுத்திருக்கிறான்.
உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே
மிகப் பெரிய மனித கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா விளம்பரப் பலகைகள். படத்தின் பெயர் ஊமை ஜனங்கள். மீண்டும் மெல்லிய சூரிய கதிர்கள் வானில் இருந்து பிரகாசிக்கின்றன. காற்று வேகமாக அடிக்கிறது. நீர் நிலைகளில் நீர் கடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீர் நிலைகளும் பிறகு நீர் அற்றதால் வெடிப்புற்ற நிலங்களும் காட்சிகளில்.
காலங்கள்மாறும், காலங்கள்மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்.
சிறிய குழந்தை அழும் காட்சியும், வயதான மூதாட்டியின் நிலை பெற்ற பார்வையும். கடற்கரையினில் காதலர்களும் அதைத் தொடந்து வயதானவனின் நிலை பெற்ற பார்வையும்.
தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்.
வாகனத்திற்கு வெளியே காலகளை நீட்டி ஒருவன் உறங்குகிறான். குழுக்களாய் மனிதர்கள் ஏதோ ஒன்றைத் தேடுபவர்களாய்.
நட்சத்திரஒட்டலும்பின்பு உழைப்பாளர் சிலையும். பாடல் தொடர்கிறது.
பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்  தானே ஆனந்தம்
இசைத்துக்கொண்டே பாடுபவன் அமர்ந்திருக்கிறான்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
உறுத்தாதகணவன் மனைவி உறவாய் பாடலும் இசையும் மிக சரியான விகிதத்தில்.
முள்ளை முள்ளாய் எடுப்பது போல், மிக அதிக மனப் பாரங்கள் இருக்கும் காலங்களில் தனித்து இப்பாடலை கேட்கும் போது இப்பாடல் வலிகளை மருந்தாய் இட்டுச் செல்கிறது.
அருவி நம் உடலை தூய்மை செய்வது போல் பாடல் வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம் மனப் பாரங்களை நீக்குகின்றன.
நிலையாமைத் தத்துவங்களின் மிக முக்கிய பணி தன்னை உணர்தல், தன் வலி உணர்தல். அதை இப்பாடல் மிக சிறப்பாகவே செய்கிறது. அதனால் தான் இன்னும் கனவு காணும் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

மீதமிருக்கும் பிரபஞ்சம்

ஆற்றில் வழிந்தோடும் நீரை
கைகளில் அள்ளிய பிறகும்
மீதமிருக்கிறது பிரபஞ்சம்.











Click by : VG Santhosh Kumar

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 6

மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளைஉள்வாங்குகின்றன.
——————————————————————————-விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் ‘5 மினிட்ஸ் ப்ளிஸ்‘ என்ற வார்த்தைகள் நூறு   ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
—————————————————————————————————————————————————————–
ஒவ்வொரு பனித்திருக்கும்  கண்களும் உணர்த்துகின்றன தனதுப்ராத்தனையை இறைவன்ஏற்றுக் கொண்டதை.
—————————————————————————————————————————————————————–
இருக்கை முன்அமர்த்து செல்லும் 3 வயதுபெண்குழந்தைவெவ்வேஎன்றுபழிப்பு காட்டுவதில் பயணம்முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
—————————————————————————————————————————————————————–
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
காலைநேரத்தில் வெற்றுகாகிதத்தை விரட்டி சிறுநாயின்சந்தோஷம் மனிதசந்தோஷங்களை விடமிகஅதிகமாக தெரிகிறது.
—————————————————————————————————————————————————————–
பேருந்தில் பயணம்செல்பவர்களை விடஅவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல்இழப்பைவிடஅதிகவலியுடன் இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————–
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லைமரணம் வரும் வரை   போராடுவான்நான் வீரன்
—————————————————————————————————————————————————————–
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
—————————————————————————————————————————————————————–

மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன்எனில்அவைகள்உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போதுவலிகள்அதிகமாக இருக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி நிகழ்வுகள்

விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று

மௌனத்தின் பாஷைகள் மட்டும்.


Click by : Bragadeesh Prasanna.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமயிலாப்பூர்

தல வரலாறு (சுருக்கம்) – திருமயிலாப்பூர்
·   உமை அம்மை மயிலாக இருந்து பூஜித்த இடம். மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர்
· சிங்கார வேலர் சூரனை அழிக்க அம்மை அப்பனை பூஜித்து சக்தி வேல் பெற்ற இடம்
· பிரம்மனின் கர்வம் நீங்கி படைப்பு ஆற்றல் பெற்ற இடம்
· சுக்ராச்சாரியார் தனது கண்களை மீண்டும் பெற்ற இடம்
· மனதினைக் கோயிலாக கொண்டு வழிபட்ட வாயிலார் நாயனார் தோன்றிய தலம்.
·   சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் – வேதபுரி,
· சுக்ராச்சார்யார்  ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் – சுக்ரபுரி
· மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால் – கபாலீச்சரம்
· திருஞானசம்மந்தப் பெருமான் எலும்புகளை ஒன்று சேர்த்து பூம்பாவை ஆக்கிய தலம்
· கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன்  தனது பெரும் பாவங்கள் தீர பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி முக்தி அடைந்த தலம்
· ஈசான மூலையில் காக வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி
·   நின்ற திருக் கோலத்தில் அம்பிகை ஸ்ரீகற்பகாம்பாள் அபய-வரத ஹஸ்தத்துடன்
·  கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள் – திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி
· ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் – கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ்
· ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள் – திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம்
·   மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் –  திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள்
தலம்
மயிலாப்பூர்
பிற பெயர்கள்
வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி,  கபாலி மாநகர்,கபாலீச்சரம், திருமயிலாப்பூர், கந்தபுரி, புன்னை வனம். பிரம்மபுரி , வேதபுரி, மயூரபுரி, மயூரநகரி, பத்மநாதபுரம், வாமநாதபுரம்
இறைவன்
கபாலீசுவரர், புன்னை வனத்து ஈசன், வேத நகரினான், சுக்கிர புரியான், கபாலீச்சரத்தினான், பூம்பாவை ஈசன், புன்னை வன மயூரநாதன், கபாலி மாநகரான்
இறைவி
கற்பகாம்பாள்
தல விருட்சம்
புன்னை
தீர்த்தம்
கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத  தீர்த்தம், வாலி  தீர்த்தம், கங்கை  தீர்த்தம்,வெள்ளி  தீர்த்தம், இராம  தீர்த்தம்
விழாக்கள்
சித்ரா பௌர்ணமி,வசந்த உற்சவம், வைகாசி – லட்ச தீபம்; விசாகம்; ஞானசம்பந்தர் விழா 10-ஆம் நாள்; ஆனி – 1008 சங்காபிஷேகம் (கும்பாபிஷேக திரு நட்சத்திரம்); பவித்ரோத்சவம்; ஆனித் திருமஞ்சனம், ஆடி – ஆடிவெள்ளி 5 வாரம்; பன்னிரு திருமுறை 12 நாள் விழா, ஆவணி – விநாயகர் சதுர்த்தி; லட்சார்ச்சனை, புரட்டாசி – நவராத்திரி விழா; நிறைமணிக் காட்சி, ஐப்பசி – கந்தர்சஷ்டி விழா 6 நாள்; சிங்காரவேலர் லட்சார்ச்சனை; ஐப்பசி திருவோணத்தன்று ஸ்ரீராமன், கபாலீஸ்வரரை வணங்கி வழிபட்டு அமுதூட்டிய ஐதீக விழா, கார்த்திகை – கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் 5 வாரம்; கார்த்திகை தீபம்; சுவாமி லட்சார்ச்சனை, மார்கழி – உஷத்கால பூஜை; திருவெம்பாவை 10 நாள் விழா; ஆருத்திரா தரிசனம், தை – அம்பாள் லட்சார்ச்சனை; தெப்பத் திருவிழா 3 நாள், மாசி – மகா சிவராத்திரி; மாசி மகம் கடலாட்டு விழா, பங்குனி- பிரம்மோற்சவம் 10 நாள்; விடையாற்றி 10 நாள்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004.
+91- 44 – 2464 1670.
வழிபட்டவர்கள்
சிங்கார வேலர்,பிரம்மன், சுக்ராச்சாரியார்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர், சேக்கிழார், பாபநாசம் சிவன்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 266 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 24 வது தலம்
கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
 
ஓவ்வொரு மாதமும் வரும் திருவிழாவினைச் சொல்லி காண வாராயோ என்று திருஞான சம்மந்தர் பூம்பாவையை அழைக்கிறார்.
 
பூரட்டாதி – அன்ன தானம்
ஐப்பசி – ஓணம்
கார்த்திகை – விளக்கீடு
மார்கழி – திருவாதிரை
தை – பூசம்
மாசி – மகம் – கடலாடுதல்
பங்குனி – உத்திரம்
சித்திரை – அஷ்டமி
ஊஞ்சமல் திருவிழா

பாடியவர்                            திருஞான சம்மந்தர்  
திருமுறை                        இரண்டாம் திருமுறை  
பதிக எண்                           47  
திருமுறை எண்               1
 
பாடல்
 
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் 
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் 
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் 
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.  
பொருள்
 
தேன் பொருந்திய அழகிய புன்னை மரங்கள் நிறைந்து இவ்விடம். இள மயில்கள் ஆர்ப்பரிக்க கூடியது இவ்வூர். இவ்வூரில் விருப்பமுடன் அமர்ந்தவன் இந்த இறைவன். அவன் மீது விருப்பமுடன் அவன் அடியார்களுக்கு அமுது செய்விக்கும் காட்சியைக் காணாமல் போவாயோ? பூம்பாவாய்.
 
கருத்து
  • இள மயில்கள் ஆர்ப்பரித்தல் – மழை வரும் காலத்தில் மயில் ஆர்ப்பரிக்கும். இது தொடந்து நிகழ்வதால் மயில்கள் ஆர்ப்பரிக்கின்றன. (அஃதாவது – மாதம் மும்மாரி பெய்கிறது)
  • விருப்பமுடன் அமர்ந்தவன் என்பதனால் மயிலையே கயிலையே என்பது விளங்கும்.
  • உருத்திர பல்கணத்தார்-மாகேசுரர் – அடியவர்
  • விழாக் காலங்களில் அமுது செய்வித்தல் – அன்னம் படைப்பு
  • அட்டு-திருவமுது
  • இட்டல்-இடுதல்
  • இது பூரட்டாதியில் நிகழ்வது.
பாடியவர்                            திருஞான சம்மந்தர்  
திருமுறை                        இரண்டாம் திருமுறை  
பதிக எண்                           47  
திருமுறை எண்               4
பாடல்
 
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
 
பொருள்
 
ஊர்ந்து வரும் அலைகள் உடையட கடலை அடுத்தது உயர்வான மயிலாப்பூர்.  அங்கு கூரிய வேல் வித்தையில் வல்லவர்களும் வெற்றி கொள்பவர்களும் உடைய சேரிகள்(சிறு குழக்கள் வாழும் இடம்) இருக்கின்றன. அங்கு மழை தரும் சோலைகள் இருக்கின்றன. அதில் அமர்ந்திருக்கும் கபாலீச்சரத்தின் ஆதிரை(திருவாதிரை) நாள் காணாமல் போவாயோ பூம்பாவாய்.
 
கருத்து
  • உயர் மயிலை என்பதனால் – மயிலையின் சிறப்பு விளங்கும்.
  • கூர்தரு வேல்வல்லார்  – கூர்மையான வேல்களை உடையவர் – வெற்றி கொள்பவர் அஃதாவது – தோல்வி அற்றவர்கள்
  • கார்தரு சோலை – மழையத் தரும் சோலைகள் உடைய
 

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணன்

தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து
இது எத்தனை ரூபா அம்மா
எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின்
வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 6 – உன் கண்ணில் நீர் வழிந்தால்..

படம் :வியட்நாம் வீடு
இன்றைக்குஇருப்பதுபோல் மிகப் பெரிய காட்சி அமைப்புகள் இல்லாமல் கவிதையும் இசை சார்ந்த வடிவங்களும் கொண்ட ஒரு பாடல்.
ஒரு நிஜமான கணவன் மனைவியின் வாழ்வுகள் பதிவு செய்யப்பட்ட பாடல். பாரதியின் சாயலில் கண்ணம்மா என்று அழைத்தலும் உண்டு.
மிகவும்கைத் தேர்ந்த மருத்துவரின் கத்தி நோயாளின் காயத்தை சுற்றி அறுப்பது போல், இசையின் முன்னறிவிப்பு இன்றி TMSன் குரலில் பாடல் ஆரம்பம் ஆகிறது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர்நின்னதன்றோ..
தலைவனின்நிலை கண்டு கலங்குகிறாள் தலைவி. மண் நோக்கிய அழுகை. (தலைவன் கண்டு விடுவானோ என்ன? ).
திருமண நிகழ்வு தொடங்குகிறது. அக்னி வலம் வருதல் தொடர்கிறது.
வார்த்தகளின் ஆரம்பங்களில் நிகழ்காலம்.
தலைவன் அமர்ந்திருக்கிறான். தலைவி அவன் காலடியில்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கைஒளிமயமானதடி
தலைவி கண்ணில் மகிழ்வுடன் கூடிய கண்ணீர். (நவ ரசங்களையும் காட்டிய நாயகி அல்லவா)
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
கம்பீரத்துடன் கூடிய தலையாட்டல் (ஒரு சூரியன், ஒரு சிவாஜி)
தலைவியின்அழுகையினைதுண்டால்துடைத்துவிடுகிறான்.
மரமும் அதன் வேர்களாக குழந்தைகளும். கண நேரத்தில் வேர்கள் மறைகின்றன. மாபெரும் வலியினை உள் வாங்கி தலைவன். நிலை குலைந்து விழுகிறான் தலைவன். தாங்கிப் பிடிக்கிறாள் தலைவி.
தலைவனும்தலைவியும்ஊஞ்சலில்.
கால சுமைதாங்கி போலே
மார்பில்எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்.
பார்வை அற்றவர்களின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் காட்சிகளும், பாடல் வரிகளும்.
காட்சி மாறுகிறது.
தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள். காட்சி மாறுகிறது.
காலம் மாறி இருக்கிறது. தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள்.
முள்ளில்படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
தலையை நிமிர்ந்து பார்க்கிறான் தலைவன்.

என் தேவையை யார் அறிவார்
வினாக்குறி தலைவி கண்களில்.
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம்ஒன்றே அறியும்
தலைவி தலைவனின் கைகளை கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் வரையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவருக்கும் போட்டி இல்லை. இப்பாடலே அப்படம் முழுவதையும் காட்டி விடுகிறது.

காலம் கடந்து கணவன் மனைவி அன்னியோனத்தை காட்டும் மிக அழகான பாடல்

இன்னமும் நீர் வழிந்து கொண்டிருப்பதே பாடலின் வெற்றிக்கு சாட்சி.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 5

எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
——————————————————————————————
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
——————————————————————————————
தன்கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம்அலாதியானது.வாழ்வினில் என்னஇருக்கிறது தன்கோபம்உடைத்தல் தவிர.
——————————————————————————————
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
அடபிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டைவெட்டிபொங்கல் படைக்கறது இல்லடா
——————————————————————————————————————————————————————-
கர்வம்கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்கமுடியவில்லை. தனதுமகனிடம் முத்தம் பெறுவதில் தனிகர்வம்தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
த்யானம்தனதுமகளும்பேசிச்செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
——————————————————————————————————————————————————————-
எல்லாநாளும்  SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷபொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும்  அனுப்புறவன் தான்ஃப்ரெண்ட்.
அப்பன்காசில்  SMS அனுப்புவோர் சங்கம்
——————————————————————————————————————————————————————-
இன்னைக்கு புதுவருஷம்பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போகவேண்டாம். இந்தவருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லாவேலையும் நீங்களே செய்ங்க.
Mr.X : எனக்கு மட்டும் தான்லீவேகிடையாது போல. அதுசரிஅடிமைகளுக்கு ஏதுசுயசிந்தைகளும்/சிந்தனைகளும்.
நிகழ்ச்சி இத்துடன் நிறைவுபெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
ஏங்கஇன்னைக்கு லீவுதானே,கொஞ்சம் கடைக்கு போய்காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டுஅழைச்சிகிட்டு வாங்க, T.Vம்மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அதசரிபண்ணனும், காஸ்அடுப்பு ஒரேஅழுக்கா இருக்கு, அதகொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்கஇந்தவெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேலஇருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர்சுத்தபோயீடாதீங்க, இப்பஎன்னாசெஞ்சிகிழிச்சிட்டீங்க, பாட்டுவேண்டிகிடக்கு
மனைவி: என்னான்னே தெரிலங்க, ஒரேதலவலியா இருக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

தான் தொலைதல்

அட ஏரோப்ளேன்என்பது மாறி,
‘இத்தானே’ என்னும் கணத்தில்
தொலைகிறது இளமைகள்.




Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274

விக்னங்களை தீர்க்கும், மங்களைத் தரும் விநாயகர் அருள் புரியட்டும். தமிழ் தலைவனும், சித்தர்களின் நாதனும் ஆறுமுகங்களையும் உடைய செந்தில் நாதன் அருள் புரியட்டும்.
முழு முதற் கடவுளும், சைவத் தலைவனும், பிறவிப் பிணிகளை நீக்குபவனும், ஐந்தொழிலுக்கு உரியவனும், பிறப்பிலியும், ஆதி நாயகனுமான சிவனும் வாம பாகத்தில் என்றும் நிறைந்திருக்கும் அம்பாளின் துணை கொண்டு இக்கட்டுரைகளை எழுதத் துவங்குகிறேன்
 
எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் என்றும் என்னை வழிநடத்தும் தாயைப் போல் எனக் காத்து எனை வழி நடத்தும் என் குருநாதர் எனக்கு அருள் புரியட்டும்.
இது சமயக் குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற  தலங்கள் பற்றிய செய்திகள். இது குறித்து சைவத் திருத்தலங்கள் 274 என்ற தலைப்பில் எழுத உள்ளேன். சிறு குறிப்புகளுடன் தலத்திற்கு 2 பாடல் வீதம் எழுத உள்ளேன்.
 
தலம்
பிற பெயர்கள்
இறைவன்
இறைவி
தல விருட்சம்
தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் /முகவரி
நிர்வாகம்
பாடியவர்கள்
இருப்பிடம்   
இதர குறிப்புகள்
பாடல்
விளக்கம்
குறைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
காவிரிக்கு வடகரையிலுள்ள திருத்தலங்கள்    – 63
காவிரிக்கு தென்கரையிலுள்ள திருத்தலங்கள் – 127
ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள்              – 2
பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள்           – 14
மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள்                          – 1
கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள்                     – 7
நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள்                                – 22
தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள்               – 32
துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள்                        – 1
வட நாட்டிலுள்ள திருத்தலங்கள்                              – 5
ஆக மொத்தம்                             – 274
கோவில் என்றதும் என் நினைவில் என்றைக்கும் வரும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரன் உறைவிடமாகிய மயிலையில் பயணம் தொடங்குகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 5 பூந்தளிர் ஆட

இது என் பதினெண் வயதுகளில் ஒலிக்கத் துவங்கிய பாடல்.
படம் : பன்னீர் புஷ்பங்கள்.
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடைக்காற்று வீசத் துவங்குகிறது. நண்பர்கள் வட்டம் மெதுவாக வேடிக்கைப் பார்க்கிறது. கைகளில் இருப்பதை விளையாட்டாய் பேசிக் கொண்டே விளையாடத் துவங்குகிறாள் தலைவி. மரத்தில் தலைவன். மிதி வண்டி அருகினில் நாயகி.

