சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்





சைவசித்தாந்தம்சில சிந்தனைகள்













சர்வ வியாபகம் 

எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைவுற்று இருத்தல்.

எல்லா பொருள்களிலும் நீக்கமற  நிறைவுற்று இருத்தல் முதல் தன்மை. அதோடு தளைகளை அறிவிக்கவும் அதோடு ஆன்மாக்களை தளைகளில் இருந்து விடுவிக்கும் பொருளாகவும் இருத்தல். அஃது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தது.

இதைஉண்மை என்பதை பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் புராணம் உணர்த்தும்.
நித்யதத்துவம் 

அழிவில்லாது.

தனக்கான செயல்களை வினைகளில் வழியே கூட்ட பதி ஒன்று வேண்டும். அவ்வாறு செயவதற்கு தனக்கு மேல் ஒரு பதி இல்லாத பரம் பொருள்.
சுவையினை உணரும்  பசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றை அனுபவிப்பது போல், ஈஸ்வர அனுபவிப்பதை அனுபவிப்பதால் அவன் நித்ய  ஆனந்தராக இருத்தல் வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

பூரணம்

அழகிய ஓவியம் ஒன்றை
வரையத் துவங்குகிறேன்.
எழுதப்படா பக்கங்களை
எடுத்து வந்து என்னிடம் தந்து
ஓவியம் எப்படி என்கிறாய்‘.
மகளாகிய உன்னால்
ஒவியங்கள் முழுமை பெறுகின்றன.








Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

2038- Quantum physics

2038- Quantum physics 

(It’s all a fantasy. It is not intended to hurt anyone. It could (not) happen.)

1.
2014 – In quantum theory of cognition, memories are created by the act of remembering.
2038 – Remembering is very old method. Unaku evalavu venum sollu. 50 terra byte Rs. 50/- only.
2.
2014 -Quantum Cloud Simulates Magnetic Monopole
2038 – Sir, seekiram solluga, unga veetu vasthu padi NorthEast (Sani moola- Moolaila theeya vaika) than best. Advance seekiram pay pannunga sir. Lion(pavigala line or lion)  nikuthula.
3.
2014 -Quantum cryptography for mobile phones
2038 – Nanum 25 yearsa try pannikitu iruken. But en husband-oda password mattum kandu pudikida mudiyala sir
4. 
2014 -Electron Mass Measured to Record-Breaking Precision. The electron has 0.000548579909067 of an atomic mass unit
2038 – Yei rumba pesuna monjiya pethuduvan, enga thalaivar vijayoda son. Avaru massu theriyuma.
 5.

2014 –  Hunt for an ‘unidentified electron object’ – Researchers have developed a new mathematical framework  capable of describing motions in superfluids.
2038 – Sir, ithey vechi Renganathan stla shopping pona en pondatiya kandu pudika mudiyuma sir.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவலிதாயம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து வழிபட்ட தலம்
·   இராமன் வழிபட்டத் தலம்
·   மார்க்கண்டேய மகரிஷி உபதேசத்தின்படி வியாழன் தன் தவறு உணர்ந்து  சிவனை வணங்கி பாவன் நீங்கப் பெற்ற தலம்
·   பிரம்மாவின் பெண்கள் கமலியும், வல்லியும் இறைவனை பூஜித்து விநாயகரை மணம் புரிந்த தலம்
·   கஜ பிருஷ்ட விமானம்
 
 
 
 
 
தலம்
திருவலிதாயம்
பிற பெயர்கள்
பாடி
இறைவன்
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
இறைவி
ஜகதாம்பாள், தாயம்மை,
தல விருட்சம்
பாதிரி, கொன்றை
தீர்த்தம்
பரத்துவாஜ தீர்த்தம்
விழாக்கள்
சித்திரைபிரம்மோற்ஸவம், தைகிருத்திகை, குரு பெயர்ச்சி
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,                         
பாடி, சென்னை – 600050.
+91-44 -2654 0706
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை  ‘பாடி’க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்’ நிறுத்தத்தில் இருந்து மிக அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 254வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.
திருவல்லீஸ்வரர்
 
 
 
தாயம்மை

பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               1

பாடல்
 

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
பொருள்
பல சிவனடியார்களும் பொலிவுடன் விளங்கும் மலர்களை உள்ளங் கையினில் ஏந்தி, வார்த்தைகளால் மாறுபாடு இல்லாமல் மந்திரங்கள் சொல்லி, நீர் வார்த்து , ஊமத்தை மலர்களைச் சூடி பூஜிக்கிறார்கள்.  அவர்களை உயர் அடையச் செய்யும் பெருமான் உடன் உறையும் வலிதாயம் என்ற தலத்தை மனதில் வைத்த அடியவர்களை துன்பம் என்ற நோய் தாக்காது.
 
வலிதாயத்தை மனத்தால் நினைத்த அடியவர்களை துன்பம் தாக்காது என்பது துணியு.
கருத்து
பத்தர் – சிவன் அடியார்காள்
பொலியம்மலர்  – பொலிவுடன் விளங்கும் மலர்
புனல் தூவி  – நீர் இட்டு
பிரியாதுறை கின்ற – உமையம்மையை பிரியாதிருக்கும் சிவன்
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               8
பாடல்

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.
பொருள்


திருபாற்கடலைக் கடந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு தேவர்கள் தொழுது ஏத்தும் படி செய்து நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை செருக்குடன் கூடிய ஆற்றலை அழித்து பின் அவனுக்கு அருள் புரிந்த இறைவன் உறையும் கோயில்களை உடையதும், தேன் சுவை போன்ற கமுகு மற்றும் பலா மரங்களை உடையதுமான வலிதாயம் என்ற இத்தலத்தை வணங்குபவர்களில் துயரானது உடலில் உயிர் வரை இருக்கும் துன்பம் என்ற நிலையை நீக்கும்.

Photo : Dinamalar

Loading

சமூக ஊடகங்கள்

அலையும் அலைகள்


நம் எதிரே கடல் அலைகள்,
நம்முள் மன அலைகள்.
நம் பிரிவிற்கான காரணங்களை அடுக்குகிறாய்.
கடைசியான கவிதைக் கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பிறிதொரு விடியல்
எப்பொழுது நிகழும் என்கிறேன்‘.
மௌனித்து என் பரிசுப் பொருள்களை
எல்லாம் கொடுத்து
உனக்கானப் பொருள்களை
எல்லாம் எடுத்துச் செல்கிறாய்.
அனைத்தையும் கொடுத்தப் பிறகும்
எச்சங்களாய் மீந்து இருக்கும்
நினைவுகளை என்ன செய்வாய்.

Click by : Chithiram Photography 

Loading

சமூக ஊடகங்கள்

என்னவெனில்

கடக்கும்காலங்களில்
கடந்தகாலத்தைத்தேடும்
கனவுவாழ்க்கை.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

முன்னேற்றம்

என்ன செய்து கொண்டிருக்கிறது
உடல்
இறப்பு நோக்கி முன்னேறுவது தவிர.









Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 9

போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
———————————————————————————————- 
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————- 
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————- 
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
—————————————————————————————————————————————————————- 
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது 
தான்  தெரிகிறது. (டேய், போடா, போடா)

Loading

சமூக ஊடகங்கள்

புன்னகைக் பூக்கள்

கர்வம் கொண்டு
கனவு காண்பவனைக்
கண்டு சிரிக்கின்றன மயானங்கள்.











Click by : RssK Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காயம் படிந்த காயங்கள்

மௌனித்திருக்கும்
மனித உடல் எங்கும்
புலப்படா காயங்கள்.











Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடுவானம்

முந்திச் செல்லும் மழையினில்
நனைந்தபடி நானும்,
சிறு குடை பிடித்த படி நீயும்.
வாகனங்கள் ஒலி எழுப்பி
கரைகின்றன.
யாரும் அற்ற பொழுதுகளில்
குடைக்குள் இருந்து திரும்பிப்பார்த்து
புன்னைக்கிறாய்.
காலங்களும் உறைந்து நிற்கின்றன.
பிறிதொரு மழை நாளில்
மழை நீருடன் உன் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – வடதிருமுல்லைவாயில்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
·   வாணன், ஒணன் எனும் அசுரர்களும் முனிவர்களிக்குமான மனக்கசப்புகள். முனிவர்களுக்காக தொண்டை மன்னன் போர். அதலால் தோல்வி. பட்டத்து யானை முல்லைக் கொடியில் மாட்டிக் கொள்ளுதல். அதன் பொருட்டு மன்னன் கொடிகளை நீக்குதல். அதனால் ரத்தம் வெளியேற்றம். தன் நிலை குறித்து வருந்தி மரணம் விரும்பி மரணிக்க எண்ணுதல். இறைவன் காட்சி
·   தலையில் வெட்டுப்பட்ட காயங்களுடன் காட்சி. ஆதலால் வருட முழுவதும் சந்தனக் காப்பு. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருக்காப்பு நீக்கப் படும்
·   நந்தி அசுரர்களை அழிக்க மன்னனுடன் சென்றதால் சுவாமிக்கு எதிர் திசையில் உள்ளது.
·   அசுரர்கள் வைத்திருந்த வெள்ளெருக்கு மரங்கள் தூண்களாக
·   ப்ரமன் வழிபட்ட தலம்
·   கண்ணிழந்த சூரியன் நற்கதி அடைந்த இடம்
·   சந்திரன் (ஷயரோகம்) சாபம் நீங்கப் பெற்ற இடம்
·   27 நட்சத்திரங்கள் நற்கதி அடைந்த இடம்
·   வசிஷ்டர் காம தேனுவைப் பெற்ற இடம்
·   பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற இடம்
·   துர்வாசர் கோபம் நீங்கிய இடம்
·   இந்திராணி பூசை செய்து இந்திரனை அடைந்த இடம்
·   ஐராவதம் துயர் நீங்கப் பெற்றத் தலம்
·   தேவமித்திரன் , சம்புதாசன் , சித்திரதன்மன் – இறைவனை அடைந்து முக்தி அடைந்த தலம்
·   சுந்தரர் கண்பார்வை இழந்த பின் முதலில் தரிசனம் செய்த தலம்.
·   நவக்கிர சன்னதி இல்லை
·   பௌர்ணமி தின வலம் வருதல் – மூன்று தேவியர்களில் ஒரு தேவி
·   லவ குசர்கள் வணங்கிய சிவன் – குசலபுரேஸ்வரர்
·   கஜ பிருஷ்ட விமானம்
தலம்
வடதிருமுல்லைவாயில்
பிற பெயர்கள்
திருமுல்லைவாயில், மணிநகர்
இறைவன்
மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்,
இறைவி
கொடியிடை நாயகி
தல விருட்சம்
முல்லை
தீர்த்தம்
அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், மானத தீர்த்தம், குகனருந்தடம், அயிராவத தீர்த்தம், இஷ்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், அரதனத் தீர்தம், சிவஞான தீர்த்தம், பிரம தீர்த்தம் – தீர்த்தம் ஒன்று, பெயர்கள் பல.
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மாசித்தெப்ப விழா,
ஆனியில் வசந்த உற்சவம்
மாவட்டம்
செங்கல்பட்டு
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,                       வட திருமுல்லைவாயில், சென்னை – 609113.
+91-44- 2637 6151
 
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார், மாதவச் சிவஞானயோகிகள், இரட்டைப் புலவர்கள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து 26 கி.மீ தூரம்.
சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயிலில் ஆவடி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 255வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 22வது தலம்.
கொடியிடை நாயகி உடனாகிய மாசிலாமணீஸ்வரர்
 
 
 
பாடியவர்                     சுந்தரர்      
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    69
திருமுறை எண்               1
பாடல்

திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்ஊடியும்உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய்வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய்பாசுபதாபரஞ்சுடரே! .
பொருள்
தேன் பொருந்திய சோலைகளால் சூழப்படிருக்கும் திரு முல்லை வாயிலில் உறைபவனே, பாசுபதா அஸ்திரம் உடையவனே, பரம் சுடரே,  வீடு பேறு, அதற்கு காரணமான மெய் பொருள், செல்வம் இவைகள் அனைத்தும் உனது திருவடியினால் அமையப் பெற்றவை என்று எண்னம் கொண்டு யாரையும் துணையாகக் கொள்ளாமல், அவர்களை விலக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு உன்னை வாயால் பாடும் அடிவனாகிய நான் படும் துயரத்தினை நீ களைவாயாக.
கருத்து
·   அனைத்தும் இறைவனால் அமையப் பெற்றன என்பதில் முடிவான எண்ணம் உடையவர் .
·   ஒருவரை மதியாது – மற்றவர்கள் இவற்றை ஒத்துக் கொள்ளாததால் அவர்களை மதியாது
·   படு துயர் – வினைத் தொகை. (எல்லாக் காலங்களுக்கும் பொதுவானதால் – துயரம் எல்லாக் காலங்களுக்கும் பொதுவானது)
பாடியவர்                 சுந்தரர்        
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 69        
திருமுறை எண்           8 

பாடல்
நம்பனேஅன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவேஉம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்தேடியான் திரிதர்வேன்கண்ட
பைம்பொனேஅடியேன் படு துயர் களையாய்பாசுபதாபரஞ்சுடரே! .
பொருள்
ஆணில் சிறந்தவனே(சிவன்), சிறந்த பொன் போன்றவனே, அன்றைக்கு என்னை திருவெண்ணை நல்லூரில் நாய் போன்ற என்னை ஆட் கொண்ட சம்புவே, வானத்தில் உறைபவர் வணங்கி துதிக்கும் பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனே, செம் பொன்னால் ஆன மாளிகையால் சூழப்பட்டிருக்கும் திருமுல்லைவாயில் நான் தேடி திரிகின்றேன். இவ்வாறு திரிவதால் ஏற்படும் துன்பத்தைக் களைவாயாக.
கருத்து
நம்பன் – ஆணில் சிறந்தவன், சிவன்
பைம்பொன் – பண்புத் தொகை(பசுமை+பொன்) 
Image courtesy: Internet

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 9 – கொடியிலே மல்லிகைப்பூ

படம் :  கடலோரக் கவிதைகள்
விடியற்காலையில் எழும் சிதம்பரம்கோயில் மணி ஓசையாய் வரிகள் ஆரம்பமாகின்றன். (ஒரு வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர்ஜெயச்சந்திரன்)
அன்பினைப் பகிர்தல் மட்டுமே அடிப்படையாக அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள்.

மிகச் சிறிய குழந்தையின் தீண்டல் நம் வலிகளை எல்லாம் தீர்ப்பது போல் இப் பாடல் நம் வலிகளை தீர்க்கிறது.

தலைவன் தலைவி இருவரும் கடல் சூழ் பாறை அருகினில். தவைவனுக்கு முள் குத்திவிட்டது. தலைவி எடுத்து விடுகிறாள். பாடல் ஆரம்பமாகிறது. பின் புறத்தில் காலைச் சூரியன்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
எடுக்கவாதொடுக்கவாதுடிக்கிறேன் நானே
ஒரு ஆடு காண்பிக்கப்படுகிறது. தலைவி அதைத் துரத்துகிறாள். கைகளில் எடுக்கிறாள். தட்டாமாலை சுற்றுகிறாள். கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.
பறிக்கச்சொல்லித்தூண்டுதேபவழமல்லித் தோட்டம்
நெருங்கவிடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்
தலைவி வீட்டுக்குள் நடை பழகுகிறாள். அவள் பார்ப்பது ஏசு பிரான் படம்.
கொடியிலேமல்லிகைப்பூ மணக்குதேமானே
கொடுக்கவாதடுக்கவாதவிக்கிறேன் நானே
தலைவி நினைத்துப் பார்க்கிறாள். தலைவன் புத்தகங்களுடன். அவளுக்குள் புன்னகை.
வித விதமான புகைப்படங்களுக்கு தலைவி முகம் காட்டுகிறாள்.
பின்புறத்தில் கடல் அலைந்து கொண்டிருக்கிறது.
கடற்கரைமணலில்‘ ABCD’ எழுதப்பட்டிருக்கிறது. எதிர் எதிர் திசைகளில் இருவரும். இசைக்கு ஏற்றவாறு கடல் அலை வேகமாக பாய்கிறது.
மெதுவாகநடக்க ஆரம்பிக்கிறாள். மனம் நிச்சயமில்லாமல் இருக்கிறது. கனவுக்குள் இருக்கிறாள்.
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம்இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.
தலைவன் பல் விளக்குகிறான்கையில் நீர்ப்பாத்திரம். கொப்பளிபதற்கு பதிலாக அருந்துகிறான்.
நித்தம்நித்தம்உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
இது மீண்டும் நிகழ்கிறது. அன்னை வேடிக்கைப் பார்க்கிறாள். ஆச்சரியப்படுகிறாள்.
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்.
தலைவி மிகப் பெரிய இடத்தில் நடந்து வருகிறாள்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
மேற்கே சூரியன வந்து விடுகிறது.
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால
தலைவி பாறை மேல் அமர்ந்திருக்கிறாள். மீன் பிடித்து வரவா என்கிறான் தலைவன். வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் தலைவிஅதைக் கேட்காமல் கடலுக்குள் ஓடிச் செல்கிறான்.
மிகப் பெரிய அலையில் தலைவன் விழுகிறான்.
தலைவி திகைக்கிறாள். மீண்டும் அலைகள் மட்டும் வருகின்றன. தலைவனைக் காணோம்.
பறக்கும்திசையேதுஇந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
விழிகள்நாலா புறமும் அலைகின்றன. தலைவனைக் காண்வில்லை.
தலைவன் பிடித்துவந்த மீனைவைத்து பின்னால் இருந்து பயமுறுத்துகிறான்.
பாறையிலேபூ முளைச்சு பார்த்தவங்க யாரு
தலைவன் கேள்வி கேட்கிறான்.’பயந்துட்டியா
காட்டி அசைகிறது.
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
இருவரும்சிரித்துமகிழ்கிறார்கள்.
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
மீண்டும்நிஜங்களுக்கு காட்சி வருகிறது. வீட்டில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராக இருக்கிறார்கள்.

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே.
கணத்தில்காட்சி மாறுகிறது. சில வினாடிகளுக்கு காட்சி தொடர்கிறது.
மனித மனங்களின் விசித்திரங்களில் ஒன்று அலைப்பார்த்தல். அதை உருவமாக ஆக்கி செய்திருக்கும் காட்சி அமைப்பு மிக ஆச்சரியம்.
அதனால் தான் மல்லைகையின் வாசம் மனதையும் விட்டு அகலாமல்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவான்மியூர்

தல வரலாறு(சுருக்கம்)
 
·   வான்மீகி நாதருக்கு வன்னி மரத்தடியில் காட்சி அருளிய இடம்.
·   அகத்தியருக்கு நோய்களைப் பற்றியும் அதற்கா மருந்துகளையும் ஈசன் உபதேசித்த இடம்.
·   அபயதீட்சிதருக்கு கடும் மழை வெள்ளப் பெருக்கால் காண முடியா முகத்தை காண்பிப்பதற்காக மேற்கு நோக்கிய தரிசனம்
·   காமதேனு சிவனுக்கு பால் சுரந்து பாப விமோசனம் பெற்ற இடம் – பால்வண்ண நாதர்.
 
 
 
 
தலம்
திருவான்மியூர்
பிற பெயர்கள்
தியாகராஜர், வான்மீகிநாதர், வேதபுரீஸ்வர, அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர்
இறைவன்
மருந்தீஸ்வரர்
இறைவி
திரிபுர சுந்தரி, சொக்க நாயகி
தல விருட்சம்
வன்னி
தீர்த்தம்
பஞ்ச தீர்த்தம்
சிறப்புகள்
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
 காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை
 அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர், சென்னை-600 041.
சென்னை மாவட்டம்.
 +91 – 44 – 2441 0477.
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத் துறை
இதர குறிப்புகள்
 தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 25வது தலம்.
திரிபுரசுந்தரி உடனாகிய மருதீஸ்வரர்
 
 
பாடியவர்                    திருஞானசம்மந்தர்      
திருமுறை                   இரண்டாம் திருமுறை 
பதிக எண்                    4
திருமுறை எண்              1509
 
பாடல்
 
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் 
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த் 
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர் 
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.       
பொருள்
 
முறையற்ற நெறியில் பல திசைகளிலும் மலை போன்ற பத்து தலைகளை உடைய இராவணன் பெயர்க்க முற்படும் போது அவை அலறுமாறு அடர்ந்தவரே, திருவான்மியூர் திருத்தலத்தில் உமையோடு வீற்றிருந்து அருளினிர். பல பூதக் கணங்களும் பேய்களும் உங்களைச் சூழ்ந்து உங்களிடம் பயிலக் காரணம் என்ன?
கருத்து
தகு இல்தகுதியில்லாத நெறியினில்
தசக்கிரி – மலை போன்ற பத்துத் தலைகளை
பலபாரிடம் – பூதகணம்.
 
 
பாடியவர்                     திருநாவுக்கரசர்     
திருமுறை                    5ம் திருமுறை 
பதிக எண்                    82
திருமுறை எண்               1881
 
பாடல்
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
 
பொருள்
 
வான்மீகி நாதரே,,தேடிப் பெற்ற பொருள், சுற்றம், பொய் இவைகளை  வியக்கும் மனிதர்கள் விலக்கி மயக்கம் நீக்கி அருள் தரும் ஆதியாய் என்று அருளும் அளித்திடுவாய்.
 
 
Image courtesy: Internet
 

Loading

சமூக ஊடகங்கள்

கரையில் நீந்தும் மீன்கள்

மனிதர்களோடு
மூடப்படுகின்றன
அவற்றின் கதவுகள்







Click by : R.S.S.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

ராமன் – என்றும் தொடரும் நிகழ்வுகள்

இது ராமனை பற்றிய ஒரு சில நிகழ்வுகளும் நினைவுகளும் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு.
இந்த நிகழ்வினை எப்போது நினைத்தாலும் என்னையும் அறியாமல் இதயம் கலங்குகிறது.
சத்யமான தெய்வம், நீல வர்ணத்திகே சொந்தமானவன் ராமன் தன் நிலை மறக்கிறான். அம்பினை எடுத்து கடல் அரசனை சந்திக்க தயாராகிறான்.  (நான் அறிந்த வரையில் இதுவே ராமன் காட்டிய கோபம்)
கடல் அரசன் எதிரில் வந்து மன்னிப்பு கோருகிறான்.

அம்பினை எடுத்த ராமன் அதை தரையில் விடுகிறான்.

கடல் அரசனுடன் பேச்சு வார்த்தை முடிகிறது.

ராமன் திரும்புகிறான். அம்பு ஒரு மண்டுகத்தில் மேல் அம்பு செருகப்பட்டிருக்கிறது.
ராமன் கதறுகிறான் மனம் பதறுகிறது.
ஏன் கத்தவில்லை, உரைக்க வில்லை‘  ராமன்.
பிறப்பிலும் இறப்பிலும் உரைத்தல் உன் நாமம், ஆனால் நீயே என் மேல் அம்பு வைக்கும் போது நான் யாரிடம் போய் சொல்வேன்‘. தவறு செய்தாலும் அது குறித்து வருந்துதல் ராமனுக்கு மட்டுமே உரித்தானது.
உருகுகிறான் ராமன். ‘உன் ஜென்மம் தீர்ந்தது. நீ மகரிஷியாக வருவாய், எம்மை பற்றி நிற்பாய்‘.

இவரே மண்டுக மகரிஷியாக பிறந்து சுந்தர் ராஜ பெருமானிடம் சேர்ந்தவர்(மதுரைகள்ளழகர் கோயில்)

Loading

சமூக ஊடகங்கள்

மினுமினுப்புகள்

தெருவில் பார்த்துவிட்டு
புழக்கடைக்கு திரும்பிய பின்னும்
தெரிகிறது நட்சத்திரங்கள்.









* பல நேரங்களில் வீட்டின் வாசலில் நட்சத்திரங்களை எண்ணிவிட்டு கொல்லைப் புறத்தில் வந்து சரிபார்த்திருக்கிறேன். மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கடந்த காலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நினைவுகள்.

Click by R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் அர்த்தங்கள்

மகளின் உறக்கத்தில்
தகப்பனை தலையணைக்குள் தேடுகையில் வாழ்வு முற்றுப் பெறுகிறது.








Click by : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவொற்றியூர்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
·   சிவன் வடிவம் – பாணலிங்க வடிவம்
·   மூலவர் – படம்பக்க நாதர் – கவச திருமேனி – கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.
·   அம்பிகை ஞான சக்தி வடிவம்
·   மகிஷாசூரன் அற்ற துர்க்கை
·   அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம்
·   தேவாரப் பாடல் வரிசைகளில் 253வது தலம்
·   சப்த விடத் தலங்களில் ஒன்று
·   கஜ பிருஷ்ட விமானம்
·   பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி
·   சிவனில் வடிவங்களில் ஒன்றான ஏகபாத மூர்த்தி – வெளிப் பிரகாரத்தில்
·   சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட இடம்
·   ஏலேலே சிங்கர் மன்னருக்கு தருவதாக வைத்திருந்த மாணிக்கங்களை காசி சிவ பக்தர்களிக்கு தந்ததால் ‘மாணிக்க தியாகர்’
·   உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் – படம்பக்க  நாதர்
·   கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம்
·   63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம்.(குருபூசை நாள்: ஆடி – கேட்டை)
·   63 நாயன் மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடிய தலம்
·   நுனிக் கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.
·   நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம்
·   வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த இடம்
 
தலம்
திருவொற்றியூர்
பிற பெயர்கள்
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம்
இறைவன்
படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,
இறைவி
வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம்
மகிழம், அத்தி
தீர்த்தம்
பிரம்ம, நந்தி தீர்த்தம்
சிறப்புகள்
 சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவொற்றியூர்
சென்னை
PIN – 600019
+91-44 – 2573 3703.  +91-94444-79057
வெள்ளிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
பெளர்ணமி –  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மற்ற நாட்கள்காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை – 4 மணி முதல் இரவு 8 30 மணி வரை
பாடியவர்கள்
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
நிர்வாகம்
இந்து அறநிலையத்துறை
இதர குறிப்புகள்
ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன்,, பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் ஆகியவர்கள் வழிபட்ட தலம்.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார் ஆகியவர்கள் பாடி உள்ளனர்
வடிவுடைஅம்மன்
 
பாடியவர்                      திருநாவுக்கரசர்     
திருமுறை                     4ம் திருமுறை 
பதிக எண்                     45
திருமுறை எண்                7
பாடல்
 
பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே
கருத்து
மரணம் உடையதும், விரும்பத் தக்காத நாற்றம் உடைய உடலை பாதுகாக்க பைத்தியம் போல் திரிந்து மறுமையைத் தரும் சிற்றின்பத்தை விலக்குக. நீக்குவதற்கு உரித்தான எளிதான வழி நெஞ்சில் உறையும் இறைவனையும் நினைத்தல். அவ்வாறு செய்தால் ஒற்றிவூர் உறையும் அரசனைப் போன்ற ஒற்றியூர்ப் பெருமான் அக்குறைகளை நீக்குவான்.
 
பாடியவர்                  சுந்தரர்         
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 91          
திருமுறை எண்           9   
பாடல்
 
பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
பொருள்
மலையை அசைத்த அரக்கனாகிய இராவணின் உறுப்புகள் ஏதும் இல்லாதவாறு செய்தவர் சிவன். அவர் இதனை அவர் தனது பெரு விரலால் செய்தார். அவர் கடல் சூழ்ந்த இந்த திருவொற்றியூரில் இருந்து வினைகளை நீக்கி அடியவர்களுக்கு அருள் செய்கிறார்.
 

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 8

நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
——————————————————————————————————————————————————————-
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம்அடையான்.
——————————————————————————————————————————————————————-
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம்   பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
——————————————————————————————————————————————————————-
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும்.  அதுபோல்  ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————————————-
சிறு மழையில்தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில்   நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
——————————————————————————————————————————————————————-
மனைவி :  இன்னைக்கு லீவுஇன்னைக்கு முக்கியமா…. என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி – மௌனம் (எப்புடி)
மனைவி :  எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்கஇது என்ன புதுசா (எப்புடி
——————————————————————————————————————————————————————-வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
——————————————————————————————————————————————————————-புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்‘ என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
——————————————————————————————————————————————————————-
தனது முதல் நரையைகாணும்ஆணின்மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதைவிடஅதிகமானவை.
——————————————————————————————————————————————————————-மனைவியின்பயண்பாட்டிற்குஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!