நகர மறுக்கும் நினைவுகள் – 3 ஆச்சார்ய தேவோ பவ:

பள்ளி நாட்களைப் பற்றிய நினைவு எப்போதும் விலகுவதில்லை.
அப்போது எலிமன்டரி(ஆமாம் தானே) ஸ்கூலில் இருந்து பெரிய( higher secondary) ஸ்கூல் வந்த புதிது.
மீனாட்சி டீச்சர் எங்கள் கிளாஸ் மிஸ்
.
நான் நடந்து போகக் கூடாது என்பதற்காக என் அப்பா சைக்கிள் ரிக்க்ஷா வில் அனுப்புவார்கள். நான் திருவிழந்துதூர் மேட்டுத் தெரு அவர்கள் பெருமாள் கோவில் மேல வீதி.
அவர்கள் எப்போதுமே மிக அழகாக உடை உடுத்துவார்கள். (அது அம்பாளுகே உரித்தானது என்று இப்போது தான் தெரிகிறது. பாடம் நடத்துவே ஒரு கம்பீரம். சொற்கள் காத்திருந்து அப்படியா வரும்..  எத்தனை குடம் தேன் அபிஷேகமோ)
டீச்சர் : இன்னைக்கு தமிழ் பாடம். வாக்கியத்தில் அமைத்து எழுதுவது எப்ப்டீன்னு கத்துத் தரேன்.
கூட்டம் : …..(வேற யாரு நாங்க தான்)
டீச்சர் : இப்படித்தான் எழுதனும், புரிஞ்சுதோன்னோ. இப்ப எல்லாரும்குறிக்கோள்என்பது குறித்து வாக்கியத்தில் எழுதுங்கள்.
நான் : ‘ஒழுக்கமே உயிர்என்பது நம் பள்ளியின் குறிக்கோள்.
டீச்சர் :  ரொம்ப நன்னா இருக்குடா, எல்லாரும் இவனை மாதிரி எழுதுங்க பாக்கலாம். (முதல் பாராட்டு.. )
விதி விளையாட ஆரம்பித்தது.
ரிக்க்ஷாகாரர் : இன்னைக்கு லேட், அதால டீச்சர் வீட்டுக்கு நான் வந்தேன்னு சொல்றேன். நீயும் அப்படியே சொல்லு என்னா?
நான் : சரிங்க.
இது நடந்து ஒரிரு நாள் கழித்து டீச்சர் அழைதார்கள். (பச்சை நிறப்புடவை.. மறுபடியும் அம்பாள்) குலை நடுங்க ஆரம்பித்தது.
டீச்சர் : ஏன்டா, உன்னைய நல்ல பையன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டையே.
நான்
டீச்சர் : இதுக்கு தண்டனை உண்டு தெரியுமா. இனிமே நீ எங்கிட்ட பேசக் கூடாது. (உலகம் தலையில் விழுதல் இது தானா). பசங்களா யாரும் இவனோட பேசாதீங்க. இனிமே என் சேர்ருக்கு கீழ தான் நீ உக்காரணும்.
நான் :  டீச்சர், டீச்சர் இனிமே இப்படி செய்யல டீச்சர், பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க
டீச்சர்.
டீச்சர் : (தெய்வத்தின் கண்களில் ஒளிக் கீற்று), தப்பே பண்ணக் கூடாது, தெரியாம செஞ்சிருந்தா தப்ப ஒத்துண்டு இனிமே நடக்காம சரி பண்ணிக்கணும்.
வெகு நீண்ட வருடங்களுக்குப் பின் வீட்டை அடையாளம் கண்டு அவர்களை சந்திதேன்.
டீச்சர் :  நீங்க யாருன்னு தெரியலையே
நான் : நீங்கங்கறத விட்டுடுங்க. நான் உங்க பழைய மாணவன். (பழைய நினைவுகள்.. பரிமாற்றங்கள்..)
டீச்சர் : இருடா காப்பி போட்டு எடுத்துண்டு வரேன், நானே மிஷின் வச்சிருக்கேன். (காபியாஅது தேவாமிருதம்னா)
நான் : டீச்சர் நான் நம்ஸ்காரம் பண்ணனும்.
டீச்சர் : ஏன்னா சித்த இங்க வாங்கோ(அம்பாளுக்கு உரியவர் வேறு எப்படி இருக்க முடியும்). இவன் என் கிட்ட படிச்சான். நம்ஸ்காரம் பண்ணனுமாம். நன்னா இருடா. நல்லா வருவடா.
விதைகள் விருட்சங்கள் ஆகும். அந்த அடிப்படை விதைகள் அவர்களால் விதைக்கப்பட்டவை.
அனைத்தும் ஒன்றில் தோன்றி ஒன்றில் ஒடுங்குகின்றன. ‘ஆச்சார்ய தேவோ பவ:’
 
Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 6

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் காட்சி குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்





1.
விளக்கம்
கிரௌஞ்சமலையை பிளந்தவன்
அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவன்
கடல் வற்றச் செய்தவன்
ஐந்து பூதங்களையும் நீக்கச் செய்து
உரை அற்று உணர்வு அற்றுசொற்கள் அற்று, உணர உணர்வுகள் அற்று
உடலற்று உயிரற்றுஉடல் நீக்கி, உயிர் அற்று
உபாயம் அற்று
கரையற்று
இருளற்றுநீக்கமற நிறைந்திருக்கும் ஒளி
எனதற்றுமும்மலத்தில் முக்கியமானதான கர்வத்தால் உண்டாகும்தான்என்னும் அகங்காரம்.
பாடல்
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61
பொருள்
சமாதி நிலையின் காட்சிகளும் அதற்கு முருகன் எவ்வாறு உதவினான் என்பதும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
கருத்து
கிரௌஞ்சமலையை பிளந்தவனும், அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவனும், கடல் வற்றச் செய்தவனுமான முருகன் எனக்கு போதனை செய்தருளினான். இதனால் பஞ்ச பூதங்களில் செய்கைகள்(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்ஒசை) நீங்கப் பெற்றன.அஃதாவது புறக்கருவிகள் செயல்கள் நீங்கப் பெற்றன. புறக்கருவிகளில் செயல்பாடுகள் நீங்கும் போது உணர்வு நீங்கப் பெற்றும், உடல் நீங்கப் பெற்றும், முக்தி என்கிற நிலையும் அழிந்து, கரைகாணமுடியாதும், மிக ஓளி பொருந்திய அக்காட்சியை அவன் எனக்கு அருளினான்.
2
விளக்கம்
துருத்திகாற்றை உட்செலுத்த பயன்படும் கருவி
.
பாடல்
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71
பொருள்
கடினமான யோக மார்கங்களால் அடையப் படும் முக்தி நிலையையும், அதற்கு மாற்றாக எளிதான வழியில் அடையும் எளிய வழியும் இப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
கருத்து
துருத்தி என்ற கருவி போன்று காற்றை உட் செலுத்தி, கும்பகம் செய்து(காற்றை உள்ளே நிறுத்துதல்பூரக கும்பம் மற்றும் ரேசக கும்பம்) உட் செல்லும் பிராண வாயுவை முறித்து, அதை உணவாக கொண்டு முக்தி அடைதலை எதற்காக செய்ய வேண்டும். ஆறு திரு முகங்களை உடைய குருநாதன் சொன்ன சொல்லின் உட் கருத்தை மனதில் பதிய வைப்பவர்கள் முக்தி அடைவார்கள்.

இத்துடல் முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் பகுதிகள் நிறைவு பெருகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 2 – செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்

 
நடிகை ஷோபா குறித்து இப்பதிவு. ராஜா சார், ஏசுதாஸ் பற்றி குறிப்பிட இனி எதுவும் இல்லை.
 
என் பதினென் பிரயாணங்களுக்கு முன்பே இப்பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் காரணங்கள் அற்று. என் தமிழ் மனப்பாடல் வரிகளை விட இப்பாடலை அதிகம் படித்திருக்கிறேன்.
அம்மா: என் பையன் நல்லா பாடுவான்.
விருந்தினர் : எங்க பாடு.
நான் : அப்பவே அழகிய காக்கா குரல்(இன்று வரை மாறவில்லை.) செந்தாழம் பூவில் பாடல் தொடரும்.
மெதுவாக வாகனத்தில் பயணம் தொடர ஆரம்பிக்கிறது. தலைவனும் தலைவியும் பயணம் செய்கிறார்கள். கூடவே இரு தோழிகள்.
நகரத்துவங்குகையில் ஒரு மருட்சி தெரிகிறது தலைவி கண்களில்( அட்டகாசம்)
தலைவன் இயற்கையை வர்ணித்து பாடத் துவங்குகிறான். தலைவியிடம் மீண்டும் ஒரு  புன்னகை.
இயற்கையையும் பெண்ணையும் சேர்த்து வர்ணிக்க துவங்குகிறான். வளைவான பாதையில் பயணம் தொடர்கிறது.
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளித்தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
தலைவி வானத்தை வேடிக்கைப் பார்த்து வருகிறாள். ஆனாலும் அச்சம் தீரவில்லை. பயணம் தொடக்கிறது.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
தலைவிக்கு கொஞ்சம் அச்சம் விலகுகிறது, மெதுவாக புன்னைக்க துவங்குகிறாள். தோழிகளுக்குள் மந்தஹாசப் புன்னகை.
பூக்கள் பூத்திருக்கின்றன. மெதுவாக அவ்வழிகளில் நடக்கத்துவங்குகிறாள். இசையின் பரிணாமங்கள் மாறுகின்றன. வெள்ளைப் புடவையில் அடிக்காதப் பூப்போட்ட டிசைன். (இதற்கு எப்படி இத்தனை அழகு).
காற்று அடிக்கத் துவங்குகிறது. கையில் இருக்கும் பூக் கொத்துகளும், முடிக்கற்றைகளும் பறக்கத் துவங்குகின்றன.
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
நீர் தடாகத்திற்கு அருகில் தலைவி. மெதுவாய் நதி நகர்ந்து செல்கிறது.
ஒற்றை மூக்குத்தி, காதுகளில் கூண்டு வடிவ தோடுகள்.
நிகழ்வுகள் முடிந்து நாயகன் தன் பணிகளைத் தொடர்கிறான்.
பாலு மகேந்திரா சார் வார்தைகளில் சொல்வது என்றால்பல கோடி வருடங்களுக்கு ஒரு தேவதை பிறக்கிறாள். அது ஷோபா
அதனால் தான் இன்னும் இப்பாடல் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்களின் ஜனனம்

படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ……
       ழி……
   ய……
த்…… 
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.










Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5




முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்

பாடல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73

பொருள்

ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

கருத்து

·         மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o    போதல், வருதல்
o    இரவு, பகல்
o    புறம், உள்

·         வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
·         வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
·         இது மனதினை லயப் படுத்துகிறது.  – ஜப கோடி  த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
·         எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது

2.

பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96

பொருள்

முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.

கருத்து

மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

நவகண்டம்

 எல்லைகள் அற்ற ஒரு தருணத்தில்
நிகழ்ந்தது உன்னுடனான சந்திப்பு.
அகிலின் நறுமணம் எங்கும்.
நிகழ்வுகளை நியாப்படுத்தி,
இழப்பதற்கு எதுவும் இல்லை
ஏன் என்று விளக்கம் கேட்கிறேன்..
எதுவும் அற்றவனுக்கு
வாய்க்கிறது ப்ரபஞ்சமும்
வாழ்வும் என்கிறாய்.
நிர்வாணம் கொள்கின்றன
நினைவுகளும் நிஜங்களும்.
நவகண்டம்தன்னைத்தான் பலியிட்டுக் கொள்ளுதல்
 
Click by : Bragadeesh

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 2

———————————————————————————————————
யாசிக்கையில், கைகளைவிட கண்கள் கனமாக இருக்கின்றன.
—————————————————————————————————
தனது பெண், முதல் முறை மூக்குத்தி அணியும் அழகை கண்டு ரசிக்கும் தாயின் கண்கள் சிறப்பானவை. இருவரையும் ரசிக்கும் தகப்பனின் கண்கள் அதை விட அழகானவை.
———————————————————————————————————

தனது குழந்தையை பள்ளிக்குள் அனுப்பிவிட்டு திரும்பும் தாயின் கண்ணில் யாரும் அறியாமல் இருக்கும் நீர்த்துளிகள் கனமானவையாக 

—————————————————————————————————

சித்திர குப்தன்இவன் சிறு தவறு செய்திருக்கிறான்.
ப்ரம்மாஇவன் தமிழனாக பிறக்கட்டும்.
சித்திர குப்தன்இவன் நிறைய தவறுகள் செய்திருக்கிறான். இவனை எப்படி தண்டிப்பது?
ப்ரம்மாஇவனை …. க்கு கணவணாக்கி விடு.
உயிர்அது மட்டும் வேண்டாம், வேற எந்த தண்டனையும் கொடுங்கள்.

செத்தான்டா சேகர்

————————————————————————————————————————————————————————————————————
டெம்போவில் தினக் கூலிக்கு நின்று செல்லும் மனிதர்கள், மற்றவர்களை விட சந்தோஷத்துடன்செல்கிறார்கள்
————————————————————————————————————————————————————————————————————

குளிரில் உறங்கும் குழந்தையை கண்டு ரசித்து, குளிர் படாமல் போர்வையால் மூடி செல்லும் தாயின் ரகசிய புன்னகையுடன் கண்கள் விசித்ரமானவை.
————————————————————————————————————————————————————————————————————
இன்று நான் உணவு சமைக்கவாஎன்று கணவன் கேட்கையில் மனைவியின் கண்களில் தெரிகிறது கோடி சூரியன்கள்.
————————————————————————————————————————————————————————————————————
தனது நீண்ட கருங் கூந்தலை, கைகளால் சரி செய்தபடி சூரியனை பார்க்கும் கன்னியின் கண்கள் சூரியனை விட பிரகாசிக்கின்றன.
————————————————————————————————————————————————————————————————————
மன்னிக்கப் பட்ட கண்களில் இருந்து யாரும் அறியாமல் வழியும் கண்ணீர் துளிகள் இதயத்தில் நிலைபெறுகின்றன.
————————————————————————————————————————————————————————————————————
மிகச் சிறிய குழந்தைகளின்கண்களில் ஒட்டி இருக்கிறது தெய்வங்களின் தன்மைகள்.
 
Click by : SL Kumar
 

Loading

சமூக ஊடகங்கள்

மண் கவுச்சி

நான் வாசனையாக இருக்கிறேனா
என்று கேட்டுவிட்டு மகள் சென்ற பின்னும்
குறையாமல் இருக்கிறது
வாசனைகளும் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

இச்சா மரணம் – பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.
பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.
ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.
தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.
 
சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.
பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.
இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.
‘பீஷ்ம பீஷ்ம’ என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ‘ யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்’ என்று பொருள்.
இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் – விரும்பிய பொழுது மரணம் .
சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.
இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.
ரதசப்தமி – பீஷ்மாஷ்டமி – 06-02-2014/07-02-014
Image : Internet 

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 1


புழுதி எழுப்பி செல்லும் வாகனமாக ஒவ்வொரு மழைத்துளியும்எழுப்பிச் செல்கிறது சில நினைவுகளை

—————————————————————

நாணயத்தின் இரு பக்கங்கள்
அவள்சனியன் புடிச்ச எலி இன்னைக்காவதுமாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன்புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள்கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
—————————————————————
பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்து விடுகிறது
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட
—————————————————————
ஆண்களின் மன வலிகளைவிட பெண்களின் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்குமோ?
.ம்மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
——————————————————————————————————————————————————————-
புதுத் தாலியை விட மின்னுகிறது புது மணப் பெண்ணின் கண்கள் 
——————————————————————————————————————————————————————-
ஊமைப் பெண் பேச வேண்டுமா, அவளுக்கு திருமணம் செய்து வைத்து பாருங்கள். மாற்றம் தெரியும்
——————————————————————————————————————————————————————-
நான் ரசித்த காதல் காட்சி

அன்றலர்ந்த தாமரை போல் முகம்.வட்ட வடிவமாய் தாழம்பூ குங்குமம். சிறியதாய் வைர மூக்குத்தி. மாம்பழ நிறப் புடவை. தலைவன் கைப்பிடிக்கிறாள் தலைவி. ‘மேடும் பள்ளமுமா இருக்கோன்னோ, பாத்து வாங்கோன்னா‘. (70+ பாட்டி + 80+தாத்தா). கரம் பற்றுகையில் தெரிகிறது காதல்

——————————————————————————————————————————————————————-
நிஜங்களில் வாழ்வதை விட கற்பனையில் வாழ்வது கடினமாக இருக்கிறது.
——————————————————————————————————————————————————————-
அடிமை : தலைவா, தலைவா மக்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்யறது.
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
——————————————————————————————————————————————————————-
தாய்மை கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தியை விட பிரகாசமாக மின்னுகின்றன
——————————————————————————————————————————————————————-

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்ச இயக்கம்

ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.

Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 4

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் கம்பீரம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
 
1.
பாடல்
 
விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. 70
பொருள்
 
எனது விழிக்கு துணையாக இருப்பது உனது மெல்லிய மலர் போன்ற பாதங்கள், உண்மைக்கு குறைவில்லா (தமிழ்) மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம், முன்பு செய்த பாவச் செயல்களை நீக்குவது அவனது பன்னிரு தோள்கள், நான் செல்லும் தனி இடத்திற்கு துணையாக வருபவை, வடிவேலும், செங்கோடன் மற்றும் மயில் ஆகியவையே.
 
கருத்து
 
பார்வைகள் அனைத்தும் அவனது திருவடி தேடி நிற்கும். பார்க்கும் மரங்கள் எல்லாம் நிந்தன்.. என்ற பாரதியில் பாடல் நினைவு கூறத்தக்கது.
உண்மை குன்றாத மொழிதமிழ் மொழி அதற்கு துணைமுருகா எனும் பெயர். முத்தமிழ் முருகன் தமிழுக்கானவன். அவனே முதல் தலை மகன்.
நாம் செய்து வந்த பழைய வினைகளை(சஞ்ஜீத கர்மாசைவ சித்தாந்த கருத்துப்படி) நீக்க துணையாக இருப்பது அவனது பன்னிரு தோள்கள்.
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமேஎன்கிற மாணிக்கவாசகரின் வரிகள் நினைவு கூறத்தக்கவை..
தனி வழி என்று இங்கு குறிப்பிடப் படுவதுஆன்மாக்கள் உய்யும் வழி. அவ்வாறு செல்லும் போது அதற்கு துணையாக இருப்பது அவனது வடிவேல், செங்கோடன் மற்றும் மயில் ஆகும்.
 
2. 
பாடல்
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே. 107
பொருள்
சூலம் பிடித்து, பாசக் கயிற்றை சுழற்றி நம் மீது வீச வரும் காலனைக் கண்டு ஒரு பொழுதும் அஞ்ச மாட்டேன். ஏனெனில் பாற்கடல் கடைந்த பொழுது உண்டான ஆலால விஷத்தை உண்டவருடைய குமாரராகிய  ஆறுமுக பெருமானின் வேல் மற்றும் அவரது காக்கும் திருக்கரங்கள் நமக்கு உண்மையான துணையாக இருக்கின்றன.
கருத்து
சூலம் பிடித்து எம பாசம் சுழற்றிபொதுவாக(வினை) முடிவு காலத்தில் காலன் நம்மை நெருங்குவான். அப்போது பொதுவாக எல்லோருக்கும்பயம் ஏற்படும். அது போன்ற முடிவு காலத்திலும் நான் அஞ்சமாட்டேன்.
துணை என்பது குறிப்பிட்ட காலங்களுக்கு அல்லது நீண்ட காலங்களுக்கு என வகைப்படலாம். ஆனால் அது உண்மையான துணையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட துணை அவனது வேல் மற்றும் திருக்கரங்கள்ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3

 
 
சிவனின் மைந்தன் / பெருமாளின் மருமகன் என்ற வகையில் இக்கட்டுரை.
 
 
 
 
 
 
 
 
 
 
1.
பாடல்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
விளக்கம்
மாகம் – ஆகாயம்
கூற்றன் – எமன்
த்ரிபுராந் தகன் – மூன்று புரங்களையும் அழித்தவன் – சிவன்
பொருள்
எமன் வருங்காலத்தில் மாசு அற்றவரும், நிலைத்த முக்தியை அளிப்பவரும் முப்புரங்களை அழித்தவரும், கொடைத் தன்மை உடையவரும் மூன்று கண்களை உடையவருமான சிவனை வலது பாகத்தில் கொண்ட மேலான கல்யாண குணங்களை உடைய பார்வதியின் புத்திரரே, ஆகாயம் தொடும் அளவு கொண்ட எமன் வரும் காலத்தில் தோகைகளை உடைய மயில் மீது வந்து நின்று அருள் புரிவீர்.


கருத்து
முப்புரம் அழித்தல் – மும்மல காரியம் (விளக்கம் – திருமந்திரம்)
முக்தி – ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று பலவகைப்பட்டாலும் அழியாத முக்தியை அருள்பவர்
சிவனை வலப்பக்கம் வைத்திருக்கும் – பார்வதியைக் குறிக்கும்.
கல்யாணி – கல்யாண் என்பதன் பெண் வடிவம்.
கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற,சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறப்பட்டிருக்கின்றன. மங்கலம் என்ற தன்மையில் ஆளப்படுகிறது. அஃதாவது, இப்படிப்பட்ட குணங்களை உடைய பரம கல்யாணியின் பாலகன்
தோகைப் புரவி – வெகு விரைவில் வந்து என்னை ஆதரிப்பாய் என்பதன் வெளிப்பாடு.
இப்பாடல் சோமாஸ்கந்த மூர்த்தத்தை நினைவு கூறும்.
2. 
பாடல்
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
விளக்கம்
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
பொருள்
காற்றை உண்டு கால்கள் அற்ற ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பள்ளி கொண்டிருக்கும் மாலோனில் மருமகனே, செந்நிறமுடைய வேலை உடையவரே, பால் போன்ற இனிமையான மொழிகள் பேசும் பெண்களுடன் கலந்து(சிற்றின்பத்தில் மூழ்கியவனாக) அதை விரும்புவனாக இருக்கிறேன். அதில் இருந்து விலகி முக்தி மார்கம் அடைய வழிகாட்டுவாயாக. ஆதலால் உன் மலர் பதத்தை தருவாயாக. (இறைவனின் பாதங்கள் முக்தியை தரும் என்பது துணிபு)
சீரடி சென்னி வைக்க – அபிராமி அந்தாதி
நாதன் தாள் வாழ்க – மணிவாசகப் பெருமான்
கருத்து
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
காலே மிக உண்டு – காற்றை ஏற்று, இது சித்தர்கள் வழி காற்றினை சுவாத்தலைக் குறிக்கிறது. இங்கு உள் இழுத்தலை மட்டுமே குறிக்கிறது. சுவாசித்தலில் அளவு குறையும் போது, வாழும் காலம் அதிகரிக்கும்.
ஆண்டிற்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல் எழுதிய திருமூலரது வாழ்வு இங்கு நினைவு கூறத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 1

டேய், சீக்கிரம் வாடா.
எதுக்குடா?
வாடக சைக்கிள் எடுக்கணும். கத்துக்கத்தான்.
யாரு கடையில, மீசக் காரங்க கடையிலயா?
ஆமாம்டா.
யாருடா பசங்களா நீங்க
கடைசி மெத்த வீட்டுப் பசங்க.
அவன் யாருடா?
டெய்லர் பையன்.
யாரு, யாருக்கு கத்துக் குடுக்கப் போறீங்க.
நான் அவனுக்கு சார்.
ஒரு மணி நேரத்துக்கு 60 காசு. ஒரு நிமிஷம் அதிகமானாலும் இன்னொரு 60 காசு குடுக்கணும். கண்களில் சிரிப்பு.
கரைக்டா கொடுத்துடுவோம் சார்.
லேடிஸ் வண்டியா, ஜென்ஸ் வண்டியா.
நீ என்னடா சொல்ற? – ஒருவன் மற்றொருவனிடம். குழப்பம் இருவருக்கும்.
ஜென்ஸ் வண்டின்னாத்தான் குரங்கு பெடல் போட்டு பார்ல ஏற முடியும், அதால ஜென்ஸ் வண்டி தாங்க.
சைக்கிள் கைகளில்.
வண்டியை தள்ளிகிட்டு நம்ம தெருவுக்கு போவோம்.
இந்த வழியில பஸ் நிறைய வரும்(மணிக்கு ஒரு டவுன் பஸ்). அதால ராஜா தெரு வழியா போய்டுவோம்.
முது தண்ட வளைக்காம தலைய நேர பாருடா
கொஞ்சம் தண்ணி குடிக்கலாமாடா.
எடுத்ததே ஒரு மணி நேரம். இதுல தண்ணி குடிச்சா நேரம் போய்டும்.
டேய், எடுக்கும் போது மணி பாத்தியா?
பாத்தேன். 4.46 டா.
டேய், கம்னாட்டி, அது அவரு கடை கடிகாரம், உங்க வீட்டு கடிகாரத்ல என்ன மணி. அத வச்சித்தான் ஒரு மணி நேரத்ல திருப்பி கொடுக்கணும்.
பாக்கலடா.
போடா பன்னி.
முகம் மற்றும் உடல் முழுவதும் வியர்வை இருவருக்கும்.
சரி வாடா, கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடுவோம்.
என்னடா பசங்களா, பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டீங்க.
இருவருக்கும் 100 வாட் பல்பு பிரகாசம்.
இன்னொரு ரவுண்ட் போய்ட்டு வரோம் சார்.
கரக்டா, பத்து நிமிஷம் தான். இல்லன்னா இன்னொரு ஒரு மணி நேரம் கணக்கு.
ஓகே சார்.
சரியாய் பதினோராவது நிமிடம் திருப்பிக் கொடுக்கும் போது கலவரம் இருவருக்கும்.
எவ்வளவு சார்.
60 பைசா.
நிம்மதிப் பெரு மூச்சு – இருவருக்கும்.
ஏம்பா, என் ப்ரெண்ட் ஒரு கியர் வைத்த சைக்கிள் வாங்கி இருக்கான். ஜஸ்ட் 5999 ஒன்லி தாம்பா, அதமாதிரி எனக்கும் ஒன்னு வாங்கிக் கொடுப்பா. என்னப்பா நாம்பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ முழிக்கிற. – மூன்றாவது படிக்கும் மகன்.
 
Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

சுழியம்

வெறுமையாய் இருக்கிறது
உண்டியல்
செய்பவன் வாழ்வும்
விற்பவன் வாழ்வும்

*சுழியம்-Zero



Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை

பொது – பழைய பொருள்களை மற்றும் தேவை அற்ற பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை

ஆன்மீகம் – பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை அல்ல. அது ஒரு உருவகம். தன்னில் இருக்கும் தேவை அற்ற நினைவுகளை, மன கசப்புகளை, கோபங்களை, வருத்தங்களை இன்னும் பிற விஷயங்களை நீக்கி ஒரு புதிய தொடக்கத்திற்கான தொடக்கம் காட்டும் பண்டிகை.

புகை இல்லா போகிக் கொண்டாடி ஒரு வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டுவோம்.

Click by: Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 2

கந்தர் அலங்காரம்

தன் நிலை குறித்து புலம்பல்

1.
விளக்கம்

தோலால் சுவர் வைத்து – சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி – அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி – அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி – கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு – அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் – அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் – முருகன்
அடித் தாளின்றி – பாதங்கள்

பாடல்
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44



பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.

கருத்து
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)

2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி  என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.

3. ஆறு  ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.

உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.

நாற்றுதல் – நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது

2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்  – வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் – வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை  – உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட – என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து – இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.

என்மனம் வேகின்றதே – இதனால் என் மனம் வேகின்றது.

பாடல்


கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98

பொருள்


(கதி – நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து  பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு  நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.

அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. ‘என் செயல் யாதொன்றும் இல்லை’ என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.

வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

Loading

சமூக ஊடகங்கள்

காதலுடன் காதல்…

எல்லா வீட்டிலும் ஒரு எலி எப்பொழுதும் மாட்டிவிடுகிறது – என் வீடு தவிர்த்து. (இன்னைக்கு ஒரு புது மெனு செய்திருக்கிறேன் ) 
——————————————————————————————-
கைகள் உணவினை தயார் படுத்திக் கொண்டிருக்கும்.
சாப்பாடு நல்லா இருக்கா??
???
வாய தொறந்து சொன்னாத்தான் சாப்பாடு செய்ய ஆசயா இருக்கும்.

??
சாப்பாடு நல்லா இருக்கு(மாறுதலுக்காக – வேறு வழி)
நம்ம வூட்ட தவிர எல்லா வீட்டு சாப்பாடும் நல்லா இருக்கும். அப்படி இருக்கு நாக்கு. இது பக்கத்து வீட்டு சாம்பார்.

பெண்களுக்கான உலகில் என்றைக்கும் ஆண்களுக்கு அனுமதி இல்லை.

——————————————————————————————-
நிகழ்வு 1 – அன்னம் ப்ராணனுக்கு சமம். அன்னமே உயிருக்கு ஆதாரம். (வேதம் – புத்தகம்)
நிகழ்வு 2 – 4 வாய் சாப்பாடுக்கு 40 ரூசி கேக்குதா
 
(சம்பவங்கள் யாவும் கற்பனையே )
——————————————————————————————————————————————————————-
மனைவி : உங்களுக்குன்னு ஒரு முடிவு வச்சிருங்க, யாருக்காகவும் எப்பவும் அத மாத்தாதீங்க.
மனைவி (வேறுவகை) : உங்களுக்குன்னு ஒரு முடிவு வச்சிருக்கீங்க, அத மாத்திக்கலன்னா என்னா வேல அது.

என்னலே நடக்குது.

——————————————————————————————————————————————————————-
மனைவி – எப்பவோ ஒரு நாளைக்கு சத்யவான் சாவித்ரி படம் போடரான் டிவில. நிம்மதியா படம் பாக்க விடுறீங்களா? 
——————————————————————————————————————————————————————-
ஒரு விஷயம் இருவிதமான நிகழ்வுகளில் (எதிர்மறையாய்)
மனைவி – ஏன் கத்ரிங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.
மனைவி – எது சொன்னாலும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்.

என்ன கொடும சார் இது? 

——————————————————————————————————————————————————————
Click by : Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

சஞ்சிதம்

அறுவடைக்குப் பின்னும்
தனித்து கிடக்கின்றன
பொம்மைகள்.

*சஞ்சிதம் – எஞ்சியது.


Click by : Harish Kumar

Loading

சமூக ஊடகங்கள்

நேசங்களை மாற்றிய தேசம்

சற்று நேரம் கழித்து அலுவலகத்தில்நுழைந்தேன்.
என்னாசார் லேட்?’
நண்பர்போன் பண்ணார், யாருக்காவது ஒரு சாப்பாடு வாங்கிகுடுக்கச் சொன்னார், அதான் கோயிலுக்கு எதித்தாப்பலஒரு அம்மா இருந்திச்சி. அதுகிட்டகொடுத்து வந்தேன். ஆனா என்ன வேடிக்கைன்னாஅது பிச்சகாரி மாதிரியே தெரியல, ஹின்டு படிக்குது
அந்த டாக்டர் அம்மாவா

எனக்குதலை சுற்றியது.
என்னங்கசொல்றீங்க
மேட்டர்தெரியாதா, அது ‘GH’Professor‘. இப்பவும் சீனியர் டாக்டர் எல்லாம்வந்து ‘consultation’னு வராங்க. பசங்கஎல்லாம் காச வாங்கி அதவிரட்டி விட்டாங்க, அட போங்கடான்னு அந்தஅம்மாவும் வெளில வந்திருச்சி . இப்பமழை பெய்யுதுன்னு பெசன்ட் நகர்bus depot படுத்துக்கிடக்குது.
காலம் கனக்கச் செய்யும் பொழுதுகளில் கண்களிலும் ஈரம்.
Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்