வைசேஷிகம் – சிறு விளக்கம்
· ஆன்மா வின் தன்மைகளை கூறல்
· ஆன்மா அழிவற்றதாக என்றும் உள்ளது.
· அது அருவமாக இருக்கும்.
· அது ஜீவான்மா, பரமான்மா என்று இருவகையாகப் பிரியும்.
· பரமான்மா – பிறப்பிலி
· ஜீவான்மா – பல் வேறு பிறப்புக்கள் எடுக்கும்.
· புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப மனத்தில் தன்மையால் ஞானம் கிடைக்கும்.
· இயல்புகளை அறியும் ஞானத்தால் கர்மம் நசிக்கும்.
· அவ்வாறு நசிக்க ஞானமின்றி செயல் அற்று இருப்பதே முக்தி.
· வேதம் ஈஸ்வரனால் செய்யப்பட்டது.
மீமாம்சை – சிறு விளக்கம்
· வேதங்களில் சொல்லப்பட்டவைகளே அனுட்டிபவர்கள் சொர்கத்தை சேருவார்கள்
· வேதம் சுயம்பு
· பிரபஞ்சம் நித்யம் அஃதாவது என்றும் உள்ளது.
· ஆன்மாக்கள் பல உண்டு.
· ஆன்மாக்களுக்கு செய்த கர்மத்திற்கு ஏற்ப அதற்கான பலன்களை அனுபவிப்பதால் அதைத் தர ஈஸ்வரன் என்ற ஒருவன் தேவையில்லை
வேதாந்தம் – சிறு விளக்கம்
· உபநிஷத்துக்களில் சொல்லப்படும் (பரம) ஆன்மா இந்த உலகப்படைப்பிற்கான காரணம்
· இதுவே உலகத்தை வழி நடத்துகிறது
· (ஜீவ) ஆன்மா தனது பந்தத்தை அறுக்க இதுவே உபாயம்.
· அந்த பந்தம் நீங்காததற்கு காரணத்தை விளக்கும்
· பந்தம் நீங்கியப்பின் அடையும் புருடன் இது என்று கூறும்
ஆறு தத்துவ சாத்திரங்களையும் படைத்தவர்கள் யார் யார்?
சாங்கியம் – கபிலர்
பாதஞ்சலம் – பதஞ்சலி
நியாயம் – அக்ஷபாதர்
வைசேஷிகம் – கணாதர்
மீமாம்சை – ஜைமினி
வேதாந்தம் – வியாசர்