நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?

காரணங்கள்அற்று ஒரு குரலில் மயக்கம்(வேறு எப்படி வகைப்படுத்த முடியும்) உண்டு எனில் அதில் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.
அந்த வகையில் அவர் குரலில் இன்றைக்கும் மயங்கும் ஒரு பிறவி நான்.
பாடல் ஆரம்பமாகிறது. தலைவன் ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறான். மெதுவாக அவனுள் இருக்கும் வலிகள் சொற்களின் வடிவம் பெற்று காற்றுடன் கலக்க ஆரம்பிக்கின்றன.
மெதுவாகவேட்டியின் நுனிகள்காற்றில்ஆட ஆரம்பிக்கின்றன. ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்டமடியில்வெச்சுப்பாராட்ட
எனக்கொருதாய் மடி கெடைக்குமா
மெதுவாகநடை பயணம் தொடங்குகிறது.  மெதுவாக மீண்டும் காற்று அசைகிறது.
ராசாவே வருத்தமா
வார்த்தைகளில் முடிக்கும் முன்பே ஒரு குயில் கூவ ஆரம்பிக்கிறது. காற்றின் வீச்சமும் குயிலின் கீதமும் இணைய ஆரம்பிக்கின்றன.
ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமாசூரியன்கருக்குமா
விழிகள்தேடலை ஆரம்பிக்கின்றன. பாதங்கள் நடை பயிலுகின்றன. ஆற்று நீர் வழிந்தோடுகிறது. தலைவி கரையில் அமர்ந்திருக்கிறாள்.
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
தலைவி பதில் உரைக்கிறாள்.
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
உரையாடல்தொடர்கிறது
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாதசொகத்த சொன்னேனடி
 
சோக ராகம் சொகந்தானே(சொல்லில் முடிவில் பறவை பறக்கிறது)
குயில் முகம் காட்ட மறுக்கிறது. தோணியில் குயிலில் பயணம் தொடர்கிறது. தலைவன் பயணம் தரையில் தொடர்கிறது.
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
குயில் ஆறுதல் கூறுகிறது.
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
தலைவன் பயணம் தொடர்கிறது
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
 
எசப் பாட்டு படிக்கேன் நானே
தன் மன வலிகளை குறைத்திடும் தோள்களைத் தேடுகிறான் தலைவன்.
பூங்குயில் யாரது
 
கொஞ்சம்பாருங்கபெண் குயில் நானுங்க.
இன்று வரையில் சிவாஜின் அந்த கடைவாய் புன்னகையை யாரும் நெருங்க முடியவில்லை.
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததேஒலகமே மறந்ததே
சிவாஜியின் மேலும் கீழுமான பார்வை புன்னகையுடன் (என்ன சொல்ல)
நான்தானேஅந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடிமனசுக்குள்ள காத்தாடி
பறந்ததாஒலகந்தான்மறந்ததா
காமம் கடந்த விஷயங்களை, இயல்பான மனித வாழ்வின் மிகப் பெரும் வலிகளை காலம் பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதானால் தான் பூங்காறு இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது.
துக்கடா:
சார் நீங்க முதல் மரியாதை படத்துட நடிச்சது பத்தி
சிவாஜி: நான் எங்க நடிச்சேன். அந்த பய என்ன படத்துட நடக்க வச்சி படத்த முடிச்சிட்டான்.
 
Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

4 thoughts on “நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?”

  1. Sengottai Balaji :Sundar Sir,you description of the song and screen play gives the feel of happiness to soul.I could not guess what makes this so wonderful whether the lyrics or music or th screen play ?('kodiyasaindhathum kaatru vandhatha, kaatru vandhathum kodiyasaindhatha")Keep pondering greatest works.

  2. Good. Sundar one small suggestion. Try to change the text of the song in italics, so that there is a difference between your interpretation and song.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *