உனக்கான பள்ளி வாகனத்தில் தலையில் மல்லிகையின் வாசத்தோடு நீ. எப்படி அழுது கொண்டு செல்வாயோ என்ற நினைவோடு நான். வாகனத்தில் ஏறி தலையை வெளியே தலையை நீட்டி கூறுகிறாய். ‘நாளைக்கு யாத்திரி சொன்ன கதை மாதிரியே இன்னைக்கும் சொல்லனும்’ என்கிறாய். நகர்ந்து செல்கிறது வாகனம் நகராமல் இருக்கிறது நினைவுகள்.
பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.
மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’. கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண நினைத்தது தவறானது.
புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.
நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.
பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.
புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.
அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.
பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.
ஒருபுள்ளியில் உருவம் அற்று வெற்றிடத்தில் வேண்டுவன தந்து தவித்து, தனித்து நிழலாடி கனவினை விதைக்கிறது உன் வரைபடங்கள். எண்ணப் பகிர்தலுக்கு எதிர் அணியில் நான். காட்சிகள் கவிதையாக்கம் கொள்கின்றன. எட்டும் தூரத்தில் ஒரு குரல் ‘கட்டைல போறவன் தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே’
அம்மா ‘ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும் அப்டின்னு சொல்லுச்சாம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம். இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம். அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம். இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம். அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்’
குட்டி ‘ம்’
அம்மா ‘இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம். அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம். அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ‘ நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது’ உடனே ரிஷி மேல பாய போச்சாம். ரிஷி சொன்னாராம், ‘ உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ’
1.
சென்னைக்கு மிக அருகில் சுமார் 700 கி.மி (கன்யா குமரியில் இருந்து 10 கி.மி தூரத்தில்) இடம் விற்பனைக்கு
2.
எங்களிடம் திண்டிவனத்திற்கு அருகில் 100 பிளாட் வாங்குபவர்களுக்கு, 1கிராம் தங்கம் இலவசம்.
3.
எங்களிடம் இன்றே அடுக்கு மாடி குடியிருப்புகள் புக் செய்யுங்கள். சரியாக 2063ல் உங்களிடம் வீடு ஒப்படைக்கப்படும்.
4.
இங்க பாருங்க, இது எங்க நாய் கட்டி வைக்கும் இடம். அடுத்த நாய் வாங்குற வரைக்கும் அத வாடகைக்கு விடறோம். வாடகை – 1,00,000/- 100 மாசம் அட்வான்ஸ். புடிக்கலன்னா சொல்லிடுங்க, அடுத்த பார்டி வெயிட்டிங்.
5.
எங்களிடம் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு முதல் மாதம் தினமும் 1லி தண்ணீர் இலவசம்.
அறிவியல் – புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும். (உ.ம் – சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்). இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.
(கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் – தலைவர் சூப்பர் ஸ்டார்)
சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம்.
பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.
தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.
பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை.
பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும். அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.
பெருங்குரலுடன் முழுவதுமான கரு நெருப்பினை சுமந்து ஒருவன். என்னை அவனிடத்திலிருந்து விலகச் சொன்னான். ‘பேசினால் மற்றவர்களையும் அது பற்றும் என்றும்’ சொன்னான் பிறந்தது முதல் நெருப்பினை சுமந்திருப்படதாகச் சொன்னான். பிறந்த நாளில் அதன் நிறம் மஞ்சளாக இருந்தாகவும் , நாள்களின் வளர்ச்சியில் பல நெருப்புகள் சேர்ந்ததாகவும் அது சிகப்புடன் கூடிய நீலமாகவும் தற்போது ஒளி குறைந்து கருமையானது என்றும் உரைத்தான். உரைத்த பொருள் உணர்வதற்குள் பரவியது என்மேலும் என்னுள்ளும்.
இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.
இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.
தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.
பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)
பரமதத்தன் வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.
அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’
காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’
சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.
எனவே அமுது படையல் பரமதத்தன் அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.
அடர்ந்த பெருங்காட்டிலிந்து
கனத்த சரீரத்துடன்
பெரும் யானை ஒன்று
பிளிரி ஓடிவந்தது.
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.
‘காட்டில் உணவு இல்லை’ என்றும்
‘வற்றிய நீர் நிலைகளும்
தனக்கானவை அல்ல’ என்றும் கூறியது.
பெரு நிலத்தில்
வேளா வேளைக்கு உணவு என்றும்,
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,
வாழ்க்கை வசீகரமானது எனவும்
பகன்றது.
காலத்தின் சுழற்சிதனில்
அதன் கடைநாளில்
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மனிதத் தேவையில்
விலங்குகளின் தேவைகள்
வெகுதூரம் என்று கூறி
காட்டை நோக்கிப் புறப்பட்டது.
பூரூ என்ற மகன் ‘தான் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்’ என்றான்.
பல ஆண்டுகள் இளமையோடு இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தான். பல வருடங்களுக்குப் பின் அவனுக்கு ஞானம் வந்தது. ‘காமம் விரும்பியவைகளை அனுபவிப்பதால் தீருவது இல்லை. அது அக்கினியில் இடப்பட்ட நெய் போல் ஜ்வலிக்கிறது. எத்தனை வகையான பொருள்களை அனுபவித்தாலும் அது ஒழிவை அடைவதில்லை.எந்த காலத்திலும் எப்பொழுதும் தீமை செய்யாமல் இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான். எப்பொழுது விருப்பு வெறுப்பு அற்று இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான்’.
மீண்டும் பிள்ளையிடம் இருந்து மூப்பினை வாங்கிக் கொள்கிறான்.
காமியார்த்தமாக சொன்னால் – பெரும்பாலான பிள்ளைகள் தந்தை சொல் பேச்சினை கேட்பதில்லை.
ஆத்மார்த்தமாக சொன்னால் – சுகம் அனுபவித்தல் முடிவில்லாதது. தன்னைத்தான் வெல்ல வேண்டும்.
சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் – ‘சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வரும்.
ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.
காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.
காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்
குரோதம்: கோபம்
லோபம்: பேராசை
மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.
மாத்ஸர்யம்: பொறாமை
மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.
‘செம்புல பெயல் நீர் போல்’ என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
1. ரஜினி முதன் முதலில் குடித்த சிகிரெட் – எங்களது புத்தகத்தில் மட்டும்.
2. இன்றைய நிலவரம் தங்கம் விலை வெள்ளி விலை பெட்ரோல் விலை டீசல் விலை கற்பழிப்புகள் கொலை – 9632871(சென்னை மட்டும். சிறுவர்கள் கணக்கில் சேர்க்கப் படவில்லை). நீக்கப் பட்ட அமைச்சர்கள் – 3 சேர்க்கப் பட்ட அமைச்சர்கள் – 51
3. பெட்ரோல் வரலாறு காணா விலை ஏற்றம் – 0.01 பைசா. பெட்ரோல் பங்குகளில் அடிதடி. 100 பேர் சாவு.
4. உலக அழகி கர்ப்பம். வியாபாரம் நஷ்டம் 1000 கோடி.(தற்போது 50 கோடி)
5. இங்கு வெளியாகி இருக்கும் கூப்பனை வெட்டி வந்து எங்களிடம் கொடுத்தால், ஒன்றுக்கு ஒன்று கார் ஃப்ரி(நீங்கள் விரும்பும் மாடல்).
‘எங்கு சென்றாய் என்னை தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’ என்கிறேன். தவிர்த்தல் உன்நிலை அன்றி எனதில்லை என்கிறாய். வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன. உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன
அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ *
எங்கிருந்தோ வருகிறது நெருப்பின் கங்குகள் ‘செட்டியார் கடைக்குப் போய் நோட்ல எழுதிட்டு சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.