மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை

சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.
 
சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.
ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.
சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.
சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.
அவையாவன (தருமை ஆதீனம் – சைவ சித்தாந்தப்படி)
  1. சோமாஸ்கந்தர்
  2. நடராஜர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்
  6. பிட்சாடனர்
  7. லிங்கோற்பவர்
  8. சுகாசனர்
  9. சக்திதரமூர்த்தி
  10. அர்த்தநாரீஸ்வரர்
  11. சக்ரவரதர்
  12. திரிமூர்த்தி
  13. ஹரிஹர்த்தர்
  14. தட்சிணாமூர்த்தி
  15. கங்காளர்
  16. காமாரி
  17. காலசம்ஹார மூர்த்தி
  18. சலந்தாரி
  19. திரிபுராரி
  20. சரபமூர்த்தி
  21. நீலகண்டர்
  22. திரிபாதர்
  23. ஏகபாதர்
  24. பைரவர்
  25. கங்காதர மூர்த்தி
ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.
‘அவன் அருளாளே அவன் தாள் வணங்கி’  என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்

  • சிவன் சுயம்பு மூர்த்திசதுர வடிவ பீடம்
  • மூலவர்தீண்டா திருமேனி
  • அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம்ஆதிசங்கரர் பிரதிஷ்டை
  • மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
  • விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
  • தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
  • தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்துதன் காதலியேஎன்று அழைத்த இடம்.
  • விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11இழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
  • மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
  • கஜபிருஷ்ட விமானம்
தலம்
திருப்பாசூர்,
பிற பெயர்கள்
தங்காதலிபுரம்
இறைவன்
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
இறைவி
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
தல விருட்சம்
மூங்கில்
தீர்த்தம்
சோம தீர்த்தம்மங்கள தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
 மார்கழி திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் – 631 203,  
+91- 98944 – 86890
பாடியவர்கள்
அப்பர்சுந்தரர்திருஞான சம்மந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து – 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   16 வது தலம்.
அம்பிகைதிருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
வாசீஸ்வரர்
 
தங்காதளி
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    2ம் திருமுறை 
பதிக எண்                    060
திருமுறை எண்               8
பாடல்
தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.


பொருள்
புகழ் குறையாத, தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை அவன் மனம் கூசுமாறு செய்து அவனுக்கு வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மைப் பற்றி பேசி, பிதற்றும் அடியவர்களுக்கு அருள் தருபவர். அது மூங்கில் மரங்களும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்.
கருத்து
·         தவறு செய்தாலும் அவற்றை விலக்கி அருள் செய்பவர் என்பது இராவணனுக்கு அருளிய நிகழ்வு உணர்த்தும்.
·         குன்றா – குறையாத
·         தம்மைப்பற்றி பேசுதல் என்பது இழிவானது. அது அதிகமாகும் போது பிதற்றல் ஆகிறது. அதாவது பொருள் அற்றதாகிறது. அவர்களுக்கும் அருள்பவர் சிவன்.
·         பாசித்தடம் – நீர்ப்பாசியை வைத்து நீர் நிறைந்த குளங்களை உடைய என்று பல விளக்கங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பாசு என்பது மூங்கிலைக் குறிப்பதால் மூங்கில் காடுகளை உடைய என்று இப்பாடலில் என் பொருளாக விளக்கப்பட்டிருக்கிறது.
 
பாடல்
 
பாடியவர்                     அப்பர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    083
திருமுறை எண்               1
விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.


பொருள்
பாசூரில் உறையும் இறைவன் விண்ணாகவும், நிலமாகவும், மேகமாகவும், கடல் சூழ் உலகில் உள்ள பூமியில் உள்ளவர்கள் விரும்பும் எண்ணாகவும், எழுத்தாகவும், இவை அனைத்தும் இயல்பாகவும், ஏழ் உலகத்தில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவனாகவும், காட்சிக்கு உரிய கண்ணாகவும், அக் கண்ணுள் இருக்கும் மணியாகவும், அதனால் உணர்த்தப்படும் காட்சியாகவும், காதல் கொண்டு அடியார்கள்  பாடும்  பண் நிறைந்த  பாடலாகவும், இனிய அமுதமாகவும் இருக்கிறான். இப்படிப்பட இறைவனை கண்டு அடியேன் உய்ந்தேன்.
கருத்து
விசும்பு – மேகம்,
வேலை – கடல்
காட்சி, காண்பவர், காணப்படும் பொருள் என்ற சைவ சித்தாந்தக் கருத்து இப்பாடலோடு ஒப்பு நோக்கக் கூடியது.
புகைப்பட உதவி :  Internet
 
 
 
 

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Love-Anti-Love Pill

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
சார் எனக்கு 10 மாத்திர வேணும். ஏன்னா நான் அழகா இருக்கேன்னு(அட பிக்காளிப் பயலே..) பல பேர்  சொல்லி இருக்காங்க. நான் 1st year Aero – Z படிக்கிறேன். Areo – B ரெண்டு பொண்ணுங்க, Mechanical – AZ    ஒருபொண்ணு, 2nd year CSE AZ    ஒருபொண்ணு, 3 year ECE- C ல ரெண்டு பொண்ணுங்க, Final year IT ல ரெண்டு பொண்ணுங்க, Passed out CSE – H ல மூணு பொண்ணுங்க அழகா இருக்காங்க. அவங்களுக்கு குடுக்கணும்
2.
Pre KG Students.
1 : டேய் மச்சான் எனக்கு 5 anti love tablet சொல்லுடா.
2 : ஏண்டா என்னடா ஆச்சு.
1 : பின்ன என்னடா நயந்தாரா, சமந்தா, அஞ்சலி யாருமே திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறாங்க.
3.
Love/Anti-Love Pill கண்டுபிடித்தவனும் ஒரு நாள் காதலில் தோற்றிருப்பான்.
இப்படிக்கு Love/Anti-Love Pill வாங்க காசில்லாமல் தத்துவம் பேசுவோர் சங்கம்
4.
Lover : டேய் இன்னாடா பேஜார் பண்ர. ரொம்ப பேஸ்ன 8 anti love pill போட்டு உட்டு போய்டே இருப்பேன்.
5.

இந்த மிஷின் புது கண்டுபிடிப்பு சார். Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். அதே மாதிரி anti Love  சினிமா பாட்டு எழுத 5 tablet சார். ரொம்ப சிம்பிள் சார்.

புகைப்படம் : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்

பாதம் தொடும்
எல்லா அலைகளும்
இழுத்து வருகின்றன
பழைய நினைவுகளை.













புகைப்பட உதவி: Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

புனிதத்துவம்

சிறகுகள் அற்று 
வானில் பறக்கும் போதே
அறிய முடிகிறது
பூமியின் புனிதத்துவம்.











Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

மௌன நாதம்

வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
எனில் உன்னை அறிவது எப்படிஎன்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.


புகைப்பட உதவி :  R.s.s.K. Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – கூவம்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   மூலவர் – தீண்டா திருமேனி
·   இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் – திரு+வில்+கோலம்
·   சிவன் – காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
·   சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி – துவார பாலகர்கள்
·   கஜபிருஷ்ட விமானம்
·   இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
·   அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
·   கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
·   பைரவர் – நாய் வாகனம் இல்லாமல் காட்சி 
 
தலம்
கூவம்
பிற பெயர்கள்
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
இறைவன்
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
இறைவி
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
தல விருட்சம்
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
தீர்த்தம்
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
விழாக்கள்
·         சித்திரைபிரம்மோற்ஸவம்
·         ஆடிபூ பாவாடை திருவிழா
·         சிவராத்திரி
·         ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
பாடியவர்கள்
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
நிர்வாகம்
திரு ராஜேந்திரன் – 93818-65515
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   14 வது தலம்.
திரிபுராந்தகர்
 
 
 
திரிபுராந்த நாயகி
 

(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               5
பாடல்
 
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே 


பொருள்
இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
* * * * * * * * * * * * * * * * * * * *
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               9
பாடல்
 
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.
கருத்து
திருதரு – வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று – திரிபுர தகனம்
சேவகன் – சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு – வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)

புகைப்பட உதவி : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

என்றைக்குமான குளம்

குளத்தின் அழகு
தொடங்குகின்றது
அதன் அலை அடங்குதலில்.








புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

2038 – DNA

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
DNA library

உங்க library-ல  எவ்வளவு samples இருக்கு
20000
அடச்சே, என்னவோ 1000000 இருக்குற மாதிரி பேசறயே.

* * * *  
* * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * 

You really can change your DNA
மச்சான் கவலப் படாத இதெல்லாம் ஒரு பொண்ணா, விடு. என் ஃப்ரண்டு ஒரு டாக்டர், அவன்ட போவோம். ஒரே ஒரு DNA change தான். அப்புறம் அந்த பொண்ண மறந்துடலாம்.

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
DNA doesn’t lie
டேய் ஏண்டா, டென்சனா இருக்கே,
என் பொண்டாட்டி ஊருக்கு போய்டான்னு சந்தோஷமா இருந்தேன். அவ வந்த உடனே DNA டெஸ்ட் பண்ணுணுமாம். நான் சந்தோஷமா இருந்து தெரிஞ்சுடுமா?

 * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
மச்சான், நீ உண்மையான டாக்டர் தானே?
அதுல உனக்கு என்னடா சந்தேகம்.
நீ சொன்னேன் தானே அந்த 23க்கும் 24க்கும் இடையில இருக்கிறDNA- மாத்தி வச்சேன். அதுக்கு அப்புறம் கோவப்பட மாட்டேன்னு சொன்ன. ஆன அப்படி நடக்லயே.
எதுக்கும் எண்கணித மேதைக்கிட ஒரு வார்த்தை கேட்டுடுவோமா?

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *

யோவ், சொன்னா கேளுயா, நீ வேல இல்லாதவன். உனக்கு 20 வயது வேற ஆயிடுத்து.  உனக்கு எப்படி DNA insurance பண்ணமுடியும்.

Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

குப்பாச வாழ்க்கை

அவசர அவசரமாக பொத்தேரி புகை வண்டி நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பயணச் சீட்டுப் பெற்றேன். அடுத்த வண்டி 12.36 என்று எழுதி இருந்தது. கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
12.53. அப்பாடா புகைவண்டி சீக்கிரம் வந்துவிடும்  என்று அவசர அவசரமாக ஒடினேன்.
1.23க்கு புகைவண்டி வந்தது.
ஒரு நிகழ்வினை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பதிவு செய்ய எண்ணம் உண்டானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பயணம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
குழந்தைகள்பெரும்பாலும் பெரியவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயத்துடன் பயணிக்கிறார்கள்.
கல்லூரிமாணவர்கள்அவர்கள்உலகத்தில்அவர்கள்
வயதானவர்கள்கவலைகளோடுபயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலானவர்கள் இரண்டு  mobile  வைத்திருக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லூரிவயதுக்காரர்கள்  பெரும்பாலும் Temple run  விளையாடுகிறார்கள் அல்லது FB பார்க்கிறார்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வயது உடையவர்கள் ‘நீ என்ன அப்பா டக்கரா’ வகையரா பாட்டுக்களைக் கேட்கிறார்கள். புகைவண்டி இரைச்சலை தாண்டி பாட்டு வெளியே கேட்கிறது.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்னைக்கு புதன் கிழகை வேற பார்ட்டி இல்ல. 12.5 லட்சத்துக்கு கேக்கிறான். திங்க கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.பார்ட்டிய முடிச்சிடு.எனது பக்கத்து இருக்கைக் காரர். (நேரே போய் சொல்லி வந்திருக்கலாம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
திருநங்கைகளின் கைத்தட்டல் ஓசை ஒரே விதமாக இருக்கிறது. பணம் கொடுப்பவர்களை மனமாற வாழ்த்துக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலான பொருள் ஏற்பவர்கள்(பிச்சைக்காரகள் என்று அழைக்க மனம் விழையவில்லை) பாத்திரம் ஒற்றை நாணயம் மட்டும் கொண்டிருக்கிறது. சிலர் பாடி பொருள் கேட்கிறார்கள். சிலர் ஏதுவும் பேசாமல் கேட்கிறார்கள். அவர்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை. அதுவே மிகப் பெரிய வலி உண்டாக்குகிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்மணிகளே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். மாதம் Rs.30000 என்ற விளம்பரம் பெரும்பாலான இடங்களில் தென்படுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மிக அதிகமாக கசங்கிய ஆடைகளை உடையவர்கள் நுழைவு வாயில் அருகிலே அமர்ந்து விடுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பூர்விகா மொபைல் விளம்பரத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவை சிலர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்கள். சிலர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டு பேர் இருக்கையில் மற்றும் ஒருவர் நகர்ந்து கொள்ளச் சொல்லி இடம் கேட்டால் தி. நகரில் இருக்கும் பத்து க்ரௌண்ட் இடம் கேட்டது போல் முறைக்கிறார்கள்.
* * * * *
சில குழுக்கள் புகைவண்டியில் கதவருகே நின்று selfie எடுத்துக் கொண்டிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான் அந்த மஞ்ச கலர் மைனாவ பார்தா த்ரிஷா மாதிரி இல்ல.
போடா டேய், த்ரிஷா எல்லாம் பாட்டி அவள போய் கம்பேர் பண்ரியே. சொல்லுவது ஆசை அஜித்(ஹா ஹா)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தாய்மை உடையவர்கள் மிக அதிக கனமான இதயத்துடன் பயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனத்த மௌனத்துடனே பெரும்பாலான பயணம் தொடர்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலக்கை அடைந்த பின் வேறொரு பயணத்திகு தயாராகி விடுகிறார்கள்.
குப்பாசவாழ்க்கைநிலைஅற்றவாழ்வு
நன்றி : கந்தர் அலங்காரம்
புகைப்படஉதவி : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

கசியும் நினைவுகள்

மழை நீரில் கரைகிறதோ
இல்லையோ நினைவுகள்;
வலி கொண்ட தனிமையில் மட்டும்.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சொற்கள் அற்ற இரவு

விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
நான் உன்னுடன் பேசப் போவதில்லை
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில்  கைகளால்
எதையோ தேடுகிறாய்.
என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.

புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்

Loading

சமூக ஊடகங்கள்

உள் ஒலி

காகிதத்தில் வண்ணத்துப் பூச்சி
தாவும் குழந்தை
புன்னகைக்கும் இறை.












புகைப்பட உதவி:  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஜகத்பதி

நேற்று காலை
நகரின் பிரதான இடம் அது. தொகுப்பு வீடுகளும் தனி வீடுகளும் அமைந்திருக்கும் பகுதி.
பிளாட்பாரம் வழியாக பயணம்
பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.
மனுஷனா இல்ல மாடா இவனுக, இப்படி இருந்தா எப்படி  நடக்கறவன் நடப்பான்‘.
நேற்று மாலை
அந்தி சாயும் பொழுதுவாகனத்தில் பயணம்
கண் அற்றவன் ஒருவன் குச்சியை வைத்து நடந்து கொண்டிருந்தான்.
சார், சார்பார்த்து போங்க, இடிச்சிக்காதிங்க
ரொம்ப நன்றி சார்
உங்க பேரு என்னாங்க?
ஜகத்பதி
அது என்னாங்க அப்படி ஒரு பேரு
வடக்குத்தி சாமிங்க. நான் காசி போயிருந்தப்ப அங்க இருந்தவங்க எல்லாம் சொன்னாங்க. அதாலெ எம் பேர அப்படி மாத்திக்கிட்டேன். அதாவது உலகத்திற்கு அதிபதியாம்.
உட்காருங்க சார், நீங்க எங்க போவணும்ணு சொல்லுங்க இறக்கி விடறேன்‘,
தனக்கான நாளின் முடிவில் ஜகத்பதி.அப்போது மணி மாலை 6.30
எங்கியாவது இறக்கி விடுங்க சார், நான் தூங்கனும்‘, ஜகத்பதி
எத்தனை நாளா இந்த பென்சில் பேனா, ரேஷன் காடு விக்கிறீங்க‘,
எனக்கு கண்ணு தெரியாம போனதில் இருந்து‘, ஜகத்பதி
என்ன ஆச்சு உங்களுக்கு‘, அவன்
உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட போனேன். அவரு ஊசி போட்டார். அப்புறமா கொஞ்ச நால்ல ருந்து கண்ணு தெரியல‘, ஜகத்பதி
உங்களுக்கு சொந்த ஊர் எது‘,
குன்னூர் பக்கங்க‘, ஜகத்பதி
இங்க எப்படி வந்தீங்க‘,
ரயில்ல தான். நான் எம். இங்கிலிஷ் லிட்ரச்சர் படிச்சிருக்கிறேங்க‘, ஜகத்பதி. வார்த்தைகளில் நிதானமான கத்தி சொருகல்.
ஏன் நீங்க வேலைக்கு போகலையா‘, அவன்
சர்டிபிகேட் எல்லாம் பஸ்ல தொலைஞ்சு போச்சுங்க‘, ஜகத்பதி. கத்தி இன்னும் எடுக்கப்படாமல் ரத்தம்.
சாப்பிடீங்களா
டீயும் பன்னும் சாப்டேன்‘ – ஜகத்பதி.
சார் ராத்திரி சாப்பாடு பத்தி கேட்டேன்
அதெல்லாம் சாப்டா ராத்திரி வயத்தை கலக்கும் சார்‘- ஜகத்பதி. மெல்லிய இளம் சூடான மைசூர் பாகினை தட்டினில் கொட்டி, கத்தியால் நறுவிசாக நறுக்கப்பட்டதைப் போல் வார்த்தைகள்.
காலையும் மதியமும்?’
ஒரு நாளைக்கு 80ரூ வருமானம் வரும் சார். காலைக் கடனுக்கு 5ரூ சார். குளியலும் காலைக்கடனும் அப்படீன்னா 10ரூ சார். அதுல எப்படி எல்லா வேளையும் சாப்பிட முடியும்‘  – ஜகத்பதி. வார்த்தைகளில் துப்பாக்கி சூடு குறிபார்த்து.
இங்க எறங்கிங்க
ரொம்ப நன்றி சார்‘, ஜகத்பதி
இன்று காலை.
ஜகத்பதியை இறக்கி விட்ட இடத்தின் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.

புகைப்பட உதவி :  R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

ஜன்னல் பிடித்த படி

பெரும் காற்றும் உடனான மழையும்
எழுதிச் செல்கிறது
சில நீர் வடிவங்களையும்
பல நினைவுகளையும்.










புகைப்பட உதவி :  R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

படைப்புகளின் வழியே பயணம்

நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த தீபக்கிற்கு நன்றி.

எனக்கான பயணம் பல மனிதர்களால் பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே நிஜம்.

எனது 8ம் வகுப்பு என்று நினைவுபாரதி பற்றிய கட்டுரையில்என்று புதுக்கவிதை பாடி இருப்பார் என்று எழுதி இருந்தேன். எனது ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

அந்த கால கட்டங்களில் பட்டினத்தார் பாடல்களை எனது தாத்தா கற்று தந்து இருந்தார்கள்.

எனது 10ம் வகுப்பில் பாடம் கற்றுத் தந்த திரு. ரங்க ராஜன் அவர்கள் ஒருமுறை பிரபந்தம் ஓதினார்கள். (பச்சைமா மலை போல் மேனி..)

எனது 11 மற்றும 12 வகுப்புகளில் கம்பன் கவி இசைச் செல்வர் புலவர் திரு இராம பத்திரன் அவர்கள் தமிழ் குறித்து மிக அழகாக விளக்கங்களையும், வழிவங்களையும் கற்றுத் தந்தார்கள்.

எனது கல்லூரிக் காலம் என்னை மிகவும் செதுக்கியது.
மதிய இடைவேளைக்குப் பிறகு, கரும்பலகையில் நிச்சயமாக ஒரு கவிதை இடம் பெற்றிருக்கும். அப்போது எழுதப்பட்டவை கவிதை அல்ல என்றும் ஒரு கவிதைக்கான கட்டுமான அமைப்புகள் இல்லை என்றும் இப்போது தோன்றுகிறது.

ஒரு முறை திரு. வீரமணி அவர்கள் எங்கள் கல்லூரிஆண்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். அப்போது கல்லூரி புத்தகத்தில் எனது கவிதை இடம் பெற்றிருந்தது. (தன் எதிர் காலம் கணிக்கத் தெரியா ஜோதிடன் மற்றவர்களுக்காக மரத்தடியில்). அவர்கள் அக் கவிதையினை மிகவும் பாராட்டினார்கள்.

தோழிஉன்னுடைய கவிதைகளில் நிறைய பிழைகள் உள்ளன. அதுமட்டும் அல்ல அதில் செறிவு இல்லை. பக்தி இலக்கியம் படித்துப்பார். புரியும். (இது இன்று வரை தொடர்கிறது)

சுமார் 10 வருட காலம் படைப்பு என்று ஒருவரி கூட எழுதாமல், படித்தல் மட்டும் தொடந்தது
உத்தேச வாசிப்புகள்
அசோகமித்திரன்,இந்திரா பார்த்தசாரதி,எஸ். வைத்தீஸ்வரன் எஸ்.ராமகிருஷ்ணன்((பெரும்பாலான படைப்புகள்)) .நா.சு,கரிச்சான் குஞ்சு, கலாப்ரியா,கல்யாண்ஜி, கி ராஜநாராயணன், கு. அழகிரிசாமி கு..ரா, சா.கந்தசாமி, சி.சு. செல்லப்பா சுஜாதா சுந்தர ராமசாமி,ஜெயகாந்தன்,ஞானக்கூத்தன்,தி. ஜானகிராமன்,தேவதச்சன்,.பிச்சமூர்த்தி, நகுலன்,பிரபஞ்சன் பிரமிள்,புதுமைப்பித்தன்,மகாகவி பாரதியார் மனுஷ்யபுத்திரன்,மாலன்,ராஜ மார்த்தாண்டன்,,லா.. ராமாமிருதம்((பெரும்பாலான படைப்புகள்))வண்ணதாசன் வண்ணநிலவன் வல்லிக்கண்ணன் விக்ரமாதித்யன் நம்பி ,வெங்கட் சாமினாதன், பாலகுமாரன்((பெரும்பாலான படைப்புகள்)), இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் பலர்
மனைவி : உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?
சுந்தர்: சிறிதளவு எழுதுவேன்.
மனைவி : உங்கள் கவிதைகளை தாருங்கள், நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறேன்.
எனது தோழன் மற்றும் உறவினர் சரவணன் : அண்ணே, நீங்க கவிதை எல்லாம் நல்லா எழுதுறீங்க, இதை ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போடலாம் அண்ணே. வேணும்ணா, புகைப் படமும் சேத்துக்குங்க.

எழுத ஆரம்பித்த பின் பார்வையாளர்கள் சுமார் 3000. CBCக்கு பின் சுமார் 15000
இங்கு (CBC) பலருடைய எழுத்துக்களைக்(தமிழ் மட்டும்) கண்டு பிரமித்து போயிருக்கிறேன். பிரசன்னா, மதி, ரவி PS , முத்து, கோபால கிருஷ்ணன், கணேஷ், தீபாஐயர், காயு வெங்கட்வெகு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் எனது குருநாதருக்கு மிகவும் கடமைப்பட்டவன்


எனக்கான எல்லாப் படைப்புகளும் இன்னும் நிறைய கற்க வேண்டும் என்ற உந்துதலையே ஏற்படுத்துகின்றன. அதனால்தான் படைப்புகளின் வழியே பயணம் தொடர்கிறது.

புகைப்பட உதவி : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

நிறைவு

ஒவ்வொரு பளபளப்பிற்கும்
பின்னும் இருக்கின்றன
பல பசி நிறைந்த பட்டினிகள்


Click by : Harish Kumar

Loading

சமூக ஊடகங்கள்

முன் குறிப்புகள்

மகள் விரும்பும்
காகித மலர்களில்
தெரிகிறது
வாழ்வின் வாசனைகள்.









புகைப்பட உதவி :  Swathika Senthil

Loading

சமூக ஊடகங்கள்

பூத்தல் – நினைவுகளுக்கு மட்டும்

என்ன செய்து கொண்டிருக்கின்றன
நினைவுகள்
ஒவ்வொரு வினாடியும்
தன்னை இழத்தல் தவிர.











புகைப்பட உதவி : Karthik Pasupathi


Loading

சமூக ஊடகங்கள்

அபயாம்பிகை சதகம்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு  கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.

ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.

ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.

ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.

அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.

இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.

கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.


பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே

பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.

பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.

உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!