சப்த ஜாலம்

%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-kp

புகைப்படம் :  Karthik Pasupathy

உன்கென்ன ‘ஆசை அறு’ என்று
சொல்லி சென்றுவிட்டாய்.
நானல்லவோ பீடிக் காசிற்கு அலைகிறேன்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்தூங்கானைமாடம்

274தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்தூங்கானைமாடம்

  • மூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமான, சதுர வடிவான ஆவுடையார்.
  • ஆழி வெள்ளம் வந்த போது அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.
  • தேவகன்னியர் ( பெண் ) , காமதேனு ( ஆ ) , வெள்ளை யானை ( கடம் ) வழிபட்ட தலமாதலால் பெண்ணாகடம்.(பெண்+ஆ+கடம்)
  • வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள தலம்.
  • காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால், கயிலை தீர்த்தத்தில் நிரம்பி உண்டான குளம்.
  • ஐராவதம் வழிபட்டதால் ‘தயராசபதி’, ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் ‘புஷ்பவனம், புஷ்பாரண்யம்’, இந்திரன் வழிபட்டதால் ‘மகேந்திரபுரி’, பார்வதி வழிபட்டதால் ‘பார்வதிபுரம்’ , நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் ‘சோகநாசனம்’ , சிவனுக்குகந்த பதியாதலின் ‘சிவவாசம்’
  • திருநாவுக்கரசர் – சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
  • சந்தான குரவர்கள் மெய்கண்ட தேவர், மறைஞான சம்பந்தர் ஆகியோர்பிறந்த தலம்.
  • ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்
  • மாகேஸ்வர பூசையில் தனது பணியாள் வந்த போது அவருக்கு பூஜை செய்ய மறுத்த மனைவியின் கரங்களை வெட்டிய கலிகம்ப நாயனார் (மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்-கைவழங்கீசர் ) முக்தி பெற்றத் தலம்.
  • கஜபிருஷ்ட விமான அமைப்பிலான விமானம்
  • இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப கட்டப்பட்டது சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி

 

தலம் திருத்தூங்கானைமாடம்
பிற பெயர்கள் பெண்ணாகடம், பெண்ணாடம்
இறைவன் பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்தீஸ்வரர் ), கைவழங்கீசர்
இறைவி ஆமோதனம்பாள் ( கடந்தை நாயகி , அழகிய காதலி ), விருத்தாம்பிகை
தல விருட்சம் செண்பக மரம்
தீர்த்தம் கயிலை தீர்த்தம் , பார்வதி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , முக்குளம் , வெள்ளாறு
விழாக்கள் சித்திரையில் 12 நாட்கள் பிரம்மோற்சவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

 

அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில்,

பெண்ணாகடம் & அஞ்சல்,

விருத்தாச்சலம் வழி,

திட்டக்குடி வட்டம்,

கடலூர் மாவட்டம் – 608 105.

தொலைபேசி : +91-9976995722, +91-98425-64768, 04143 – 222788.

வழிபட்டவர்கள் ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
நிர்வாகம்
இருப்பிடம் விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 192 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில் 2  வது தலம்.

சுடர்க்கொழுந்தீஸ்வரர்

%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d

விருத்தாம்பிகை

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%88

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         1

பதிக எண்         59

திருமுறை எண்   9

 

பாடல்

நோயும் பிணியும் அருந்துயரமும்

நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்

வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்

மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்

தாய அடியளந்தான் காணமாட்டாத்

தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்

தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே

பொருள்

உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

 

கருத்து

 

நோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.

பிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.

அருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.

 

 

 

பாடியவர்          திருநாவுக்கரசர்

திருமுறை         4

பதிக எண்         109

திருமுறை எண்    1

 

பாடல்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

விண்ணப்பம் போற்றிசெய்யும்

என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேலிருங் கூற்றகல

மின்னாரு மூவிலைச் சூலமென்

மேற்பொறி மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை

மாடச் சுடர்க்கொழுந்தே.

பொருள்

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

மலிதல்

%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d

 

யாசித்துப் பெற்ற நாணயங்களைக் கூட்டி
தேனீர் அருந்துகையில் வந்தமைகின்றது
செம்மை நிற நாய்களின் கூட்டமொன்று.

*மலிதல் – மகிழ்தல்

புகைப்படம் : காமேஷ் சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

சுயத்தின் பேரொலி

%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf_vv

 

புகைப்படம் :  Vinod VV

 

 

எத்தனை முயற்சித்தாலும்
இவ்வளவு தான் வாழ முடிகிறது.
பெறுவதை நோக்கமாகக் கொண்டப்பின்
கிடைக்கும் ஒரு முழு பீடியும்,
புகைக்கப்பட்ட சிறு துண்டு பீடியும்;
சிறு சண்டைகளுக்குப் பின் கிடைக்கும்
கறி இல்லா கால் பிளேட் பிரியாணி;
புன்னகைக்குப் பின் யாசித்தலை ஒத்து
கிடைக்கும் சிறு தேனீர்;
‘சும்மாதான இருக்க’ எனும் சொல்லுக்கு பின்
அழைத்துச் செல்லப்படும்
தரை டிக்கெட் திரைப்படங்கள்;
நிலை அறிந்தும் நிழலெனத்
தொடரும் உடலெங்கும் காயம் கொண்ட
கருப்பு நிற ஜிம்மியின் வாலசைப்புகள்;
யாரும் அறியா சுயத்தின் பேரொலி.
எத்தனை முயற்சித்தாலும்
இவ்வளவு தான் வாழ முடிகிறது.

 

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி மௌனம்

%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

புகைப்படம் : இணையம்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – ஆகாயம்

 

யாருமற்ற இரவொன்று;
விளக்கு சுடர் மற்றும் பிரகாசிக்கின்றது.
இரவின் உறக்கம் கலைத்து
வான் முழக்கம் அருகினில்.
தோழியராய் இரு பெண்கள் அருகினில் வருகிறார்கள்.
யார் என்று வினவுகிறேன்.
நாங்களே சித்தி புத்தி;
‘பர நாதம் பரவி இருக்கும் ஆகாயமே எங்கள் நாதன்.
அவரே எம் கணவர் ஹிரண்ய கணபதி” என்கிறார்கள்.
‘சாஸ்வதமான வாக்கினை கேட்க விரும்புகிறேன்” என்கிறேன்.
‘இறப்பே சாஸ்வதம்’ என்கிறார்கள்.
விக்கித்து நிற்கிறேன்.
‘ஆகாயமும் நாதமும் தொப்புள் கொடி உறவானது
எழுத்துக்களை சொற்களாக்கி
சொற்களை வார்த்தைகளாக்கி
வார்த்தைகளை வாக்கியமாக்கி
ஆகாயத்தில் இருந்து
அடிநாத மௌனம் காண்’ என்கிறார்கள்
பின்னொரு பொழுதுகளில்
ஆதி மௌனம் படரத் தொடங்கி இருந்தது.

 

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வாயில் அரத்துறை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வாயில் அரத்துறை

  • திருத்தூங்காணை மாடத்தில் இருந்து நடந்தே சென்ற திருஞான சம்பந்தரின் கால்கள் நோகாமல் இருக்க அவருக்கு சிவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அருளியத் தலம்
  • வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்த்து வெள்ளம் வடிந்ததால் சற்று திரும்பியுள்ள நந்தியின் தலை
  • ஏழு துறைகளில்(அரத்துறை , ஆதித்துறை ( காரியனூர் ) , திருவாலந்துறை , திருமாந்துறை , ஆடுதுறை , திருவதிட்டத்துறை ( திட்டக்குடி ) , திருக்கைத்துறை) சப்தரிஷிகள் ஈசனை வழிபட்ட தலம்
  • செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்ட தலம்.

 

தலம் திருநெல்வாயில் அரத்துறை
பிற பெயர்கள் தீர்த்தபுரி,திருவரத்துறை , திருவட்டுறை, திருவட்டத்துறை,  நெல்வாயில் அருத்துறை, சிவபுரி
இறைவன் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் , அரத்துறைநாதர்
இறைவி திரிபுரசுந்தரி, ஆனந்தநாயகி , அரத்துறைநாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை , நிவாநதி (வடவெள்ளாறு நதி)
விழாக்கள் மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

 

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்

திருவட்டுறை அஞ்சல்

திட்டக்குடி வட்டம்

கடலூர் மாவட்டம்

PIN – 606111

04143-246303, 04143-246467

வழிபட்டவர்கள் மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், அரவான்,சனகர், ஆதி சங்கரர், குகை நமச்சிவாயர், இராமலிங்க அடிகள்,சேர, சோழ, பாண்டியர்கள்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் 1 பதிகம் , திருஞானசம்பந்தர் 1 பதிகம் , சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரம். விருதாச்சலம் தொழுதூர் சாலையில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 191  வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  1   வது தலம்.

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாகிய தீர்த்தபுரீஸ்வரர் 

combined

புகைப்படம் : தினமலர்

பாடியவர்                                          திருநாவுக்கரசர்

திருமுறை                                       5

பதிக எண்                                          3

திருமுறை எண்                            9

 

பாடல்

 

காழி யானைக் கனவிடை யூருமெய்

வாழி யானைவல் லோருமென் றின்னவர்

ஆழி யான்பிர மற்கும ரத்துறை

ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

 

பொருள்

 

சீகாழிப்பதியில் உறைபவரும், பெருமையை உடைய இடப வாகனத்தில் செல்லும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் ‘வல்லோர்கள்’ என்று கூறப்படுவோராகிய திருமால் மற்றும் பிரமனும் ஊழிக் காலத்தில் ஒடுங்கும் இடமாகக் கூடியவரும் அரத்துறை மேவும் பரமனே, நாம் தொழுகின்ற இறைவனாகிய நம் சிவபெருமான் ஆவார்.

 

கருத்து

 

திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை எனும் பொருள் பிரித்து அறிவார்களும் உளர்.

 

 

பாடியவர்                          சுந்தரர்

திருமுறை                       7

பதிக எண்                          3

திருமுறை எண்            8

 

பாடல்

 

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்

திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி

ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்

பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்

அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

 

 

பொருள்

 

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே,  மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

 

கருத்து

தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் –  அயனும், மாலும்

நாமமாவது – திருவைந்தெழுத்து

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 3

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks

 

கவலைகள் – உடல் நலம் சார்ந்து

 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் அவைகளின் பரிசோதனைக்கு தகுந்த அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. (குறுகிய கால அளவு பக்க விளைவுகள் மற்றும் நீண்ட கால பக்க விளைவுகள்)

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ‘ஏம்பா அந்த 19வது குரோமேசோமை எடுத்து நமக்கு தகுந்த மாதிரி மாத்தி சேமித்துவிடு, எதுவும் ஆகாது’ . அதாவது. It is only unit testing.  It is not complete testing.

மாற்றப்பட்ட பதிவுகள் உடைய டி என் ஏ மூலக்கூறுகள், பயிர்கள்/உயிர்கள் ஆகியவற்றில் நிலையற்ற தன்மை உடையனவாக இருக்கின்றன. இந்த நிலையற்ற தன்மை அது செல்லும் இடம் எங்கும் சென்று அதன் தொடர்ச்சியாக தோற்றுவிக்கப்படும் டி என் ஏவிலும் நிலையற்ற தன்மையை உண்டாக்குகிறது.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உட்கொள்ளும் விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்புகள், இரைப்பை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு, விரைவாக முதுமை தன்மை அடைதல், மற்றும் மலட்டுத்தன்மை அடைதல்  போன்றவைகளால் பாதிக்கப்படுன்றன.

Allergies ஒவ்வாமைக்களுக்கு (Allergies) அடிப்படையான காரணம்

இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் மிக அதிக அளவில் உடலில் எதிர்பாரா பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவின் DNA மூலக்கூறுகள் நம் உடலில் தங்கி அதன் சுவடுகள் கர்ப்பிணி பெண்ணில் கருவரை வரையில் நீள்கின்றன.

இவ்வாறான பயிர்களை உட்கொள்ளும் சோதனை விலங்குகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அமெரிக்காவில் 1996 ஆண்டு கணக்குப்படி மரபணு மாற்றம் காரணமாக மூளைக் குறைபாடுகள், இனப்பெருக்க குறைபாடுகள், உணவு செரிமானக் கோளாறுகள் போன்றவைகள் 7% இருந்து 13% ஆக உயர்ந்திருக்கிறது.

இது உணவு சுழற்சி மற்றும் உணவு சங்கிலி தொடரில் பாதிப்பதால் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கண்கூடு.

இங்கு குறிப்பிடபட்டுள்ள செய்திகளை உவமையில் கூறவேண்டும் எனில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட  கூஜா  நீர் அளவு மட்டுமே.

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

2038 – ஸ்கூல்

2038

1.

சார், எங்க ஸ்கூல என்னா வசதின்னா, நாங்க பேங்க்கோட டைஅப்  வச்சி இருக்கோம். நீங்க அடகு வக்க எங்கையும் போக வேணாம். இங்க இருக்கிற பேங்க்லய அடகு வச்சி எங்க பீஸ் கட்டிடலாம்.

 

2.

நீங்க எத்தனாவது படிக்கிறீங்க?

4 வது

ஐயோ, உங்களுக்கு எங்க ஸ்கூல இடம் இல்லீங்க. ஏன்னா நீங்க படிச்சி கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து சேர்க்கும் போது உங்க குழந்தைக்கு age eligibility  இருக்காதே?

 

3.

மேடம், எங்க பள்ளிகூடத்துக்கு மட்டும் தான் திரு. ரமணன் சார் ஆலோசகரா  இருக்கிறார். அதனால மழை எப்ப பெய்யும் அப்படீங்கிறது முன்னாடியே தெரிஞ்சி,  உங்களுக்கு inform  பண்ணிடுவோம்.

 

4.

அட்மின் : பிரின்ஸ்பால் மேம், இந்த டீச்சர்ஸ்க்கு எல்லாம் மே மாசம் சம்பளம் குடுக்க வேண்டியதா இருக்கு என்ன செய்யலாம்?

பிரின்ஸ்பால் : பீஸ் கலக்க்ஷன டீச்சர்ஸ் தான் செய்யணும்னு சொல்லிடலாம். அவங்களே வாங்கி அவங்களே பேங்க்ல கட்டிட சொல்லலாம். உங்களுக்கும் வேலை குறையும் தானே.

 

5.

சார், நாங்க மத்த ஸ்கூல் மாதிரி இல்ல. இங்க பசங்க அடிச்சிகிட்டு கத்தியால கிழிச்சி காயம் ஆச்சின்னா, ஆர்யபட்டா ஹாஸ்பிட்ட சேர்த்துடுவோம். இதுக்குத்தான அவங்களோட டைஅப் வச்சி இருக்கோம். அப்ப செய்யுணும்ன்னா நீங்க எக்ஸ்ட்ராவா ஒரு 50 லட்சம் கட்டணும்.

 

6.

எங்க ஸ்கூல்ல என்ன வசதின்னா நாங்க L.K.Gல இருந்தே டியூஷன் சொல்லித்தரோம்.
ஒரு வேளை மார்க் கம்மி ஆயிட்டா இன்னாசார் செய்யறது?
அதுக்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் உண்டு. அது ஃப்ரி தான். நீங்க பே பண்ண வேண்டாம்.

 

Loading

சமூக ஊடகங்கள்

21.4.3. 1,00,00,000

21-4-3-10000000

புகைவண்டி பயணத்தில்
இயல்பில்லாதவனை
எளிதில் கண்டறியக்கூடும்.
ஜன்னலுக்கு வெளியே
யாருமற்ற புல்வெளியில்
வானம் பார்த்து
ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்.
அன்றைய செய்தித் தாளினை
எவரும் படிக்க இயலாமல்
எட்டாய் மடித்து
ஒருவன் வாசித்துக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்
யாசிக்கும் மனிதனின்
கண்ணீர் தாண்டி
மறுதலிக்கும் மனம் அறிந்து
கடந்து செல்.
இறைவனிடம் கை ஏந்துங்கள்
எனும் பாடலை
சுருதி மாறாமல் பாடும்
பார்வை அற்றவனில் பாடலை கேட்டு
கடந்து செல்.
உன் நிலை கண்டும்
மற்றொருவன்
கவிதை எழுதக் கூடும்,
அப்போது நீ
இயல்பானவனாக மாறி இருப்பாய்

Major version 21
Minor version 4
Hot fix 3
Jet fix 1,00,00,000

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d

மாணவன்

உடல் முதல் உலகம் வரை உள்ளதை கொண்டால் உடல்கண்ணால் காணப்படுவதும், அழிவதுமாகவும் இருக்கிறது.  உலகம் அழியாப் பொருளாக இருக்கிறது.எனவே காட்சி மட்டுமே முதன்மை எனும் உலகாயதர்களின் வாதத்தை எவ்வாறு மறுப்பது?

 

ஆசிரியர்

கண்ணால் துய்து உணரும் பொருளையே உலகாயதர்கள் கொள்கின்றனர். காணப்படும் பொருள்கள் ‘தனித்தன்மை மற்றும் பொதுத்தன்மை’ ஆகிய இருவகையில் உணர்த்தப்படும். இக் குடம் இன்னகாலத்தில், இவனால், இந்த மண் கொண்டு இவ்வாறு செய்யப்பட்டது என்பது பொதுத்தன்மை. சிறுகுடம், பெருங்குடம், மண்குடம் போன்ற தனித்தன்மையாலும் விளக்கப்படும். பொதுத்தன்மை உணர காட்சித் தேவையில்லை. தனித்தன்மையை உணர மட்டுமே காட்சித் தேவை.

எனவே காட்சி தனித்தன்மையாகிய காணப்பட்ட பொருளை நோக்கி நிற்கும். பொதுத்தன்மை  அதனொடு ஒத்த அனைத்து பொருள்களையும் பற்றி நிற்கும். அவ்வகையில் தோன்றிய சில உடம்பில் சில் உடனே அழிகின்றன. ‘சில காலம் நின்று’ சில உடல்கள் அழிகின்றன. நிற்றல் நிலை காணப்படும் அனைத்து பொருள்களுக்கும் (குறுகிய காலம் மற்றும் நெடுங்காலம்) இருப்பதால் உலகம் தோன்றி அழியக்கூடியது.

மாணவன்

பொதுத்தன்மையினை முன்வைத்து உடல் என்பதும் உலகம் என்பது வெவ்வேறானவை. ஒத்தப் பொருள்கள் மடுமே பொதுத்தன்மையால் பொருந்தும், அவ்வாறு இல்லாமல் பொதுத்தன்மை உடையவைகள் எவ்வாறு ஒவ்வாத பொருள்களுக்கு பொருந்தும்?

 

ஆசிரியர்

ஒத்திருத்தலில் அதன் தன்மைக்கேற்றவாறு சிறிது ஒத்திருத்தல், பெரிதும் ஒத்திருத்தல் எனும் இரு நிலைகள் காணப்படுகின்றன.  எனவே உடலும் உலகமும் பொதுத்தன்மையில் ஒன்றாகும். உலகத்தின் தோற்ற ஒடுக்கத்தினை மறுத்தாலும் ‘நிற்றல்’ என்பது வெளிப்படை. ஒத்த பொருளின் தன்மைகளில் உடலும் உலகமும் ஒன்று எனில் உடலைப் போன்றே உலகமும் தோற்ற ஒடுக்கம் கொண்டதாகவே இருக்க வேண்டும்.

 

பூதாதி ஈறும் முதலும் துணையாகப்

பேதாய் திதியாகும் பெற்றிமையின் – ஓதாரோ

ஒன்றொன்றிற் றோன்றி உளதாய் இறக்கண்டும்

அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து               – சிவஞான போதம் சூ1 அதி1

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇரும்பைமாகாளம்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇரும்பைமாகாளம்

 

  • காடுவெளி எனும் வெட்ட வெளியைக் குறிக்கும் கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்ததால், தவத்தின் காரணமாக மழை இல்லை என்று எண்ணி மாது ஒருவளை அனுப்பினான். அவள் உப்பும் காரமும் சேர்த்தஅப்பளத்தை அரச இலை போல் செய்து தை உண்ணச் செய்து அவரின் தவத்தை கலைத்தாள். சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல்     அங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். பஞ்சம் நீங்கப் பெற்றப்பின் நடைபெற்ற திருவிழாவில் அம்மாதுவின் காற் சிலம்பு கீழே விழுந்தது. அந்த நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்ட செயலைக் கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் கோபம் கொண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. மன்னன் மன்னிப்பு கேட்டப்பின் சித்தர் மீண்டும் 1 பாடல் பாட  சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது.மன்னன் சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி வழிபட்டான்
  • மாகாளம் என்ற பெயருடன் விளங்கும் மூன்று சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மற்றவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம்
  • கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்லியதால் அம்பாளின் நாமம் “குயில்மொழி நாயகி’
  • சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டதால். அவர்களை மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்ற இடம்.
  • வீர சைவ மரபில் வந்த மகாகாளர் எனும் மகரிஷி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவன் மகாகாளநாதர்
  • கிரகங்கள் தம் மனைவியருடன் ஒன்றாக இருக்கும் நவக்கிரக சன்னதி
  • நடராஜர், கால் சற்று  கீழே மடங்கியபடி  சந்தோஷ  கோல அமைப்பு
  • விமானம் ஏகதள விமானம்

 

தலம் திருஇரும்பைமாகாளம்
பிற பெயர்கள் இரும்பை மாகாளம், திருவிரும்பை மாகாளம், இருஞ்சேரி , இலுப்பைவனம்
இறைவன் மாகாளநாதர், மகாகாளேஸ்வரர்
இறைவி மதுரசுந்தரநாயகி  குயில் மொழியம்மை
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் மகாகாள தீர்த்தம்
விழாக்கள் மகாசிவராத்திரி , மாசிமகம் , திருக்கார்த்திகை , பங்குனி உத்திரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 00 மணி முதல் இரவு 8 00மணி வரை

 

அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில்

இரும்பை அஞ்சல், வானூர் வட்டம்

கடலூர் மாவட்டம், PIN 605010

+91- 413 – 268 8943, 98435-26601 , 94434-65502

வழிபட்டவர்கள் சுந்தரர் – ஊர்த்தொகை நூல்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், பட்டினத்தார்
நிர்வாகம்
இருப்பிடம் திண்டிவனம் – பாண்டி ( வழி : கிளியனூர் ) சாலை->  திருச்சிற்றம்பலம் கூட்ரோடு -> இரும்பை சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 274 வது தலம்

தொண்டை நாட்டுத் தலங்களில் 32  வது தலம்.

மாகாளநாதர்

மாகாளநாதர்

குயில் மொழியம்மை

 

குயில் மொழியம்மை

 

புகைப்படம் : தினமலர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         2

பதிக எண்         117

திருமுறை எண்    9

 

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி

எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்

இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்

மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.

 

பொருள்

 

மார்க்கண்டேய முனிவரொடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவனும், இராவணன் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விருப்பமாக உறையும் இடம் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

 

கருத்து

 

அட்ட – மார்க்கண்டேய முனிவரொடு போராடிய,

எட்டும் இருபத்திரண்டும்(8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்

மட்டு – தேன்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         2

பதிக எண்         117

திருமுறை எண்    10

 

பாடல்

 

அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி

பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்

குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்

மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

 

பொருள்

 

நாகத்தை தன் இடையில் அணிந்தவரும், தீயினை கையினில் ஏந்தியவரும், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்ததும், பிரமன், மால் ஆகியோரால் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்றதும்,வானோரும் மறையோரும் தொழும் இடம் பெரியோனின் திருமாகாளமாகும்.

 

கருத்து

ஆர்த்து – கட்டி ((ஆர்த்த பிறவி துயர் கெட..),   குரவம் – குராமரம் (மலைவசம்பு அல்லது குரவகம்)

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அனிச்சை நிகழ்வுகள்

அனிச்சை நிகழ்வுகள்_VV

எப்பொழுதாவது தான் நிகழ்கிறது
வாங்கும் ஒன்பதாயிரத்து சொச்சத்தில் மீதம்.
உடைந்து போன கைக்கடிகாரம்
மாற்றாமல் அலையும் கணவனுக்காக
வாங்கத் துடிக்கிறது மனசு ஒன்று.
போன முறை நல்லியில் பார்த்து வந்த
பச்சையும் சிகப்பு பார்டரும் வைத்த
காஞ்சி காட்டனை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
‘ரங்கநாதன் வீதியில்
சில ஆயிரங்களில் பார்த்து வந்த
கம்மலையும் கழுத்து மாலையையும்
வாங்கித் தருகிறாயா’
என்னும் மகளின் வார்த்தைகளை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
அம்மாவுக்கு குக்கர்  வாங்கித் தருவதாக
சொன்னதை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
காலம் அறியாமல் வந்து நிற்கும்
உறவின் திருமணத்திற்கு
பரிசு வாங்க வேண்டும் என
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
வேர்வை படிந்த ஈர உடைகளுடன் மகன் வந்து
‘விஜய் போட்டிருக்கும் ஷு மாதிரி வாங்கித் தருகிறாயா?’
என்கிறான்.
இயல்பாய் புன்னகை செய்வதை விட

என்ன செய்துவிட முடியும் மத்யமரால்.

புகைப்படம் :  Vinod Velayutham.

இது எனது 400 வது கவிதை.

எனது நெருக்கமான தோழிகளில் சிலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களே இது. கட்டமைப்பு மட்டுமே படைப்பு.
தேவைகளின் பொருட்டு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் உலகளாகிய அனுபவம் பெறுகிறாள். ஆணின் மிகப் பெரிய வலிகளை எல்லாம் பெண்கள் சர்வ சாதாரணமாகக் கடக்கிறார்கள்.  கடந்து செல்லும் எல்லா பெண்களின் கண்ணிலும் உப்பு நீர் படிந்தே இருக்கிறது. மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் அதைக் காட்டுகிறார்கள். மற்றவர்களிடம் அது மாயப் பூச்சாகவே இருக்கிறது. அதன் பொருட்டே இக்கவிதை.
இக் கவிதைகளில்  அதன் அடி ஆழத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதே நிதர்சனம். எல்லா கவிதைகளுக்கு பின்னும் அதன் அடி நாதம், வலி, வேதனை, சந்தோஷ சிறகசைப்புகள், கிழக்கும் மேற்கும் செல்லும் மனநிலை, மெய் தீண்டல்கள், துரோகங்கள், பரிகசிப்புகள், ஏமாற்றங்கள், அதன் பொருட்டான அனுபவங்கள். தாலாட்டுகள், கவிதை பரிமாற்ற அனுபவங்கள், அதன் பொருட்டான கோபங்கள், பின்னொரு புன்னகைக் காலங்கள் என பலவும் இக்கவிதைகளின் வழி கடந்திருக்கிறேன்.
கடந்திருக்கிறேன் என்பதே கடந்ததை குறிக்கிறது. வேறு என்ன இருக்கிறது மத்யமராய் வாழ்வதைத் தவிர.



Loading

சமூக ஊடகங்கள்

தெளிவுறு சித்து

தெளிவுறு சித்து_KP
தடைபடா மௌனத்தில்
ஒடுங்குமிறது
நாதமும்
* தெளிவுறு சித்துதெளிந்த சித்தம்திருமந்திரம் 1064
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅரசிலி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅரசிலி
·   அரச மரத்தை இறைவன் வீடாக கொண்டமையால் திருஅரசிலி(திரு+அரசு+இல்)
·   ருத்ராட்ச பந்தலின் கீழ் மூலவர் சிறிய பாணம், தாழ்வான ஆவுடையார்; தலையில் அம்பு பட்ட தழும்பு
·   மகர தோரணத்தில் தட்சிணாமூர்த்தி காலடியில் உள்ள முயலகன் இடதுபுறம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தவாறு காட்சி
·   வாம தேவர் எனும் முனிவருக்கு அரச மரத்தடியில் சுயம்புவாக காட்சி கொடுத்து சாபம்  விலக்கிய திருத்தலம்.
·   சத்திய விரதன் எனும் மன்னனுக்கு புத்திர பாக்யம் தருவதற்காக மான் வடிவில் காட்சி தந்து, அம்பு வாங்கி,  பின் மறைந்து லிங்க வடிவ காட்சி கொடுத்த இடம்.
·   வடிவமைப்பு –  சாளுவ மன்னன்
 
தலம்
திரு அரசிலி
பிற பெயர்கள்
ஒழுந்தியாப்பட்டு
இறைவன்
அரசிலிநாதர் ( அஸ்வத்தேஸ்வரர் , அரசலீஸ்வரர் )
இறைவி
பெரியநாயகி ( அழகியநாயகி )
தல விருட்சம்
அரசமரம்
தீர்த்தம்
வாமதேவ தீர்த்தம் ( அரசடித்தீர்த்தம் )
விழாக்கள்
வைகாசி விசாகம் 10 நாட்கள், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை,
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு – அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் -605 109
04147 – 235472,295376, 9994476960
வழிபட்டவர்கள்
வாமேதவ முனிவர், சாளுக்கிய மன்னனான சத்தியவிரதன்,இந்திரசேனன், இந்திரசேனனின் மகள் சுந்தரி
பாடியவர்கள்
சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்
திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவு, புதுச்சேரியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
திண்டிவனம் – பாண்டி சாலையில் ( வழி : கிளியனூர் ) தைலாபுரம் தாண்டி , ஒழுந்தியாப்பட்டு செல்லும் இடப்புற சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
திருவக்கரையில் இருந்து பாண்டி செல்லும் சாலை ( வழி : மயிலம் , வானூர் ) , திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு -> திண்டிவனம் சாலை -> கீழ்ப்புத்துப்பட்டு செல்லும் வலப்புறப்பாதை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 273 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 31 வது தலம்.
அரசலீஸ்வரர்
அரசலீஸ்வரர்
பெரியநாயகி
பெரியநாயகி
புகைப்படம் : தினமலர்
 
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   8            
பாடல்
வண்ண மால்வரை தன்னை
மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
அடிகளுக் கிடமர சிலியே.
பொருள்

தான் பயணிக்கும் போது குறிக்கிட்ட அழகிய கயிலை மலையை புரட்ட  முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்ணும் தோளும் நல்ல வாயும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

கருத்து
வண்ணமால்வரை-கயிலைமலை.
இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.
பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   9            
பாடல்
குறிய மாணுரு வாகிக்
     குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
     விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
     தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
     அடிகளுக் கிடமர சிலியே. 
பொருள்
குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம்அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.
கருத்து
குறிய மாணுருவாமனாவதாரம்
வெறிமணம்.
மெய்த்தவத்தோன்பிரமன்.
செறிவு ஒணாசெறிதல் ஒன்றா.
செறிதல்பொருந்துதல்.
அறிவொணாவுருவம்ஐம்பொறிகளாலும், மனதாலும் அறிய இயலா ஞானசொரூபம்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 2

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks
பயன்படுத்தப்படும் வழி முறைகள்
“சொரம் அடிக்குது ஒரு கோரசனை மாத்திர சாப்பிடு” எனும் பாட்டியின் நாட்கள் மலையேறி விட்டன. நீடித்திருக்கும் கால அளவுகளுக்கு ஏற்ப Continuous fever, Remittent fever, Pel Ebstein fever, Intermittent fever, Septic fever என ஜுரத்தின் பெயர்கள் மாறுகின்றன.
சார், உங்களுக்கு  spinal cord  பிராபளம். ஒன்னும் கவலைப்படாதீங்க, ஒரு சின்ன ஆப்பரேஷன். L1,L2, L5 இதுல எல்லாம் கைய வைக்க மாட்டோம். Just ஒரு சின்ன கீறல். L3, L4 மட்டும் modify பண்ணிடலாம். அவ்வளவுதான்.
சார், நான் Type A ஜுரம் மட்டும் தான் பார்ப்பேன், Type B ன்னா நீங்க வேற டாக்டர பாருங்க என்பது போன்றது தான் இந்த மரபணு மாற்ற ஆராய்ச்சிகள்.
உதாரணத்திற்கு கத்திரியினை எடுத்துக் கொள்ளலாம். குருத்து மற்றும் காய்த்துளைப்பான், தண்டு துளைப்பான், ஹட்டா / புள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டு, பழுப்புத் தத்துப் பூச்சி, கண்ணாடி இறக்கைப் பூச்சி போன்ற பல்வேறு பூச்சி தாக்குதல்கள் நடக்கலாம்.
நாங்க சோதனை செய்யறது காய்த்துளைப்பான் மட்டும் தான். மத்த பூச்சி தாக்குதல்கள் பற்றி எங்ககிட்ட கேட்காதீங்க. இப்படியாகத்தான் இருக்கிறது ஆராய்ச்சிகள்.
Polymerase Chain Reaction (PCR) Analysis
A single copy or a few copies of a piece of DNA across several orders of magnitude, generating thousands to millions of copies of a particular DNA sequence.


ஒரே ஒரு DNA ல் இருந்து லட்சக் கணக்கான அதே மாதிரியான DNA க்கள் பெருக்கம் செய்யப்படும்.
Restriction fragment length polymorphism (RFLP)

It analyzes the length of strands of DNA that include repeating base pairs.


ஆராய்ச்சியின் பொருட்டு ஒத்த அமைப்புடைய தொடர் DNA க்கள் எடுத்துக்கொள்ளப்படும். இழைகளாக இருக்கக் கூடிய அமைப்புகள் சார்ந்ததும் அவைகளின் மீட்சி ஆக்கமும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுதல்

Short Tandem Repeat (STR) analysis.
 

It can start with a much smaller sample of DNA. Scientists amplify this small sample through a process known as polymerase chain reaction, or PCR.
இதுவும் மேல் குறிப்பிட்டது போல் தான் என்றாலும், இம் முறை மிகச் சிறிய அளவிலான DNA மாதிரி வடிவங்களில் இருந்து பெறப்படும். ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி போன்ற முறை இது.
கீழ்கண்ட முறைகளும் உள்ளன. அவைகளின் முழு முறை செய்பாடுகள் இன்னும் சோதனை அளவிலே உள்ளன.
Mitochondrial DNA Analysis
Y-Chromosome Analysis
மருத்துவத்துறை உடலில் கத்தி வைக்கிறது. மரபணு மாற்றம் உலகில் கத்தி வைக்கிறது. சர்க்கரை நோயாளியின் ரணங்கள் போல மண்ணின் ரணங்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கின்றன.
புகைப்படம் : R.s.s.K Clicks
தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

வல்வினைக் காடு

வல்வினைக்காடு

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – காற்று
அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
என்னைத் தெரியவில்லையா?’ என்கிறது
விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறதுஎன்கிறேன்.
செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழிஎன்கிறது.
யார் நீ?’ என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள்நானே வாலை‘.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.
*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து
 

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 4

உமாமகேஸ்வரஸம்வாதம்

உமை :  நான்கு வகையான வழிமுறைகளானபிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

 

சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும்  முக்கியமானதும்ஆகும். நீராடுதல், தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல், தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல், விருந்தினர்களை உபசரித்தல், மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல், பெரும்  துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவை முக்கிய தர்மங்கள்.

மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல்,  சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும்  உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள்.

வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும்  யாசித்து  உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன்  இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று  கொண்டு இருத்தல் போன்றவை  சந்நியாசியின் தர்மங்கள்.

 

உமை :  இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.  அது குறித்து விளக்க வேண்டும்.

 

சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும்.  உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில்  வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி – என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும்.  விருந்தினர்களை  அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு  அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள்.

வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ  சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல்  ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம்.

 

உமை :  மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

 

தொடரும்..

 

*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

 

புகைப்படம் : இணையம்

 

Loading

சமூக ஊடகங்கள்

சோளக்கொல்லை பொம்மை

சோளக்கொல்லை பொம்மை_KarthikPasupathy
காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
‘மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது’ என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

IT – தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 5

தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள்_KP

2015 
ஆண்டு கணக்குப்படி ஆண்டு ஒன்றுக்கு 5.8 மில்லியன் பட்டதாரிகள் இருப்பில் உள்ளவர்களுடன் (வேறு எப்படி சொல்ல முடியும்சேர்க்கப்படுகிறார்கள்.
உலக சந்தையினை முன்வைத்து(அமெரிக்கா என்றே கொள்ளலாம்செலவுகள்  என்பது 3 – 4 மடங்கு வரை குறைவு
இதனால் தான், வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் I.T நிறுவனங்கள் தாராளமயமாக்கலுக்கு பிறகு இங்கு தடம் பதித்தன. சராசரியாக 45% முதல் 50% வரையில் அனைத்து திட்டங்களையும் முடித்து விடமுடியும். மற்றவை லாபம் தான். லாபத்தில் குறையும் போது தான் நிறுவனங்கள் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லு ஜல்லியடிக்கின்றன.(நன்றி சுஜாதா சார்)
நாஸ்காம் வெளியிட்டுள்ள  மார்ச்2016 அறிக்கையின் படி தகவல் தொழில் நுட்பத் துறை எந்த வித ஏற்றம், இறக்கம் இல்லாமல் $118 பில்லியன் அளவிலே இருக்கும். வளர்ச்சி விகிதம் 11.5% – 12.0% மட்டுமே.இது எதிர்பார்க்கப்பட்ட 13% – 15% வளர்ச்சியைவிட குறைவு.
தெளிவான திட்டமும் நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வரவு செலவு திட்டம் ஆண்டு ஒன்றுக்கு 11.7%. உலக நாடுகள் இதற்கு 1% மட்டுமே செலவழிக்கின்றன.
மாறி வரும் நாணய மதிப்பு, நிலையற்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் இத் துறையை மிக வேகமாக கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் நாஸ்காம் தனது 2016 – 2017 ஆண்டிற்கானஏறுமதி வளர்ச்சியினை 12% முதல் 14% இருந்து 10% முதல் 12% ஆக குறைத்துள்ளது.
வரும் 2017ம் ஆண்டு கணக்குப்படி இந் நிறுவனங்கள் 30% வரை  பாதுகாப்பு மற்றும் இணக்கம் (security and compliance) ஆபத்துக்கால வரவு செலவு திட்டதிற்காக செலவழிக்க இருக்கின்றன. 10% ஆட்கள் இந்த பாதுகாப்பு செய்பாடுகளுக்காக செயல்படுவார்கள். இது 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.
தன்னிடம் உள்ளவர்கள் இத்தனை பேர் இத்தனை விதமான சான்றிதழ்(certification)  பெற்றிருக்கிறார்கள் என்பது போன்று நிலைப்பாடுகள் கொண்ட நிறுவனங்களும் உண்டு. அவர்களுக்கு வேலை உண்டோ இல்லையே அவர்களுக்கு தரப்படும் விலை மிக அதிகம். இதை இங்கே குறிப்பிடக் காரணம் மிக மிக அதிகமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்.
இது இத்துறை சம்மந்தமான ஒரு பொதுவான பதிவு மட்டுமே. இங்கு யாரும் வேலை பார்க்கக் கூடாதா என்பவர்களுக்கு என் பதில்.
 
·   நீங்கள் சுமாராக 7 முதல் 10 வருடம் மட்டுமே இத்துறையில் வேலை பார்க்க முடியும். அதுபற்றி கவலை இல்லை எனில் இத்துறையையில் சேரலாம்.
·   மிகச் சிறந்த அறிவாளி, என்னால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சேரலாம்.
· வருங்காலத்தில் எத்தனை பெரிய வியாதி வந்தாலும் கவலை இல்லை, எனது குடும்பம் என்னை கவனித்துக் கொள்ளும் என்பவர்கள்  சேரலாம்.
·   இது எதுவும் சரியாக வராது, ஆனால், என்னால் மிக அதிகமாக சொம்பு தூக்க முடியும் என்பவர்கள் சர்வ நிச்சயமாக நீண்ட கால நோக்குடன் இத் துறையே தேர்ந்து எடுக்கலாம். ஏனெனில் மகுடம் உங்களுக்குத் தான் காத்திருக்கிறது.
முற்றும்.

புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 3

உமாமகேஸ்வரஸம்வாதம்
உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான  கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?
 
சிவன் :  உலகில் குளிர்ச்சி, வெம்மை போன்று இருமைகள் இருப்பதால், அதைச் சார்ந்த உயிர்கள் சந்திரன் போன்று குளிர்வும், சூரியன் போன்று வெம்மையும் உடையதாக இருக்கின்றன. விஷ்ணுவானவர் குளிர் பொருந்திய வடிவம் உடையவராக இருக்கிறார். நான் வெம்மை பொருந்திய வடிவில் நிலையாக இருக்கிறேன். உக்கிர வடிவமும், சிவந்த கண்களும், சூலமும் கொண்ட இந்த தேகத்தால் எப்பொழுதும் உலகினைக் காக்கிறேன். இந்த ரூபம் உலகின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது. வேறு வடிவம் கொண்டால் உலகின் இயக்கங்களில் தடுமாற்றம் உண்டாகும். அதன் பொருட்டே இவ்வடிவம்.
 
உமை :  நீங்கள் சந்திரனை பிறையாக அணியக் காரணம் என்ன?
 
சிவன் :தட்ச யாகத்தின் பொருட்டு கோபமுற்று இருந்தேன். அதனால் தேவர்கள் என்னால் துரத்தப்பட்டார்கள். என்னால் உதைக்கப்பட்டும் கூட சந்திரன் என்னிடத்தில் நல்வார்த்தை பேசி என்னிடம் வேண்டிக் கொண்டான். அன்று முதல் சந்திரனை என் தலையில் அணிந்து கொண்டேன்.
 
இதன் பிறகு பல விதமான துதிகளால் ரிஷிகளும், முனிவர்களும் ஈசனையும், உமா தேவியையும் துதித்தனர்.
 
உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

உமை :   இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.
தொடரும்..

              *வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
               புகைப்படம் : இணையம்
 

Loading

சமூக ஊடகங்கள்