காற்றில் ஆடும் சருகுகள் – 4

ஏங்க, இன்னைக்கு லீவுதான, கொஞ்சம் கடைக்கி போய்மளிகைசாமான்வாங்கிவந்திடுங்க,உங்கடிரஸ்எல்லாம் அயர்ன்கொடுத்து வாங்கிவச்சிருங்க, காலைலசாப்டமாட்டீங்க தானே(நான் எங்க சொன்னேன்), ஒரேதடவையாமதியம்சாப்டுக்கலாம், ரேஷன்போய்ட்டு வந்துடுங்க, பசங்கசட்டைஎல்லாம் வாஷிங்மிஷின்ல போட்டுதொவச்சி அயன்பண்ணிடுங்க, என்வண்டிக்கு பெட்ரோல் போட்டுகாத்துஅடிச்சிட்டு வந்துடுங்க., நேந்துநீங்ககாயவச்சதுணிஎல்லாம் மாடிலகாயுதுஅதெல்லாம் எடுத்து வந்துடுங்க, இன்னைக்கு(ம்) டீவிஉங்களுக்கு கிடையாது. இப்பவேகண்ணகட்டுதே…..
மாலை: என்னன்னே தெரில, இன்னைக்கு ஒரேடயர்டாஇருக்கு.
அடிப்பாவி நான்பேசவேண்டிய வசனத்தை எல்லாம் இவபேசறாளே
——————————————————————————————————————————————————————-
யாரும்அற்றபொழுதுகளில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டேதோழமைகளுடன் மனம்விட்டுசிரித்துப் பேசும்வாய்ப்பு எப்பொழுதாவது தான்வாய்க்கிறது.
——————————————————————————————————————————————————————-
மனிதன்கர்வம்அழித்தலில் மருத்துவ மனைகளில் பங்குமகத்தானது.
——————————————————————————————————————————————————————-
தனதுமகளைபிறந்தஉடன்தீண்டும் தந்தையின் கண்கள்எவரும்அறியாமல் எப்போதும் பனித்திருக்கின்றன. அதுஆயுட்காலம்முழுவதும் தொடர்கிறது.
——————————————————————————————————————————————————————-
திருமணம் ஆனஉடன்மனைவியுடன் வெளியில் செல்கையில்இந்தாம்மா மல்லிகை பூ5 முழம்கொடுஎன்றுகடையில் கேட்பவனிடம் ஒருபுன்னகை கலந்தவெட்கம் தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
யாருமற்ற இரவில்கணவனைஒருகண்ணால் கண்டுவிட்டு, மகனுக்கு போர்வைபோர்த்தி, அவனின்தலைகோதிகன்னத்தில் முத்தமிட்டு ஒருநிண்டபெருமூச்சுடன் உறங்கஒருதாயால்மட்டுமே முடிகிறது.
——————————————————————————————————————————————————————-
தன்மனைவியுடன் கைகோர்த்து நடக்கும் வாய்ப்பு ஒருசிலபுண்ணியவான்களுக்கே கிடைக்கிறது.
——————————————————————————————————————————————————————-
 வேலைக்கு செல்லும் பெண்ணைப் பார்த்துஅவளுக்கு என்னஎனும்பொழுதுகளில் அவளதுகண்களில் தெரிகிறது உயிரின் வலிகள்.
——————————————————————————————————————————————————————-
மனிதமனதின்பெரும்பாரம்குறைத்தலில் இறைமைக்கு அடுத்தநிலையில் குளியல் அறைகள்.
——————————————————————————————————————————————————————-
மிகஅதிகசந்தோஷத்தையும், மிகஅதிகவலியையும் கொடுத்து இதயத்தை ஈரமாக்கும் நிகழ்வு தந்தைக்குதன்மகள்ருதுவாகும் போது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *