நவகண்டம்

 எல்லைகள் அற்ற ஒரு தருணத்தில்
நிகழ்ந்தது உன்னுடனான சந்திப்பு.
அகிலின் நறுமணம் எங்கும்.
நிகழ்வுகளை நியாப்படுத்தி,
இழப்பதற்கு எதுவும் இல்லை
ஏன் என்று விளக்கம் கேட்கிறேன்..
எதுவும் அற்றவனுக்கு
வாய்க்கிறது ப்ரபஞ்சமும்
வாழ்வும் என்கிறாய்.
நிர்வாணம் கொள்கின்றன
நினைவுகளும் நிஜங்களும்.
நவகண்டம்தன்னைத்தான் பலியிட்டுக் கொள்ளுதல்
 
Click by : Bragadeesh

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *