இரவினை இனிமையாக்க
ஒரு கதை சொல்வதாக ஆரம்பிக்கிறாய்.
‘ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்,
அவங்களுக்கு ஒரு குட்டிப் பொண்ணாம்,
அது ரொம்ப சமத்தாம்’
என்று கூறிப் புன்னைக்கிறாய்.
சூல் கொள்கிறது என் நினைவுகள்.
![]()
உருவேறத் திருவேறும்
தந்தி சேவை வரும் ஜூலை மாதத்தோடு நிறுத்தப்பட இருக்கிறது.
பெரும்பாலும் தந்தி என்பது துக்க செய்தி என்பது மூத்த தலைமுறை கருத்து. என் வரையில் அது நினைவுகள்.
அப்பா R.D.O வாக கடலூரில் வேலை பார்த்து வந்தார்கள். நான் அப்போது திருவல்லிக்கேணியில் தங்கி இருந்தேன்.
கடலூரில் இருந்து அப்பா தந்தி அனுப்பி இருந்தார். Start immediately .
‘யார் வயதானவர்கள்’?
‘மவுத் வாங்குற லிஸ்ட்ல யாரு இருக்கா’?
‘யாருக்கு என்ன பிரச்சனை’?
‘விடியுமா’ – கு.பா.ர கதையை விட பல எண்ணங்கள்.
‘டேய், வண்டிய சீக்கிரம் ஓட்டுங்கடா’. அப்போ Only N.H.2. No N.H.4.
‘கடவுளே என்ன வேதனை இது’
கடலூர் மஞ்ச குப்பம் அருகினில் பஸ். ‘சீக்கிரம் போங்கடா’
வேகமாக வீடு நோக்கி ஒட்டம். உண்மை. நடக்கவில்லை.
வீட்டில் அம்மா, அப்பா.
‘என்ன ஆச்சு. எதுக்கு தந்தி அடிச்சிங்க’
‘அது ஒன்னும் இல்ல. நீ ரஜினி ரசிகன் தானே. ரிசர்வேஷன் இல்ல இல்லியா, அதனால பாட்ஷா படத்துக்கு டிக்கட் சொல்லி வச்சிருக்கிறேன்’
![]()
2038 – பிரபஞ்சம்
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
1.
கடவுள் துகள் பற்றிய பெரும்பான்மையான முடிவுகள் தெரிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது என்று கூறுவார்கள்(சுஜாதா பாணியில் – உட்டாலங்கடி).
2.
நாங்க புளுட்டோவுல பிளாட் போடறோம் சார். போக வர இலவச வசதி.
3.
இந்த வாரம் – நிலவில் ஓபன் தியேட்டரில் – தலைவா.
4.
இது உங்க தாத்தா, பூமியில இருந்த போது கட்டிய வீட்ல இருந்து எடுக்கப் பட்ட செங்கல்லுடா. பத்ரமா வச்சிக்கடா.
5. உங்க தாத்தா காலத்துல அண்டத்தின் அகலம் 2500 மில்லியன் ஓளி ஆண்டுன்னு கண்டுபிடித்திருந்தார்கள். இப்ப எவ்வளவு தெரியுமா – 10000 மில்லியன் ஓளி ஆண்டுகள்.
![]()
உடம்பு அழியக்கூடியது. (தேகம்) – எனில் அதைப் பகுக்க முடியுமா?
ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும். எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.
அப்படி எனில் மனத்தின் வேலை எது –
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.
மனம் – நினைக்கும்.
புத்தி – விசாரிக்கும்.
சித்தம் – நிச்சயிக்கும்.
அகங்காரம் – துணியும்.
எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.
அது போலவே ‘நான்’ தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
![]()
பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.
பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருக்கிறது.
இடரது பாடல்கள் மிக எளிமையானவை.
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே
இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.
முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.
வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.
Image – Internet
![]()
முழு நிலவில் குளுமையின்
அருகருகினில் நீயும் நானும்.
பேச்சுகள் திசைமாறி
கனவுகள் பற்றிச் செல்கிறது.
என் கனவு முழுவதும்
நாய்கள் என்று உரைக்கிறேன்.
விதவிதமான நாய்களும்
தோற்றங்களும் என்கிறேன்.
முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய்.
சில நாட்களில்
அவைகள் என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
பற்கள் விரிய கோபம் கொள்கின்றன.
சில நாட்களில்
காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன.
சில நாட்களில்
இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து.
இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன்.
‘விழித்திரு’ என்கிறாய்.
ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.
![]()
பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.
‘என்ன வேண்டும்’ – கத்ரு
‘என் தாய் விடுதலை’ – கருடன்
‘அது இயலாது’ – கத்ரு
‘அது நிகழ என்ன செய்யவேண்டும்’ – கருடன்
‘தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்’ – கத்ரு
பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.
கத்ரு, ‘அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா’
கருடன், ‘ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், ‘
கத்ரு,’ வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு’
கருடன்,’அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல’ என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.
பெரிய திருவடி போற்றி,போற்றி
![]()
தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் – இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)
1.அனுபவம்
2.அனுமானம்
3.ஆப்தவாக்கியம்.
1.அனுபவம் – தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)
2.அனுமானம் – பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)
3.ஆப்தவாக்கியம் – விவரம் அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது. (அங்க வாங்கு, நிச்சயம் விலை மலிவு)
தேடுதலைத் தொடர்வோம்..
![]()
வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?
ஆன்மீகம் – போகும் காரியத்தில் தடங்கல் வரும்.
அறிவியல் – தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.
![]()
கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் – மூலம் – மகாபாரதம் – M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு – நாகங்களின் தாய்
வினதை – அருணன் மற்றும் கருடனின் தாய்.
ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.
அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.
அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் ‘வால் கருப்பாக தெரியும் ‘என்றும், ‘நான் ஜெயித்து விடுவேன்’ என்றும் உரைக்கிறாள். நாகங்கள் ‘நீ தவறு செய்கிறாய்’ என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.
வினதை அடிமையாகி விடுகிறாள்.
அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். ‘அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்’ என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)
![]()
சைவ சித்தாந்தம் – சிந்தனை
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் – என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், ‘பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் ‘பதி’ குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.
எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.
பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் – திருமந்திரம் – உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )
நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)
அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து – அழியாதது.
அ – சித்து – அழியக் கூடியது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
![]()
வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய்.
‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன்.
‘எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய்.
‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன்.
‘நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே’ என்கிறாய்.
‘உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.
![]()
2038-சினிமா
இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.
(நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது.)
சினிமா
——-
1.
சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும்.
இப்ப மினிமம் பட்ஜெட்னா ஆயிரம் கோடிதான்.
2.
கமலின் அடுத்த படைப்பு, சதாவதாரம். 2008ல் தசாவதரம் எடுத்தார். தற்போது சதாவதாரம். 100 முக்கிய வேடங்களில்.
3.
பிரசன்னா ஸ்னேகா – பிரிவுக்குக் காரணம் என்ன?
பிரசன்னா ஸ்னேகா மகன் மற்றும் மகள் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து ஊருக்கு சென்றார்கள். ஸ்னேகா அவர்களுடன் சென்றுள்ளார். பிரிவு ஏற்படாமல் இருக்க எங்களிடம் மொபைல் வாங்குங்கள்.
![]()
வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில் வைத்து உறங்குதல் கூடாது?
ஆன்மீகம் – கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.
அறிவியல் – உடல் முழுவதும், தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும். தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.
![]()
தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?
ஆன்மீகம்
மஹாலக்ஷ்மி சம்மந்தப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும்.
![]()