ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தூடணம்
வார்த்தை : தூடணம்
பொருள்
- நிந்தை
- நிந்தைச்சொல்
- கண்டனம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தூடண மாகச்சொல் லாதே – தேடுஞ்
சொத்தக்க ளிலொரு தூசும்நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்
திச்சைவை த்தாலெம லோகம் பொல்லாதே.
கடுவெளிச்சித்தர்
கருத்து உரை
எதையும் / யாரையும் / எப்பொழுதும் பழித்துச் சொல்லாதே. தேடும் தனத்தில் ஒரு தூசு கூட நில்லாது போய்விடும். மூன்றுவிதமான ஏடணைகள் எனப்படும் ஆசைகளாகிய மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை பொல்லாதவையாகும். சிவத்தின்மேல் ஆர்வம் கொண்டால் எமலோகம் போகாதிருக்கலாம்.
விளக்கம்
தூசு – மிகக் குறைந்த அளவு
ஏடணை – ஆசை
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’. அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
நை – நைதல்.,வருந்து
நொ – மென்மை.
நோ – துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நோ – வலி.
நௌ – மரக்கலம், கப்பல்.