2038 – செயற்கை கண்திரை – Artificial Retina

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


Artificial Retina Brings Light to Blind – News
1.
அந்த தென்றல் சீரியல வர வர சரியாவே தெரியல. 1288 episode 14-11-14. அன்னைக்கு பாத்தேன். அப்புறம் சரியா தெரியல. இந்த ஆப்பரேஷன் பண்ணா ஒழுங்கா தெரியுமா டாக்டர்?
2.
சார், இதெல்லாம் ரொம்ப ஓவர் சார். பொண்டாட்டி பேச்ச ‘Blind கேட்டுட்டு இந்த ஆப்பரேஷன் பின்னாடி கண்ணு தெரியுமான்னு கேட்டா எப்படி சார்?
3.
சரி சார். ஒத்துக்கிறேன்.. Argus II design consists of an external video camera. அதுக்காக வீடியோ வாடகைக்கு எல்லாம் விட முடியாது சார்.
4.
சார் இதெல்லாம் ரொம்ப ஒவர் சார். Artificial retina operation ஆன பிறகுதான் உங்க கம்பெனிக்கு ‘Vision’ என்னன்னு சொல்லுவேன் சொல்றது ரொம்ப ஓவர் சார்.
5.
இந்த ஆப்பரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு கண்ணு தெரியும் அம்மா. ஆனா உங்க புருசன் எங்க எங்க காசு வச்சி இருக்கார்னு கண்டுபிடிக்க முடியாது அம்மா.

Loading

சமூக ஊடகங்கள்

நாற்றம்

காகித மலர்களுக்கு
வாசனை இல்லை
தன்னைத் தவிர.











* நாற்றம் – மணம்
புகைப்படம் : விவேக்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்

  பஞ்சபூத தலங்களில் – பிருத்வி – நிலம்
  மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் கிடையது
  இறைவி கம்பை மாநதியில் நீர் பெருக்கெடுத்து வந்ததால் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டதால் தழுவக் குழைந்தநாதர்
  சிவன் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் அணிந்திருக்கிறார்
  பிரகாரத்தில் பிரம்மா பூசித்த இலிங்கம் – வெள்ளக்கம்பம், விஷ்ணு பூசித்த இலிங்கம் – கள்ளக் கம்பம், உருத்திரர் பூசித்த இலிங்கம் –  கள்ளக் கம்பம்
  108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி, இத் திருக்கோயில் உள் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது.
  இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை கொடுத்தருளிய தலம்.
  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம்
  சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்
  தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி
  ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்கள் பிரகாரத்தில்
  கச்சியப்ப சிவாச்சாரியார்  “கந்த புராணத்தை’ இயற்றிய தலம்.
  கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னால் உள்ளது.
  172 அடி உயரமுள்ள இராஜகோபுரம்
 
இத்தலத்தைப்பற்றிய நூல்கள்
·திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் – காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர்  – காஞ்சிப்புராணம்,
·கச்சியப்பமுனிவர் – கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூது,
·இரட்டையர்கள் –  ஏகாம்பர நாதர் உலா
·பட்டினத்துப்பிள்ளையார் – திருவேகம்ப முடையார் திருவந்தாதி,
·மாதவச்சிவஞான யோகிகள் – ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர், ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி
சிறப்பு செய்யும் நூல்கள்
மணிமேகலை,  
தக்கயாகப் பரணி
மத்தவிலாசப்பிரகசனம் 
தண்டியலங்காரம்
பன்னிரு திருமுறைகள்
 
தலம்
ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம்
பிற பெயர்கள்
திருக்கச்சியேகம்பம்
இறைவன்
ஏகாம்பரநாதர், தழுவக் குழைந்தநாதர், ஏகாம்பரேஸ்வரர், திருவேகம்பர்
இறைவி
ஏலவார்குழலி
தல விருட்சம்
மாமரம்
தீர்த்தம்
சிவகங்கை தீர்த்தம், கம்பாநதி
விழாக்கள்
பங்குனி உத்திரம், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.
+91- 44-2722 2084.
வழிபட்டவர்கள்
உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 4 பதிகங்கள், திருநாவுக்கரசர் – 7 பதிகங்கள்,  ,  சுந்தரர் – 1 பதிகங்கள், மாணிக்கவாசர் *
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 233 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   1 வது தலம்.
*சில நூல்களிலும் வலைத்தளங்களிலும் மாணிக்கவாசகர் பாடியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணிக்க வாசகரின் பாடல் வரிகளில் இத்தலம் பற்றிய குறிப்பு உள்ளதே தவிர தனி பாடல் இல்லை.
 
 
ஏலவார் குழலம்மை உடனாகிய  ஏகாம்பரேஸ்வரர் 
 
 
 
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    2 ம் திருமுறை 
பதிக எண்                   12
திருமுறை எண்              8
பாடல்

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
பொருள்
தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.
கருத்து
 
சர்வஞ்ஞத்வம் குற்றம் அற்றவனும், அனைத்தையும் இயக்கும் வல்லமை உடையவன் என்ற சைவசித்தாந்த கருத்து சிந்திக்கக்கூடியது.
ரென்றலை மேலாரே – என்னால் வணங்கப்படுவர்கள் எனும் பொருளில்
 
 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    61
திருமுறை எண்               1
பாடல்
 
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
பொருள்
பாற்கடல் கடையும் பொழுது அதில் வந்த நஞ்சினை விரும்பி உண்டவனும் அமுதத்தை தேவர்களுக்கு அளித்தவனும், எல்லோருக்கும் முதல்வனாக இருப்பவனும், தேவர்களால் துதிக்கப்படும் பெருமை உடையவனும், நினைப்பவர்கள் நினைவில் உள்ளவனும், நீண்ட கூந்தலை உடைய உமையால் தினமும் துதிக்கப்படுபவனும், காலங்களுக்கு முடிவானவனாகவும் ஆகிய எம்மானை காண அடியேன் கண் பெற்றவாறே.
கருத்து
‘வியப்பு’ என்பது சொல்லெச்சம்
‘சீலம்’ என்பது  குணம்
 
புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 10/25 அர்த்தநாரீஸ்வரர்

வடிவம்
 
சிவனின் உருவத் திருமேனி
சிவனும் சக்தியும் இணைந்த வடிவம்
வலது புறம்சிவன்
இடது புறம்பார்வதி
வலது புறம்சிவன்
இடது புறம்பார்வதி
தலை
கரண்ட மகுடம்
நெற்றி
அரைத்திலகம்
கைகள்
அபயமும், பரசும் அல்லது
வரதமும், சூலமும் அல்லது
மழுவும், அபயமும் அல்லது
சூலமும் அக்கமாலையும் அல்லது
ஒரு கை இடபத்தின் தலையின் மீது ஊன்றியவாறும், மற்றொன்று அபயம் தாங்கியவாறு
இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் சிவனின் பாகத்தில் வரதம் அல்லது கபாலம்
சிவன் வலது புறம் மூன்று கரங்கள் பெற்றிருந்தால் இடது புறம் தேவி ஒரு கரம் மட்டும் –  கண்ணாடி, கிளி, நீலோத்பலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
கரங்களில் கேயூரம், கங்கனம்.
அர்த்தநாரீஸ்வரர் படிமம் இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் இடது கை தொங்கவிட்டவாறு  அல்லது இடபத்தின் மீது தொட்டவாறு இருக்கும்.  
மேலாடை
புலித்தோலாடை
இரத்தினங்களினாலான ஆபரணங்கள் 
நாகயக்ஞோபவீதம், நாகத்தினாலான சர்ப்பமேகலை
கோலம்
சற்று வளைந்து தேவியின் உயரத்திற்கேற்ப பத்மாசனத்தில் நின்றவாறு இருக்கும்
பத்மாசனத்தில் நின்ற கோலம்
தோற்றம்
கோரம்
சாந்தமான தோற்றம்
வண்ணம்
சிவப்பு வண்ண மேனி
கிளிப்பச்சை அல்லது அடர்ந்த நிறம்
 
இதரக் குறிப்புகள்
 
வடமொழியில் அர்த்தநாரீஸ்வர துதி என்று ஒன்று உள்ளது.
விளக்க நூல்கள் – அம்சுமத் பேதாகமம், காமிக்காகமம், சுப்ரபேதாகமம், சில்பரத்னம், காரணாகமம்
புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages – 3

கலர் கலரான கனவுகளுடன் உள்ளே நுழைகிறார்கள்.
 
முதல் சில வாரங்கள்
 
HR – இதுல நம்ம Company பத்துன எல்லா விஷயமும் இருக்கும். பாருங்க. வேற doubt னா கேளுங்க. We are ready to help you at any time.
 
Manager : Guys, See me a for a min. This is Mr/Mrs. Joined in our team. He/She did her degree bloaa bloaaa etc.,
 
மதிய உணவு இடைவேளையில்
Mr.x :  Hi I am …from (Native).
Mr. Y : Great ya. I am also from (native).( அவன் தான்டா உனக்கு ஆப்பு வைக்கப்போறான்.)
Mr.x :   Work load எப்டி இருக்கும்.
Mr. Y : பெருசா ஒன்னும் இருக்காது. கொஞ்சம் development  கொஞ்சம் testing. மெயில் அனுப்பிட்டு போய்டே இருக்கலாம்.
Mr.Y : Guys, Mr.x join பண்ணி one month ஆகிடுச்சி. Salary வந்துடுச்சி. So he is going to give treat. I hope he won’t mind if we order for Pizaa. Am I right Mr. X?
Mr.Y : என்ன credit கார்டு வச்சி இருக்கீங்க
Mr.x :  எதுவும்இல்ல.
Mr.Y : எதுவும் இல்லயா?
Mr.x :   இல்ல.
Mr.Y : It has its own plus and minus. என்னோட friend ஒருத்தன் credit card company workல பண்ரான். அவன்ட சொல்லி ஏற்பாடு பண்றேன். உங்க salary எவ்வளவு?? (அடுத்தவன் சம்பளம் என்னங்கறத எவ்வளவு talent ஆ கேக்ரான்)
HR “ உங்க வர அக்டோபர்ல உங்க mid year performance review
Mr.x : நான் என்ன செய்யனும்.
HR “ This is just formality. We are checking whether you are sync with what you defined in review form.
Mr.Y : நெக்ஸ்ட் வீக் லீவு போட்ராத.
Mr.x :   என்ன விஷேம்.
Mr.Y : Annual year end party. We will have drinks. Drinks சாப்டுவீங்கள்ல?( உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த)
Mr.x :    occasionally

Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.

 
 
சம்பளம் தாண்டி முதல் வருடத்தில் வாங்கிய ஷூ, வாட்ச், சர்ட், பேண்ட், பேக் இத்தியாதிகள் போக கடன் Rs. 75000/-(3 credit cards with limit of 25000 each)
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்களின் பிம்பம்

ஒரு மழைக் காலத்தில்
வீட்டிற்கு வெளியே
பெய்யும் மழையினை கவனிக்கையில்
அது தாண்டி செல்லும் ரயில்
ஏதோ ஒரு பிம்பம் உண்டாக்கிச் செல்கிறது.










புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

மௌனத்தின் நிறம்

நீண்ட நாட்கள் ஆயிற்று சந்தித்து என்கிறேன்
பெரு நீர்ப்பரப்பில் சந்திக்கலாம் என்கிறாய்
முழு நிலவினை சாட்சி வைத்து
நினைவுகளும் நிதர்சனங்களும் தொடர்கின்றன.
இருப்பினை விடுத்து
இழப்பினை உறுதி செய்வதா வாழ்வு என்கிறேன்.
புன்னகை வலது மூக்கில் இருக்கும் 
வைர மூக்குத்தி வரை நீள்கின்றன.
சொற்களுக்கு நிறம் இருக்கின்றன என்கிறேன்.
அப்படி எனில் மௌனத்தின் நிறம் என்ன என்கிறாய்.
பிறிதொரு நாளில் இருக்கின்றன
மழையில் நனைந்த
நந்தியாவட்டை செடிகளாய் நினைவுகள்.


புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

குற்றி

யாசம் அற்ற பொழுதுகளில்
வந்து சேர்கின்றன
பெரும் செல்வங்கள்.











குற்றிபசுக்கள் நிற்கும் இடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல்

புகைப்படம் : இணைய தளம் 

Loading

சமூக ஊடகங்கள்

அஷ்ட தசா புஜ துர்க்கை

அஷ்டம்எட்டு
தசபத்து
புஜம்கைகள்
பதினெட்டு கைகளுடன் கூடிய துர்க்கை. ஸ்ரீ மஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை என்ற பெயரும் உண்டு.
அகிலம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது அன்னையின் அருள் கருணை. அதனாலே சித்தி அடைய எண்ணுபவர்களின் முதன்மை தெய்வமாக தாய் இருக்கிறாள். (வாலை, குமரி பின் அன்னை).
அன்னைக்கு என்று பல்வேறு வடிவங்களும் பல்வேறு ஆயுதங்களும் இருந்தாலும், அவைகளால் குறிப்பிடப்படும் அருளள் முதன்மையானது. அது சாந்த வடிவமே என்பதற்கு சான்றாகவே இத் துர்க்கை.
வெகு சில இடங்களில் மட்டுமே 18 கைகளுடன் கூடிய இவ்வடிவம் காணப்படுகிறது.
இவ் வடிவம் சார்ந்த துர்க்கை சைவ மடங்களில் தலையானதும், முதன்மையானதும் ஆன தருமபுரத்தில்(மயிலாடுதுறையில் இருந்து 3 KM ) அமைந்துள்ளது.
மடத்திற்கு வெளியில் மற்றொரு துர்க்கை. அது வேறு துர்க்கைவன துர்க்கை
இது 25வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ கயிலை மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
25வது குருமகா சன்னிதானம் அவர்கள் காளியினை நேரினில் கண்டவர்கள். அவர்கள் ஒரு முறை கல்கத்தா சென்றிருந்த போது காளி, சன்னிதானம் அவர்களிடம் நேரில் பேசி தனது கோபம் முழுவதையும் குறைத்து அருள் வழங்க எண்ணம் கொண்டதாக தெரிவித்தாள்.
அதன்படி இச்சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டு கல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது,
அன்னை வரும் போது பரிவார தேவதைகள் வரமால் இருக்குமா? அவர்களும் அன்னையுடன் புறப்பட்டார்கள். அவர்கள் அம்பாள் முன் மகா மேருவாக (32 பட்டைகளுடன்) அருள் புரிகிறார்கள்.
உத்திராட நட்சத்திரத்திற்கு பரிகார தலம்.
தற்போது திரு. ரமேஷ் குருக்கள் அவர்கள் அம்பாள் பூஜையினை கவனித்து வருகிறார்கள். (அலங்காரம் அழகாகும் வரை விடமாட்டார்). கைப்பேசி : +91-94435-91462
 
 

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages – 2


ஜூலை 2014ம் ஆண்டு நிலவரப்படிதமிழ்நாட்டில்  552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை தோராயமாக 7,50,000 பொறியியல்  மாணவர்கள் வெளிவருகிறார்கள். இதில் 1,00,000 மாணவர்கள் மட்டும் தமிழ் நாட்டில் இருந்து (550 * 180 ( மூன்று பிரிவுகள் என்று கணக்கில் கொண்டு)
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மண்டலங்களுக்கு உட்பட்டு அவைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

College – A, Dept – AA, Practical – AAA, Staff – AAAA, External – B

AAAA:  வாங்க, வாங்க B சார், நல்ல வேள, நீங்க வந்தீங்க இல்லேன்னா Practical ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்.
B :  ஏன் அப்படி சொல்றீங்க, என்னாச்சு?
AAAA:  போன தடவை C காலேஜ்ஜில் இருந்து ஒருத்தன் வந்தான்(மரியாதை குறைவு  கவனிக்க). என்ன என்ன எக்ஸ்பிரினென்ட், அல்காரிதம் எல்லாம் கேட்டு கொன்னுபுட்டான் சார்.  இதனால நம்ம பசங்க மார்க்கே எடுக்க முடியல. First மார்க்கே 70 தான்னா பாத்துகோங்களேன் சார். இவன்லாம் என்ன மார்க தூக்கிட்டா போகப்போறான்இன்னொரு தடவ அவன் காலேஜிக்கு எக்ஸ்டேனலா போகாமலா போயிடுவேன். அப்ப இருக்கு அந்த பசங்களுக்கு.

மாணவனை காப்பாற்றுவதாக நினைத்த நிமிடங்கள் பிரச்சனை ஆரம்பமாகிறது.

காட்சி 1 :
What is this ya? You know, In Google office every 100 meter, there is one refreshment shop is there. நம்ம காலேஜும் தான் இருக்கே. ச்சேய்
காட்சி 2 :
டேய், மச்சான் என்னடா bf ?
bf ??
அட இது கூட தெரியாதா. Breakfast அப்படீன்னு அர்த்தம். Just 2 பப்ஸ்(pups, puff.. தெளிவா சொல்லுங்கடா) அப்புறம் 1 coke. That’s all. (அட கம்மனாட்டிகளா)

காட்சி 1 ம் காட்சி 2 ம் தொடர்புடையவை.



Placement office:
சார், இந்த பையன் எப்படி செய்திருக்கிறான் சார்?
சுமாராதான் செய்திருக்கிறான் .
சார், பையன் நல்ல பையன் தான். டேய் தம்பி சாருக்கு ஒரு ஜூஸ் எடுத்துகிட்டுவா. அதனால நல்ல பையன் தான் சார், 8.4 வச்சிருக்கான் சார். இந்த டயத்ல அவனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போயிடுத்து. கொஞ்சம் பாத்து செய்ங்க சார்.

மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி (2014), சுமாராக 20% சதவீத மாண்டவர்கள் முதல் வருடத்தில் வேலையில் சேருகிறார்கள். (அதாவது 20000 மட்டுமேசென்ற வருட மாணவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை). அடுத்த வருடத்தில் அது 40000 ஆக ஆகிறது. அதோடு நின்றுவிடுகிறது.

அதாவது அவன் வேலைக்கு சேரும் பொழுதுகளில் 40000 இருந்து ஒருவனக தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வேதாளம் கட்டுப்பட்ட கதை

சற்றும் மனம் தளராமல் வேதாளத்தை மரத்தில் இருந்து கீழே தள்ளி தோளில் சாய்த்து நவீன விக்ரமாத்தியன் நடக்க ஆரம்பித்தான்.

நீ நல்லவன் தானே.
..
மௌனம் பதில் ஆகாது. எனக்கான பதில் அளிக்க முடியா வினாக்களில் மட்டுமே நான் உனக்கு கட்டுப்படுவேன்.
..

படைப்புகளின் தொடக்கதில் நீ இருக்கிறாய். உன்னை புகழின் ஏணியில் ஏற்றிவிட என்னால் முடியும். செய்யவா?

வாழ்வு மிகவும் ரசிக்கத் தக்கது என்பதை நீ அறிவாயா?

உணவில் பெரும் விருப்பம் கொண்டவன் நீ என்பதை நான் அறிவேன். விருப்பப்படி உணவினை வழங்கவா?

இசையினில் பெரும் ஆர்வம் கொண்டவன் நீ. இசையின் நுணுக்கங்களை கற்றுத் தரவா?

தனிமை உனக்கு பழக்கமானது. உன்னை தனிமைப்படுத்தி மகிழ்வினை உண்டாக்கவா?

உலக அனுவங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்.

இல்லற தர்மத்தில் இருக்கிறாய். உனக்கான கவலைகள் மற்றவர்களை விட மிக அதிகம் என்பதை நான் அறிவேன். உனக்கான விருப்பங்கள் இருப்பின் தெரிவிப்பாய். உனக்காக செய்து முடிப்பேன்.

ஞாயிறு அன்று என் மனைவி எந்த வேலையும் எனக்கு கொடுக்கக் கூடாது.

அடுத்த வினாடியில் வேதாளம் கட்டுப்பட்டது
புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – வங்கி – வங்கி சேவைகள்

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
 
2038 –  வங்கி–  வங்கி சேவைகள்
1.
இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. உங்களது பணத்தினை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால், நீங்கள் எங்களுக்கு வட்டி கட்ட வேண்டும்.
2.
பள்ளிக் கட்டணம் EMI முறையில் கட்ட எங்களது கிளைகளை அணுகவும். இதனை நீங்கள் 10 வருடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். கடைசி 20 வருடங்களின் Income Tex return file  தேவை.
3,
ஓய்வு ஊதியக் காரர்கள் தங்களது பென்சனை பெற, கடைசி 5 வருட Living certificate/evidence உங்களது வங்கி கிளைகளில் கொடுக்கவும்.
4.
வங்கிகளில் லாக்கர்  வசதி பெற எங்களது கிளை மேலாளரை அணுகவும். கடைசியாக வழங்கப்பட்ட தேதி – 10-Oct– 2014. மற்றவர்கள்காத்திருக்கிறார்கள்.
5.
உங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்?
வர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.
இங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்ட உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரட்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.

மற்றவை
Monal Gajjar (google it)– Previous employment – Bank employee.  Hey Hey

Loading

சமூக ஊடகங்கள்

நக்கன்

வினா
பதில்கள்
வினாக்கள், வினாக்கள்,
பதில்
வினாக்கள், வினாக்கள்,வினாக்கள், வினாக்கள்
..
பிரிதொரு நாளில்
மௌனத்தில் பிரபஞ்சம்.

*நக்கன் – நிர்வாணி.
**நக்கன் என்றேத்திடு நாதனைதிருமந்திரம் – 3

புகைப்படம் : இணையத்தளம்/FB

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வியாசர் வேதாந்தம் – வகைகள்.

துவைதம், அத்துவைதம் மற்றும் விசிட்டாத்துவைதம்
கபிலர் முதல் வியாசர் வரையில் சாத்திரம் செய்ததற்கு  முதல் நூல் எது?. அதன் சிறப்புகள் என்ன?

வேதாகமங்கள்
வேதாகமங்களில் அனைத்தும் அடங்கும். இவைகள் எது ஒன்றிலும் அடங்கா.
இதனை வலியுறுத்தும் ‘அரனடிக்கீழ் அடங்கும்’ என்ற மெய் உபதேசதின் பொருள் என்ன?

அரனடி என்பது சிவசக்தியினை குறிப்பதாகும். சிவசக்தி சிவத்தில் அடங்கும். சிவம் எதிலும் அடங்காது. ஏனெனில் எல்லா பொருள்களும் சிவத்தில் அடங்கும்.

இத்துடன் வேதசிவாகவியல் முற்றுப் பெறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages


இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்கள் பல்வேறாக வந்த வண்ணம் உள்ளன.
வயது என்னும் நிகழ்வினைக் கொண்டும்அதனால் அடையப்படும் பதவிபதவி சார்ந்த  உயர்வுகள்   குறித்து இந்த தொகுப்பு.
என்வரையினில் வசதிக்காக 20 வயதிற்கு கீழ், 20 – 30 வயது, 30 – 40 வயது, 40க்கு மேல் என்று வயதின் வரைகளை உருவாக்கி இருக்கிறேன்இதில் பல்வேறு மாறுபட்ட   கருத்துக்கள் இருக்கலாம்.
பணியின் அடிப்படையில்  Entry level, Middle level and Higher level  என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Entry level  – Trainee, Software Engineer etc.,
Middle level  – Project Leader, Project Manager etc.,
Higher level  – IT Consultant, Associative Director etc.,
வாழ்வின் வளச்சியில் என் தந்தை ஒரு ‘IT’ ல் வேலை பார்க்கிறார்     என்று குழந்தை கூறுவதை ஏற்று மிகவும் மகிழ்வுறுகிறோம். அங்கு தான் ஆரம்பமாகிறது வினை.
நல்லா படிச்சா மட்டும் தான் ‘IT ‘ கம்பெனிகளில் வேலை கிடைக்கும். இல்லைன்னா ஒன்னும் பண்ணமுடியாது’ இப்படித்தான் வார்தைகளின் விஷம் குழந்தைகளுக்கு ஏற்றப்படுகிறது.
‘சார், இதெல்லாம் கத. நான் எல்லாம் அப்படி இல்ல’ சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். மறுப்பவர்களின் குழந்தைகள் மிகப்பெரிய கல்விக் கூடங்களில் பயில்கிரார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
பெற்றவர்களால் தூண்டப்பட்டோதன் விருப்பத்தின் காரணமாகவோ அவர்கள் தங்களது   பள்ளிப் பருவத்திலேயே  Computer Science  தேர்ந்தெடுக்கிறார்கள்.
கல்லூரிக்கு முன் – நண்பர்கள்
மச்சான் வேற எந்த branch  ம் எடுத்துடாத. வருஷத்துக்கு 500 ரூ சம்பளம் அதிகமாகும். IT ல மட்டும் தான் வருஷத்துக்கு 1 லட்சம் increment வரும்.
இவர்கள் மிகப் பெரிய கல்விக் கூடங்களில் பயில்வதற்காக மிகப் பெரியதான தன்  வாழ்வினை இழக்கிறார்கள்.(ஒரு சிலர் தவிர்த்து)
கல்லூரி கனவினை வளர்த்து விடுகிறது.
நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க சார். எங்க college ல் சேர்ந்தா 100% Placement. – இத்யாதி விளம்பரங்கள்
சில கல்வி நிறுவனங்கள் கம்பெனிகளுடன் தொடர்பில் இருக்கின்றன. இதன்படி கம்பெனிகள் கல்லூரி நிறுவன மாணவர்களுக்கு ‘Offer Letter’  மட்டுமே தருகின்றன.  Not ‘appointment order’
அவர்கள் சந்தோஷமாக கல்லூரிகளில் இருக்கட்டும். சில நாட்கள் தவிர்த்து அவர்களை சந்திப்போம்.
(அதெல்லாம் இல்லை என்று உடனடியாக மறுப்பு சொல்கிறவர்கள் இருக்கக்கூடும். இங்கு   பெரும்பான்மை மட்டுமே விளக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.)

