தந்தி சேவை

தந்தி சேவை வரும் ஜூலை மாதத்தோடு நிறுத்தப்பட இருக்கிறது.

பெரும்பாலும் தந்தி என்பது துக்க செய்தி என்பது மூத்த தலைமுறை கருத்து. என் வரையில் அது நினைவுகள்.

அப்பா R.D.O வாக கடலூரில் வேலை பார்த்து வந்தார்கள். நான் அப்போது திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தேன்.

கடலூரில் இருந்து அப்பா தந்தி அனுப்பி இருந்தார். Start immediately .

‘யார் வயதானவர்கள்’?

‘மவுத் வாங்குற லிஸ்ட்ல யாரு இருக்கா’?

‘யாருக்கு என்ன பிரச்சனை’?

‘விடியுமா’ – கு.பா.ர கதையை விட பல எண்ணங்கள்.

‘டேய், வண்டிய சீக்கிரம் ஓட்டுங்கடா’. அப்போ Only N.H.2. No N.H.4.

‘கடவுளே என்ன வேதனை இது’

கடலூர் மஞ்ச குப்பம் அருகினில் பஸ். ‘சீக்கிரம் போங்கடா’

வேகமாக வீடு நோக்கி ஒட்டம். உண்மை. நடக்கவில்லை.

வீட்டில் அம்மா, அப்பா.

‘என்ன ஆச்சு. எதுக்கு தந்தி அடிச்சிங்க’

‘அது ஒன்னும் இல்ல. நீ ரஜினி ரசிகன் தானே. ரிசர்வேஷன் இல்ல இல்லியா, அதனால பாட்ஷா படத்துக்கு டிக்கட் சொல்லி வச்சிருக்கிறேன்’

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *