வடிவம் |
1. விநாயகரின் தாயான பார்வதியும், தந்தையாகிய சிவனும் பால கணபதியை திருமஞ்சனம் செய்வது போலவும் கொண்ட வடிவம் 2. பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போன்ற வடிவம் 3. தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் கொண்ட வடிவம் 4. யானைமுகம், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் பூமாலை, தும்பிக்கையில் மோதகம் அல்லது விளாம்பழம் |
மேனி வண்ணம் | உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் / பொன்னிற மேனி |
திருக்கைகள் | நான்கு திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன்னிருத்தி ஒவியங்கள் / சிற்பங்கள்
வகை 1 – மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம் வகை 2 – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்(சில இடங்களில் பூங்கொத்து), கரும்பு |
பலன் | குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், குழந்தையைப் போன்ற மகிழ்வு, நல்ல உடல்நலம் |
மற்றவை | கணபதியைச் சிறு பிராயத்தினராகக்கொண்டு வழிபடுவதற்கான வடிவம். பால = இளம், சிறு பிராயம். சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்சி |
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் பால கணபதி
புகைப்படங்கள் : விக்கிப்பீடியா
மந்திரம்
கரஸ்தகதளீசூத பனஸே க்ஷூக மோதகம்/
பால ஸூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணாபதிம்//
விளக்கம்
வாழைப்பழம், மாப்பழம், பலாப்பழம், கரும்பு, மோதகம் இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பால சூரியனைப் போன்ற சரீர காந்தியை உடையவருமான பால கணபதியை வணங்குகின்றேன்.
(மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதால் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குரு அருள்)