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மீன் கொத்திகள்

பெரு நீர்ப்பரப்பில்
மீன் கொத்திகள்.
பல மீன்களை
இழந்தபின்னும்
அசைவற்று
தனித்திருக்கிறது நீர்ப்பரப்பு.







புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து

மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.
தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.
ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.
  1. வளர்ச்சிப் படிகள் – Stages
  2. மீட்டிங் கூத்துக்கள் – Meetings
  3. விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
  4. மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
  5. குழுவுடன் சில நாட்கள் – Team outing
  6. மற்றவை
இவைகளின் நோக்கம் எவர் மனதையும் புண்படுத்துதல் அல்ல. நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 13

நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும் பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத் தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம் உண்டாக்க வேண்டுமா? ‘மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?’ என்று சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு வகையரா தான். 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம் வசமாகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 9/25 சக்திதரமூர்த்தி

 
ஜனனம், மரணம் ஆகியவற்றில் உழலக்கூடிய மனிதர்கள் மட்டும் தேவர்கள் ஆகியவர்களுக்கு முக்தியை அளிக்கும் பொருட்டு, தனது வாம பாகத்தில் இருந்து உமா தேவியாரை தோற்றுவித்த மூர்த்தி  என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.
இது போக மூர்த்தி 

(இம் மூர்த்தி பற்றிய குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். தெரிந்து தெளிவடைகிறேன்.)

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வைசேஷிகம் – சிறு விளக்கம்

·   ஆன்மா வின் தன்மைகளை கூறல்
·   ஆன்மா அழிவற்றதாக என்றும் உள்ளது.
·   அது அருவமாக இருக்கும்
·   அது ஜீவான்மா, பரமான்மா என்று இருவகையாகப் பிரியும்.
·   பரமான்மா  – பிறப்பிலி
·   ஜீவான்மாபல் வேறு பிறப்புக்கள் எடுக்கும்.
·   புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப  மனத்தில் தன்மையால் ஞானம் கிடைக்கும்.
·   இயல்புகளை அறியும் ஞானத்தால் கர்மம் நசிக்கும்.
·   அவ்வாறு நசிக்க ஞானமின்றி செயல் அற்று இருப்பதே முக்தி.
·   வேதம் ஈஸ்வரனால் செய்யப்பட்டது. 
மீமாம்சை  – சிறு விளக்கம்
·   வேதங்களில் சொல்லப்பட்டவைகளே அனுட்டிபவர்கள் சொர்கத்தை சேருவார்கள்
·   வேதம் சுயம்பு
·   பிரபஞ்சம்  நித்யம் அஃதாவது என்றும் உள்ளது.
·   ஆன்மாக்கள் பல உண்டு.
·   ஆன்மாக்களுக்கு செய்த கர்மத்திற்கு ஏற்ப அதற்கான பலன்களை அனுபவிப்பதால் அதைத் தர ஈஸ்வரன் என்ற ஒருவன் தேவையில்லை
வேதாந்தம் – சிறு விளக்கம்
·   உபநிஷத்துக்களில் சொல்லப்படும் (பரம) ஆன்மா இந்த உலகப்படைப்பிற்கான காரணம்
·   இதுவே உலகத்தை வழி நடத்துகிறது
·   (ஜீவ) ஆன்மா தனது பந்தத்தை அறுக்க இதுவே உபாயம்.
·   அந்த பந்தம் நீங்காததற்கு காரணத்தை விளக்கும்
·   பந்தம் நீங்கியப்பின் அடையும் புருடன் இது என்று கூறும்


ஆறு தத்துவ சாத்திரங்களையும் படைத்தவர்கள் யார் யார்?
சாங்கியம் – கபிலர்
பாதஞ்சலம் – பதஞ்சலி
நியாயம் – அக்ஷபாதர்
வைசேஷிகம் – கணாதர்
மீமாம்சை – ஜைமினி
வேதாந்தம் – வியாசர்




Loading

சமூக ஊடகங்கள்