ஒவ்வொரு மழையும் கழுவிவிடுகிறது சிலபழையநினைவுகளை. உருவாக்கிறது சிலபுதுநினைவுகளை.
——————————————————————————-
நிகழ்காலநிகழ்வுகள்
கடந்தகாலங்களில்
அபத்தமாகின்றன.
——————————————————————————-
மறுக்கப்படுவதின் வலிஅறிந்தவர்களே மன்னித்தலுக்கு தயாராகிறார்கள்.
——————————————————————————-
நெருப்பில் இடப்படும் நெய், நெருப்பினை அதிகப்படுத்துவது போல், ஒவ்வொரு இருளும் பலநட்புகளை உறுதிப்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
ஆற்று நீராய் வழியும் அனைத்து வலிகளும் அடங்கிவிடுகின்றன ஒருமெய்த்தீண்டலில்.
—————————————————————————————————————————————————————–
வீரன்வாள்எடுத்தபிறகுஎதிரிஎன்றும், புல்லுருவி என்றும் பார்ப்பதில்லை. இலக்குஇரத்தம் பார்த்தலுடன் கூடியவெற்றிமட்டுமே.
—————————————————————————————————————————————————————–
அழுக்கு ஆடைகளுடன் இருப்பவனைச் சுற்றிஇருக்கும் நாய்கள் அழகானவைகள். அவைகளுக்கு பொரையைகொடுத்து விட்டுஅதில்மகிழ்ச்சி அடையும் அவனதுகண்களும் அழகானது
—————————————————————————————————————————————————————–
இரு சக்கர வாகனத்தில், மனைவிமற்றும் இருகுழந்தைகளுடன் செல்பவனின் கண்களில் ஒருகர்வம்இருக்கத்தான் செய்கிறது.
—————————————————————————————————————————————————————–
முன் வாகனத்தில் செல்லும் பெண்ணின் கைப்பட்டு சரிசெய்யப்படும் அவளதுகூந்தலில் கரைகின்றன பலமனங்கள்.
—————————————————————————————————————————————————————–
வாக்கியங்கள் முழுமை பெறுகின்றன ஒருமுற்றுப் புள்ளியில்.
Thanks a lot Sir
Like the short and meaningful poems