காற்றில் ஆடும் சருகுகள் – 1


புழுதி எழுப்பி செல்லும் வாகனமாக ஒவ்வொரு மழைத்துளியும்எழுப்பிச் செல்கிறது சில நினைவுகளை

—————————————————————

நாணயத்தின் இரு பக்கங்கள்
அவள்சனியன் புடிச்ச எலி இன்னைக்காவதுமாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன்புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள்கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
—————————————————————
பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்து விடுகிறது
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட
—————————————————————
ஆண்களின் மன வலிகளைவிட பெண்களின் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்குமோ?
.ம்மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
——————————————————————————————————————————————————————-
புதுத் தாலியை விட மின்னுகிறது புது மணப் பெண்ணின் கண்கள் 
——————————————————————————————————————————————————————-
ஊமைப் பெண் பேச வேண்டுமா, அவளுக்கு திருமணம் செய்து வைத்து பாருங்கள். மாற்றம் தெரியும்
——————————————————————————————————————————————————————-
நான் ரசித்த காதல் காட்சி

அன்றலர்ந்த தாமரை போல் முகம்.வட்ட வடிவமாய் தாழம்பூ குங்குமம். சிறியதாய் வைர மூக்குத்தி. மாம்பழ நிறப் புடவை. தலைவன் கைப்பிடிக்கிறாள் தலைவி. ‘மேடும் பள்ளமுமா இருக்கோன்னோ, பாத்து வாங்கோன்னா‘. (70+ பாட்டி + 80+தாத்தா). கரம் பற்றுகையில் தெரிகிறது காதல்

——————————————————————————————————————————————————————-
நிஜங்களில் வாழ்வதை விட கற்பனையில் வாழ்வது கடினமாக இருக்கிறது.
——————————————————————————————————————————————————————-
அடிமை : தலைவா, தலைவா மக்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்ன செய்யறது.
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
——————————————————————————————————————————————————————-
தாய்மை கொண்டிருக்கும் பெண்ணின் கண்கள் கன்னியாக்குமரி அம்மனின் மூக்குத்தியை விட பிரகாசமாக மின்னுகின்றன
——————————————————————————————————————————————————————-

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *