அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒற்கம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஒற்கம்

வார்த்தை : ஒற்கம்

பொருள்

  • மனத்தளர்ச்சி
  • வறுமை
  • குறைவு
  • அடக்கம்
  • பொறுமை.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

துக்கடா

பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும்.

நிலம், நீர், மரம் – பொயர்ப்பகாப்பதம்
நட, வா, உண் – வினைப்பகாப்பதம்
மற்று, ஏ, ஒ – இடைப்பகாப்பதம்
உறு, தவ, நனி – உரிப்பகாப்பதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வழக்கழிவு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வழக்கழிவு

வார்த்தை :  வழக்கழிவு

பொருள்

  • நியாயவிரோதம்
  • அடாதவழக்கு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்
   தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்
   சித்தம்வை யாத பேரும்,
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
   கையிற்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
   காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்யொன்று நிதிகோடி வரினும் *வழக்கழிவு*
   புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
   பொய்ம்மையுரை யாத பேரும்,
ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்
   அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
  அறப்பளீ சுரதே வனே!

அறப்பள்ளீஸ்வர சதகம்

கருத்து உரை

தினமும் மனதில் நினைத்த மாத்திரத்தில் (எப்பொழுதும்) அதை தரும் சதுரகிரியில் உறையும் அறப்பளீ தேவனே! (ஒருவர்) செய்த உதவியை எக்காலத்திலும் மறவாதவரும், ஒருவர் செய்த கெடுதியை அதனை பொருட்படுத்தாமல் உடனே மறந்தவர்களும், பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச் செலுத்தாதவர்களும், கையினாலே கண்டெடுத்த பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க் கொடுத்தவர்களும், உலகில் ஒருவர் செய்த அறம் கெட்டு அழிதல் இல்லாதவாறு காப்பாற்றுகின்றவரும், நிலையற்ற செல்வத்தைக் கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத நிலையுடையவரும், உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும் பொய் புகலாதவரும், இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள். (எனவே) ஐயனே! என அறப்பளீசுர தேவனுக்கு ஆக்கினும் அமையும்.

விளக்க உரை

  • பொய்யொன்று நிதி – செல்வம் நிலையற்றது (எனும் தன்மையால்)
  • அறப்பளீசுர சதகம் என்பது சிவபெருமான்மீது நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.
  • இந்நூலும் சதுரகிரி என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்ற அறப்பள்ளி ஈசுரன்மீது வாழ்த்தாகப் பாடி இறுதியடிகளில் இறைவன் பெயரை ஒரே மகுடமாக அமைத்து மேல் அடிகளிலெல்லாம் அறனும் மறனும் பண்பும் பழக்கவழக்க ஒழுக்க முறைகளும் பொதுவில் அமைத்துப் பாடப்பெற்றுள்ளது..
  • இது கொல்லிமலைச் சார்பிலுள்ள சதுரகிரியில் உள்ள திருக்கோயில். சதுரகிரிக்கே அறப்பள்ளியெனப் பெயருண்டென்றும் கூறுகின்றனர்.

 

துக்கடா

  • யாப்பு – புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
  • யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தண்டிகை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தண்டிகை

வார்த்தை :  தண்டிகை

பொருள்

  • சிவிகை
  • பல்லக்கு வகை
  • பெரியவீடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காசிபோய் வந்தாலும் என்ன? பெரிய
கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன?
வாசியைத் தெரிந்தாலும் என்ன? நாளும்
மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன?

கல்லுளிச் சித்தர்

கருத்து உரை

முக்தி அடைவதன் பொருட்டு காசிக்கே சென்று வந்தால் என்ன பயன்? மிகப் பெரியதாக் இருக்கக் கூடிய தங்கத்தினால் ஆன வாகனத்தில் சுற்றி வந்தாலும் என்ன பயன்? வாசி பற்றிய ரகசியங்களை தெரிந்தாலும் என்ன? ஊருக்கு நல்லது செய்து மகராசன் என்று பெயர் பெற்றாலும் என்ன?

விளக்க உரை

பிரம்மத்தின் வடிவத்தை நாடவேண்டும். செய்த கர்மங்களாகிய வினைகளை முற்றிலும் அறுக்க செய்யும் உள் ஒளியே பிரம்ம சொரூபம். பிரமத்தை அறிய மேற்கண்டவைகள் உதவாது என்று பட்டியல் இடுகிறார்.

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ய – தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஊத்தம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஊத்தம்

வார்த்தை : ஊத்தம்

பொருள்

  • வீக்கம்
  • காய்களைப் பழுக்க வைக்கப் புதைத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
   ஊத்தச் சடலமிது – ஞானம்மா
   உப்பிலாப் பொய்க்கூடு.

 

புண்ணாக்குச் சித்தர்

 

கருத்து உரை

இந்த உடலானது காற்றால் அடைக்கப்பட்டு வந்திருப்பது. மிகுந்த மலம் உடைய பாத்திரத்திற்கு நிகரானது. வீக்கம் (பருத்த) உடைய உடல் உடையது. ஞானத் தாயே (மனோன்மணித் தாயார்). எதற்கும் உதவாத போய்க் கூடு.

 

விளக்கம்

  • வேறு பெயர் – பிண்ணாக்கீசர்
  • பாம்பாட்டிச் சித்தரின் சீடர்.
  • இவருக்குப் பசி எடுத்தால் ‘கோபாலா’ என்று அழுவாராம். மற்றபடி மௌனம்தான்.
  • இவரது பாடல்கள் ஞானம்மா எனும் மனோன்மணித் தாயாரை முன்னிறுத்திப்பாடப்பட்டவை.

 

துக்கடா

வீ – மலர் , அழிவு, பறவை.
வே – வேம்பு, உளவு
வை – வைக்கவும், கூர்மை, ‘வை’ என்று ஏவுதல்.
வௌ – வவ்வுதல்
ள – தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு – நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று – எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அகனம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அகனம்

வார்த்தை :  அகனம்

பொருள்

  • வேங்கைமரம்
  • எடையற்று

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

 

பாடல்

வன குளிகை கொண்டு – அதனாலே
   ககன மார்க்கம் தனிலே அகனமாய் சென்று
தவமொருமா சித்தர்கள் வாழ்கின்ற
   சதுர கிரிக்குப் போய் குதூகளித்தேன்.

 

மச்சேந்திர நாதர் எனும் நொண்டிச் சித்தர்

 

கருத்து உரை

காடுகளில் இருக்கும் குளிகைகளைக் உட்கொண்டு அதனால் வான் மார்க்கமாக தனியாக எடையற்று சென்று, நித்தமும் தவம் உடைய சித்தர்கள் வாழும் சதுரகிரிக்குச் சென்று மகிழ்ந்து இருந்தேன்.

 

விளக்கம்

  • உதிரவேங்கை, உரோமவேங்கை போன்ற வேங்கை வகைகள் காலங்கிமுனிவர் வனத்தில் இருக்கிறது அதை குத்தி அதில் இருந்து பெறப்படும் பாலை எடுத்து முறைப்படி தங்கமாக்கி உட்கொள்ள காயசித்தி உண்டாகும்.
  • நொண்டிச் சித்தர் சக்தி உபாசகர். இவரின் உண்மைப் பெயர் /ஊர் / காலம் தெரியவில்லை.
  • கால் ஊனம் உற்றவர் என்பதால் காரணப் பெயராகவே நொண்டிச்  சித்தர் என்று அழைத்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறார். மனிதர்கள்  வினைக்கு உட்பட்டு ஆணவம், மாயை மற்றும் கண்மம் போன்றவற்றினால் சூழப்பட்டு தன் இயல்பில் குறைவுற்று இருப்பதாலும் அவர்களுக்கு வழிகாட்டுதல் பொருட்டு பாடல் எழுதியதால் நொண்டிச் சித்தர் என்றும் இருக்கலாம்.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ய – தமிழ் எழுத்து எண்பதின் வடிவம்
யா – ஒரு வகை மரம், இல்லை, ‘யாவை’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்
வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்
வா – வருக, ஏவல், ‘வா’ என்று அழைத்தல்.
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம், விசை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உள்ளுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உள்ளுதல்

வார்த்தை :  உள்ளுதல்

பொருள்

  • நினைதல்
  • ஆராய்தல்
  • நன்கு மதித்தல்
  • மீண்டும் நினைத்தல்
  • இடைவிடாது நினைத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு – சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.

கஞ்சமலைச் சித்தர்

கருத்து உரை

ஆராதிக்கப்படும் பரம்பொருளை நினைத்து இடைவிடாது நினை. மாயையால் சூழப்பட்ட பிரபஞ்ச மயக்கத்தினை தள்ளு. அரிதான மாறுபாடு இல்லா சிவன் நாமத்தை சொல்லு; சிவன் அடியவர்களுக்கு அன்பாக பணிவிடை செய்வாயாக.

 

விளக்கம்

உரிதாம் – ஆராதிக்க உரிய

பஞ்சாட்ரம், சூட்சம பஞ்சாட்ரம் போன்றவை மாயையால் சூழப்பட்ட பிரபஞ்சத்தால் எல்லோருக்கும் வாய்ப்பதிலை.  அது குரு முகமாய் வாய்க்கப் பெறின் நன்று.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

மீ – மேலே , உயர்ச்சி, உச்சி, மிகுதியானது.
மூ – மூப்பு, முதுமை, மூன்று.
மே – மேன்மை,மேல்
மை – கண்மை (கருமை), அஞ்சனம், இருள், மசி
மோ – மோதல், முகரதல் ,மொள்ளுதல்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பற்று

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பற்று

வார்த்தை: பற்று

பொருள்

  • விருப்பம்
  • விரும்பு
  • கைப்பற்று
  • வருவாய்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றில்அப்
பற்றை யறுப்பரென் றுந்தீபற
பாவிக்கில் வாராதென் றுந்தீபற.

திருநெறி 5 – திருவுந்தியார்

கருத்து உரை

புற விஷயங்களிலே இருக்கிற பற்றை அறுப்பதாகிய ஒப்பற்ற திருவருளை பற்றினால் அந்தத் திருவருளாகிய கர்த்தா பற்றைக் அறுத்துத் தானாக்கிவிடுவன்; இந்தத் தன்மை உடைய  பாவனையால் பற்று வாராது.

 

விளக்கம்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

எனும் திருக்குறள் யாண்டும் சிந்திக்கத் தக்கது.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

பே – நுரை, அழகு, அச்சம்
பை – கைப்பை, பசுமை.
போ – செல், ஏவல்
ம – சந்திரன், எமன்
மா – பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தகை

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தகை

 

வார்த்தை : தகை

பொருள்

  • அழகு
  • அன்பு
  • அருள்
  • கவசம்
  • குணம்
  • தடை
  • தகுதி
  • பொருத்தம்
  • ஒப்பு
  • மேம்பாடு
  • பெருமை
  • நன்மை
  • இயல்பு
  • நிகழ்ச்சி
  • கட்டுகை
  • மாலை
  • தளர்ச்சி
  • தாகம்
  • மூச்சிழைப்பு.

 

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது.

 

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

 

கருத்து உரை

எதிரில் இருப்பவர்களின் துன்ப நிலை அறிந்து அவர்களுக்கு தானம் அளிப்பவர்களின் பெருமை மிக இனிது. மானம் இழந்தப்பின்  உயிர் வாழாமை இனிது. பிறருடைய குறை/குற்றம் கண்டும் அவரின் குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

 

விளக்கம்

ஆண்மை – பெருமை

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ப – நூறு
பா – பாட்டு, கவிதை, பாடல்.
பி – அழகு.
பீ – கழிவு.
பூ – மலர்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தூடணம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தூடணம்

வார்த்தை : தூடணம்

பொருள்

  • நிந்தை
  • நிந்தைச்சொல்
  • கண்டனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தூட‌ண மாகச்சொல் லாதே – தேடுஞ்
சொத்தக்க ளிலொரு தூசும்நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்
திச்சைவை த்தாலெம லோகம் பொல்லாதே.

கடுவெளிச்சித்தர்

கருத்து உரை

எதையும் / யாரையும் / எப்பொழுதும் பழித்துச் சொல்லாதே. தேடும் தனத்தில் ஒரு தூசு கூட நில்லாது போய்விடும். மூன்றுவிதமான ஏடணைகள் எனப்படும் ஆசைகளாகிய மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை பொல்லாதவையாகும். சிவத்தின்மேல் ஆர்வம் கொண்டால் எமலோகம் போகாதிருக்கலாம்.

 

விளக்கம்

தூசு – மிகக் குறைந்த அளவு
ஏடணை – ஆசை

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

நை – நைதல்.,வருந்து
நொ – மென்மை.
நோ – துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நோ – வலி.
நௌ – மரக்கலம், கப்பல்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உதித்தல்

தமிழ் அன்னை

 

ஒவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உதித்தல்

 

வார்த்தை :  உதித்தல்

பொருள்

  • உதயமாதல்.
  • தோன்றுதல்
  • பிறத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

சித்தனாய் பிறப்பதுதான் ஆரேன்றாக்கால்
செகத்தில் கோடியில் ஒருவனுண்டு
உத்ததொரு விட்டகுறை என்பதென்ன
உதித்தகலை எந்நேரம் ஊணிப்பாரு
பெற்றபேர் எப்படித்தான் வந்ததானால்
பிராணன் அல்லோ பூரணத்திற் சேர்ந்தாலே
முத்தனாய் எடுத்த சடம் சித்தியாகும்
முன்னுமில்லை பின்னுமில்லை முறையைப்பாரே;

 

அகத்தியர் பூரண சூத்திரம்

 

கருத்து உரை

இந்த உலகில் கோடியில் ஒருவரே சித்தராக பிறக்கிறார்கள். இது அவர்களின் பூர்வ ஜென்மங்களில் விட்ட குறையாகும். அவர்களுக்கு இந்த பெயர் எப்படி தோன்றியது என்று ஆராய வேண்டும்.  அஃதாவது அவர்களது பிராணனை பூரணத்தில் சேர்த்ததால் முக்தனாக ஆவதற்காக எடுத்த உடல் சித்தி ஆகி இருக்கும். (உடலுக்கும் இறப்பில்லை – காயசித்தி). இதன் பிறகு அவர்களுக்கும் முன்னும் பின்னும் பிறவி என்பது இல்லை.

விளக்கம்

காரண தேகம் பற்றியே சித்தர்களின் பிறப்பு அவர்கள் பிறக்கும் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

நா – நான், நாக்கு
நி – இன்பம், அதிகம், விருப்பம்
நீ – முன்னிலை ஒருமைப் பெயர், நீக்குதல்
நூ – யானை, ஆபரணம், அணி, எள்.
நே – அன்பு, அருள், நேயம்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒல்லுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஒல்லுதல்

வார்த்தை:  ஒல்லுதல்

பொருள்

  • பொருந்துதல்
  • இயலுதல்
  • உடன்படுதல்
  • தகுதல்
  • ஆற்றுதல்
  • ஓலைப்பெட்டிபொத்துதல்
  • ஒலித்தல்
  • விரைதல்
  • கூடுதல்
  • பொறுத்தல்
  • நிகழ்தல்.

 

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை:

தன்னை வெற்றி அடைதலின் பொருட்டு விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

து – உண்
தூ – வெண்மை, தூய்மை
தே – கடவுள்
தை – தையல் எனப்படும் பெண், ‘தை’ என்று ஏவுதல்.தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
ந – சிறப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நாற்பத்துமுக்கோணம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நாற்பத்துமுக்கோணம்

 

வார்த்தை :  நாற்பத்துமுக்கோணம்

பொருள்

  • ஸ்ரீ சக்கரம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.

 

சட்டை முனி ஞானம்

 

கருத்து உரை

பூசை செய்யும் முறைகளை உரைக்கிறேன் கேட்பாயாக. சிலர் புற வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுவடியை வைத்து பூசை செய்வார்கள். சிலர் மட்டும் புகழைத் தரும் தீபத்தை வைத்து பூசை செய்வார்கள். சிலர் பெண்களை தேவியாக பாவித்து பூசை செய்வார்கள். சிலர் தினமும் சக்கரங்களை வைத்தும் பூசை செய்வார்கள். நம்மைப் போன்ற சித்தர்கள் வழிபாட்டு முறை என்பது மேருவை பூசித்தல் போல நாற்பது முக்கோணம் உடைய ஸ்ரீ சக்கரத்தை பூசித்தல் ஆகும்.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

சை – அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ – மதில், அரண்
ஞா – பொருத்து, கட்டு
தா – கொடு, கேட்பது
தீ – நெருப்பு , தீமை

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சந்ததம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சந்ததம்

 

வார்த்தை :  சந்ததம்

பொருள்

  • எப்பொழுதும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.

 

குதம்பைச் சித்தர்

 

கருத்து உரை

(வினைகளுக்கு உட்பட்டு இருக்கும் அனைத்து) உயிர்களுக்கும் உணவு வழங்கும் ஈசனை எப்பொழுதும் வாழ்த்திப் பாடுவாயாக.

விளக்கம்

வினைகளுக்கு உட்பட்டே எல்லா உயிர்களுக்கும் இரை என்பது கிடைக்கும். உயிர்களின் வினைகளைகளை ஈசன் அறிந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உயிர்களுக்கு ஈசன் உணவை வழங்குவான் என்றவாறு.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

கௌ – ‘கௌவு’ என்று ஏவுதல்.
சா – இறத்தல், சாக்காடு
சீ – லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு – விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே – காலை, சிவப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சட்டுவம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சட்டுவம்

வார்த்தை :  சட்டுவம்

பொருள்

  • அகப்பை
  • தோசைதிருப்பி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

சிவவாக்கியர்

கருத்து உரை

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன்  இருப்பதை அறியாமல் வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வம் என்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்  வழிபாடு செய்வது அறியாமையே ஆகும்.

விளக்கம்

அக வழிபாடு முறையை முன்னிருத்துதல் குறித்தது இப்பாடல்

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

கு – குவளயம்
கூ – பூமி, கூவுதல், உலகம்
கை – உறுப்பு, கரம்
கோ – அரசன், தந்தை, இறைவன்
கௌ – கொள்ளு, தீங்கு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெய்ய

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வெய்ய

வார்த்தை : வெய்ய
பொருள்

  • கொடிய.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே.

 

இடைக்காட்டுச் சித்தர்

 

கருத்து உரை

பசுவே!, ஐயனிடம் பற்றுக் கொண்டு, அவரிடம் அன்பு கொண்டு அவரின் திருப்பாதம் பணிந்தால் கொடிய வினைகள் எல்லாம் விட்டு ஓடி விலகிவிடும். இதனைக் காண்.

விளக்கம்

உயிர்களைக் குறிக்கும் சொல்லாகவே ‘பசு’ என்று இங்கு பயன்பாடு கொள்ளப்படுகிறது. ‘பதி, பசு பாசம் எனப் பகர் மூன்றில்’ எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ஓ – சென்று தங்குதல், மதகு
ஔ – பூமி, ஆனந்தம்
க – வியங்கோள் விகுதி, நெருப்பு.
கா – காத்தல், சோலை
கி – இரைச்சல் ஒலி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கண்டிகை

தமிழ் அன்னை

புகைப்படம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கண்டிகை

வார்த்தை :  கண்டிகை

பொருள்

  • கழுத்தணி
  • உருத்திராக்க மாலை – உருத்திராட்சமாலை
  • பதக்கம்
  • நிலப்பிரிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.

 

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

மான், மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியன கொண்டு விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்ருது அருளுகின்றார். தலையிலே பிறைச் சந்திரன் திகழ, கழுத்திலே எலும்புமாலை விளங்க, கையில் சூலம், உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்குபவர். யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும்  தம்மைப் போன்ற உருவம்   (சாரூப பதவி) பெறச் செய்வார் . ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல.

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை
எ – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ – அம்பு, உயர்ச்சிமிகுதி, ஏவுதல்
ஐ – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை,நுட்பம்
ஒ – மதகு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விகிர்தன்

தமிழ் அன்னை

 

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விகிர்தன்

வார்த்தை :  விகிர்தன்

பொருள்

  • வேறுபட்டவன்
  • விசித்திரமானவன்
  • ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
  • உலகியல்பில் வேறுபட்டவன்
  • கடவுள்
  • இறைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

கொதியி னால்வரு காளிதன் கோபங்குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே

 

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

 

சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை உடையவனே, (ஒளிரும்) மணிகள் போன்றவனே, தலைவனே, (விதிவசத்தால் – அவர்களது வினை முன் நிறுத்தி) தேவர்களாலும் துதிக்கப்படும் ஈசனே, திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே, அறிவில்லேனாகிய எனது உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உன்னையன்றி உறவாவார் வேறு யாவர் உள்ளார்! என்னை `அஞ்சேல்` என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக!

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

அ – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ – பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம், அரசன்
இ – சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ,அழிவு.
உ – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏதம்

தமிழ் அன்னை

 

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏதம்

வார்த்தை :  ஏதம்

பொருள்

  • துன்பம்
  • குற்றம், கேடு
  • தீமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே
கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

உயிர்களுக்கு வினைகளை நீக்கி அருள் புரிபவனாகவும்(புண்ணியத்தின் வடிவாக) இருக்கும் இறைவனை வேத வடிவமாகவும் அதன் சாரமாகவும் இருப்பவன் என்றும், செய்யப்படும் வேள்வியின் பயன் அருளுபவன் என்றும், பஞ்ச பூதங்கங்களாகவும் இருப்பவன் என்றும் கூறுவர்; கீதமாக விளங்கும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் துன்பம் தீர்க்க நின்ற இறைவரேயாவர்.

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – முன் நின்ற மெய் திரிதல் விதியின் படி (விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது)

செய்யன் = செம்மை+அன்
வெவ்வுயிர் = வெம்மை+உயிர்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துலங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துலங்குதல்

வார்த்தை : துலங்குதல்
பொருள்

  • ஒளிர்தல்
  • விளங்குதல்
  • தெளிவாதல்
  • சிறத்தல்
  • கலங்குதல்
  • தொங்கியசைதல்
  • ஒப்பமிடப்படுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

காணவே பரமசிவன் வானுன் டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேலிப்
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேசுரனைப் பார்க்கவே தான்
உருமுயிடி வாய்வ தனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்க
துலங்குமின்னல் அங்கியும் படைத்தார் பாரே.

 

அகஸ்தியர் செளமிய சாகரம்

 

கருத்து உரை

பரம்பொருளாகிய சிவபெருமான் வானை உண்டாக்கிப் பின் கருணை உடைய திருமாலைப் பார்த்துவிட்டுச் சதாசிவனைப் பார்க்க அவர் ஒரு பெரிய அண்டத்தைப் படைத்தார். பின் மகேஸ்வரனைப் பார்க்க அவர் விண்வெளியில் முழங்குகின்ற இடியையும் வாயுவையும் படைத்தார். பின் ருத்திரனைப் பார்க்க அவர் மின்னலையும் நெருப்பையும் உண்டாக்கினார்.

விளக்கம்
1.
‘வெளியிலே வெளிபோய் விரவிய வாறும்’ எனும் திருமந்திரப் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. வெளியில் – ஆகாச வடிவாகிய சிவத்தில்
2.
ஆகாசத்தில் இருந்து எல்லா பொருள்களும் உண்டாகின்றன. முடியும் போதும் ஆகாசத்திலே முடிகின்றன.ஆகாசமே பெரியது. ஆகாசமே முடிவான உறைவிடம்’ எனும் சாந்தோக்கியம் ஆகாசம் சிவத்தினை உணர்த்தும்

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – தன் ஒற்று இரட்டல் விதியின் படி (விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது)

குற்றி = குறுமை+ஆறு
நட்டாறு = நடுமை+ஆறு

Loading

சமூக ஊடகங்கள்