உணவு படைக்கப்படும் இடத்தில் இருவரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.புன்னகை இருவருக்கும்.
வாகனத்தில் வருகையில் கை அசைக்கும் காட்டுப் பூப் போல இசை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி வாசிக்கத் துவங்குகிறாள். நாயகன் தானும் வாசிக்க முற்படுகிறான். பல முறைகள் நிகழ்கிறது.
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலேகோலம் இட்டதே
தேடிடுதே பெண் காற்றின் ராகம்
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
  
தலைவி தேடுகிறாள்தோற்றுப் போகிறாள்தலைவன் ‘கொக்கு‘ காண்பிக்கிறான்.
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
  
புகை வண்டியில் பயணம் தொடர்கிறது, விளையாட்டு விளையாட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது(கூடவே வாழ்வும்)

நாயகி நேரம் கழித்து ஓடி வருகிறாள். தலைவனிடம் கோபம் மட்டுமே இருக்கிறது. தலைவி கை குலுக்கி கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள். தலைவன் முரண்படுகிறான். பிறகு கோபம் மறைகிறது இருவருக்கும்.
இருவரும் மீன் பிடிக்கிறார்கள். தூண்டிலில் மீன் சிக்குகிறது. ஒரு சிறிய பயமுறுத்தல் தொடங்குகிறது.
சைக்கிளில் பயணம் தொடர்கிறது. கதிரவன் சாட்ஷியாக இருக்கிறான்.

பள்ளிக் கூட வாழ்வியல் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. 

காலம் உறைத்துவிட்ட தளிர்கள் இன்னும் இளமையாய், இனிமையாய்.

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் விடுதலை

சொல்லுக்கும் சொல் பிறக்கும்
இடத்திற்கும் இடையில் போராட்டம்
முடிவில் வென்றது மௌனம் மட்டுமே.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 4

ஏங்க, இன்னைக்கு லீவுதான, கொஞ்சம் கடைக்கி போய்மளிகைசாமான்வாங்கிவந்திடுங்க,உங்கடிரஸ்எல்லாம் அயர்ன்கொடுத்து வாங்கிவச்சிருங்க, காலைலசாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரேதடவையாமதியம்சாப்டுக்கலாம், ரேஷன்போய்ட்டு வந்துடுங்க, பசங்கசட்டைஎல்லாம் வாஷிங்மிஷின்ல போட்டுதொவச்சி அயன்பண்ணிடுங்க, என்வண்டிக்கு பெட்ரோல் போட்டுகாத்துஅடிச்சிட்டு வந்துடுங்க., நேந்துநீங்ககாயவச்சதுணிஎல்லாம் மாடிலகாயுதுஅதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவிஉங்களுக்கு கிடையாது. இப்பவேகண்ணகட்டுதே…..
மாலை: என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரேடயர்டாஇருக்கு.
அடிப்பாவி நான்பேசவேண்டிய வசனத்தை எல்லாம் இவபேசறாளே
——————————————————————————————————————————————————————-
யாரும்அற்றபொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டேதோழமைகளுடன் மனம்விட்டுசிரித்துப் பேசும்வாய்ப்பு எப்பொழுதாவது தான்வாய்க்கிறது.
——————————————————————————————————————————————————————-
மனிதன்கர்வம்அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்குமகத்தானது.
——————————————————————————————————————————————————————-
தனதுமகளைபிறந்தஉடன்தீண்டும் தந்தையின் கண்கள்எவரும்அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அதுஆயுட்காலம்முழுவதும் தொடர்கிறது.
——————————————————————————————————————————————————————-
திருமணம் ஆனஉடன்மனைவியுடன் வெளியில் செல்கையில்இந்தாம்மா மல்லிகை பூ5 முழம்கொடுஎன்றுகடையில் கேட்பவனிடம் ஒருபுன்னகை கலந்தவெட்கம் தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
யாருமற்ற இரவில்கணவனைஒருகண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வைபோர்த்தி, அவனின்தலைகோதிகன்னத்தில் முத்தமிட்டு ஒருநிண்டபெருமூச்சுடன் உறங்கஒருதாயால்மட்டுமே முடிகிறது.
——————————————————————————————————————————————————————-
தன்மனைவியுடன் கைகோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒருசிலபுண்ணியவான்களுக்கே கிடைக்கிறது.
——————————————————————————————————————————————————————-
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்துஅவளுக்கு என்னஎனும்பொழுதுகளில் அவளதுகண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
——————————————————————————————————————————————————————-
மனிதமனதின்பெரும்பாரம்குறைத்தலில் இறைமைக்கு அடுத்தநிலையில் குளியல் அறைகள்.
——————————————————————————————————————————————————————-
மிகஅதிகசந்தோஷத்தையும், மிகஅதிகவலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்குதன்மகள்ருதுவாகும் போது.

Loading

சமூக ஊடகங்கள்

நாடக முடிவு

வினாக்கள் பல திசைகளில்
விடைகள் மட்டும்
சூன்யத்தில்

Click by : Karthik Pasupathiy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 3

ஒவ்வொரு மழையும் கழுவிவிடுகிறது சிலபழையநினைவுகளை. உருவாக்கிறது சிலபுதுநினைவுகளை.
——————————————————————————-
நிகழ்காலநிகழ்வுகள்
கடந்தகாலங்களில்
அபத்தமாகின்றன.
——————————————————————————-
மறுக்கப்படுவதின் வலிஅறிந்தவர்களே மன்னித்தலுக்கு தயாராகிறார்கள்.
——————————————————————————-
நெருப்பில் இடப்படும் நெய், நெருப்பினை அதிகப்படுத்துவது போல், ஒவ்வொரு இருளும் பலநட்புகளை உறுதிப்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
ஆற்று நீராய் வழியும் அனைத்து வலிகளும் அடங்கிவிடுகின்றன ஒருமெய்த்தீண்டலில்.
—————————————————————————————————————————————————————–
வீரன்வாள்எடுத்தபிறகுஎதிரிஎன்றும், புல்லுருவி என்றும் பார்ப்பதில்லை. இலக்குஇரத்தம் பார்த்தலுடன் கூடியவெற்றிமட்டுமே.
—————————————————————————————————————————————————————–
அழுக்கு ஆடைகளுடன் இருப்பவனைச் சுற்றிஇருக்கும் நாய்கள் அழகானவைகள். அவைகளுக்கு பொரையைகொடுத்து விட்டுஅதில்மகிழ்ச்சி அடையும் அவனதுகண்களும் அழகானது
—————————————————————————————————————————————————————–
இரு சக்கர வாகனத்தில், மனைவிமற்றும் இருகுழந்தைகளுடன் செல்பவனின் கண்களில் ஒருகர்வம்இருக்கத்தான் செய்கிறது.
—————————————————————————————————————————————————————–
முன் வாகனத்தில் செல்லும் பெண்ணின் கைப்பட்டு சரிசெய்யப்படும் அவளதுகூந்தலில் கரைகின்றன பலமனங்கள்.
—————————————————————————————————————————————————————–

வாக்கியங்கள் முழுமை பெறுகின்றன ஒருமுற்றுப் புள்ளியில்.

Loading

சமூக ஊடகங்கள்

மகிழம்பூக்கள்

மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்


Photo & Click by : Prakash Thiagarajan

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.
சார், நீங்க இந்த 30 வருஷத்துல செய்த சாதனை ரொம்ப பெருசு சார். அதெல்லாம் தனித்தனியா எழுதி  பிரிக்கணும்னா 200 வருஷம் ஆகும் சார். வயலின் இடத்தில் வீணை, வீணை இடத்தில் வயலின், அதெப்படி சார் மாத்தி மாத்தி, எப்படி உங்களால முடியுது சார்.

ராஜா சார் : வழக்கமான புன்னகை.

நீங்க எப்படி சார், எது பத்தியும் யோசிக்காம எழுதுறீங்க. எழுதுன நோட்ஸ எப்பவாது திருப்பி பார்ப்பீங்களா?

ராஜா சார்எழுதுறது நான் இல்ல, அது பத்தி யோசிச்சா, எழுதுறது நானா இருப்பேன். இசை இருக்காது. இப்ப அப்படி இல்லை. இசை தன்வழியில் எழுதுகிறது.

சார் உண்மைய சொல்லுங்க சார், பத்து அவதாரம் தாண்டிய பிறவி தானே சார்.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?

காரணங்கள்அற்று ஒரு குரலில் மயக்கம்(வேறு எப்படி வகைப்படுத்த முடியும்) உண்டு எனில் அதில் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.
அந்த வகையில் அவர் குரலில் இன்றைக்கும் மயங்கும் ஒரு பிறவி நான்.
பாடல் ஆரம்பமாகிறது. தலைவன் ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறான். மெதுவாக அவனுள் இருக்கும் வலிகள் சொற்களின் வடிவம் பெற்று காற்றுடன் கலக்க ஆரம்பிக்கின்றன.
மெதுவாகவேட்டியின் நுனிகள்காற்றில்ஆட ஆரம்பிக்கின்றன. ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்டமடியில்வெச்சுப்பாராட்ட
எனக்கொருதாய் மடி கெடைக்குமா
மெதுவாகநடை பயணம் தொடங்குகிறது.  மெதுவாக மீண்டும் காற்று அசைகிறது.
ராசாவே வருத்தமா
வார்த்தைகளில் முடிக்கும் முன்பே ஒரு குயில் கூவ ஆரம்பிக்கிறது. காற்றின் வீச்சமும் குயிலின் கீதமும் இணைய ஆரம்பிக்கின்றன.
ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமாசூரியன்கருக்குமா
விழிகள்தேடலை ஆரம்பிக்கின்றன. பாதங்கள் நடை பயிலுகின்றன. ஆற்று நீர் வழிந்தோடுகிறது. தலைவி கரையில் அமர்ந்திருக்கிறாள்.
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
தலைவி பதில் உரைக்கிறாள்.
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
உரையாடல்தொடர்கிறது
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாதசொகத்த சொன்னேனடி
 
சோக ராகம் சொகந்தானே(சொல்லில் முடிவில் பறவை பறக்கிறது)
குயில் முகம் காட்ட மறுக்கிறது. தோணியில் குயிலில் பயணம் தொடர்கிறது. தலைவன் பயணம் தரையில் தொடர்கிறது.
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
குயில் ஆறுதல் கூறுகிறது.
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
தலைவன் பயணம் தொடர்கிறது
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
 
எசப் பாட்டு படிக்கேன் நானே
தன் மன வலிகளை குறைத்திடும் தோள்களைத் தேடுகிறான் தலைவன்.
பூங்குயில் யாரது
 
கொஞ்சம்பாருங்கபெண் குயில் நானுங்க.
இன்று வரையில் சிவாஜின் அந்த கடைவாய் புன்னகையை யாரும் நெருங்க முடியவில்லை.
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததேஒலகமே மறந்ததே
சிவாஜியின் மேலும் கீழுமான பார்வை புன்னகையுடன் (என்ன சொல்ல)
நான்தானேஅந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததாஒலகந்தான்மறந்ததா
காமம் கடந்த விஷயங்களை, இயல்பான மனித வாழ்வின் மிகப் பெரும் வலிகளை காலம் பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதானால் தான் பூங்காறு இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது.
துக்கடா:
சார் நீங்க முதல் மரியாதை படத்துட நடிச்சது பத்தி
சிவாஜி: நான் எங்க நடிச்சேன். அந்த பய என்ன படத்துட நடக்க வச்சி படத்த முடிச்சிட்டான்.
 
Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

அக்லிஷ்டா

வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்














அக்லிஷ்டாஉலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.

பதஞ்சலி யோக சூத்திரம் – 5


Click by Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்