ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – வெய்ய
வார்த்தை : வெய்ய
பொருள்
- கொடிய.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே.
இடைக்காட்டுச் சித்தர்
கருத்து உரை
பசுவே!, ஐயனிடம் பற்றுக் கொண்டு, அவரிடம் அன்பு கொண்டு அவரின் திருப்பாதம் பணிந்தால் கொடிய வினைகள் எல்லாம் விட்டு ஓடி விலகிவிடும். இதனைக் காண்.
விளக்கம்
உயிர்களைக் குறிக்கும் சொல்லாகவே ‘பசு’ என்று இங்கு பயன்பாடு கொள்ளப்படுகிறது. ‘பதி, பசு பாசம் எனப் பகர் மூன்றில்’ எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
ஓ – சென்று தங்குதல், மதகு
ஔ – பூமி, ஆனந்தம்
க – வியங்கோள் விகுதி, நெருப்பு.
கா – காத்தல், சோலை
கி – இரைச்சல் ஒலி