ஆதி மௌனம்

%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

புகைப்படம் : இணையம்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – ஆகாயம்

 

யாருமற்ற இரவொன்று;
விளக்கு சுடர் மற்றும் பிரகாசிக்கின்றது.
இரவின் உறக்கம் கலைத்து
வான் முழக்கம் அருகினில்.
தோழியராய் இரு பெண்கள் அருகினில் வருகிறார்கள்.
யார் என்று வினவுகிறேன்.
நாங்களே சித்தி புத்தி;
‘பர நாதம் பரவி இருக்கும் ஆகாயமே எங்கள் நாதன்.
அவரே எம் கணவர் ஹிரண்ய கணபதி” என்கிறார்கள்.
‘சாஸ்வதமான வாக்கினை கேட்க விரும்புகிறேன்” என்கிறேன்.
‘இறப்பே சாஸ்வதம்’ என்கிறார்கள்.
விக்கித்து நிற்கிறேன்.
‘ஆகாயமும் நாதமும் தொப்புள் கொடி உறவானது
எழுத்துக்களை சொற்களாக்கி
சொற்களை வார்த்தைகளாக்கி
வார்த்தைகளை வாக்கியமாக்கி
ஆகாயத்தில் இருந்து
அடிநாத மௌனம் காண்’ என்கிறார்கள்
பின்னொரு பொழுதுகளில்
ஆதி மௌனம் படரத் தொடங்கி இருந்தது.

 

 

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *