நகர மறுக்கும் நினைவுகள் – விஷமென்று நீ தந்தாலும் அமுதாக மாறாதோ

புகைப்படம் - திரைப்பட இயக்குநர் : திரு.ஐயப்ப மாதவன்

விஷமென்று நீ தந்தாலும்
அமுதாக மாறாதோ
விழி மூடி தூங்கும் போதும்
உன் வண்ணம் தோன்றாதோ

படம்: நெல்லிக்கனி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
பாடல்: புலமைப்பித்தன்

80களில் இலங்கை வானொலி இசை கேட்டு பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவ்ன். (ஒரு பரிதாபமும் இருக்கிறது – கடைசியில்)

பாடல் முழுவதும் நண்பர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டே இருப்பார்கள், இரு சக்ர வாகனம், குதிரை, நடை… இந்தப் பாடலில் மலேஷியாவும், S.P.B ம்,பரஸ்பரம் தங்கள் நட்பினை வெளிப்படுத்தி இருப்பது போலவே இருக்கும்,

பள்ளிக்காலங்களில் பெரும்பான்மையான பாதிப்புகள் (நல்லது / கெட்டது) நட்பு வட்டாரத்தில் இருந்தே தோன்றும்.

பாடல் வரிகளுக்குள் தன்னை பொருத்தி அதை தன் வடிவமாக காணும் காலங்களுக்கு முன்பே இது போன்ற பாடல்கள் மனதினை தீண்டி விட்டன. இப்பாடலினை வெளியில் இருந்து கேட்கும் போது ஒரு துணையுடன் பாடுவது போலவே இருக்கும். ஆனால் மிக அழகாக நட்பினைப் பற்றி பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.

பல காலங்கள் இது இசைஞானி என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சங்கர் கணேஷ் இசை அமைத்த பல அழகுப் பாடல்களில் இதுவும் இருக்கும்.

கடல் நீரும் வற்றிப்போகும்
நமதன்பு வற்றாது

எனும் இடங்களில் ஒரு வாசனை.. அட.அட..

ஒரு முறை நெல்லிக்கனி என்ற படத்தில் இருந்து சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி யும்., மலேசியா வாசுதேவன் பாடியது என்று குரல் ஒலித்தது. பரவசம், பரவசம் கொண்டேன். …. ரேடியோவில் ஒலி அளவினை கூட்டினேன். சத்தமே காணோம். அடச்ச. பேட்டரி தீர்ந்து விட்டிருந்தது. பின் வேறு ஒரு ரேடியோவில் இருந்து பேட்டரியினை மாற்றி ஆன் செய்வதற்குள்..

கவி வேந்தன் கம்பன் வந்து
நமைப் பாட மாட்டானோ
கதையல்ல உண்மையென்று
வரலாறு காட்டானோ

என்ற வரிகள் பாடல் வரிகள் ஒலிக்கத்துவங்கி விட்டன. பாடலினை பலமுறை கேட்டப்பின்னும் முதலில் கேட்க மறந்த வரிகள் இன்னும் வடுக்களாகவே உள்ளன.

https://www.youtube.com/watch?v=h46J0F6W1wQ

Loading

சமூக ஊடகங்கள்

2038 – T.V Serialsssssss

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
சார், உங்களுக்கு கல்யாணம் ஆகுணும்னா நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப ஈசி. கார்த்தின்னு பேர் வச்சிங்க. காமாட்சின்னு ஹீரோயின் பேரு வைச்சிப்போம். எங்க சீரியல நடிங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடும்.
2.
என்னா அநியாயமா இருக்கு. எங்க காலத்துல 1000 எபிசோட் வந்தா பெருசா கொண்டாடுவாங்க. இப்ப என்னடான்னா, 20000 எபிசோட் மேல வர சீரியலுக்கு கூட ஒரு கொண்டாட்டமும் இல்லயே.
3.
30 நிமிடம் இடைவெளி இல்லா சீரியல் இன்றுநாசமா போறவனே, கட்டைல போறவனே போன்ற அழகு வசனங்கள்.
4.
வீட்டு பெண்மணிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. . எவ்விதஇடஞ்சல் இன்றி சீரியல் பாருங்கள். உங்கள் வீட்டிற்கே Breakfast/Lunch/Dinners வந்து  சப்ளை செய்கிறோம்.
5.
TRB ரேட்டிங் ஏறவேமாட்டேங்குது சார், என்ன செய்யலாம் சார்?
அது பெரிய மேட்டரே இல்ல. ஒரு வெள்ளிக்கிழமை புருஷன் பொண்டாட்டியை அடிச்சு காயப்படுத்துற மாதிரி முதல் 7 நிமிஷம் காமிக்கலாம். அடுத்த 2 நிமிஷம் பொண்டாட்டி அழுவுற மாதிரி சீன் கடைசி 5 நிமிஷம் பொண்டாட்டியை சாகடிக்கிறதை லைவ்ல காமிக்கலாம்.


Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 10 – மாலைப் பொழுதின் மயக்கத்திலே

பல ஆயிரம் முறை கேட்ட பிறகும் மாறாமல் இருக்கிறது அந்தக் குரலில் உள் ஒலிந்திருக்கும் வலிகள், அழுத்தங்கள், காயங்கள், சொல்லொண்ணா துயரங்கள்.
பெண்ணுக்கான மன வலிகள் எப்போழுதும் தனித்தே இருக்கின்றன.
ஒரு அழகிய வீணையின் இசையுடன் பாடல் ஆரம்பமாகிறது.
கண்ணதாசன்வரிகள் ஆரம்பம் ஆகின்றன.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
மாலைப் பொழுது பெரும்பாலும் மயக்கம் தருவதாகவே இருக்கும். நாளுக்கான முடிவின் தொடக்கம் அல்லவா. அப்போது கனவு காணுவதாக தோழியிடம் உரைக்கிறாள். அச்சம், நாணம் போன்ற குணங்கள் சேர்ந்து தன் மனதில் தன்மையை மாற்றி வார்த்தைகள் அற்றுச் செய்து விடுகிறதாக உரைக்கிறாள்.
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர்யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பதுஏன் தோழி
இன்பமும்துன்பமும்கலந்தே வாழ்வு. அதைப் போன்றே வாழ்வு அமைகிறது என்று என்னிடன் உரைத்தவர் யார்?. கவிஞனின் கற்பனை இங்கு மிக அழகாக விளக்க்கப் பட்டிருக்கிறது. இன்பம் நிஜமற்ற கனவிலும், துன்பம் நிதர்சமான உண்மையிலும் தான் காண்பதாக உரைக்கிறாள்.
மணம் முடித்தவர் போல் அருகினிலேஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தே நான் வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன்தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
தனக்கான காந்தர்வ விவாகம்நடந்து விட்டதை தெரிவுக்கிறாள். அவர் என்னை மணம் முடித்தது போல் அவரின் வடிவம் கண்டேன். மங்கையான என்னிடம் குங்குமம் தந்தார், மாலையிட்டார்.இவைகள் பெரும்பாலும் கணவர்கள் செய்யும் காரியம் என்பதால் அதைக் குறிப்பிடுகிறாள். இதனால் நான் செல்லும் (வாழ்க்கை) வழியை மறந்துவிட்டேன்அவரிடம்அடைக்கலம்ஆனேன். அப்போது மறவேன் மறவேன்  என்று கூறி மறைந்து விட்டார் என்கிறாள். (வார்த்தைகள் இரு முறை கூறப்படும் போது அது சத்தியம் ஆகிறது, இவ்வாறு சத்யம் செய்து மறந்து விட்டதைக் குறிப்பிடுகிறாள் தலைவி)
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால்அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்ததுஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும்அறியாமல்முடிவும்தெரியாமல்
மயங்குதுஎதிர் காலம்
மயங்குதுஎதிர் காலம் ((துக்கடா)இசைஞானிக்கு பிடித்த வரிகள்
இப்படி கனவு வாழ்வில் வந்தது யார் என்று கேட்கிறாள். அனைத்து பதில்களும் உரைக்கப் படுகின்றன.
கொஞ்சு தமிழின் அழகியல் விளையாடத் துவங்குகிறது. இளைமை வெறும் கனவாகவே இருக்கிறது அதுவும் மறைந்திருக்கிறது. அறிவு தெளிவு அறியாமல் இருக்கிறது. முடிவும் எடுக்கவும் முடியாமல் இருக்கிறது. இவ்வாறான நிலையில் எதிர் காலம் மயக்கம் தருவதாக இருக்கிறது என்பதை உரைக்கிறாள்.
இடை இடையே வரும் வரும் இசை அந்த வலிகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.
(தத்துவார்தகமாக பார்த்தால் ஜீவாத்மா, பரமார்த்தாவை அடையத் துடித்தலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக கொள்ளலாம்)
இப்பாடலைக் கேட்டு ஈரத் தலையனையுடன் உறங்கிய பல பெண்களை எனக்குத் தெரியும்.

யாருமற்றஇரவில் தனிமையில் இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். மனதில் வலிகள் எல்லாம் ஒரு பாடலாக உருப்பெற்றிருப்பதை அறியலாம்.
இப்பாடல்புகைவண்டிப் பயணத்தில்யாசம் விரும்பி கேட்டுச் செல்லும் கண்கள் அற்றவனில் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் வரிகள் உறுத்துவதை உணரமுடியும்.
ஏனெனில்வலிகள் அனைவருக்கும் பொதுவானவை தானே.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 9 – கொடியிலே மல்லிகைப்பூ

படம் :  கடலோரக் கவிதைகள்
விடியற்காலையில் எழும் சிதம்பரம்கோயில் மணி ஓசையாய் வரிகள் ஆரம்பமாகின்றன். (ஒரு வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர்ஜெயச்சந்திரன்)
அன்பினைப் பகிர்தல் மட்டுமே அடிப்படையாக அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள்.

மிகச் சிறிய குழந்தையின் தீண்டல் நம் வலிகளை எல்லாம் தீர்ப்பது போல் இப் பாடல் நம் வலிகளை தீர்க்கிறது.

தலைவன் தலைவி இருவரும் கடல் சூழ் பாறை அருகினில். தவைவனுக்கு முள் குத்திவிட்டது. தலைவி எடுத்து விடுகிறாள். பாடல் ஆரம்பமாகிறது. பின் புறத்தில் காலைச் சூரியன்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
எடுக்கவாதொடுக்கவாதுடிக்கிறேன் நானே
ஒரு ஆடு காண்பிக்கப்படுகிறது. தலைவி அதைத் துரத்துகிறாள். கைகளில் எடுக்கிறாள். தட்டாமாலை சுற்றுகிறாள். கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.
பறிக்கச்சொல்லித்தூண்டுதேபவழமல்லித் தோட்டம்
நெருங்கவிடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
தலைவி வீட்டுக்குள் நடை பழகுகிறாள். அவள் பார்ப்பது ஏசு பிரான் படம்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
கொடுக்கவாதடுக்கவாதவிக்கிறேன் நானே
தலைவி நினைத்துப் பார்க்கிறாள். தலைவன் புத்தகங்களுடன். அவளுக்குள் புன்னகை.
வித விதமான புகைப்படங்களுக்கு தலைவி முகம் காட்டுகிறாள்.
பின்புறத்தில் கடல் அலைந்து கொண்டிருக்கிறது.
கடற்கரைமணலில்‘ ABCD’ எழுதப்பட்டிருக்கிறது. எதிர் எதிர் திசைகளில் இருவரும். இசைக்கு ஏற்றவாறு கடல் அலை வேகமாக பாய்கிறது.
மெதுவாகநடக்க ஆரம்பிக்கிறாள். மனம் நிச்சயமில்லாமல் இருக்கிறது. கனவுக்குள் இருக்கிறாள்.
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம்இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.
தலைவன் பல் விளக்குகிறான்கையில் நீர்ப்பாத்திரம். கொப்பளிபதற்கு பதிலாக அருந்துகிறான்.
நித்தம்நித்தம்உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
இது மீண்டும் நிகழ்கிறது. அன்னை வேடிக்கைப் பார்க்கிறாள். ஆச்சரியப்படுகிறாள்.
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்.
தலைவி மிகப் பெரிய இடத்தில் நடந்து வருகிறாள்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
மேற்கே சூரியன வந்து விடுகிறது.
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால
தலைவி பாறை மேல் அமர்ந்திருக்கிறாள். மீன் பிடித்து வரவா என்கிறான் தலைவன். வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் தலைவிஅதைக் கேட்காமல் கடலுக்குள் ஓடிச் செல்கிறான்.
மிகப் பெரிய அலையில் தலைவன் விழுகிறான்.
தலைவி திகைக்கிறாள். மீண்டும் அலைகள் மட்டும் வருகின்றன. தலைவனைக் காணோம்.
பறக்கும்திசையேதுஇந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
விழிகள்நாலா புறமும் அலைகின்றன. தலைவனைக் காண்வில்லை.
தலைவன் பிடித்துவந்த மீனைவைத்து பின்னால் இருந்து பயமுறுத்துகிறான்.
பாறையிலேபூ முளைச்சு பார்த்தவங்க யாரு
தலைவன் கேள்வி கேட்கிறான்.’பயந்துட்டியா
காட்டி அசைகிறது.
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
இருவரும்சிரித்துமகிழ்கிறார்கள்.
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
மீண்டும்நிஜங்களுக்கு காட்சி வருகிறது. வீட்டில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராக இருக்கிறார்கள்.

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே.
கணத்தில்காட்சி மாறுகிறது. சில வினாடிகளுக்கு காட்சி தொடர்கிறது.
மனித மனங்களின் விசித்திரங்களில் ஒன்று அலைப்பார்த்தல். அதை உருவமாக ஆக்கி செய்திருக்கும் காட்சி அமைப்பு மிக ஆச்சரியம்.
அதனால் தான் மல்லைகையின் வாசம் மனதையும் விட்டு அகலாமல்

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 7 – கனவு காணும் வாழ்க்கையாவும்..

படம் : நீங்கள் கேட்டவை
கண்கள் அற்றவனின் பாத்திரத்தில் உருளும்ஒற்றை நாணயத்தின் ஒலிகளாய், மரணமும் மயானம் நோக்கி நகர்தலில் துவங்குகிறது பாடல்.
எதிர் எதிர் நிகழ்வுகளை ஒன்று படுத்தி காட்சி ஏற்படுத்தி இருக்கிறார் பாலு சார்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
மனிதனின்அழுகை பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் பிணம் எரிகிறது. நாய்கள் தனது தாயிடம் பால் அருந்துகின்றன.
மயானத்திலிந்து மனிதன் நடந்து வருகிறான்.சிறிய குழந்தை தனது கண்களை உருட்டிப் பார்க்கிறது. அடுத்த காட்சியில் கல்லறைகள்.
பிறக்கின்ற  போதே, பிறக்கின்ற  போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே
பாடுபவன்பாடிக் கொண்டே நடந்து வருகிறான். லாட்டரி சீட்டு வியாபாரம் நடக்கிறது. காமம் அரங்கேற்றம் கொள்கிறது.
ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே
அசைவுகள்அற்று வயதானவன் படுத்திருக்கிறான்.
உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே
மிகப் பெரிய மனித கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சினிமா விளம்பரப் பலகைகள். படத்தின் பெயர் ஊமை ஜனங்கள். மீண்டும் மெல்லிய சூரிய கதிர்கள் வானில் இருந்து பிரகாசிக்கின்றன. காற்று வேகமாக அடிக்கிறது. நீர் நிலைகளில் நீர் கடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீர் நிலைகளும் பிறகு நீர் அற்றதால் வெடிப்புற்ற நிலங்களும் காட்சிகளில்.
காலங்கள்மாறும், காலங்கள்மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்.
சிறிய குழந்தை அழும் காட்சியும், வயதான மூதாட்டியின் நிலை பெற்ற பார்வையும். கடற்கரையினில் காதலர்களும் அதைத் தொடந்து வயதானவனின் நிலை பெற்ற பார்வையும்.
தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்.
வாகனத்திற்கு வெளியே காலகளை நீட்டி ஒருவன் உறங்குகிறான். குழுக்களாய் மனிதர்கள் ஏதோ ஒன்றைத் தேடுபவர்களாய்.
நட்சத்திரஒட்டலும்பின்பு உழைப்பாளர் சிலையும். பாடல் தொடர்கிறது.
பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்  தானே ஆனந்தம்
இசைத்துக்கொண்டே பாடுபவன் அமர்ந்திருக்கிறான்.
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புகூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
உறுத்தாதகணவன் மனைவி உறவாய் பாடலும் இசையும் மிக சரியான விகிதத்தில்.
முள்ளை முள்ளாய் எடுப்பது போல், மிக அதிக மனப் பாரங்கள் இருக்கும் காலங்களில் தனித்து இப்பாடலை கேட்கும் போது இப்பாடல் வலிகளை மருந்தாய் இட்டுச் செல்கிறது.
அருவி நம் உடலை தூய்மை செய்வது போல் பாடல் வரிகளும் இசையும் காட்சி அமைப்பும் நம் மனப் பாரங்களை நீக்குகின்றன.
நிலையாமைத் தத்துவங்களின் மிக முக்கிய பணி தன்னை உணர்தல், தன் வலி உணர்தல். அதை இப்பாடல் மிக சிறப்பாகவே செய்கிறது. அதனால் தான் இன்னும் கனவு காணும் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 6 – உன் கண்ணில் நீர் வழிந்தால்..

படம் :வியட்நாம் வீடு
இன்றைக்குஇருப்பதுபோல் மிகப் பெரிய காட்சி அமைப்புகள் இல்லாமல் கவிதையும் இசை சார்ந்த வடிவங்களும் கொண்ட ஒரு பாடல்.
ஒரு நிஜமான கணவன் மனைவியின் வாழ்வுகள் பதிவு செய்யப்பட்ட பாடல். பாரதியின் சாயலில் கண்ணம்மா என்று அழைத்தலும் உண்டு.
மிகவும்கைத் தேர்ந்த மருத்துவரின் கத்தி நோயாளின் காயத்தை சுற்றி அறுப்பது போல், இசையின் முன்னறிவிப்பு இன்றி TMSன் குரலில் பாடல் ஆரம்பம் ஆகிறது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர்நின்னதன்றோ..
தலைவனின்நிலை கண்டு கலங்குகிறாள் தலைவி. மண் நோக்கிய அழுகை. (தலைவன் கண்டு விடுவானோ என்ன? ).
திருமண நிகழ்வு தொடங்குகிறது. அக்னி வலம் வருதல் தொடர்கிறது.
வார்த்தகளின் ஆரம்பங்களில் நிகழ்காலம்.
தலைவன் அமர்ந்திருக்கிறான். தலைவி அவன் காலடியில்.
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கைஒளிமயமானதடி
தலைவி கண்ணில் மகிழ்வுடன் கூடிய கண்ணீர். (நவ ரசங்களையும் காட்டிய நாயகி அல்லவா)
பொன்னை மணந்ததினால்
உலகில் புகழும் வளர்ந்ததடி
கம்பீரத்துடன் கூடிய தலையாட்டல் (ஒரு சூரியன், ஒரு சிவாஜி)
தலைவியின்அழுகையினைதுண்டால்துடைத்துவிடுகிறான்.
மரமும் அதன் வேர்களாக குழந்தைகளும். கண நேரத்தில் வேர்கள் மறைகின்றன. மாபெரும் வலியினை உள் வாங்கி தலைவன். நிலை குலைந்து விழுகிறான் தலைவன். தாங்கிப் பிடிக்கிறாள் தலைவி.
தலைவனும்தலைவியும்ஊஞ்சலில்.
கால சுமைதாங்கி போலே
மார்பில்எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்.
பார்வை அற்றவர்களின் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் காட்சிகளும், பாடல் வரிகளும்.
காட்சி மாறுகிறது.
தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள். காட்சி மாறுகிறது.
காலம் மாறி இருக்கிறது. தலைவி மடியினில் தலைவன். தலை கோதுகிறாள்.
முள்ளில்படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்குபிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
தலையை நிமிர்ந்து பார்க்கிறான் தலைவன்.

என் தேவையை யார் அறிவார்
வினாக்குறி தலைவி கண்களில்.
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம்ஒன்றே அறியும்
தலைவி தலைவனின் கைகளை கன்னத்தில் வைத்துக் கொள்கிறாள்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் வரையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருவருக்கும் போட்டி இல்லை. இப்பாடலே அப்படம் முழுவதையும் காட்டி விடுகிறது.

காலம் கடந்து கணவன் மனைவி அன்னியோனத்தை காட்டும் மிக அழகான பாடல்

இன்னமும் நீர் வழிந்து கொண்டிருப்பதே பாடலின் வெற்றிக்கு சாட்சி.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 5 பூந்தளிர் ஆட

இது என் பதினெண் வயதுகளில் ஒலிக்கத் துவங்கிய பாடல்.
படம் : பன்னீர் புஷ்பங்கள்.
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடைக்காற்று வீசத் துவங்குகிறது. நண்பர்கள் வட்டம் மெதுவாக வேடிக்கைப் பார்க்கிறது. கைகளில் இருப்பதை விளையாட்டாய் பேசிக் கொண்டே விளையாடத் துவங்குகிறாள் தலைவி. மரத்தில் தலைவன். மிதி வண்டி அருகினில் நாயகி.

உணவு படைக்கப்படும் இடத்தில் இருவரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.புன்னகை இருவருக்கும்.
வாகனத்தில் வருகையில் கை அசைக்கும் காட்டுப் பூப் போல இசை நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி வாசிக்கத் துவங்குகிறாள். நாயகன் தானும் வாசிக்க முற்படுகிறான். பல முறைகள் நிகழ்கிறது.
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலேகோலம் இட்டதே
தேடிடுதே பெண் காற்றின் ராகம்
புகைவண்டி நகர்தலும் பேச்சுக்கள் ஆரம்பம் ஆவதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
  
தலைவி தேடுகிறாள்தோற்றுப் போகிறாள்தலைவன் ‘கொக்கு‘ காண்பிக்கிறான்.
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
  
புகை வண்டியில் பயணம் தொடர்கிறது, விளையாட்டு விளையாட்டு என நகர்ந்து கொண்டிருக்கிறது(கூடவே வாழ்வும்)

நாயகி நேரம் கழித்து ஓடி வருகிறாள். தலைவனிடம் கோபம் மட்டுமே இருக்கிறது. தலைவி கை குலுக்கி கோபத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள். தலைவன் முரண்படுகிறான். பிறகு கோபம் மறைகிறது இருவருக்கும்.
இருவரும் மீன் பிடிக்கிறார்கள். தூண்டிலில் மீன் சிக்குகிறது. ஒரு சிறிய பயமுறுத்தல் தொடங்குகிறது.
சைக்கிளில் பயணம் தொடர்கிறது. கதிரவன் சாட்ஷியாக இருக்கிறான்.

பள்ளிக் கூட வாழ்வியல் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. 

காலம் உறைத்துவிட்ட தளிர்கள் இன்னும் இளமையாய், இனிமையாய்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.
சார், நீங்க இந்த 30 வருஷத்துல செய்த சாதனை ரொம்ப பெருசு சார். அதெல்லாம் தனித்தனியா எழுதி  பிரிக்கணும்னா 200 வருஷம் ஆகும் சார். வயலின் இடத்தில் வீணை, வீணை இடத்தில் வயலின், அதெப்படி சார் மாத்தி மாத்தி, எப்படி உங்களால முடியுது சார்.

ராஜா சார் : வழக்கமான புன்னகை.

நீங்க எப்படி சார், எது பத்தியும் யோசிக்காம எழுதுறீங்க. எழுதுன நோட்ஸ எப்பவாது திருப்பி பார்ப்பீங்களா?

ராஜா சார்எழுதுறது நான் இல்ல, அது பத்தி யோசிச்சா, எழுதுறது நானா இருப்பேன். இசை இருக்காது. இப்ப அப்படி இல்லை. இசை தன்வழியில் எழுதுகிறது.

சார் உண்மைய சொல்லுங்க சார், பத்து அவதாரம் தாண்டிய பிறவி தானே சார்.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?

காரணங்கள்அற்று ஒரு குரலில் மயக்கம்(வேறு எப்படி வகைப்படுத்த முடியும்) உண்டு எனில் அதில் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.
அந்த வகையில் அவர் குரலில் இன்றைக்கும் மயங்கும் ஒரு பிறவி நான்.
பாடல் ஆரம்பமாகிறது. தலைவன் ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறான். மெதுவாக அவனுள் இருக்கும் வலிகள் சொற்களின் வடிவம் பெற்று காற்றுடன் கலக்க ஆரம்பிக்கின்றன.
மெதுவாகவேட்டியின் நுனிகள்காற்றில்ஆட ஆரம்பிக்கின்றன. ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்டமடியில்வெச்சுப்பாராட்ட
எனக்கொருதாய் மடி கெடைக்குமா
மெதுவாகநடை பயணம் தொடங்குகிறது.  மெதுவாக மீண்டும் காற்று அசைகிறது.
ராசாவே வருத்தமா
வார்த்தைகளில் முடிக்கும் முன்பே ஒரு குயில் கூவ ஆரம்பிக்கிறது. காற்றின் வீச்சமும் குயிலின் கீதமும் இணைய ஆரம்பிக்கின்றன.
ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமாசூரியன்கருக்குமா
விழிகள்தேடலை ஆரம்பிக்கின்றன. பாதங்கள் நடை பயிலுகின்றன. ஆற்று நீர் வழிந்தோடுகிறது. தலைவி கரையில் அமர்ந்திருக்கிறாள்.
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
தலைவி பதில் உரைக்கிறாள்.
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
உரையாடல்தொடர்கிறது
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாதசொகத்த சொன்னேனடி
 
சோக ராகம் சொகந்தானே(சொல்லில் முடிவில் பறவை பறக்கிறது)
குயில் முகம் காட்ட மறுக்கிறது. தோணியில் குயிலில் பயணம் தொடர்கிறது. தலைவன் பயணம் தரையில் தொடர்கிறது.
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
குயில் ஆறுதல் கூறுகிறது.
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
தலைவன் பயணம் தொடர்கிறது
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
 
எசப் பாட்டு படிக்கேன் நானே
தன் மன வலிகளை குறைத்திடும் தோள்களைத் தேடுகிறான் தலைவன்.
பூங்குயில் யாரது
 
கொஞ்சம்பாருங்கபெண் குயில் நானுங்க.
இன்று வரையில் சிவாஜின் அந்த கடைவாய் புன்னகையை யாரும் நெருங்க முடியவில்லை.
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததேஒலகமே மறந்ததே
சிவாஜியின் மேலும் கீழுமான பார்வை புன்னகையுடன் (என்ன சொல்ல)
நான்தானேஅந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததாஒலகந்தான்மறந்ததா
காமம் கடந்த விஷயங்களை, இயல்பான மனித வாழ்வின் மிகப் பெரும் வலிகளை காலம் பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதானால் தான் பூங்காறு இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது.
துக்கடா:
சார் நீங்க முதல் மரியாதை படத்துட நடிச்சது பத்தி
சிவாஜி: நான் எங்க நடிச்சேன். அந்த பய என்ன படத்துட நடக்க வச்சி படத்த முடிச்சிட்டான்.
 
Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 2 – செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்

 
நடிகை ஷோபா குறித்து இப்பதிவு. ராஜா சார், ஏசுதாஸ் பற்றி குறிப்பிட இனி எதுவும் இல்லை.
 
என் பதினென் பிரயாணங்களுக்கு முன்பே இப்பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் காரணங்கள் அற்று. என் தமிழ் மனப்பாடல் வரிகளை விட இப்பாடலை அதிகம் படித்திருக்கிறேன்.
அம்மா: என் பையன் நல்லா பாடுவான்.
விருந்தினர் : எங்க பாடு.
நான் : அப்பவே அழகிய காக்கா குரல்(இன்று வரை மாறவில்லை.) செந்தாழம் பூவில் பாடல் தொடரும்.
மெதுவாக வாகனத்தில் பயணம் தொடர ஆரம்பிக்கிறது. தலைவனும் தலைவியும் பயணம் செய்கிறார்கள். கூடவே இரு தோழிகள்.
நகரத்துவங்குகையில் ஒரு மருட்சி தெரிகிறது தலைவி கண்களில்( அட்டகாசம்)
தலைவன் இயற்கையை வர்ணித்து பாடத் துவங்குகிறான். தலைவியிடம் மீண்டும் ஒரு  புன்னகை.
இயற்கையையும் பெண்ணையும் சேர்த்து வர்ணிக்க துவங்குகிறான். வளைவான பாதையில் பயணம் தொடர்கிறது.
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளித்தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
தலைவி வானத்தை வேடிக்கைப் பார்த்து வருகிறாள். ஆனாலும் அச்சம் தீரவில்லை. பயணம் தொடக்கிறது.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
தலைவிக்கு கொஞ்சம் அச்சம் விலகுகிறது, மெதுவாக புன்னைக்க துவங்குகிறாள். தோழிகளுக்குள் மந்தஹாசப் புன்னகை.
பூக்கள் பூத்திருக்கின்றன. மெதுவாக அவ்வழிகளில் நடக்கத்துவங்குகிறாள். இசையின் பரிணாமங்கள் மாறுகின்றன. வெள்ளைப் புடவையில் அடிக்காதப் பூப்போட்ட டிசைன். (இதற்கு எப்படி இத்தனை அழகு).
காற்று அடிக்கத் துவங்குகிறது. கையில் இருக்கும் பூக் கொத்துகளும், முடிக்கற்றைகளும் பறக்கத் துவங்குகின்றன.
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
நீர் தடாகத்திற்கு அருகில் தலைவி. மெதுவாய் நதி நகர்ந்து செல்கிறது.
ஒற்றை மூக்குத்தி, காதுகளில் கூண்டு வடிவ தோடுகள்.
நிகழ்வுகள் முடிந்து நாயகன் தன் பணிகளைத் தொடர்கிறான்.
பாலு மகேந்திரா சார் வார்தைகளில் சொல்வது என்றால்பல கோடி வருடங்களுக்கு ஒரு தேவதை பிறக்கிறாள். அது ஷோபா
அதனால் தான் இன்னும் இப்பாடல் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 1


புழுதி எழுப்பி செல்லும் வாகனமாக ஒவ்வொரு மழைத்துளியும்எழுப்பிச் செல்கிறது சில நினைவுகளை

—————————————————————

நாணயத்தின் இரு பக்கங்கள்
அவள்சனியன் புடிச்ச எலி இன்னைக்காவதுமாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன்புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள்கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
—————————————————————
பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்து விடுகிறது
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட
—————————————————————
ஆண்களின் மன வலிகளைவிட பெண்களின் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்குமோ?
.ம்மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
——————————————————————————————————————————————————————-
புதுத் தாலியை விட மின்னுகிறது புது மணப் பெண்ணின் கண்கள் 
——————————————————————————————————————————————————————-
ஊமைப் பெண் பேச வேண்டுமா, அவளுக்கு திருமணம் செய்து வைத்து பாருங்கள். மாற்றம் தெரியும்
——————————————————————————————————————————————————————-
நான் ரசித்த காதல் காட்சி

அன்றலர்ந்த தாமரை போல் முகம்.வட்ட வடிவமாய் தாழம்பூ குங்குமம். சிறியதாய் வைர மூக்குத்தி. மாம்பழ நிறப் புடவை. தலைவன் கைப்பிடிக்கிறாள் தலைவி. ‘மேடும் பள்ளமுமா இருக்கோன்னோ, பாத்து வாங்கோன்னா‘. (70+ பாட்டி + 80+தாத்தா). கரம் பற்றுகையில் தெரிகிறது காதல்

——————————————————————————————————————————————————————-
நிஜங்களில் வாழ்வதை விட கற்பனையில் வாழ்வது கடினமாக இருக்கிறது.
——————————————————————————————————————————————————————-
அடிமை : தலைவா, தலைவா மக்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்யறது.
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
——————————————————————————————————————————————————————-
தாய்மை கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தியை விட பிரகாசமாக மின்னுகின்றன
——————————————————————————————————————————————————————-

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

சமீபத்தில் நான் படித்த என்னை பாதித்த விஷயம்.

வெளி நாட்டில் வாழும் ஒரு குழந்தையை சுமக்கும் ஒரு தாய்க்கு, அது செயல் அற்று விட்டதாத மருத்துவ முறைப்படி அறிவிக்கப்பட்டது.

தாய் மிகவும் கவலையுடன் இருந்திருக்கிறாள்.

அந்த நேரத்தில் இசைஞானி இசையை கேட்க நேரிடுகிறது. மிகக் குறுகிய காலத்துக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தை அசைய ஆரம்பிக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு கணவன், குழந்தை அனைவருடன் வந்து இசைஞானியிடம் ஆசி பெற்று சென்றதாக செய்தி.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.

சங்கீதா: நீங்க ஏன் இப்ப இளையராஜாவோடு சேர்வதில்லை.

பாலா : இன்னைக்கு இருக்கிற எல்லா இசையிலும் ராஜா இருக்கிறார். அவரில் சாயல் அற்ற தனிப்பாடல் எதுவும் இல்லை. அதனால அவரை அவர் இசையை தனியா பார்க்கவில்லை.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.

இசைஞானி : கதய சொல்லு.

பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.

இசைஞானி : படம் ஓடாதுடா.

பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இசைஞானி :  அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.

இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.

படம் : முதல் மரியாதை.

Loading

சமூக ஊடகங்கள்

என் இனிய பொன் நிலாவே…

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா – பொது அம்சம் – இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ‘ உங்களுக்கு பாட வருமா?’
‘கொஞ்சமா’ பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

‘இரட்டுற மொழிதல்’ என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு பாதி கனவு நீயடி..

எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,

ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.

ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.

ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு  மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.

மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.

சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,

வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.

மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).

கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.

காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

முதல் முறையாக 100 வயலின்கள் இசைக்கு பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில். அப்போது ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வாசித்து கொண்டிருந்தனர்.

அப்போது இசை ஞானி சொன்னார் ‘ஏம்பா, அந்த 38வது வயலின் சரியா வாசிக்கல. அவரை சரியா வாசிக்கச் சொல்லுங்க’ 

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

எனது நண்பர் ஒரு படத் தயாரிப்பாளர்.

ஒரு முறை எனது நண்பர் ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒலி எஞ்ஜினியர் இளைய ராஜா ஒரு பாடலை முடித்து விட்டு மிகவும் சந்தோஷமாக சென்றதாக கூறியிருக்கிறார்.

எனது நண்பர் அப்பாடலை ஒலிக்கச் சொல்லி இருக்கிறார். கேட்டவுடன் எனது நண்பரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

அப்பாடல் – என்னைத் தாலாட்ட வருவாளா…

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகளும் பாடலும்

ஆகாய கங்கை – இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.

படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை  மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).

மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.

ஆண் :  துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் :  தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.

ஆண்        :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

பெண்       :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.

மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.

பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு

பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து  இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

ஒரு முறை இசைஞானி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஒரு இசையை கேட்க நேர்ந்தது. அந்த வாத்தியத்தை பற்றியும், அதை வாசிக்கும் கலைஞரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவரை சந்தித்து சென்னை வரும் போது தன்னை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த கலைஞர் சென்னை வந்த போது 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அந்த கருவியை 15 நாட்களில் வாசிக்கும் திறமையை பெற்றார்.

அந்த கருவியை வாசிக்க முழுமையாக 2 ஆண்டுகள்  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்