வல்வினைக் காடு

வல்வினைக்காடு

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – காற்று
அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
என்னைத் தெரியவில்லையா?’ என்கிறது
விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறதுஎன்கிறேன்.
செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழிஎன்கிறது.
யார் நீ?’ என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள்நானே வாலை‘.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.
*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து
 

Loading

சமூக ஊடகங்கள்

2 thoughts on “வல்வினைக் காடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *