Category: கவிதை வடிவம்
நகர மறுக்கும் நினைவுகள் – செம்பருத்தி
புகைப்படம் : SL Kumar
நகர மறுக்கும் நினைவுகள் – மழைக்கால பக்கோடா
புகைப்படம்: R.s.s.K Clicks
காற்றில் ஆடும் சருகுகள் – 13
காற்றில் ஆடும் சருகுகள் – 12
காற்றில் ஆடும் சருகுகள் – 11
சொர்க்கம் – வீடும் வீடு சார்ந்த இடமும்
2038 – DNA
* * * *
* * * *
குப்பாச வாழ்க்கை
படைப்புகளின் வழியே பயணம்
நகர மறுக்கும் நினைவுகள் – 11 – பற்றுக் கணக்கு
நகர மறுக்கும் நினைவுகள் – 10 – மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நகர மறுக்கும் நினைவுகள் – 9 – கொடியிலே மல்லிகைப்பூ
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே.
காற்றில் ஆடும் சருகுகள் – 8
காற்றில் ஆடும் சருகுகள் – 7
நகர மறுக்கும் நினைவுகள் – 6 – உன் கண்ணில் நீர் வழிந்தால்..
நகர மறுக்கும் நினைவுகள் – 5 பூந்தளிர் ஆட
காற்றில் ஆடும் சருகுகள் – 4
ஒரு பாதி கனவு நீயடி..
எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,
ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.
ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.
ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.
மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.
சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,
வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.
மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).
கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.
காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.
தொடரும் நினைவுகளும் பாடலும்
ஆகாய கங்கை – இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.
படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).
மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.
ஆண் : துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் : தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.
ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
பெண் : குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.
மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.
பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.