அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உள்ளுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  உள்ளுதல்

வார்த்தை :  உள்ளுதல்

பொருள்

  • நினைதல்
  • ஆராய்தல்
  • நன்கு மதித்தல்
  • மீண்டும் நினைத்தல்
  • இடைவிடாது நினைத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு – சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.

கஞ்சமலைச் சித்தர்

கருத்து உரை

ஆராதிக்கப்படும் பரம்பொருளை நினைத்து இடைவிடாது நினை. மாயையால் சூழப்பட்ட பிரபஞ்ச மயக்கத்தினை தள்ளு. அரிதான மாறுபாடு இல்லா சிவன் நாமத்தை சொல்லு; சிவன் அடியவர்களுக்கு அன்பாக பணிவிடை செய்வாயாக.

 

விளக்கம்

உரிதாம் – ஆராதிக்க உரிய

பஞ்சாட்ரம், சூட்சம பஞ்சாட்ரம் போன்றவை மாயையால் சூழப்பட்ட பிரபஞ்சத்தால் எல்லோருக்கும் வாய்ப்பதிலை.  அது குரு முகமாய் வாய்க்கப் பெறின் நன்று.

 

துக்கடா

ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.

மீ – மேலே , உயர்ச்சி, உச்சி, மிகுதியானது.
மூ – மூப்பு, முதுமை, மூன்று.
மே – மேன்மை,மேல்
மை – கண்மை (கருமை), அஞ்சனம், இருள், மசி
மோ – மோதல், முகரதல் ,மொள்ளுதல்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *