மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்
Photo & Click by : Prakash Thiagarajan
![]()
உருவேறத் திருவேறும்
![]()
![]()
![]()
![]()
செந்தாழம் பூவில்
![]()
முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
பாடல்
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73
பொருள்
ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.
கருத்து
· மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o போதல், வருதல்
o இரவு, பகல்
o புறம், உள்
· வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
· வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
· இது மனதினை லயப் படுத்துகிறது. – ஜப கோடி த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
· எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது
2.
பாடல்
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96
பொருள்
முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.
கருத்து
மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.
![]()
![]()
—————————————————————————————————
![]()
![]()
—————————————————————
![]()
ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.
![]()
![]()
![]()
![]()
போகிப் பண்டிகை
பொது – பழைய பொருள்களை மற்றும் தேவை அற்ற பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை
ஆன்மீகம் – பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை அல்ல. அது ஒரு உருவகம். தன்னில் இருக்கும் தேவை அற்ற நினைவுகளை, மன கசப்புகளை, கோபங்களை, வருத்தங்களை இன்னும் பிற விஷயங்களை நீக்கி ஒரு புதிய தொடக்கத்திற்கான தொடக்கம் காட்டும் பண்டிகை.
புகை இல்லா போகிக் கொண்டாடி ஒரு வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டுவோம்.
Click by: Gayu Venkat
![]()