புறத்தில் உள்ள பஞ்சகோசமாகவும், அதனுள் உறையும் உயிராகவும், அவ்வாறு இல்லாத பொருள்களிலும் உறைபவனாக இருத்தலினால் எல்லா இடங்களிலும் அவனை வழிபடுக எனும் பொருளில். அஃதாவது சகலமும் ஈஸ்வரப் பொருள் பற்றியது.
பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.
கந்த புராணம் – ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்துஉரை
தாமரை மலரின் மீது ஆசனத்தைக் கொண்டவனாகிய தேவர் உலகம் சார்ந்தவராகிய பிரம்மா, ஈசனை மதித்திடால் கர்வம் கொண்ட பொழுதினில் ஒரு தலையை கிள்ளி அதனால் பெறப்படும் இரத்தினை கைகளில் கொண்டும் அவர்தம் கர்வத்தை அழித்தும் (அத்துணை கோபம் உடையவராக இருப்பினும்) உயிர்கள் மீதுபரிவும் உடையவராகிய வடுகனைப் போற்றுவோம்.
பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னந் தனியனே.
தாயுமானவர்
கருத்துஉரை
பொன்னும், அந்த பொருளால் வாழ துணையாக நிற்கும் மாதரும், அவர்களோடு கூடிவாழும்வாழ்க்கைக்குநிலைக்களமாகியஇப்பூமியும்நிலையானபொருள்கள்என்றுசிறிதும்எண்ணமாட்டேன்; எளியவன்ஆயினும்என்னைக்கருதிஎன்னைநாடிவந்துஎனக்குஅருள்செய்தஇன்னுயிர்த்தலைவனாகியஉன்னையேஇடையறாதுஉள்ளன்போடுஎண்ணுவன்; உன்னைவிட்டுநீங்காதஉன்திருவருளாகியதூயநிலையாயுள்ளபெருவெளிஒளியினைதனியேஇருந்துபெரிதும்சிந்திப்பேன்.
என்னை நாடிய – அருளார்களை இறை பற்றுதல் ஞானத்தின் உச்சநிலை. ‘தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்’ எனும் மாணிக்க வாசகரின் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கவை.
தன்னந் தனியனே – மாயைக்கும் கர்மாக்களும் உட்பட்ட மனிதர்கள் வாழ்வு வினை வழியது. வினையை கடந்து போகையில் எவரும் துணை வரார் எனும் பொருளில்.
இறைவன் ‘என்னை நாடிய’ என்ற பின்னும் ‘உன்னை நாடுவன்’ என்பது ஏன்? – ஈசன் அருள் புரிய எண்ணினாலும், வைராக்கியம் கொண்டு கர்மவினைகளை விலக்கி மாயையை விலக்க வேண்டும்.
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
(தோலில் ஏற்படும்) சுருக்கம்
குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
கொம்பு, தந்தம், எயிறு
மரக்கொம்பு
வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
கொம்புக் குறியீடு (கெ,கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல் மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
சிவவாக்கியர்
கருத்துஉரை
வேங்கையை பிடிக்க ஆங்காங்கே ஆட்டினை கட்டி வைத்து பிடிப்பது போல் எனக்கு செல்வத்தைக் காட்டி எனது மதியினை மயக்குதல் ஆகுமோ? வளைந்த தந்தம் உடைய யானையை கொன்று உரித்து அதனை தோலாக போர்த்திக் கொண்ட வையகத்தின் அரசனே, வீடு பேறாகிய முக்தி எனில் என்னவென்று காட்டி என்னை எனக்கு வெளிப்படுத்துவாயாக.
விளக்க உரை
‘மாடுகாட்டி என்னைநீ மனைப்படுத்தலாகுமோ‘ என்று சில இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மூலத்தில் அவ்வாறு இல்லாததால் ‘ மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ’ என்பதே சரியான பாடல் வரியாகும்.
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்; ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின் வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே
சிவவாக்கியர்
கருத்துஉரை
செம்மையான தேங்காய் உள்ளே இளநீர் சேரும் காரணம் போல், ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டான். அந்த ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டப் பின் இந்த உலகத்து மனிதர்களிடம் நான் வாய் திறந்து பேசுவது இல்லை.
விளக்க உரை
மரத்தில் காய் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நீரானது மேலே சென்று இயல்பாக முயற்சிகள் இல்லாமல் அடைந்து விடும். அதுபோல் இயல்பாக என்னுள் ஐயன் அமர்ந்து கொண்டான்.
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே – ஆகையால் மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.
மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் உரைத்த பாடல்களை மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் கேட்டு இப்பாடல்களை எழுதி இருக்கலாம். (இது என் தனிக் கருத்து)
ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே இரவுபகல் உணரவோர் சிந்தைத் திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.
சிவஞானசித்தியார் – பரபக்கம் பாடல்
கருத்துஉரை
ஒற்றைக் கொம்பினை உடையவன்; இரு காதுகளை உடையவன்; கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதயானையின் மதநீர் கொண்டவன்; நான்காவதான தொங்கும் வாயினை உடையவன்; ஐந்து கைகளை உடையவன்; வளைந்த ஓடும் ஆறு(கங்கை) பிறை நிலவு, கொன்றை மாலை சூடிகொண்டிருக்கும், நீண்ட தாழ் சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவனாகிய யானை முகத்தினை உடையவரின் பாதங்களை இரவு பகல் பாராது பேரன்போடு வணங்கி உணர்வோரின் சிந்தைத் தரும் குற்றத்தை நீக்கும் பிரம்மனும், திருமாலும் கொடுக்கும் செல்வம் எல்லாம் ஒரு பொருளாக நின்று உணர்த்தி தருபவன்.
இனி வரும் பிறவிகளை நீக்கும் பெரியோனும், தென் திசை அரசனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப்பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினைகள் இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.
விளக்க உரை
சஞ்சீதம் எனும் இறந்த கால கர்மாக்கள், பிரார்ப்தம் எனும் நிகழ் கால கர்மாக்கள் ஆகியவற்றை அழித்துவிட்டான். அவ்வாறு அழித்து என் முன் நின்றான் என்பதில் இருந்து ஆகாமியம் எனும் எதிர்கால கர்மாக்கள் அழிந்து விட்டன என்பது மறை பொருள். (நல்வினை, தீவினை என்று தவறான பொருள் கொண்டு இடர்படுவாரும் உண்டு).
எல்லாப் பக்கங்களிலும் கடல் உடையதாகவும் மற்றும் பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகரத்து அரசனாகிய இராவணனை அவன் கர்வ எண்ணம் அழியுமாறு தனது திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்தவர் சிவமூர்த்தி. அவ்வாறான பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும், பெரிய மூங்கில் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு, அடியேன் அடிமையாகிக் (பிறவித் தளைகளில் இருந்து) தப்பினேன்.
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
பதம் பிரித்து
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பிய அடியவனாக யான் துடித்தேன் அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன் அவர்களது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.
மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?
சிவன்
பிறர் நன்மைக்காக அவர்களுக்கு துன்பத்தை செய்பவன் சுகம் பெறுவான். அரசன் ஜனங்களை தண்டித்து, பயமுறுத்தி நல்வழிப்படுத்துதல், வழி தவறி நடக்கும் சீடர்களை தண்டித்து ஆச்சாரியன் நல்வழிப்படுத்துதல், வைத்தியம் செய்பவன் என இவ்வாறு நல் எண்ணத்துடன் துன்பம் செய்பவன் சுவர்க்கம் அடைவான். அயோக்கியனான ஒருவன் கொல்லப்பட்டால் மற்றவர்கள் சுகப்படுவர் எனில் அதில் தர்மம் மட்டுமே இருக்கும். பாவம் இருப்பதில்லை.
உமை
இவ்வுலகில் நான்கு வகையான உயிர்கள் காணப்படுகின்றன. அவைகளின் அறிவு இயற்கையானதா அல்லது உண்டாக்கப்படுவதா?
சிவன்
உலகம் தாவரம், ஜங்கமம் என்று இருவகைப் பொருளாக கூறப்படுகிறது. அவற்றில் பிராணிகள் நான்கு வகைகளில் உற்பத்தி ஆகின்றன.
பெயர்
ஆத்மா / அறிவு
இனங்கள்
உண்டாகும் முறை
1
உத்பிஜ்ஜம்
ஸ்பரிசம் எனும் ஒர் அறிவு
நிலம் + நீர்
2
ஸ்வேதஜம்
ஸ்பரிசம்,பார்வை எனும் இரு அறிவு
கொசு, பேன்
வெப்பம்
3
அண்டஜம்
ஐந்து அறிவு
பறவை
வீர்யம் + நீர்
4
ஜராயுஜங்கள்
ஐந்து அறிவு
பசு, காட்டுமிருகங்கள், மனிதர்கள்
சுக்லம் + சோணிதம்
இரவில் உண்டாகும் இருள் ஒளியால் அழிந்து போகும். தேக இருள் மாயையால் சூழப் பட்டிருப்பதால் உலக ஒளிகள் அனைத்தும் சேர்ந்தாலும் விலகாது.தேக இருளைப் போக்க பிரம்மர் பெரும் தவம் செய்து உலக நன்மையின் பொருட்டு வேதம், வேதாகமம், உபநிஷத்துகள் ஆகியவற்றைப் பெற்று தேக இருளை ஒழித்தார். இது நன்மை பயக்கும்; இது தீமை பயக்கும் என்பதை சாஸ்திரங்கள் தெரிவிக்கா விடில் உலகினில் மனிதர்களும், விலங்குகளும் வேற்றுமை இல்லாமல் இருப்பார்கள். எனவே உயிர்களுக்கு ஞானத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை. பிறக்கும் போது பிறவி கொண்டு பிறந்த ஞானம் முதன்மையானது. கற்பிக்கப்படும் ஞானம் இரண்டாவதானது. சாத்திரங்களைக் கற்றப்பின் ஒருவன் பிறவி பயன் பெற்றவனாகிறான். அவன் தேவதை போல் மனிதர்களுக்குள் பிரகாசம் உடையவன் ஆகிறான். அவன் பெற்ற அந்த ஞானம் காமம், குரோதம், பயம், கர்வம், விபரீத ஞானம் இவற்றை மேகங்களை காற்று விலக்குவது போல் ஒதுக்குகிறது. இவர்கள் செய்யும் சிறிய தர்மமும் பெரிதாகும். ஞானமுள்ளவன் பொருள்களின் உயர்வுதாழ்வுகளையும், உண்மையையும் அறிந்தவன் ஆகிறான். இவ்வாறான சாத்திர ஞானத்தின் பலன்களை சொன்னேன்.
உமை
சிலர் முன் ஜென்மத்தின் நினைவுகளை அறிந்தவர்களாகப் பிறக்கிறார்களே, அது எவ்வாறு?
சிவன்
திடீரென இறந்த மனிதர்கள் உடனே பிறக்கும் போது முந்தய ஜன்மத்தின் நினைவு சிறிது இருக்கும். அவர்கள் உலகில் பிறந்து அவ்வாறான ஞானம் கொண்டு இருக்கிறார். அவர்கள் வளர வளர அந்த அறிவு கனவு போல் மறைந்து விடுகிறது.
உமை
சிலர் இறந்தபிறகும் அதே தேகத்தை அடைகிறார்களே, அது எவ்வாறு?
சிவன்
எம தூதர்கள், உயிர்கள் அதிக இருக்கும் போது அவர்களால் கொல்லப்பட்டு பகுத்தறிவின்றி தான் கொண்டு செல்லும் உயிர் விடுத்து மற்றொரு உயிரை கொண்டு செல்கின்றனர். எமன் ஒருவன் மட்டுமே ஒருவனது புண்ணிய பாவங்களை அறிந்திருக்கிறான். எனவே அவர்கள் ஸ்ம்யமனி எனும் எமன் இடத்திற்குச் சென்று அவரால் கர்மங்களை அனுபவிப்பதற்காக திரும்ப அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கர்மம் முடியும் வரை எமன் இருப்பிடம் செல்ல இயலாது.
உமை
மனிதர்கள் தூங்கிய உடன் கனவு காண்கின்றனர், இது இயற்கையா? அல்லது வேறு காரணமா?
சிவன்
தூங்குபவர்களின் சஞ்சரிப்பதான மனம் நடந்ததையும் வருவதையும் அறிகிறது. எனவே கனவு வருவதைக் குறிப்பதாக இருக்கும்.
உமை
உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, உடல் வளர்ச்சியால் தடித்த மகன் செய்த தவறு செய்வது கண்டு தந்தை அவனை அடித்தால், உடனே தாய் அவ்விடம் போய் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடித்தால், தன் கையில் பற்றிக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை உடையனாக தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, எனக்கு தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உன்னுடைய அருளால் என்னை அணைத்து ஆதரிக்க வேண்டும்.
விளக்கஉரை
இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன் எனும் பொருளில்
தடித்த மகன் – உடல் வளர்ச்சி மட்டும் பெற்ற ஒருவன் எனும் பொருளில்.( புற விஷயங்களில் மட்டும் வளர்ச்சி பெற்ற ஒருவன்)
அம்மைஅப்பன் – சிவன் – அம்மையும் அப்பனுமாகி (இரண்டாகவும்) எனும் பொருளில்
பிறவி ஆன்மாக்கள் மீது தாயும் தந்தையும் ஆகிய அம்மையப்பன் ஒத்த அன்புடையவர்.
அடித்தல் துன்ப நுகர்ச்சி, அணைத்தல் இன்ப நுகர்ச்சி. இரண்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு பகுதியை கண்ட எனக்கு மறுபகுதியை காணச் செய் எனும் பொருளில்
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா, அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில் இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும் விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.
விளக்கஉரை
எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.
தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?
விளக்கஉரை
கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.
திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.
மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச் சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும் மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே
திருநெறி 2 – சிவஞானசித்தியார்
கருத்துஉரை
ஒருவனுக்குத் தன் கருத்திற்கு இயைந்த ஒரு கடவுளை மனம், மொழி மற்றும் மெய்களால் வழிபட்டு, சொல்லப்பட்டவாறு தீமைகளை விலக்கி, வாழும் செயலாகிய அறம், விதிக்கப்பட்ட ஒழுக்கம் முதலிய நன்மைகளை உடையனாய் சினம் முதலியவற்றை விலக்கி விளங்கும் ஒருவனுக்கு சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை ஏற்றுக் கொண்டு பயன் உதவுவார்.
விளக்கஉரை
எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அவ்வடிவாக இருந்து அருளுபவர் சிவன் எனும் பொருள் பற்றி.
1. விநாயகரின் தாயான பார்வதியும், தந்தையாகிய சிவனும் பால கணபதியை திருமஞ்சனம் செய்வது போலவும் கொண்ட வடிவம்
2. பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போன்ற வடிவம்
3. தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் கொண்ட வடிவம்
4. யானைமுகம், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் பூமாலை, தும்பிக்கையில் மோதகம் அல்லது விளாம்பழம்
மேனி வண்ணம்
உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் / பொன்னிற மேனி
திருக்கைகள்
நான்கு திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன்னிருத்தி ஒவியங்கள் / சிற்பங்கள்
வகை 1 – மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம்
வகை 2 – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்(சில இடங்களில் பூங்கொத்து), கரும்பு
பலன்
குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், குழந்தையைப் போன்ற மகிழ்வு, நல்ல உடல்நலம்
மற்றவை
கணபதியைச் சிறு பிராயத்தினராகக்கொண்டு வழிபடுவதற்கான வடிவம். பால = இளம், சிறு பிராயம்.
சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்சி
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் பால கணபதி
உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் திருவைந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சகத் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காப்பாற்றியது திருவைந்தெழுத்தே.
விளக்கஉரை
உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மாயையால் உலகில் வாழ்வு கொள்ளுதல் என்பது உறங்குதலுக்கு சமமாகவும், ஞான மார்க்கத்தால் உயர் நிலை அடைந்த பிறகு விழிப்பு நிலை என்பதும் பொதுக்கருத்து. (ஆன்றோரும், இறை அன்பர்களும் கருத்துரைக்க). ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறள் யாண்டும் சிந்திக்கத்தக்கது.
திருவைந்தெழுத்தை ஓதுவார் எமனால் துன்பப்படார் என்பது கருத்து.
11ம் திருமுறை – இளம்பெருமான் அடிகள் – சிவபெருமான் திருமும்மணிக்கோவை
கருத்துஉரை
நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம் விழுந்த தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன் பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?
விளக்கஉரை
ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு.