மனிதர்களை விட வீடுகள் அதிகமாக வலிகளைஉள்வாங்குகின்றன.
——————————————————————————-விடுமுறை தினத்தில் எழுப்பப்படும் குழந்தைகளின் ‘5 மினிட்ஸ் ப்ளிஸ்‘ என்ற வார்த்தைகள் நூறு ஆயிரம் சிறகசைப்புகளை தோற்றுவிக்கிறது.
—————————————————————————————————————————————————————–
ஒவ்வொரு பனித்திருக்கும் கண்களும் உணர்த்துகின்றன தனதுப்ராத்தனையை இறைவன்ஏற்றுக் கொண்டதை.
—————————————————————————————————————————————————————–
இருக்கை முன்அமர்த்து செல்லும் 3 வயதுபெண்குழந்தை ‘வெவ்வே‘ என்றுபழிப்பு காட்டுவதில் பயணம்முடிந்து விடுகிறது. நினைவுகள் மட்டும் தொடர்கிறது.
—————————————————————————————————————————————————————–
உதிரும் சொற்களை விட உலரா கண்ணீரும், அதன் சார்ந்த மௌனமும் பெரும் காயம் ஏற்படுத்துகின்றன.
—————————————————————————————————————————————————————–
காலைநேரத்தில் வெற்றுகாகிதத்தை விரட்டி சிறுநாயின்சந்தோஷம் மனிதசந்தோஷங்களை விடமிகஅதிகமாக தெரிகிறது.
—————————————————————————————————————————————————————–
பேருந்தில் பயணம்செல்பவர்களை விடஅவர்களின் கனவுகள் அதிகமாக இருக்கின்றன. அக்கனவுகள் முதல்இழப்பைவிடஅதிகவலியுடன் இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————–
வித்தை தெரிந்த வீரன் மரணத்தின் போது மட்டும் போராடுவதில்லை. மரணம் வரும் வரை போராடுவான். நான் வீரன்.
—————————————————————————————————————————————————————–
தனி மனித வாழ்வு எப்போதும் பிறரால் தீர்மானிக்கப் படுகிறது. உ.ம் பேருந்தில் ஜன்னல் அருகில் இருப்பவன் நமக்கும் சேர்த்து முடிவு செய்கிறான் நமக்கு காற்று வேண்டுமா இல்லையா என்று.
—————————————————————————————————————————————————————–
மறுதலித்தலும் நிராகரிக்கப்படுவதும் வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஏன்எனில்அவைகள்உலகங்களால் கற்றுக் கற்றுத்தரும் போதுவலிகள்அதிகமாக இருக்கும்.