அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

ஆன்மீகம்எல்லாரும் கட்டும் போது உனக்கு மட்டும் என்ன கேள்வி?

அறிவியல் :
1. பொதுவாக ஆண்களுக்கு குடல் இறக்கம் ஏற்படும். இதை தடுப்பதில் அரைஞாண் கயிற்றின் பங்கு மிக அதிகம்.

2. ஆண்களுக்கு  கால மாற்றத்தால் பொதுவாக விதைப் பைகள் இறக்கம் ஏற்படும். அரைஞாண்  கயிறு கட்டி கோமணம் () லங்கோடு கட்டும் போது இது தடுக்கப்படுகிறது. இதனாலே மலட்டுத் தன்மை என்பது போன தலைமுறையில் மிகக் குறைவாகவே இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

ஈர்ப்பு

உதிர்ந்த உடல் மீது
எதைத் தேட 
முற்படுகின்றன ஈக்கள்?









புகைப்பட ஆக்கம் :  SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

கானல் காட்சிகள்


அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
வாடா சாப்டஎன்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவாலங்காடு

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பஞ்ச சபைகளில் ரத்ன சபை
·   இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், தனது திருவடிகளால் நடந்து நடராஜர் திருவடியில் இருக்கும் இடம்.(பேய் வடிவம் கொண்டு இருக்கும் இடம்)
·   51 சக்தி பீடங்களில் காளி சக்தி பீடம்
·   முன்காலத்தில் இங்கு இருந்த ஆலமரக் காட்டில் சிவன் சுயம்பாக தோன்றி நடனம் புரிந்தததால் வடாரண்யேஸ்வரர்
·   காரைக்கால் அம்மையாரால் மூத்த திருப்பதிகம் பாடப் பெற்ற இடம்
·   கமலத் தேர் அமைப்பு
·   சிவனும் காளியும் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்
·   விமானம் செப்புத் தகட்டால் செய்யப்பட்டுள்ளது.
·   வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டிய இடம்.
 
  
தலம்
திருவாலங்காடு
பிற பெயர்கள்
வடாரணியம், பழையனூர் ஆலங்காடு
இறைவன்
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டுஅப்பர்
இறைவி
வண்டார்குழலி, மகாகாளி
தல விருட்சம்
பலா
தீர்த்தம்
சென்றாடு தீர்த்தம்முக்தி தீர்த்தம்.
விழாக்கள்
மார்கழிதிருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-631 210,
திருவள்ளூர் மாவட்டம். 044 – 27872443
பாடியவர்கள்
மூவர் முதலிகளான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்,அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 248வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   15 வது தலம்.
வழிபட்டவர்கள் –  கார்க்கோடகன், சுநந்த முனிவர்
வடாரண்யேஸ்வரர்
 
வண்டார்குழலி
 
பாடியவர்                     திருநாவுக்கரசர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    78
திருமுறை எண்               10
பாடல்
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
    வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
    நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
பொருள்
திருவாலங்காட்டுடை சிவன் எப்படிப்பட்டவர் என்றால் மாலைக்காலத்து சந்திரனை அணிந்தவர், வளம் மிக்க கயிலையை வணங்காதவனும், நீல நிற கடலால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனாகிய இராவணனை தனது பெரு விரலால் அழுத்தி துன்பம் அடையச் செய்தவர், வெண்மையான நிறமுடையவர், பழையனுரை தனது உறைவிடமாகக் கொண்டவர், உயர்ந்த ஒழுக்கங்களை உடையவர் போற்றும் திறமுடையவர்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    52
திருமுறை எண்               2
பண்                          பழம்பஞ்சுரம்
பாடல்
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே     7.52.2
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே    
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய  
ஐயா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.
பொருள்
மனம், வாக்கு மற்றும் காயங்களால் அவற்றுக்கு பொருந்தாத செயல்களைச் செய்து, உன்னிடத்தில் நிலைபெறும் எண்ணங்களைப் பெறாமல் திரிபவனாகிய என்னை, அவ்வாறு போகவிடாமல் தடுத்து என்னை ஆண்ட மெய்பொருளே, உண்மை நிலையினை உணர்ந்தரால் அறியப்பட்ட மெய்ப்பொருளே, ஆடும் நாகத்தினை இடையினில் அணிந்து பழையனுரில் உறைபவனே, திருவாலங்காட்டில் உறைபவனே, அடியேன் என்றும் உன் அடியவர்க்கு அடியவன் ஆவேன்.
கருத்து
பொய் பேசுதல் என்பது தாண்டி பொய்யே செய்து என்பதால் மனம், வாக்கு மற்றும் காயங்களால்
போகாமே என்பதால் தடுத்து நிறுத்தப்பட்ட
புகைப்படம் உதவி – தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

விதியின் புனைதல்


எல்லா கனமில்லா பொருள்களும்
உனக்கானவையாக இருக்கின்றன.
எல்லா கனத்த நினைவுகளுக்கும்
எனக்கானவையாக இருக்கின்றன.

உனக்கான பொருள்கள்
கலைந்து கிடக்கின்றன.
கலையாமல் இருக்கின்றன
என் நினைவுகள்.
யாருமற்ற பொழுதுகளில்
இப்புகைப்படம் பார்த்து
நினைகளைக் கோர்ப்பாய்.
அந்த நாளில் நினைவுகளும்
இன்றைக்கு பத்திரமாய் என்னிடம்.

Click by : Swathika. Photo : Senthil Tiruvarasan and Samyuktha. 

Loading

சமூக ஊடகங்கள்

வழிப்போக்கன்

எல்லாம் கடந்தபின்னும்
எஞ்சி இருக்கும்
எச்சத்தில் கழிகிறது வாழ்வு.












Click by : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

கர்மத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் சொர்க்கத்தையும், ஞானத்தை அனுஷ்டிப்பதால்  ஒருவன் மோட்சத்தையும் அடைய முடியும்.
இதை போதிப்பதில் உண்டாகும் வேறுபாடுகளூம் பிரிவுகளும் என்ன?

கர்மத்தை போதிப்பது வேதம்
ஞானத்தை போதிப்பது வேதாந்தம்
வியாசரின் சிஷ்யரான ஜைமினி செய்தது கர்ம சூத்திரம். இது கர்மம் என்பது பிரதானம். அதை மறுத்து வியாசர் செய்தது வேதாந்த சூத்திரம். இது ஞானம் என்பது பிரதானம்.
வியாசரது சூத்திரத்திற்கு பலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகண்டாச்சாரியார், சங்கராச்சாரியார், பண்டிதாச்சாரியார், இராமானுஜாச்சாரியார் மற்றும் மத்துவச்சாரியார்.
இவர்களில் முதல் மூவரும் சிவனை சிவபிரமானம் உள்ளவர்கள். மற்றவர்கள் விஷ்ணு பிரமானம் உள்ளவர்கள்.
இவர்களின் விளக்கங்கள்
ஸ்ரீகண்டாச்சாரியார்சமவாதி
சங்கராச்சாரியார்விவர்த்தவாதி
பண்டிதாச்சாரியார்ஐக்கியவாதி
இராமானுஜாச்சாரியார்  – விசிஷ்ட்டாத்துவைதி
மத்துவச்சாரியார்துவைதி
இதில் முதல் மூவரும் பதி, பாச விசாரணையில் பேதப்பட்டாலும் சிவனைப் பரம்பொருள் என்று கொண்டதால் அவர்கள் சைவர்கள் என்று பேசப் படுகிறார்கள். என்றாலும் ஸ்ரீகண்டாச்சாரியார் ஸ்வாமிகளே சைவச்சாரியார் என பிரசித்தி பெற்றிருக்கிறார்கள்.
இது தவிர ஆயுர் வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம் மற்றும் காந்தர்வ வேதம் என்ற வகைகளும் உண்டு. இவைகள் கர்ம காண்டங்களோடு கூடி பயன் தரத் தக்கவை ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

உயிரின் மொழி

உயிரின் மொழி பேசி
மழலை மொழி பேசி,
பிள்ளை மொழி பேசி,
கனவு மொழி பேசி,
காதல் மொழி பேசி,
வியாபார மொழி பேசி,
மூன்றாம் தலைமுறையுடன் மொழி பேசி,
பேசிப் பேசி பின்
பேச்சு அற்ற மௌனமாகி
பிணமாகி போகையில்
நிறைவு பெறுகிறது அழகியல் வாழ்வு.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 10 – மாலைப் பொழுதின் மயக்கத்திலே

பல ஆயிரம் முறை கேட்ட பிறகும் மாறாமல் இருக்கிறது அந்தக் குரலில் உள் ஒலிந்திருக்கும் வலிகள், அழுத்தங்கள், காயங்கள், சொல்லொண்ணா துயரங்கள்.
பெண்ணுக்கான மன வலிகள் எப்போழுதும் தனித்தே இருக்கின்றன.
ஒரு அழகிய வீணையின் இசையுடன் பாடல் ஆரம்பமாகிறது.
கண்ணதாசன்வரிகள் ஆரம்பம் ஆகின்றன.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
மாலைப் பொழுது பெரும்பாலும் மயக்கம் தருவதாகவே இருக்கும். நாளுக்கான முடிவின் தொடக்கம் அல்லவா. அப்போது கனவு காணுவதாக தோழியிடம் உரைக்கிறாள். அச்சம், நாணம் போன்ற குணங்கள் சேர்ந்து தன் மனதில் தன்மையை மாற்றி வார்த்தைகள் அற்றுச் செய்து விடுகிறதாக உரைக்கிறாள்.
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர்யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பதுஏன் தோழி
இன்பமும்துன்பமும்கலந்தே வாழ்வு. அதைப் போன்றே வாழ்வு அமைகிறது என்று என்னிடன் உரைத்தவர் யார்?. கவிஞனின் கற்பனை இங்கு மிக அழகாக விளக்க்கப் பட்டிருக்கிறது. இன்பம் நிஜமற்ற கனவிலும், துன்பம் நிதர்சமான உண்மையிலும் தான் காண்பதாக உரைக்கிறாள்.
மணம் முடித்தவர் போல் அருகினிலேஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தே நான் வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன்தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
தனக்கான காந்தர்வ விவாகம்நடந்து விட்டதை தெரிவுக்கிறாள். அவர் என்னை மணம் முடித்தது போல் அவரின் வடிவம் கண்டேன். மங்கையான என்னிடம் குங்குமம் தந்தார், மாலையிட்டார்.இவைகள் பெரும்பாலும் கணவர்கள் செய்யும் காரியம் என்பதால் அதைக் குறிப்பிடுகிறாள். இதனால் நான் செல்லும் (வாழ்க்கை) வழியை மறந்துவிட்டேன்அவரிடம்அடைக்கலம்ஆனேன். அப்போது மறவேன் மறவேன்  என்று கூறி மறைந்து விட்டார் என்கிறாள். (வார்த்தைகள் இரு முறை கூறப்படும் போது அது சத்தியம் ஆகிறது, இவ்வாறு சத்யம் செய்து மறந்து விட்டதைக் குறிப்பிடுகிறாள் தலைவி)
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால்அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்ததுஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும்அறியாமல்முடிவும்தெரியாமல்
மயங்குதுஎதிர் காலம்
மயங்குதுஎதிர் காலம் ((துக்கடா)இசைஞானிக்கு பிடித்த வரிகள்
இப்படி கனவு வாழ்வில் வந்தது யார் என்று கேட்கிறாள். அனைத்து பதில்களும் உரைக்கப் படுகின்றன.
கொஞ்சு தமிழின் அழகியல் விளையாடத் துவங்குகிறது. இளைமை வெறும் கனவாகவே இருக்கிறது அதுவும் மறைந்திருக்கிறது. அறிவு தெளிவு அறியாமல் இருக்கிறது. முடிவும் எடுக்கவும் முடியாமல் இருக்கிறது. இவ்வாறான நிலையில் எதிர் காலம் மயக்கம் தருவதாக இருக்கிறது என்பதை உரைக்கிறாள்.
இடை இடையே வரும் வரும் இசை அந்த வலிகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.
(தத்துவார்தகமாக பார்த்தால் ஜீவாத்மா, பரமார்த்தாவை அடையத் துடித்தலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக கொள்ளலாம்)
இப்பாடலைக் கேட்டு ஈரத் தலையனையுடன் உறங்கிய பல பெண்களை எனக்குத் தெரியும்.

யாருமற்றஇரவில் தனிமையில் இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். மனதில் வலிகள் எல்லாம் ஒரு பாடலாக உருப்பெற்றிருப்பதை அறியலாம்.
இப்பாடல்புகைவண்டிப் பயணத்தில்யாசம் விரும்பி கேட்டுச் செல்லும் கண்கள் அற்றவனில் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் வரிகள் உறுத்துவதை உணரமுடியும்.
ஏனெனில்வலிகள் அனைவருக்கும் பொதுவானவை தானே.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – Galaxy and Universe

2038 – Galaxy and Universe

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)






1
வீட்ல ரொம்ப கஸ்டம்மா, 2 கேலக்சி சுத்தம் பண்ணித்தரேன், 50 ரூ சேத்துக்குடும்மா

2
2014 – The most current estimates guess that there are 400 billion galaxies in the Universe

ரெண்டு காப்பி டம்ளர் தான் சுத்தம் பண்ணமுடியும். நான் இன்னும் 500 மில்லியன் கேலக்சி போய் பாத்திரம் கழுவணும்.

3
2014 – A Dying Galaxy Near the Milky Way
என்னெடி  இந்த மாசம் இன்னும் $500000 சேத்து கேட்கிறே.
என்னம்மா செய்யறது, போன மாசம் ஒரு கேலக்சி செத்துப்போச்சி, அந்த வேலை போயிடிச்சி.
4
அம்மா, 5:01:0.000035 மேல வேலை செய்ய முடியாது
ஏண்டி,
எம் புள்ளைங்களை கேலக்சி Zoo க்கு கூட்டிகிட்டு போகணும்.
5
2014 – Luminosity – the amount of energy that it puts out (luminosity = brightness x 12.57­ x (distance)2­). Conversely, if you know a star’s luminosity, you can calculate its distance.
அம்மா, அந்த கேலக்சி வெளிச்சத்த கொஞ்சம் கொற அம்மா, கண்ண கூசுது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வேதசிவாகமவியல்
பதியினது உபதேசம் பற்றி விளக்கும் வகையில் இருக்கும் உபதேசங்கள். இது உலகத்தின் இயல்புகளையும், ஆன்மாக்களையும் அது பற்றி நிற்கும் பாசத்தை பற்றியும் விளக்கும்பிறகு அப்பாச இயல்பில் இருந்து விலகுவதற்கான வழியையும் கூறும்.
 
இவைகள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று வகைப்படுத்தப்படுகிறது. (இவற்றிற்கான விளக்கங்களுக்கு நாம் செல்லவில்லை)
 
இவ்வேதங்கள் இரண்டு காண்டங்கள் உடையது. கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம்.
 
இவற்றுள் கர்ம காண்டம்(செய்த வினையின் விளைவு) அவற்றை மாற்ற ஜோதிடம் போன்ற புண்ணிய கர்மங்களை அறிந்து சொர்க்கத்தை விரும்பி செய்யப்படுவது)
 
ஞானகாண்டம்உலகம், உடல், உயிர் போன்ற நிலையாமைத் தத்துவங்களை கண்டு, தன்பற்று நீங்கி முக்தி அடைதலுக்கு உரிய உண்மை ஞானத்தை உணர்த்துவது.

Loading

சமூக ஊடகங்கள்

வான் விளிம்பு

தேக மாற்றத்தில்
தேய்ந்து போகின்றன
தேவைகளும் நினைவுகளும்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் விளிம்பு

ஒவ்வொரு பயணமும்
இழுத்துச் செல்கிறது
சில மனிதர்களையும்
பல நினைவுகளையும்.







Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு அந்த ஈஸ்வரன் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார். இதனை விளக்குவோம்.

சுதந்திரம் என்பது தன்னாலும் பிறராலும் தனக்கும் தடை இல்லாமல் இருத்தல். சீவன்கள் கன்மானுபவம் கூடி அதை அனுபவிக்க உரியவர்கள். வரம்பிற்கு உட்பட்ட அறிவு தொழில் உடையவர்கள். இவ்வாறு அவர்களுக்கு விதிக்கப்பட்டவைகளை முடித்தும், அவைகளை கெடும்படியாக தடுத்தும் செய்வதால் தனக்கு மேல் கர்த்தா இல்லாமல் அவர் சுதந்த்ரத்துடன் செயல்படுகிறார்.



அவ்வாறு செயல்படும் ஆன்மாக்கள் தனது குற்றம் நீங்கி குணப்படுதல் நிகழும். இதனை விளக்குவோம்.

சித்துப் பொருளாகிய ஆன்மாக்கள் தனது குற்றத்தை தானே நீக்குதல் ஆகா. தனுக் கரணங்களைக் கொடுத்து ஈஸ்வரன் தனது குற்றங்களை உணர வைக்கிறான். இவ்வாறு சிவாகமங்களை அறியும் ஆன்மாக்கள் அதிலிருந்து குற்றம் விலகி சுகிக்கும்.

இத்துடன் சித்தியல் நிறைவு பெறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

கிலுப்தம்

மனதினைச் சொல்லி
பிரயோஜனமில்லை
உடல் இருக்கும் வரை.












* கிலுப்தம்நிச்சயமாக

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

எச்சங்கள்

நினைவுகள் கடந்த பின்னும்
மிச்சமிருக்கின்றன 
எச்சங்கள்














Click by : HarishKumar

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்





சைவசித்தாந்தம்சில சிந்தனைகள்













சர்வ வியாபகம் 

எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைவுற்று இருத்தல்.

எல்லா பொருள்களிலும் நீக்கமற  நிறைவுற்று இருத்தல் முதல் தன்மை. அதோடு தளைகளை அறிவிக்கவும் அதோடு ஆன்மாக்களை தளைகளில் இருந்து விடுவிக்கும் பொருளாகவும் இருத்தல். அஃது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தது.

இதைஉண்மை என்பதை பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் புராணம் உணர்த்தும்.
நித்யதத்துவம் 

அழிவில்லாது.

தனக்கான செயல்களை வினைகளில் வழியே கூட்ட பதி ஒன்று வேண்டும். அவ்வாறு செயவதற்கு தனக்கு மேல் ஒரு பதி இல்லாத பரம் பொருள்.
சுவையினை உணரும்  பசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றை அனுபவிப்பது போல், ஈஸ்வர அனுபவிப்பதை அனுபவிப்பதால் அவன் நித்ய  ஆனந்தராக இருத்தல் வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

பூரணம்

அழகிய ஓவியம் ஒன்றை
வரையத் துவங்குகிறேன்.
எழுதப்படா பக்கங்களை
எடுத்து வந்து என்னிடம் தந்து
ஓவியம் எப்படி என்கிறாய்‘.
மகளாகிய உன்னால்
ஒவியங்கள் முழுமை பெறுகின்றன.








Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

2038- Quantum physics

2038- Quantum physics 

(It’s all a fantasy. It is not intended to hurt anyone. It could (not) happen.)

1.
2014 – In quantum theory of cognition, memories are created by the act of remembering.
2038 – Remembering is very old method. Unaku evalavu venum sollu. 50 terra byte Rs. 50/- only.
2.
2014 -Quantum Cloud Simulates Magnetic Monopole
2038 – Sir, seekiram solluga, unga veetu vasthu padi NorthEast (Sani moola- Moolaila theeya vaika) than best. Advance seekiram pay pannunga sir. Lion(pavigala line or lion)  nikuthula.
3.
2014 -Quantum cryptography for mobile phones
2038 – Nanum 25 yearsa try pannikitu iruken. But en husband-oda password mattum kandu pudikida mudiyala sir
4. 
2014 -Electron Mass Measured to Record-Breaking Precision. The electron has 0.000548579909067 of an atomic mass unit
2038 – Yei rumba pesuna monjiya pethuduvan, enga thalaivar vijayoda son. Avaru massu theriyuma.
 5.

2014 –  Hunt for an ‘unidentified electron object’ – Researchers have developed a new mathematical framework  capable of describing motions in superfluids.
2038 – Sir, ithey vechi Renganathan stla shopping pona en pondatiya kandu pudika mudiyuma sir.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவலிதாயம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து வழிபட்ட தலம்
·   இராமன் வழிபட்டத் தலம்
·   மார்க்கண்டேய மகரிஷி உபதேசத்தின்படி வியாழன் தன் தவறு உணர்ந்து  சிவனை வணங்கி பாவன் நீங்கப் பெற்ற தலம்
·   பிரம்மாவின் பெண்கள் கமலியும், வல்லியும் இறைவனை பூஜித்து விநாயகரை மணம் புரிந்த தலம்
·   கஜ பிருஷ்ட விமானம்
 
 
 
 
 
தலம்
திருவலிதாயம்
பிற பெயர்கள்
பாடி
இறைவன்
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
இறைவி
ஜகதாம்பாள், தாயம்மை,
தல விருட்சம்
பாதிரி, கொன்றை
தீர்த்தம்
பரத்துவாஜ தீர்த்தம்
விழாக்கள்
சித்திரைபிரம்மோற்ஸவம், தைகிருத்திகை, குரு பெயர்ச்சி
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,                         
பாடி, சென்னை – 600050.
+91-44 -2654 0706
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை  ‘பாடி’க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்’ நிறுத்தத்தில் இருந்து மிக அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 254வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.
திருவல்லீஸ்வரர்
 
 
 
தாயம்மை

பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               1

பாடல்
 

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
பொருள்
பல சிவனடியார்களும் பொலிவுடன் விளங்கும் மலர்களை உள்ளங் கையினில் ஏந்தி, வார்த்தைகளால் மாறுபாடு இல்லாமல் மந்திரங்கள் சொல்லி, நீர் வார்த்து , ஊமத்தை மலர்களைச் சூடி பூஜிக்கிறார்கள்.  அவர்களை உயர் அடையச் செய்யும் பெருமான் உடன் உறையும் வலிதாயம் என்ற தலத்தை மனதில் வைத்த அடியவர்களை துன்பம் என்ற நோய் தாக்காது.
 
வலிதாயத்தை மனத்தால் நினைத்த அடியவர்களை துன்பம் தாக்காது என்பது துணியு.
கருத்து
பத்தர் – சிவன் அடியார்காள்
பொலியம்மலர்  – பொலிவுடன் விளங்கும் மலர்
புனல் தூவி  – நீர் இட்டு
பிரியாதுறை கின்ற – உமையம்மையை பிரியாதிருக்கும் சிவன்
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               8
பாடல்

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.
பொருள்


திருபாற்கடலைக் கடந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு தேவர்கள் தொழுது ஏத்தும் படி செய்து நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை செருக்குடன் கூடிய ஆற்றலை அழித்து பின் அவனுக்கு அருள் புரிந்த இறைவன் உறையும் கோயில்களை உடையதும், தேன் சுவை போன்ற கமுகு மற்றும் பலா மரங்களை உடையதுமான வலிதாயம் என்ற இத்தலத்தை வணங்குபவர்களில் துயரானது உடலில் உயிர் வரை இருக்கும் துன்பம் என்ற நிலையை நீக்கும்.

Photo : Dinamalar

Loading

சமூக ஊடகங்கள்