![]()
காற்றில் ஆடும் சருகுகள் – 3
வாக்கியங்கள் முழுமை பெறுகின்றன ஒருமுற்றுப் புள்ளியில்.
![]()
மகிழம்பூக்கள்
ஆத்மாவின் ராகங்கள்
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – 4 பூங்காற்று திரும்புமா?
![]()
அக்லிஷ்டா
நகர மறுக்கும் நினைவுகள் – 3 ஆச்சார்ய தேவோ பவ:
![]()
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 6
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – 2 – செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில்
![]()
பிம்பங்களின் ஜனனம்
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5
முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
பாடல்
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73
பொருள்
ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.
கருத்து
· மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o போதல், வருதல்
o இரவு, பகல்
o புறம், உள்
· வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
· வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
· இது மனதினை லயப் படுத்துகிறது. – ஜப கோடி த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
· எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது
2.
பாடல்
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96
பொருள்
முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.
கருத்து
மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.
![]()
நவகண்டம்
![]()
காற்றில் ஆடும் சருகுகள் – 2
யாசிக்கையில், கைகளைவிட கண்கள் கனமாக இருக்கின்றன.
—————————————————————————————————
தனது பெண், முதல் முறை மூக்குத்தி அணியும் அழகை கண்டு ரசிக்கும் தாயின் கண்கள் சிறப்பானவை. இருவரையும் ரசிக்கும் தகப்பனின் கண்கள் அதை விட அழகானவை.
—————————————————————————————————
ப்ரம்மா – இவன் தமிழனாக பிறக்கட்டும்.
சித்திர குப்தன் – இவன் நிறைய தவறுகள் செய்திருக்கிறான். இவனை எப்படி தண்டிப்பது?
ப்ரம்மா – இவனை …. க்கு கணவணாக்கி விடு.
உயிர் – அது மட்டும் வேண்டாம், வேற எந்த தண்டனையும் கொடுங்கள். செத்தான்டா சேகர்.
![]()
மண் கவுச்சி
இச்சா மரணம் – பீஷ்மர்
![]()
காற்றில் ஆடும் சருகுகள் – 1
—————————————————————
அவள் – சனியன் புடிச்ச எலி இன்னைக்காவதுமாட்டுச்சே, கொண்டு போய் எங்கயாவது விட்டுட்டு வாங்க
அவன் – புண்ணியம் செய்ததால தான அது தப்பிக்கிறது.
அவள் – கால நேரத்துல என்ன தானா சிரிப்பு வேண்டி கிடக்கு?
உள் அழுகையை மறைத்து ஆனந்தமாய் சிரிப்பதாய் காட்ட.
உ.ம் – மாலை பொழுதின் மயக்கத்திலே .. சொன்னது நீதானா, சொல் சொல் என் உயிரே..
சாத்தான் : இது ஒரு மேட்டரே இல்ல. எல்லாருக்கும் கல்யாணம் செய்து வச்சிடலாம்.
Click by : SL Kumar
![]()
பிரபஞ்ச இயக்கம்
ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.
![]()
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 4
![]()
முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3
![]()
நகர மறுக்கும் நினைவுகள் – 1
![]()



















