அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏனை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏனை

பொருள்

  • ஒழிபு
  • மற்றையெனும்இடைச்சொல்
  • ஒழிந்த
  • மற்று
  • எத்தன்மைத்து
  • மலங்குமீன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே.

திருமுறை 10 – திருமந்திரம் ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தின் காரணமாக முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத்தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப்பிடத்தை உடையனாய் இருப்பான். சொல் மட்டுமின்றி மனமும் அடங்கிவிட்ட நிலையை உடையன் ஆனாதால் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனேயாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முழுவதுமாக பெற்றவன் ஆவான். சிவஞானத்தைப் பெறாது சிவ வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

விளக்க உரை

  • மோனம் – மௌனம். புறக்கருவி ஆகிய வாய் மட்டும் இல்லாமல் அந்தக்கரணத்தில் ஒன்றான மனம் அடங்கியதையும் குறித்தது.
  • அகத்தில் ஞானம் உடையவனே சீவன்முத்தன் என்றும், ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் சீவன்முத்தன் ஆகான் என்பதும் கூறப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *