‘எங்கு சென்றாய் என்னை தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’ என்கிறேன். தவிர்த்தல் உன்நிலை அன்றி எனதில்லை என்கிறாய். வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன. உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன
அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ *
எங்கிருந்தோ வருகிறது நெருப்பின் கங்குகள் ‘செட்டியார் கடைக்குப் போய் நோட்ல எழுதிட்டு சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.
நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள். (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள். உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)
1. ஔவையார், 2. காரைக்கால் அம்மையார்.
இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?
1.சமூகம் 2.பொருளாதாரம் 3.வீடு 4.இறைமை குறித்த சிந்தனைகள் 5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா? 6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள். 7.இலக்கு நோக்கிய பயணம்.
நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.
காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது. இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.
ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான், இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.
காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். 1. சார், லைன்ல வாங்க சார். நாங்களும் எங்க சொந்தக்காரன்களை ‘கருணைக் கொலை’ செய்யத்தான் நிக்கிறோம். எங்க டோக்கன் நம்பர் – 9876231. எப்படியும் கிடைச்சிடும். கவலைப்படாதீங்க.
உங்களுக்கு மாமியார், எனக்கு என் பொண்டாட்டி சார்.
2. சார், மேடம் இங்க பாருங்க, இந்த இதயத்தை வாங்குங்க சார். லைப் டைம் வாரண்டி சார் – கடைகளில்.
3. அதிசயம். டாக்டர்கள் சாதனை. கருவில் இருக்கும் 3 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை.
4. இங்கு மனித மூளையின் பதிவுகள் 10 நிமிடத்தில் பிரதி எடுத்துத் தரப்படும்.
5.
Hi, This is XXX , we want sperm donors. Because my husband have zero sperm count. He candidate should be Master degree graduate from I** and height – 5ft 9 inch, body weight 72kg. You will receive one time payment of Rs. 99 Lacs
ஆன்மீகம் – குலத்தை வளர்க்க வரும் குழந்தையை வரவேற்க தயாராகிறோம்.
அறிவியல் – குழந்தையின் வளர்ச்சி (உயிர்) 5ம் மாதத்தில் தொடங்குகிறது. அது முதல் தாயில் உணவினை உண்டு தாயின் எண்ணங்களை சுவாசிக்க துவங்குகிறது. (உ.ம் – அபிமன்யு) அதிக வளையல்கள் சப்தம் எழுப்பக்கூடியவை. அவை தாயிக்கு சந்தோஷம் அளிக்கும். எனவே குழந்தை நல்ல மன வளர்ச்சியோடு பிறக்கும்.
வீட்டினை சுத்தம் செய்வதாக செயல்கள், என்றைக்கோ மறந்து போன பேனா, இது அவனிடம் இருந்து பெறப்பட்டது கூடவே நினைவுத் தொடர்கள்; இந்த பேப்பரை தான் இத்தனை நாள் தேடினேன், கூடவே நினைவுத் தொடர்கள்; நீண்ட நாட்களாக படிக்க இருந்த புத்தகம் இன்று கிடைத்திருக்கிறது கூடவே நினைவுத் தொடர்கள்; என்றைக்கோ எடுத்த போட்டோ இப்பொழுது இங்கு இருக்கிறது கூடவே நினைவுத் தொடர்கள்; பல நாட்களுக்கு முன் பார்த்த சினிமா டிக்கட் கூடவே நினைவுத் தொடர்கள் சுத்ததின் முடிவில் எல்லா பொருள்களும் அதனதன் இடத்தில் அப்படியே சில நினைவுக் குறிப்புகளுடன்.
2038 – சமூகம் 1. என்னப்பா, உனக்கு குழந்தை பிறக்க போவுதாமே, அதுக்கு முனைவர் பட்டம் படிக்கிறத்துக்கு பணம் கட்டி வச்சிட்டியா?
2. சார் பின்னால வாங்க சார். அப்ளிகேஷன் வாங்க நான் போன வருஷத்திலிருந்து நிக்கிறேன். குறுக்க வராதிங்க சார்.
3. எங்க பள்ளில PRE K.G ரொம்ப ஈசியா இடம் கிடைச்சிடும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான். உங்க பேர்ல தி. நிகர்ல இருக்கிற 10 கிரவுண்ட நிலத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க.
4. ஏங்க, இப்பவாது பொண்டாட்டி பேச்சை கேளுங்க. அடுத்த வருஷம் நமக்கு குழந்தை பிறந்திடும். இப்ப பணத்தை பேங்கல போட்டாதான் அவன் 58 வயசுக்கு அது கிடைக்கும்.
5. 6மாத குழந்தை. என்ன அந்த ஸ்கூல போடாத. நல்ல ஸ்கூல போடு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?
ஆன்மீகம் – தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.
அறிவியல் – வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும். வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர் கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.
இரவினை இனிமையாக்க ஒரு கதை சொல்வதாக ஆரம்பிக்கிறாய். ‘ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம், அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணாம், அது ரொம்ப சமத்தாம்’ என்று கூறிப் புன்னைக்கிறாய். சூல் கொள்கிறது என் நினைவுகள்.
உணவுப் பரிமாற்றத்தில் நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம். ‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’ என்கிறாள் உன் அன்னை. ‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’ என்கிறாய். தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
1. கடவுள் துகள் பற்றிய பெரும்பான்மையான முடிவுகள் தெரிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது என்று கூறுவார்கள்(சுஜாதா பாணியில் – உட்டாலங்கடி).
2. நாங்க புளுட்டோவுல பிளாட் போடறோம் சார். போக வர இலவச வசதி.
3. இந்த வாரம் – நிலவில் ஓபன் தியேட்டரில் – தலைவா.
4. இது உங்க தாத்தா, பூமியில இருந்த போது கட்டிய வீட்ல இருந்து எடுக்கப் பட்ட செங்கல்லுடா. பத்ரமா வச்சிக்கடா.
5. உங்க தாத்தா காலத்துல அண்டத்தின் அகலம் 2500 மில்லியன் ஓளி ஆண்டுன்னு கண்டுபிடித்திருந்தார்கள். இப்ப எவ்வளவு தெரியுமா – 10000 மில்லியன் ஓளி ஆண்டுகள்.
எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.
அது போலவே ‘நான்’ தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம். (மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.
பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருக்கிறது.
இடரது பாடல்கள் மிக எளிமையானவை.
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில் குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே
இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.
முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.
அறிவியல் – அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.
முழு நிலவில் குளுமையின் அருகருகினில் நீயும் நானும். பேச்சுகள் திசைமாறி கனவுகள் பற்றிச் செல்கிறது. என் கனவு முழுவதும் நாய்கள் என்று உரைக்கிறேன். விதவிதமான நாய்களும் தோற்றங்களும் என்கிறேன். முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய். சில நாட்களில் அவைகள் என்னிடம் விளையாடுகின்றன. சில நாட்களில் பற்கள் விரிய கோபம் கொள்கின்றன. சில நாட்களில் காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன. சில நாட்களில் தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன. சில நாட்களில் இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து. இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன். ‘விழித்திரு’ என்கிறாய். ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.
பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.
‘என்ன வேண்டும்’ – கத்ரு
‘என் தாய் விடுதலை’ – கருடன்
‘அது இயலாது’ – கத்ரு
‘அது நிகழ என்ன செய்யவேண்டும்’ – கருடன்
‘தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்’ – கத்ரு
பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.
கத்ரு, ‘அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா’
கருடன், ‘ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், ‘
கத்ரு,’ வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு’
கருடன்,’அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல’ என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.
தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் – இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)
1.அனுபவம் 2.அனுமானம் 3.ஆப்தவாக்கியம்.
1.அனுபவம் – தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)
2.அனுமானம் – பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)
வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?
ஆன்மீகம் – போகும் காரியத்தில் தடங்கல் வரும்.
அறிவியல் – தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.