முந்திச் செல்லும் மழையினில்
நனைந்தபடி நானும்,
சிறு குடை பிடித்த படி நீயும்.
வாகனங்கள் ஒலி எழுப்பி
கரைகின்றன.
யாரும் அற்ற பொழுதுகளில்
குடைக்குள் இருந்து திரும்பிப்பார்த்து
புன்னைக்கிறாய்.
காலங்களும் உறைந்து நிற்கின்றன.
பிறிதொரு மழை நாளில்
மழை நீருடன் உன் நினைவுகளும்.
Click by : SL Kumar