2038 – Flash of light from colliding black holes


1. Flash of light from colliding black holes

2. Black holes aren’t supposed to make flashes of light. It’s right there in the name: black holes.

3. There’s a lot we can learn about these two merging black holes and the environment they were in based on this signal that they sort of inadvertently created.

4. These objects swarm like angry bees around the monstrous queen bee at the center

5. The force of the merger sends the now-a-little-larger black hole flying off, through the gas surrounding it in the supermassive black hole’s accretion disk. The gas, in turn, produces the flare after a delay of days or weeks.

Source: https://www.space.com/black-holes-collision-flash-of-light.html

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
வூட்ல, அடுப்பாங்கரையில ஒரு வெளக்கு எரியல, அத பார்க்க துப்பில்லை, Black holes மோதி வெளிச்சம் வர்றத பத்தி ஆராய்ச்சி செய்யறாரா,

2.
இது இன்னாப்பா, ஒன்னுமே பிரியல.

அதுக்குத்தான் என்னைய மாதிரி மூணாப்பு வரைக்குமாவது படிக்கனுங்கிறது. நீ நம்ம கணேசன்ட 1000 ரூபாய் கடன் வாங்கினேல்ல அதுக்கு வட்டி 500ரூ, அந்த சல்லிபயகிட்ட, அட அவன் தாப்பா, அவன்கிட்ட ஒரு 2000 வாங்கி இருக்க, அதுக்கு வட்டி 1500, ஆக மொத்தம் எவ்வளவு ஆச்சு, கணக்குபண்ணி சொல்லு. இப்ப உன் கண்ணுல ஒரு ஒளி தெரியுதா, அதான் இது.

3.
ஓவரா இருக்க, நாம சம்பாதிக்கிறதே இந்த EB பில்லு கட்டத்தானா, பேசாம ரெண்டு Black holes புடிச்சிகிட்டு வந்து ஒன்னு சேர்த்து வெளிச்சத்த பார்த்துக்க வேண்டியது தான்.

4.
Black holes அப்டீன்னாக்கா, ஒண்ணுமே இல்ல. அதாவது உள்ளுக்குள்ள ஏதுவும் போகாது, போனாலும் திரும்பி வராது. உங்கள மாதிரி பசங்க அப்டீன்னு வச்சிகீங்க. அவை ஒன்னு சேரும்போது…

சார், பெல் அடிச்சிடுச்சி சார், அடுத்த கிளாஸ்ல பார்ப்போம்.

5.

ஏம்மச்சான், அங்க என்ன ஒளி தெரியுது, ஏதாவது Black holes collection ஆகி இருக்குமோ?

அடச்சை, பீர் பாட்டில் மூடிய மோந்து பார்த்தாலே மயக்கம் ஆற பய நீ, உனக்கு போய் Hennessy Limited Edition வாங்கி குடுத்தனே.

ஒளி இருக்குன்னா சைட்டிஷ் இருக்கும்ல மச்சான்.

Loading

சமூக ஊடகங்கள்

IT துறை – சவால்களும் சாத்தியக் கூறுகளும்


புகைப்படம் : திரைப்பட இயக்குனர் - திரு. ஐயப்ப மாதவன்

கண்ணுக்குத் தெரியா இறைவன் இருக்கிறான் இல்லை எனும் வாதங்கள் தாண்டி கண்ணால் காண இயலா வைரஸ் என்பது நிஜமாக இருக்கிறது. மனித குலத்தில் இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் சிக்கல் மிக அதிகம்.

ஒவ்வொரு முறையும் இயற்கை தன்னை தானே புதிப்பிக்கும் போது நிறைய இழப்புகளை சந்திக்கும்; இம்முறை தலைமுறை தாண்டிய இழப்புகள் அதிகம்.

எத்தனையோ துறை இருக்கையில் இந்த IT துறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனும் கேள்வி எழும். மிகப் பெரிய அளவில் பொருளை / செல்வத்தினை இந்தியாவிற்கு தரும் துறை பொருளாதாரத்தை துறை என்பதாலும், இந்த துறை முன்வைத்தே பல துறை துறைகள் இயங்குகின்றன என்பதாலும் இத்துறை எடுத்துக் கொள்ளப்படுகிறது

நேரடியான பாதிப்புகள், மறைமுக பாதிப்புகள் இங்கு அதிகம் என்பதும் காரணம்.

ஒவ்வொரு முறையும் இத்துறைக்கு பாதிப்பு வரும்போது இத்துறை தன்னைத் தானே வெவ்வேறு வழிகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இத்துறை இந்த முறை எடுக்கும் முடிவுகள் எண்ணிப்பார்க்க இயலாததாகவே இருக்கும்

கீழ் கண்ட தலைப்புகளில் எழுத இருக்கிறேன்.

  • இந்திய பொருளாதாரம்
  • மனித வளம் மேம்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள்
  • மீண்டு எழுதல்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Brain and artificial neurons to link up over the web


Research on novel nano electronics devices has enabled brain neurons and artificial neurons to communicate with each other over the Internet

The scientists created a hybrid neural network where biological and artificial neurons in different parts of the world were able to communicate with each other over the internet through a hub of artificial synapses made using cutting-edge nanotechnology

The Southampton based researchers captured spiking events being sent over the internet from the biological neurons in Italy and then distributed them to the memristive synapses. Responses were then sent onward to the artificial neurons in Zurich also in the form of spiking activity. The process simultaneously works in reverse too

Here biological and artificial neurons are linked together and communicate across global networks

The research was funded by the EU Future and Emerging Technologies programme as well as the Engineering and Physical Sciences Research Council in the UK

Source : https://www.sciencedaily.com/releases/2020/02/200226110843.htm

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
வாங்க சார், வாங்க எம் புருசன் 3 பேங்கில் அக்கவுண்ட் வச்சி இருக்கார். எல்லா கார்டுக்கும் தனித்தனி பின் வெச்சி இருக்கார். அது ஒன்னு ஒன்னுக்கும் தனித்தனி username and password வச்சி இருக்கார். அத கண்டுபிடிச்சிட்டால் உங்க நியூரான் பத்தி 10 Ph.D செய்யலாம்.

2.
Hybrid அப்டீன்னா கலப்பு. அதனால கலப்பு மணம் செஞ்சி வப்பாங்களா ஆபீசர்

3.
சார், இந்த நேச்சுரல்,artifical neurons பயன்படுத்தி டேட்டா எப்டி எடுக்குறாங்க சார், Primary key define செய்து இருப்பாங்களா, BCNF வரைக்குமா இல்ல 6NFவரைக்கும் இருக்குமா. இப்பவே சொல்லுங்க வாத்தியாரே

4.
என்னப்பா சர்வர்ல இடம் பத்துல அப்டீன்னு சொல்லுது?
சார், அவனை வச்சி சோதனை ஆரம்பிச்சேன், அவன் ஆபீஸ்ல செய்யிற அரசியல் பத்தி சோதனையை இப்பத்தான் ஆரம்பிச்சேன். 3 % கூட முடியல, அதுக்குள்ள சர்வர்ல இடம் இல்லாம போயிடுச்சி சார்

5.
அட ஏன் சார் நீங்க வேற இந்த ஆள சோதனைக்கு அழைச்சிகிட்டு வந்து இருக்கீங்க, இவன் கொரானா பத்தி பேப்பர், வாட்ஸப், FB ல வர எல்லாத்தையும் படிச்சி வச்சி இருக்கான், ரொம்ப குப்பையா இருக்கு சார்.

Loading

சமூக ஊடகங்கள்

2038 -Artificial Muscle


  • Crystalline ‘artificial muscle’ makes paper doll do sit-ups
  • Researchers have given a foil “paper doll” the ability to move and do sit-ups with a new material called polymer covalent organic frameworks (polyCOFs).
  • Scientists make conventional COFs by linking simple organic building blocks, such as carbon-containing molecules with boric acid or aldehyde groups, with covalent bonds.
  • Research team made a doll containing the membrane as the waist and aluminum foil as its other parts. Upon exposure to ethanol vapors, the doll sat up; when the vapors were withdrawn, it laid down.

Source : https://www.sciencedaily.com/releases/2019/07/190717105309.htm

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

  1. புருசன் (அலுவலகத்தில்) : இவ ரொம்ப அடிக்கிறா, என்ன செய்யலாம், வீட்டுக்கு லேட்டா போகலாமா, மீட்டிங்ன்னு சொல்லி ஆபீஸ்லய தங்கிடலாமா? ,ம்ஹூம் இதெல்லாம் சரிபட்டு வராது. செயற்கை தசையில ஒரு பொம்ம செஞ்சி வச்சிட வேண்டியது தான்.(9.01.01 PM)
  2. மனைவி (இல்லத்தில்) : நீ நெனக்கிற மாதிரி எல்லாம் செய்ய முடியாது. அதுக்கு National Natural Science Foundation of China, Tianjin Natural Science Foundation of China and the National Science Foundation எல்லா எடத்தில் இருந்தும் நிதி வாங்கனும். அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட. (9.01.01 PM). குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது
  3. ஜிம்முக்கு போக அலுப்பா இருக்கு. மாஸ்டர் ரொம்ப சிட் அப் செய்ய சொல்றார். பேசாம செயற்கை தசையில ஒரு பொம்ம செஞ்சி அனுப்பி வச்சிட வேண்டியது தான்.
  4. மச்சான் நீயும் தான் comsi final year படிக்கிற. பேசாம ஏதாவது செயற்கை தசையில ஒரு பொம்ம செஞ்சி ப்ராக்சி அட்டடெண்ஸ் வாங்க முடியுமா?
    இல்லடா, இப்பத்தான் #include<stdio.h> எழுத கத்துகிட்டு இருக்கேன்.
  1. உணவகத்தில்

ஏனுங்க, என்னங்க, இன்னைக்கு ஏதாவது புதுசா இருக்கா சாப்பிட.
இருக்கு சார், செயற்கை தசைல செஞ்சி கொஞ்சம் மிளகாய் பொடி தடவி, கொத்தமல்லி அதான் உங்களுக்கு புரியாதே தனியா போட்டு அரைச்சி மிளகு போட்டு…
ஒரு பிளேட் கொண்டாடா..(இவன் ரொம்ப பேசறான்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
சாங்கிய மதத்தின் ஒரு பிரிவினர்உலகத்திற்கு முதல் காரணம்பிரகிருதி“‘, அது தன்னைத்தானே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனரே, அஃது எவ்வாறு?
ஆசிரியர்:
அறிவில்லாத பொருள் தானே செயல்படுவது இல்லை. எனவே உலகம்  செய்படுகிறது எனில் , அஃது அறிவு பெற்ற ஒரு கர்த்தாவினால் தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே அதை நடத்துபவன் பேரறிவும் பேராற்றலும் பெற்றவனாகவே இருக்க முடியும்.
மாணவன்:
அறிவு அற்றவைகளுக்கு செயல்பாடுகள் இல்லை எனில் எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்க்கிறது. நஞ்சு பற்றி இடம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
ஆசிரியர்:

காந்தத்தையும், இருப்பையும் ஒருவன் கூட்டுவிக்கும் போதே அது ஈர்க்கப்படும். நஞ்சு பரவுதல் உயிர் உள்ள உடம்பின். எனவே அறிவில்லாத பொருள்கள் செயல்படா.
மாணவன்:
நீங்கள் குறிப்பிட்டது போல் உயிர்கள் அறிவுடைப் பொருள் எனில் அவைகள் உலகிற்கு கர்த்தாவாகுதல் என்பது சரியா?
ஆசிரியர்:
நிச்சயம் இல்லை. உயிர்கள் உடம்பை பெற்றபின்னரே முழுமை பெறும் தன்னை உடையதாகும். உடம்பு இல்லா உயிர்கள் மற்றொரு உடம்பை தோற்றுவிக்காது. எனவே பேரறிவு உடைய இறைவனே உலகிற்கு கர்த்தா.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 23/25 ஏகபாதர்

வடிவம்(பொது)
·   உருவத்திருமேனி
·   வாமதேவ முகத்திலிருந்து  தோன்றியவர்
·   ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஊழிக்கால பிரளயத்தில் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிக்கும் மூர்த்தம்
·   வலது கை – அபய முத்திரை
·   இடது கை – வரத முத்திரை
·   பின்கைகளில் மான், மற்றும் ஆயுதம்
·   ஆடை – புலித்தோல்
·   கழுத்து – மணிமாலை
·   ஜடாபாரத்தில் சந்திரன் மற்றும் கங்கை
வேறு பெயர்கள்
·         ஒரு பாதன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         திருக்காளத்தி – மலைப்பாறை புடை சிற்பங்கள்
·         திருவண்ணாமலை கோயில்
·         திருவொற்றியூர்
புகைப்படம் :  ta.wikipedia
(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 22/25 திரிபாதர்

வடிவம்
இரண்டு சிரசு
நாலு கொம்புகள்
ஏழு புஜம்
மூன்று பாதம்
வேறு பெயர்கள்
முப்பாதன்
திரிபாதத்ரி மூர்த்தி
இதரக் குறிப்புகள்
பிரளயத்தின் முடிவில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் மகேஸ்வரனிடத்தில் லயமாகும் நிலை திரிபாத மூர்த்தி ஆகும்.
சரியை, கிரியை, யோகம் அனுஷ்டிக்கும்படி செய்யும் வடிவம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
மாமல்லபுரம் வடக்கு சுவர் சிற்பம்

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்


மாணவன்

பிரமாணங்கள் குறித்து இன்னும் விளக்க வேண்டும்.
ஆசிரியர்

குடமாய் தோன்றும் பொருள் முன்பு மண்ணில் இருந்தே தோன்றியது. ஆடையாய் தோன்றும் பொருள் நூலில் இருந்தே தோன்றியது. எனவே சூன்யத்தில் இருந்தோ அல்லாதவற்றில் இருந்தோ எந்தப் பொருளும் தோன்றவில்லை. உள்ள பொருளே நிலை மாறியும் வடிவம் மாறியும் வரும். (Energy cannot be created. One form of energy can be converted to another form of energy – Ex. Kinetic energy to Static energy என்பது சிந்திக்கத் தக்கது.) இதுவே சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை. இதையேமருவுசற் காரியத்தாய்என உமாபதிச் சிவாச்சாரியார் சிவப்பிரகாச நூலில் குறிப்பிடுகிறார்.
மாணவன்

தோன்றிய பொருள் தோற்றத்திற்கு முன்னும் உள்ளதுஎன்பதன் பொருள்காணப்படாத நுண்நிலையில் உள்ளதுஎன்பதன் பொருள் உணர்ந்து கொண்டேன்.எனவே உலகத்தை உள் பொருள் எனத் தயங்காது கொள்வேன்.
காரியப் பொருள்களுக்கு கர்த்தா இன்றியமையாதது
மாணவன்

உலகம் நுண் நிலையில் இருந்து பருநிலைக்கு தோன்றுகிறது எனக் கொண்டால் உலகம் உள் பொருள் என்பதற்கும் அது தானாக தோன்றாமல் அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும் என்பது எங்கனம்? ‘

ஆசிரியர்

இல்லாதது தோன்றாது’ என்பது போலவே ‘அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்’ என்பதே உண்மை.


மண், நூல் ஆகியவை காரணப் பொருள்; குடம், ஆடை போன்றவை காரியப் பொருள். மண், நூல் போன்றவை தானே மாற்றம் கொள்ள இயலாது. அதை கூட்டுவிக்க குயவனும், கோலிகனும் தேவை. எனவேஉள்ளதாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன‘ . அதுபோலவே உலகத்தை தோற்றுவித்ததற்கு ஒரு கர்த்தா தேவை.

எனவே ஒரு காரியம் நிகழ்த்தப்பட வேண்டுமாயின்முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக்காரணம்என மூன்றும் தேவை. குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டச் சக்கரம் துணைக் காரணம், குயவன் நிமித்த காரணம். அதுபோலவே உலகத்திற்கு மாயை முதல் காரணம், கடவுளது ஆற்றல் துணைக் காரணம், கடவுள் நிமித்த காரணம்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுக்குரிய பிரமாணங்களை கூறும் முன்  அவற்றின் இயல்புகள் பற்றிக் கூற வேண்டும்.
ஆசிரியர்
பிரமாணம்  வடசொல், அளவை  தமிழ்ச்சொல். அளப்பவன்(பிரமாதா– உயிர் அல்லது ஆன்மா), அளத்தற்கருவி (பிரமாணம்  உயிரின் அறிவாற்றல் அல்லது   ஆன்ம சிற்சக்தி), அளக்கப்படும் பொருள்(பிரமேயம்)

பதி, பசு மற்றும் பாசங்கள்) ஆகிய மூன்றாலே அளத்தல் நிகழும்.
புறப் பொருள்களை அளக்க கருவிகள் இருத்தல் போல், அகக் கருவிகளைஅளக்க அவரவர் அறிவாற்றலே பிரமாணமாகிறது.
தார்க்கியர்கள்(தருக்க நூல் சார்ந்தவர்கள்) கண் முதல் உடல் வரையிலான 5 வகை பொறிகளையே (பஞ்ச இந்திரியங்கள் ) பிரமாணம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களும் வேறு ஒரு பொருளாகிய அறிவால் அளக்கப்படுவதாலும், தான் மற்றொன்றினாலும் அளக்கப் படாததுமாகவும், பிறவற்றை அளப்பதாகவும் இருப்பதே உண்மை அளவை. எனவே  தார்க்கியர்கள் கருத்து பொருந்தாது.
மாணவன்:

சைவ சித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை?

ஆசிரியர்

எண்
பிரமாணம்
விளக்கம்
1
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
கண்ணால் கண்டேன்
2
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
3
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
4
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப்  பிரமாணம்)
முயற் கொம்பு
5
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
6
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
தாமரை முகம்
7
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
8
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
9
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
10
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
  
இவைகளில் முதல் மூன்றும் பிரதானமானவை. மற்றவைகள் அவைகளின் வகையே.

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி சித்தனின் அரங்கேற்றம்

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க

சம்பவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வாசுகி ஆலகால விஷத்தை வெளிப்படுத்தியது. அதனை ஈசன் உண்டான். சத்தி தடுத்து நிறுத்தியதால் அது கழுத்தில் தங்கி விட்டது.
விளக்கம்

ஈசனானவர் எங்கும் நிறைந்தவர், பிறப்பிலி. மனித வாழ்வின் பிறப்பு மற்றும் இறப்பினை அவர்களின் மூச்சுக் காற்றே தீர்மானிக்கிறது.கழுத்தின் கண்டத்திற்கு மேல் வாசி பயில்பவர்கள் இறை தன்மையினை அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பில்லை. கழுத்துக்கு கீழே வாசி பயில்பவர்கள் உடல் ரீதியான மற்றும் மனரீதியான முன்னேற்றம் அடைவார்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு.

இறை தன் நிலையிருந்து என்றும் வழுவாதிருக்க வாசியோகத்தின் முழுமையினை வெளிப்படுத்த ஈசனும் இறைவியும் நடத்திய நாடகம் அது.

மேலும் அறிய விரும்புவர்கள் குரு முகமாக அறிந்து கொள்க.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி
வடிவம்(பொது)
·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
·   சூலம் தாங்கிய திருக்கரம்
·   தேவியை அணைத்த ரூபம்
·   லிங்கத்தில் மேல் நின்று காலனை சம்ஹாரம் செய்யும் தோற்றம்
·   வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக தோற்றம்
·   சூலம் கீழ் நோக்கிய வடிவம்
வேறு பெயர்கள்
·         காமதகன மூர்த்தி
காலனை யுதைத்தான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·         குறுக்கை, மயிலாடுதுறை
·         நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
·         காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்,கோவை மாவட்டம்
இதரக் குறிப்புகள்
1.   ஸ்வேத கேது என்கிற அரசனுக்கும் மார்கண்டேயர் போலவே நிகழ்வு. திருநெல்வேலி திருத்தலத்தில் – கூற்றுதைத்த நெல்வேலி என்கிற பெரியபுராண பாடல் (886)
2.   கால பயத்தினை நீக்கும் இறைவனில் சக்தி ”சர்வாரிட்டவிநாசினி”

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 11/25 சக்ரவரதர்

சக்ரவரதர்

சிவனின் வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்சக்ரவரதர்.

திருமாலுக்கு சக்கரம் கொடுத்த மூர்த்தி. இவரை வழிபடுபவர்கள் அனைத்து போகங்களையும் எவ்வித இடையூரும் இன்றி துய்ப்பார்கள்.

இந்த விபரம் மட்டுமே இம்மூர்த்தி பற்றி காணப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சாங்கியம்சிறு விளக்கம்

·   தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
·   அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
·   ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
·   பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
·   ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.
பாதஞ்சலம் –  சிறு விளக்கம்

சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.
நியாயம் –  சிறு விளக்கம்
தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப்  பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

புராணம் என்பது என்ன?

வேத ஆகமப் பொருளை சரித்திர வடிவில் விவரிப்பது.

புராணத்தில் விவரிக்கப்படுபவை எவை? விளக்கங்கள்

உலக் தோற்றம், உயிர் இறைவனை அடைதல், பாரம்பரியங்கள், அவற்றோடு தொர்டபுடைய கதைகள், மனுவந்தரங்கள் ஆகியவற்றை கூறும். இது சைவம் முதல் ஆக்கினேயம் வரை உள்ள பதினெட்டு ஆகும்.


சிவபுராணம்
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
விஷ்ணுபுராணம்
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
பிரமபுராணம்
பிரமம், பதுமம் – 2
சூரியபுராணம்
பிரமகைவர்த்தம் – 1
அக்னிபுராணம்
ஆக்கிநேயம் – 1
உபபுராணங்கள்
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் – 18


சாத்திரங்கள் எதனை உணர்த்தும்?
சிஷைவேதங்களை ஓதும் முறை
கற்பம்வேதங்களில் விதித்த கர்மங்களை அனுட்டிக்கும் முறை
சோதிடம்வேதங்களை ஒதுவதற்கான காலம்
வியாகரணம்வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இலக்கணம்
நிருத்தம்சொற்களின் வியாக்யாணம்
சந்தம்வேத மந்திரங்களின் சந்தங்களின் இலக்கணம்
இவை தவிர வேறு சாத்திரங்கள் இருக்கின்றனவா?

சாங்கியம், பாதஞ்சலம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் என ஆறு தத்துவ சாத்திரங்கள் உள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு வேதம், சிவாகமம் என்று இரண்டு நூல்கள் தேவைஇல்லை என்று கூறுதல் வேத நிந்தை ஆகுமா?

ஆகாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன். சிவாகம ஞானம் அடைய வேதம் முக்கியம். வேதம் மட்டுமே தெரிவதால் ஞானம் அடைதல் தேவை இல்லை என்று கூற இயலாது. எனவே சரியை, கிரியை, யோகம்   இவற்றால் அடையப்பெறும் ஞானம் மிக முக்கியம்.
எனில்  சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  சனகாதி முனிவர்களுக்கு ஈஸ்வரன் அருளியது வேதமா அல்லது சிவாகமமா?

முதலில் சுருக்கமான வேதத்தையும் அது குறித்து அவர்கள் தெளிவடையாமையால் பின்னர் சிவாகமத்தையும் விரிந்துரைத்தார்.
வேதம் மற்றும் சிவாகமங்களின் தோற்றத்தில் கால வேறுபாடு உண்டா? அவைகள் எப்போழுது தோன்றின?

சிவனின் ஊர்த்துவ முகமாகிய ஈசான்யத்தில் இருந்து 28 சிவாகமங்களும், மற்ற நான்கு முகங்களாகிய தத்புருஷம், அகோரம், வாம தேயம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து நான்கு வேதங்களும் ஒரே காலத்தில் தோன்றின.
ஆகமங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவை லௌதிகம், வைதிகம், அத்தியான்மீகம், அதிமார்கம் மற்றும் மாந்திரம் எனப்படும் என்று கூறப்படுகின்றன.இவைகள் சிவாகமத்தின் பகுதியா?

மாந்திரம்சிவாகமம்
லௌதிகம்இகலோக வாழ்வு
வைதிகம்காலாந்திரம்
அத்தியான்மீகம்ஆன்ம விசாரம்
அதிமார்கம்யோகமார்க அறிவு
காமிகாதி இருபத்திஎட்டு ஆகமங்களுக்கு வேறாக அல்லது அதிகமாக வேறு சிவாகமங்கள் உண்டா?

காமிகாதிகளை முதன்மையாகக் கொண்டு குரு முதலிய இருடியர் செய்த உபாகமங்கள்(உப+ஆகமங்கள்) இருநூற்று ஏழு  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

பதி, பசு, பாசம் ஆகியவை ஞானத்தால் அடையப்பெறுகின்றன எனில் சரியை, கிரியை, யோகம், எதற்கு?
ஞானம் ஆன்மாவின் குணம். இந்த ஞானம் தேகம், இந்திரியம், பிராணன் மற்றும் கரணம் இவற்றோடு கலவாத போது அது அதன் குணத்தில் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் தேகம் மற்றும் முன் கூறியவற்றோடு கூடி(கண், காது, மனம், புத்தி இன்ன பிற), அதன் தன்மையை இழக்கிறது.

இவ்வாறு விஷ சுகத்தில் பட்டு கீழ்வழிக்கு இழுத்துச் செல்லும் தேகாதி இந்திரியங்களை தடுத்து பர சுக வாழ்வினில் பதித்திடச் செய்தலே சரியை, கிரியை மற்றும் யோகத்தின் பண்பாகும்.
சரியை  – தேகத்தை ஈஸ்வர விஷயத்தில் செலுத்துதல்
கிரியை –  இந்திரியங்களை செலுத்துதல்
யோகம் –  பிராணாந்தக்கரணங்களை செலுத்துதல்
ஞானம்  – ஈஸ்வரனிடத்தில் அடங்குதல்
சரியை, கிரியை, யோகம் ஆகியவைகள் முதல் நிலைகள். இவைகளை அடைந்த பின்னரே ஞானம் என்ற உயர் நிலையை அடைய முடியும்
வேதத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. சிவாகமத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. எனில் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளதா?
வேதம் சுருங்கச் சொல்லும். சிவாகமம் விரிவாகச் சொல்லும்.
வேதம் மற்றும் சிவாகமம் ஆகியவை ஈஸ்வரனை  குறிப்பிடுகின்றன. எனில் எதற்காக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்? இரண்டில் ஒன்று தேவையற்றதா?

வேதம்
சிவாகமம்
புருஷாத்தங்கள்
அறம், பொருள், இன்பம், வீடு
வீடு
உலகம்
உலகர்
சத்திநிபாதர்
வீடு சொரூப விளக்கம்
இல்லை
உண்டு
நூல் வகை
மூவுலக நூல்
வீட்டு நூல்

வேதம் வழியே ஞானம் விளைகிறது. ஞானம் அடைய முதல் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். எனவே இவை இரண்டுமே தேவைப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 4/25 கல்யாணசுந்தரர்

வடிவம்
பார்வதி தேவியை மணக்க சிவன் எடுத்த வடிவம் – திருமண நாள் –  பங்குனி உத்திரம்
போக வடிவம்
உருவத் திருமேனி
இடங்களுக்கு ஏற்றவாறு சிவன் மேற்கரங்களில் மான், மழு. கீழ் கரங்கள் உமை அம்மை கைகள் பற்றி. மற்றொரு கரம் அருளல்.
அம்மை தலை வணங்கிய கோலம்.
சில இடங்களில்  சிவன், பார்வதி அருகினில் பெருமாள்
இஃது ஈசான்யத்தால் குறிப்பிடப்படுகிறது.
வடிவம் அமையப் பெற்ற சில திருக்கோயில்கள்
திருவேள்விக்குடி,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
திருமணஞ்சேரி, ,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
பவநாசம், விக்கரமசிங்கபுரம், அம்பா சமுத்திரம்
திருநல்லம் (கோனேரி ராஜபுரம்), தஞ்சாவூர் மாவட்டம்
திருவெண்காடு
திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்
திருவொற்றியூர், சென்னை
திருச்சுழி, விருதுநகர்
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சிவாகமம் என்பது என்ன?
ஆன்மாக்களுக்கு (மும்) மல நாசம் செய்து சிவஞானம் புகட்டி மோஷத்தை கொடுத்தல். இது பதியாகிய இறைவனிடத்தில் இருந்து வந்த கட்டளை.
சிவாகம எதனை உணர்த்தும்?
பதி, பசு மற்றும் பாசங்களின் இலக்கணத்தையும், சரியை, கிரியை, யோகம்  ஞானம்  ஆகியவற்றின் முறைமையையும், சாலோக, சாமிப, சாரூப, சாயுச்சியம்(முக்தி நிலையின் பல்வேறு நிலைகள்) ஆகிய சதுர் மூர்த்திகளையும் தெளிவாக உணர்த்தும்.
சிவாகமங்கள் எவை எவை?
சிவனின் ஐந்து திரு முகங்களில் இருந்தும் தோன்றியவையே சிவாகமங்கள். (சிவ பேதம் – 10 ஆகமங்கள், ருத்ர பேதம் – 18 ஆகமங்கள்)
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் – விளக்கம்
வழிபாடு முறை
நிலை
யோக உறுப்புக்கள்
வழிபட்டவர்கள்
சரியை
உடல் தொண்டு
பூசைப் பொருட்களைத் திரட்டல்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
திருநாவுக்கரசர்
கிரியை
ஒரு மூர்த்தியை வழிபடல்
புறப் பூசை
பிரத்தியாகாரம், தாரணை
திருஞானசம்பந்தர்
யோகம்
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
அகப் பூசை
தியானம்
சுந்தரர்
ஞானம்
அனுபவம்
அனுபவம்
சமாதி
மாணிக்கவாசகர்

* விளக்கம் முழுமை பெறவே வழிபட்டவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி
 
வடிவம் 
 
காளை மீது அமர்ந்த திருக்கோலம் –  ரிஷபாரூடர்
காளை அருகில் நிற்கும் திருக்கோலம் –  ரிஷபாந்திகர்
காளை(ரிஷபம்) மீது அமர்ந்து இருக்கும் திருமேனி.
நான்கு கரங்கள்.
வலது மேல் கரம் –  மழு
இடது மேல் கரம் – மான்
வலது கீழ் கரம் – அபய முத்திரை
இடது கீழ் கரம் – வரத முத்திரை
பிறை சந்திரன் – தலையில்
உமை அம்மை இடப்புறம்
காளையாக மகாவிஷ்ணு
யோக வடிவத்தால் குறிப்பிடப்படும்
சிவனில் பஞ்ச முகத்தில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து தோற்றம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் – மூலவர் – விராதனூர் (மதுரை)
சிதம்பரம்
திருவாவடுதுறை
திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில்
விசயமங்கை – கோவந்த புத்தூர் – (கோவிந்தபுத்தூர்) – சுதை
திருத்துறையூர் – பண்ருட்டி
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதை
திருப்பழுவூர் –  தற்போது (கீழைப் பழுவூர்) – அரியலூர் –  சுதை
திருவான்மியூர் – சென்னை –  சுதை
திருவேற்காடு – – சென்னை –  சுதை
குடுமியான்மலை – புதுக்கோட்டை
சங்கரன் கோவில் –  சங்கர நாராயணர் கோவில்
பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

அனுட்டானம் செய்வது ஏன்?




அனுட்டானம்செய்வது ஏன்?











ஆன்மீகம்: இறைவனை அடையும் முதல் வகைப்பயிற்சி
அறிவியல்:
1. தலைமுதல் கால் வரை உடலில்திருநீறு பூசுவதால், உடலில் இருக்கும் நீர்நீக்கப்படும்.
2. அனுட்டானம்செய்வதற்கு செப்பு பாத்திரங்களே அதிகம்பயன்படுத்தபடும். இவை உடலில் இருக்கும்மாசுக்களை நீக்க வல்லவை. இதனால்உடற் பிணிகள் நீங்கும்.
3. அனுட்டானம்  முறைகளுக்குதக்கவாறு 12 முதல் 16 இடங்களில் திருநீறு அணிவர். இதனால் அந்தஇடங்களில் இருக்கும் வலிகள் நீக்கப்படும். (தொடுவர்மம்போன்றவை)
4. மந்திரஉச்சாடன ஒலிகள் குறிப்பிட்ட காலமாத்திரைகளில் நிகழ்வதால், மூச்சுக் காற்று சீராகி மனஇறுக்கம் மற்றும் அதன் சார்ந்தவியாதிகள் தடுக்கப்படும்.
மற்ற விஷயங்களை குரு முகமாக அறிக.
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்