அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துலங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துலங்குதல்

வார்த்தை : துலங்குதல்
பொருள்

  • ஒளிர்தல்
  • விளங்குதல்
  • தெளிவாதல்
  • சிறத்தல்
  • கலங்குதல்
  • தொங்கியசைதல்
  • ஒப்பமிடப்படுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

காணவே பரமசிவன் வானுன் டாக்கக்
கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேலிப்
பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது
புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார்
ஊணவே மயேசுரனைப் பார்க்கவே தான்
உருமுயிடி வாய்வ தனைப் படைத்து நின்றார்
தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்க
துலங்குமின்னல் அங்கியும் படைத்தார் பாரே.

 

அகஸ்தியர் செளமிய சாகரம்

 

கருத்து உரை

பரம்பொருளாகிய சிவபெருமான் வானை உண்டாக்கிப் பின் கருணை உடைய திருமாலைப் பார்த்துவிட்டுச் சதாசிவனைப் பார்க்க அவர் ஒரு பெரிய அண்டத்தைப் படைத்தார். பின் மகேஸ்வரனைப் பார்க்க அவர் விண்வெளியில் முழங்குகின்ற இடியையும் வாயுவையும் படைத்தார். பின் ருத்திரனைப் பார்க்க அவர் மின்னலையும் நெருப்பையும் உண்டாக்கினார்.

விளக்கம்
1.
‘வெளியிலே வெளிபோய் விரவிய வாறும்’ எனும் திருமந்திரப் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. வெளியில் – ஆகாச வடிவாகிய சிவத்தில்
2.
ஆகாசத்தில் இருந்து எல்லா பொருள்களும் உண்டாகின்றன. முடியும் போதும் ஆகாசத்திலே முடிகின்றன.ஆகாசமே பெரியது. ஆகாசமே முடிவான உறைவிடம்’ எனும் சாந்தோக்கியம் ஆகாசம் சிவத்தினை உணர்த்தும்

 

துக்கடா

பண்புப் பெயர் புணரும்போது ஏற்படும் மாற்றங்கள் – தன் ஒற்று இரட்டல் விதியின் படி (விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது)

குற்றி = குறுமை+ஆறு
நட்டாறு = நடுமை+ஆறு

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *