கவலைகள் – உடல் நலம் சார்ந்து
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் அவைகளின் பரிசோதனைக்கு தகுந்த அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. (குறுகிய கால அளவு பக்க விளைவுகள் மற்றும் நீண்ட கால பக்க விளைவுகள்)
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ‘ஏம்பா அந்த 19வது குரோமேசோமை எடுத்து நமக்கு தகுந்த மாதிரி மாத்தி சேமித்துவிடு, எதுவும் ஆகாது’ . அதாவது. It is only unit testing. It is not complete testing.
மாற்றப்பட்ட பதிவுகள் உடைய டி என் ஏ மூலக்கூறுகள், பயிர்கள்/உயிர்கள் ஆகியவற்றில் நிலையற்ற தன்மை உடையனவாக இருக்கின்றன. இந்த நிலையற்ற தன்மை அது செல்லும் இடம் எங்கும் சென்று அதன் தொடர்ச்சியாக தோற்றுவிக்கப்படும் டி என் ஏவிலும் நிலையற்ற தன்மையை உண்டாக்குகிறது.
இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உட்கொள்ளும் விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்புகள், இரைப்பை மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு, விரைவாக முதுமை தன்மை அடைதல், மற்றும் மலட்டுத்தன்மை அடைதல் போன்றவைகளால் பாதிக்கப்படுன்றன.
Allergies ஒவ்வாமைக்களுக்கு (Allergies) அடிப்படையான காரணம்
இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள்/உணவுகள் மிக அதிக அளவில் உடலில் எதிர்பாரா பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவின் DNA மூலக்கூறுகள் நம் உடலில் தங்கி அதன் சுவடுகள் கர்ப்பிணி பெண்ணில் கருவரை வரையில் நீள்கின்றன.
இவ்வாறான பயிர்களை உட்கொள்ளும் சோதனை விலங்குகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அமெரிக்காவில் 1996 ஆண்டு கணக்குப்படி மரபணு மாற்றம் காரணமாக மூளைக் குறைபாடுகள், இனப்பெருக்க குறைபாடுகள், உணவு செரிமானக் கோளாறுகள் போன்றவைகள் 7% இருந்து 13% ஆக உயர்ந்திருக்கிறது.
இது உணவு சுழற்சி மற்றும் உணவு சங்கிலி தொடரில் பாதிப்பதால் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கண்கூடு.
இங்கு குறிப்பிடபட்டுள்ள செய்திகளை உவமையில் கூறவேண்டும் எனில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட கூஜா நீர் அளவு மட்டுமே.
புகைப்படம் : R.s.s.K Clicks