அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அறிதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அறிதல்

பொருள்

  • உணர்தல்
  • நினைத்தல்
  • மதித்தல்
  • அனுபவித்தல்
  • பயிலுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ
தேடி எனையறியேன் தேர்ந்தவகை – நாடியரன்
தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணார்
என்னா மெனாஅறிவா ரின்று.

திருநெறி 9 – 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்து உரை

நரம்பு முதலிய தாதுக்களின் வேறுபாடின்றி தானாய் வருகின்ற உயிரானது நாடியோ, எலும்போ, நரம்புகளின் கண் ஓடிக்கொண்டிருக்கும் கோழையோ(ரத்தம்), எனத் தேடி அதில் கண்டறியும் வகையினை அறியமாட்டேன். இவை எல்லாவற்றிலும் அடங்கியும், அவ்வாறு இல்லாத பொருளாகவும் நிற்பவனாகவும், தன்னில் தன்னைக் கண்டப்பின் அது அல்லாத பொருள்களிலும் உறையும் உயிர்ப்பொருளில் கலந்தும் அவ்வாறு தானே கண்ட காட்சி இல்லாத பொருளில் வழிபாடு செய்யத் தக்கவனாகவும்நிற்பதைக் காணாதவர்கள் அவனை அறியாதவர்கள். எனவே எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் அவனை வழிபடுக எனுமாறு.

விளக்க உரை

புறத்தில் உள்ள பஞ்சகோசமாகவும், அதனுள் உறையும் உயிராகவும், அவ்வாறு இல்லாத பொருள்களிலும் உறைபவனாக இருத்தலினால் எல்லா இடங்களிலும் அவனை வழிபடுக எனும் பொருளில். அஃதாவது சகலமும் ஈஸ்வரப் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *