
நாளொன்றின்
நீண்ட பகல் பொழுதினை
களைப்பாக்கி
கதவைத் திறக்கையில்
கவனித்து இருங்கள்.
பூங்கொத்துகளுடன்
தேவதை
அப்பாபாபாபா
எனவும் ஓடிவரலாம்.
உருவேறத் திருவேறும்
நாளொன்றின்
நீண்ட பகல் பொழுதினை
களைப்பாக்கி
கதவைத் திறக்கையில்
கவனித்து இருங்கள்.
பூங்கொத்துகளுடன்
தேவதை
அப்பாபாபாபா
எனவும் ஓடிவரலாம்.
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்
நிராகரிக்கப்படவனை
நீங்கள் அத்தனை எளிதில் காண இயலாது
ஒருவேளை வானம் பார்த்து
பீடியை புகைப்பவனாக இருக்கலாம்;
மனைவி, இரு குழந்தைகளோடு நீண்ட நேரம்
இறையை வணங்க வரிசையில் காத்திருப்பவனாக இருக்கலாம்;
எவர் எவரோ வீசிச் சென்ற உணவு பொட்டலங்களை எடுத்து
சரிநிகர் சமானமாக நாயோடு உண்ணுபவனாக இருக்கலாம்;
அங்காடியில் விலைகளைப் பார்த்து பொருள்களை
அதனதன் இடத்தில் வைப்பவனாக இருக்கலாம்;
கருமை நிற மேனி கொண்டு,அழுகிய உடலோடு
காலம் கடத்துபவனாக இருக்கலாம்;
மனைவியின் கண்களைப் பார்த்து பேசியபடி
கடற்கரையில் பட்டாணி உண்பவனாக இருக்கலாம்;
மதுபானக் கடைகளில் தனித்து இசையைத் தவிர்த்து
மதுகோப்பைகளை நீண்ட நேரம் உற்றுப் பார்பவனாக இருக்கலாம்;
இருளினை உள்வாங்கி பேரொலியையும் பேரொளியையும்
சிந்திப்பவனாக இருக்கலாம்;
நிராகரிக்கப்படவனை நீங்கள் காண இயலும் கணத்தில்
அவனிடம் இருந்து நீங்கள் பெறுவதற்கு
பேரன்பு அன்றி வேறொன்றுமிராது.
புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குநர் : திரு. ஐயப்ப மாதவன்
நிசப்தமும் பேரொலியும் ஆன
இரவொன்றை கடக்க முற்படுகிறேன்
தன்னை வெளிக்காட்டாது
வெளிப்படுகின்றன உருவங்கள்.
ஒன்று பலவாகி, நூறாகி
கோடி ஆகின்றன.
ஒவ்வொரு சிறு பிரபஞ்சமும்
அசைவு கொள்கிறது
அசையும் பிரபஞ்சங்களில்
பிம்பங்கள் தோன்றுகின்றன.
காற்றோடு கலக்கிறது ஒலிகள்
‘கொஞ்சம் இருங்க, இன்னும் கொஞ்ச
நேரத்தில அது வெளில வந்துடும்,
காப்பி சாப்பிடுறீங்களா?’
புகைப்படம் : திரு.ஐயப்ப மாதவன் - திரைப்பட இயக்குனர்
கொடுத்து சிவந்தவனுக்கு
யாசிக்கும் எண்ணம் தோன்றியது
தன் விருப்பம் அறிவித்தான்
தேவர்களும், ரிஷிகளும்
சித்தர்களும்
தெய்வங்களும் தயக்கம் காட்டினர்.
‘மாற்ற இயலா மாயை புகுதல் என்ன நியாயம்’ என்றனர் தேவர்கள்
‘இருமை இல்லாதவன் யான்’ என்றான்
‘தங்களே இப்படி நாடகம் நடத்தவேண்டுமா’
என்றனர் ரிஷிகள்.
‘யானும் கூத்தன் தானே’ என்று
விடை பகர்ந்து புன்னகை பூத்தான் மாயன்
தங்களை எப்படிப் பிரிவோம்’ என்றனர் சித்தர்கள்
‘வடக்கு நோக்கி வந்து வாழ்த்துவோம் யாம்’
என்றான் விமலன்
கணப் பொழுதினில்
எல்லோராலும் விலக்கத் தக்கவனாகி
விரும்பி யாசகம் துவங்கினான்.
‘என்னம்மா ஆயிற்று அவருக்கு’ என்று கேள்வியுடம்
மறைந்தனர் தாயும் ஒரு குழந்தையும்;
‘யேய், பிச்சைக்காரா, வழிவிடு’
வார்த்தையில் கனல் எழுப்பி புறம்
புகுந்தான் ஒருவன்;
‘கவலை அற்று இரு, கையில் பொருள் விழும்’
என்றான் முடவனொருவன்;
‘நல்லா தான இருக்க,
உழைக்க என்ன கேடு’என்று
உரை பகன்று பிரம்பு வீசினான் ஒருவன்
பின்னொரு பொழுதுகளில்
பிரபஞ்ச உயிர்களில் உறை காலங்களில்
வடு மாறாமல் இருந்தது.
காலம் உறைந்து நிற்கிறது எவரும் அறியாமல்.
புகைப்படம் : Vinod V
உடலெங்கும் சேற்றின் படிமங்களை வாங்கியபடி.
புகைப்படம் : சித்திரம் நிழற்படம்
முழுமை அற்ற மரணத்தில் முழுமை அடைவேன்.
* புகைப்படம் : Karthik Pasupathy* உறு பொருள் – தியானிப்பவர்க்கு வந்து உறுவதாகிய பரம்பொருள். – திருமந்திரம் – 4ம் தந்திரம். 952
கருமை நிற நாயொன்று.
சளம் – துன்பம், சளத்தில் பிணிபட்டு – கந்தர் அலங்காரம் பாடல் – 7
புகைப்படம் : Vinod V