ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தெண்ணீர்
பொருள்
- தெளிநீர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்
கருத்து உரை
சமுத்திரத்து நீரைப் எவ்வளவு பருகினாலும் தாகம் தணியாது; அதுபோல, நல்ல குருவினுடைய சில வார்த்தைகளினாலே உள்ளம் தெளிவுறுதல் போல வெகுநூல்களைக் கற்றாலும் உள்ளம் தெளியாது; அவ்வாறு தெளியுமானால், தெள்ளிய அறிவினையுடைய சீடனே, சொல்லுவாயாக.
விளக்க உரை
குரு இல்லாமல் நூல்களைக் கற்றுப் பயனில்லை என்று கண்டு கொள்க. அஃதாவது உண்மை ஞானம் அருள்பவர் குருவே.