அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இலாடம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இலாடம்

பொருள்

  • நெற்றி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
  திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
  உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
  இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
  கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து,  `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா,  அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில்  இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும்   விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.

விளக்க உரை

  • எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
  • திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நம்பான்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நம்பான்

பொருள்

  • ஆணிற்சிறந்தோன்
  • கடவுள்
  • சிவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
   தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
   இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
   வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு

கருத்து உரை

தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?

விளக்க உரை

  • கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாலாதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாலாதல்

பொருள்

  • மிகப் பற்றுக் கொள்ளுதல்
  • மயங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.

விளக்க உரை

  • அயன் மால் அரன் – மெய் (சுத்தவித்தை) யின்கண் உறைவோர். பிரம்மன் – மூலாதாரம், மால் – சுவாதிட்டானம், உருத்திரன் – மணிபூரகம், மகேசன் – விசுக்தி
  • மேற்கூறிய நிலை முதல் துவாத சாந்தம் வரை (9 நிலைகள்)
  • ஆன்மாவானது தேன் உண்டுகளிக்கும் ரீங்கார சப்தத்துடன் விளங்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இச்சித்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இச்சித்தல்

பொருள்

  • விரும்புதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

கருத்து உரை

ஒருவனுக்குத் தன் கருத்திற்கு இயைந்த ஒரு கடவுளை மனம், மொழி மற்றும் மெய்களால் வழிபட்டு, சொல்லப்பட்டவாறு தீமைகளை விலக்கி,  வாழும் செயலாகிய அறம், விதிக்கப்பட்ட ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையனாய் சினம் முதலியவற்றை விலக்கி விளங்கும் ஒருவனுக்கு சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை ஏற்றுக் கொண்டு பயன் உதவுவார்.

விளக்க உரை

எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அவ்வடிவாக இருந்து அருளுபவர் சிவன் எனும் பொருள் பற்றி.

Loading

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 1. பால கணபதி

பால கணபதி

 

வடிவம்

1.    விநாயகரின் தாயான பார்வதியும், தந்தையாகிய சிவனும்  பால கணபதியை திருமஞ்சனம் செய்வது போலவும் கொண்ட வடிவம்

2.    பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போன்ற வடிவம்

3.    தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் கொண்ட வடிவம்

4.    யானைமுகம், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் பூமாலை, தும்பிக்கையில் மோதகம் அல்லது விளாம்பழம்

மேனி வண்ணம் உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் / பொன்னிற மேனி
திருக்கைகள் நான்கு திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன்னிருத்தி ஒவியங்கள் / சிற்பங்கள்

வகை 1 – மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம்

வகை 2 – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்(சில இடங்களில் பூங்கொத்து), கரும்பு

பலன் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், குழந்தையைப் போன்ற மகிழ்வு, நல்ல உடல்நலம்
மற்றவை கணபதியைச் சிறு பிராயத்தினராகக்கொண்டு வழிபடுவதற்கான வடிவம். பால = இளம், சிறு பிராயம்.
சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்சி

 

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் பால கணபதி

 

பால கணபதி2

புகைப்படங்கள் : விக்கிப்பீடியா

மந்திரம்

கரஸ்தகதளீசூத பனஸே க்ஷூக மோதகம்/
பால ஸூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணாபதிம்//

விளக்கம்

வாழைப்பழம், மாப்பழம், பலாப்பழம், கரும்பு, மோதகம் இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பால சூரியனைப் போன்ற சரீர காந்தியை உடையவருமான பால கணபதியை வணங்குகின்றேன்.

 

(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துஞ்சல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துஞ்சல்

பொருள்

  • மலரடி சேர்தல்
  • காலமாதல்
  • காலப்போக்கு
  • காலத்தின் நடை
  • இயற்கையான மரணம்;மூப்பு இறப்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் திருவைந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சகத் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காப்பாற்றியது திருவைந்தெழுத்தே.

விளக்க உரை

  • உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மாயையால் உலகில் வாழ்வு கொள்ளுதல் என்பது உறங்குதலுக்கு சமமாகவும், ஞான மார்க்கத்தால் உயர் நிலை அடைந்த பிறகு விழிப்பு நிலை என்பதும் பொதுக்கருத்து. (ஆன்றோரும், இறை அன்பர்களும் கருத்துரைக்க). ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறள் யாண்டும் சிந்திக்கத்தக்கது.
  • திருவைந்தெழுத்தை ஓதுவார் எமனால் துன்பப்படார் என்பது கருத்து.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மதலை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மதலை

பொருள்

  • மழலை மொழி
  • குழந்தை
  • மகன்
  • பாவை
  • பற்றுக்கோடு
  • தூண்
  • யூப ஸ்தம்பம்
  • வீட்டின் கொடுங்கை
  • பற்று
  • மரக்கலம்
  • கொன்றை
  • சரக்கொன்றை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

11ம் திருமுறை – இளம்பெருமான் அடிகள் – சிவபெருமான் திருமும்மணிக்கோவை

கருத்து உரை

நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?

விளக்க உரை

ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தலைப்படுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தலைப்படுதல்

பொருள்

  • ஒன்றுகூடுதல்
  • எதிர்ப்படுதல்
  • மேற்கொள்ளுதல்
  • பெறுதல்
  • முன்னேறுதல்
  • தலைமையாதல்
  • புகுதல்
  • வழிப்படுதல்
  • தொடங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் – தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று அறிக;  அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அவர் தானே தலைமை ஏற்று அப்பரிசே வந்தளிப்பர்; அவர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார்.  சிவன்  அத்துவா எனப்படும் ஆறு வழியில் பொதுவியல் படி கலந்திருப்பினும் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நின்றாலும் அவர் இப்படிக் கலந்திருப்பினும் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார் ஆவார்.

விளக்க உரை

அத்துவா – ஆறு வழிகள்

  • மந்திராத்துவா – மந்திர வடிவமான மோட்சகதி
  • பதாத்துவா – சொல் வடிவமான மோட்சகதி
  • வர்ணாத்துவா – அக்கரங்கள் வடிவிலுள்ள மோட்சகதி
  • புவனாத்துவா – மோட்சகதி
  • தத்துவாத்துவா – முப்பத்தாறு தத்துவங்களாகிய மோட்சகதி
  • கலாத்துவா – பஞ்சகலைகளாகிய மோட்சகதி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – எயிறு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  எயிறு

பொருள்

  • பல்
  • ஈறு
  • யானையின் கொம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.

பதம் பிரித்து

உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருப்பயற்றூர்ப் பெருமான், குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்திக் கொண்டார். யானைத்தோலை உரித்ததனையும் போர்திக் கொண்டதையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சி தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்திய்ம்  ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித்  அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு  சிரித்துவிட்டார்.

விளக்க உரை

வைரவர் திருக்கோலம் முன்வைத்து.

Loading

சமூக ஊடகங்கள்

மழைத்தெரு

மழைத்தெரு

புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

அன்றொரு நாளின்
பெருமழையினில்
நீ என்னோடு பயணித்தாய்.
பெருமழையில் நனைந்தபடி
நம் இருவருக்குமான
மழை நினைவுகளை
வரிசைபடுத்தச் சொன்னாய்.
பெருமழையில் தேனீர்;
மழையை உன் துப்பட்டாவால்
துடைத்த நிகழ்வு;
இலக்கியம் பேசியபடி நகர்ந்த நிகழ்வு;
இசையின் பரிமாணங்களில் உன் வியப்பு
வார்த்தைகளின் கோர்வையில்
பெருமிதம் கொண்டு
இன்னும் கூறவாக என்று புன்னகைக்கிறேன்.
மௌன மழையில் உன் கண்ணீரை
கரைத்துவிடு என்று கூறி
விலகலுக்கான காரணம் விளக்குகிறாய்.
தனித்த நகர்தலுடன்
இப்பொழுதும்
பெருமழை பெய்து கொண்டிருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடங்கல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடங்கல்

பொருள்

  • செய்யத் தக்கது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே

சிவவாக்கியர்

கருத்து உரை

எல்லா திசைகளிலும் இருந்து, எல்லா உயிர்கள் இடத்திலும் உறைந்து இருந்து எங்களது தந்தையாகவும்,  முக்தியைத் தரும் தவமாகிய சுடரினுள் வித்தாக இருக்கக் கூடியவனும் ஆகியவன் என்னுடைய இறைவன் ஆவான். சித்தம் தெளிந்து, காலத்தினால் அறுதி செய்ய இயலா வேதமாகிய கோயில் திறந்தப்பின் குரு என்றும், முனிவன் என்றும், உயர்ந்தோன் என்றும், கடவுள் என்றும் கூறப்படும் அவனின் ஆடல் கண்டப்பின் செய்யத்தக்கது என்று நினைவு கொண்டிருப்பது மாறும்.

விளக்க உரை

  • புறத்தில் எல்லா இடங்களிலும் நீக்கமற நினைத்திருக்கும் இறைவனை அகத்தில் கண்டப்பின் பிறவியின் பொருட்டு செய்யத்தக்க விஷயங்கள் எது என எளிதில் விளங்கும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பயிர்ப்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பயிர்ப்பு

பொருள்

  • அருவருப்பு
  • கூச்சம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
*பயிர்ப்புறும்ஓர்* பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

புலால் மறுத்தோரை அகவினத்தார் என்றும், கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் என்றும் அவர்கள் புற இனத்தார் என்று இறைவன் எனக்கு அருளினான்.

விளக்க உரை

  • புறத்தில் இருப்பது விலகும், அகத்தில் இருப்பது பற்றி நிற்கும் என்றபடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏனை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏனை

பொருள்

  • ஒழிபு
  • மற்றையெனும்இடைச்சொல்
  • ஒழிந்த
  • மற்று
  • எத்தன்மைத்து
  • மலங்குமீன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே.

திருமுறை 10 – திருமந்திரம் ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தின் காரணமாக முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத்தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப்பிடத்தை உடையனாய் இருப்பான். சொல் மட்டுமின்றி மனமும் அடங்கிவிட்ட நிலையை உடையன் ஆனாதால் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனேயாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முழுவதுமாக பெற்றவன் ஆவான். சிவஞானத்தைப் பெறாது சிவ வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

விளக்க உரை

  • மோனம் – மௌனம். புறக்கருவி ஆகிய வாய் மட்டும் இல்லாமல் அந்தக்கரணத்தில் ஒன்றான மனம் அடங்கியதையும் குறித்தது.
  • அகத்தில் ஞானம் உடையவனே சீவன்முத்தன் என்றும், ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் சீவன்முத்தன் ஆகான் என்பதும் கூறப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – கணபதி – முன்னுரை

கணபதி_intro

ஒவியம் : இணையம்

உலகின் ஆதி முதல்வனும், ஓங்கார நாயகனும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமானவராகவும், மூலாதார மூர்த்தியாகவும், கருணையே வடிவானவராகவும், எல்லை அற்ற பரம் பொருளும், நினைத்தை நினைத்தவாறு நிகழ்த்த அதை கூட்டிவைப்பவரும், சகல உயிர்களிடத்தும் தயை, அன்பு, கருணை ஆகியவற்றை சமமாக வழங்குபவரும், தானே மெய்பொருளாகவும் பிரபஞ்சப் பொருளாகவும் இருந்து சகல உயிர்களிடத்திலும் வழங்குபவராகவும், பற்றாப் பொருளையும் பற்ற உறுதுணை செய்பவராகவும், தானே அப்பொருளாகவும், அகப்பொருளாகவும் இருப்பவரும் கால நேரம் கடந்தவராகவும், அனைத்திலும் கருப்பொருளாகவும், மகாபாரதத்தை எழுதிய நாயகனும் ஆக இருக்கும் கணபதியை குறித்து இத் தொடர் எழுத விழைகின்றேன்.

குரு அருள் கணபதியோடு தொடர்பு உடையது ஆனதால், குருவருள் தாள் பற்றித் தொடங்குகிறேன்.

அவரவர் ஞான நிலைக்கு ஏற்றவாறும் குரு உபதேசம் மூலமாகவும், ஷோடசம் முன்வைத்து 16 வடிவங்கள் என்றும், அழியாமை குறித்து 32 வடிவங்கள் என்றும், அட்ஷரங்கள் குறித்து 51 வடிவங்கள் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொதுத் தன்மைப் பற்றி இங்கு 32 வடிவங்கள் விளக்கப்படுகின்றன.

  • பலன்
  • மேனி வண்ணம்
  • வடிவம்
  • கைகள்
  • தொடர்புடைய கோவில்கள்
  • மற்றவை

1. பால கணபதி
2. பக்த கணபதி
3. ஸக்தி கணபதி
4. ஸித்தி கணபதி
5. உச்சிஷ்ட கணபதி
6. க்ஷிப்ர கணபதி
7. விக்ந ராஜ (விஜய) கணபதி
8. ஸ்ருஷ்டி கணபதி
9. ருணமோசந கணபதி
10. டுண்டி கணபதி
11. த்விமுக கணபதி
12 .யோக கணபதி
13. ஏகதந்த கணபதி
14. ஹேரம்ப கணபதி
15. ந்ருத்த கணபதி
16. ஹரித்ரா கணபதி
17. தருண கணபதி
18. வீர கணபதி
19. த்வஜ கணபதி
20. விக்ந (புவநேச) கணபதி
21. ஊர்த்வ கணபதி
22. லக்ஷ்மீ கணபதி
23. மஹா கணபதி
24. ஏகாக்ஷர கணபதி
25. வர கணபதி
26. த்ரயாக்ஷர கணபதி
27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி
28. உத்தண்ட கணபதி
29. த்ரிமுக கணபதி
30. ஸிம்ஹ கணபதி
31. துர்கா கணபதி
32. ஸங்கடஹர கணபதி

(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கலித்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கலித்தல்

பொருள்

  • மேன்மேலும் பெருகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏற்றலிட் டார்கொடி கொண்டோய்
   விளக்கினை ஏற்றபெருங்
காற்றிலிட்ட டாலும் இடலாம்நெல்
   மாவைக் *கலித்திடுநீர்
ஆற்றலிட் டாலும் பெறலாம்உட்
   காலை அடுங்குடும்பச்
சேற்றிலிட் டால்பின் பரிதாம்
   எவர்க்கும் திருப்புவதே.

திருவருட்பா – மூன்றாம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

எருதினை கொடியாக உடையவனே, பெருங்காற்றிடையே நிறுத்தி விளக்கை ஏற்றென்றாலும் ஏற்றலாம்; அரிசிமாவை ஆற்றிலிட்டாலும் பெறலாம்; குடும்பமாகிய சேற்றில் உள்ளமாகிய காலையிட்டால் பின் திரும்புவது எவர்க்கும் அரிது.

விளக்க உரை

  • பெருங்காற்றில் விளக்கை ஏற்றுதலும், அரிசி மாவு ஆற்றில் இருந்து பெறுதல் இரண்டும் மீண்டும் பெறலாகாத செயல்
  • குடும்பச்சேறு தன்கண் அழுந்திய உள்ளத்தை மேன்மேலும் ஆழ்த்துவதேயன்றிப் பல்வேறு ஆசைகளை எழுப்பி அதில் இருந்து வெளிவராமல் தடுக்கும் என்ற கருத்துத் தோன்ற, “ஆடும் குடும்பச்சேறு”

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெண்ணீர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தெண்ணீர்

பொருள்

  • தெளிநீர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

சமுத்திரத்து நீரைப் எவ்வளவு பருகினாலும் தாகம் தணியாது; அதுபோல, நல்ல குருவினுடைய சில வார்த்தைகளினாலே உள்ளம் தெளிவுறுதல் போல வெகுநூல்களைக் கற்றாலும் உள்ளம் தெளியாது; அவ்வாறு தெளியுமானால், தெள்ளிய அறிவினையுடைய சீடனே, சொல்லுவாயாக.

விளக்க உரை

குரு இல்லாமல் நூல்களைக் கற்றுப் பயனில்லை என்று கண்டு கொள்க. அஃதாவது உண்மை ஞானம் அருள்பவர் குருவே.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பத்தா

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பத்தா

பொருள்

  • கணவன், பர்த்தா
  • துப்பு
  • வழி
  • படிப்பணம்
  • முகவரி
  • விலாசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

*பத்தாவுக்* கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் அவளுடன் கூடி வாழலாம். அவ்வாறு இல்லாமல் மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் எவரிடத்தும் எதுவும் கூறாமல் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வயங்கும்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வயங்கும்

பொருள்

  • விளங்கும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
   கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
   எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
   கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
   ஞானிஎனக் கூறொ ணாதே.

திருவருட்பா – நான்காம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

ஆண் தன்மை பொருந்திய பனை மரத்தைப் பெண் பனையாக்கியும், ஒரு நொடியில் எலும்பைக் கண்ணால் நோக்கி, அழகு திகழும் பெண்ணாக உருவமாக்கியும் செய்த பெரியோனாகிய திருஞானசம்பந்தரைப் போன்றவர்கள் ஆயினும், பிறப்பிறப்புக்கு இரக்கமின்றி உயிர் தாங்கி நின்ற உடம்புகளைக் கொன்று தின்கின்ற கருத்துடையனாயின், அவனை ஞானி என்று சொல்லலாகாது; இது எமது குரு ஆணை; சிவத்தின் மேல் ஆணை என அறிக.

விளக்க உரை

  • திருஞானசம்பந்தர் செய்த அரும் பெரும் செயல்கள் சில
  1. திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
  2. திருமயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவையின் என்புகளைக் கண்ணால் சிறிது நேரம் நோக்கிப் பெண்ணுரு திகழ எழுப்பியது
  3. திருமருகலில் பாம்பு கடித்து இறந்துபட்ட வணிகனை உயிர் பெற்று எழச் செய்த அற்புதத்தை செய்தது
  • கருவாணையுறுதல் – பிறப்பிறப்புக்கு உள்ளாதல்.
  • புலால் உண்பவன் எத்துணை ஞானமும் உடையனாயினும், ஞானி எனப்படல் பொருந்தாது என வற்புறுத்தவாறு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விரதி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விரதி

பொருள்

  • நோன்பு மேற்கொண்டோன்
  • பிரம்மசாரி
  • துறவி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணிகலன் ஆகும். நான்கு வேதங்களையும்,  சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் ஆகிய ஆறு அங்கங்களை அறிந்த  அந்தணர்களுக்கு ஓதுதல் சிறந்த அணிகலன்;  சிவபெருமானுக்கு  பிறை உடைய அழகிய சடை சிறந்த அணிகலன். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணிகலன் திருவைந்தெழுத்தேயாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிடையாறு

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவிடையாறு

 

  • மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
  • ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
  • முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
  • அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
  • கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை  பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
  • சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
  • சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
  • மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

 

தலம் திருவிடையாறு
பிற பெயர்கள் திரு இடையாறு, T. எடையார்
இறைவன் மருதீஸ்வரர், இடையாற்றீசர், இடையாற்றுநாதர், கிருபாபுரீஸ்வரர்
இறைவி ஞானாம்பிகை, சிற்றிடை நாயகி
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம்
விழாக்கள் தைமாதம் ஆற்றுத்திருவிழா
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்,
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 607203
94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515
வழிபட்டவர்கள் சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் .
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 203 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம்.

ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்

                             மருதீஸ்வரர் ஞானாம்பிகை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  8

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

ஒளிவடிவினனும், உயிர்களின் தீவினைகள் குறையுமாறு செய்து நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், `நள்ளாறு` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள்  ` ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

கருத்து

தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர்.

 

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  9

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், (மாயையை விளக்கி ஞானத்தை) தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

 

Loading

சமூக ஊடகங்கள்