1. நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள். அதனால் ஏற்கவில்லை என்பதே என் கருத்து.(பெயர் – Saaraavanaakumaar)
2. தெய்வம் என்பது பொய். (வீடுகளில் பூஜை அறை வீடு மாதிரி இருக்கும்)
3. எண் கணிதம் என்பது பொய். இந்த காலத்தில இத நம்ப முடியுமா.(கார் நம்பர் 5ன்னு இருக்கணும். எல்லா எழுத்தையும் கூட்டினாலும் 5 வரணும்
4. நான் அடுத்த வருஷம் அமெரிக்கா போலாம்னு இருக்கேன். இந்த தேதி நல்லா இருக்கும் சார். என்னா சார் நீங்க, தேய் பிறை சதுர்த்திய நாள் குறிக்கிறீங்க. 6ம் தேதியும், சஷ்டியும் வரமாதிரி குறிச்சி குடுங்க.
5. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கடவுள் மறுப்பு பத்தி எழுதினத்துக்கு 50 பேர் பாராட்டியிருக்காங்க.
ஆதியில் அவன் பெயர் ‘அவன்’ என்று இருந்தது. அவனுக்கு மரங்களின் மொழிகளும், செடிகளின் மொழிகளும் தெரிந்திருந்தன. நேசித்த இயற்கையை அவன் நேசித்தான். சில மரங்கள் அவனிடம் அன்பைச் செலுத்தின. சில செடிகள் அவனிடம் துன்பங்களைப் பகிர்ந்தன. சில மரங்கள் அவனிடம் கதை கேட்டன. சில செடிகள் அவனிடம் தூங்கின. சில குறுங் கொடிகளும் அவனிடம் நட்பு கொண்டன. மரங்களின் நட்பு மற்றவர்களுக்கு புதிராக இருந்தது. மிகுந்த விலை கொடுத்து மரங்களையும் செடிகளையும் வாங்குவதாக ஒருவன் தெரிவித்தான். செய்தியின் அடுத்த நாளில் அவன் சென்ற போது மரங்கள் ஊமையாக இருந்தன.
இறைவழிபாட்டில் வாசனை மலர்களையும், மணம் மிக்க பொருள்களையும் சேர்ப்பது ஏன்?
ஆன்மீகம் – இறைவனுக்கு உகந்தது. அதனால் மகிழ்வு ஏற்படுகிறது.
அறிவியல் – மணம் மிக்க பொருள்கள் உடலினில் மாறுதல் ஏற்படுத்தும். அவைகளை உணரும் போது நீண்ட சுவாசம் நிகழும். அது இதயத்தின் அனைத்து பகுதிகளிலிலும் நீண்ட காற்றினை செலுத்தும். சுவாசம் சீராவதால் உடல் நிலையில் மாறுதல் ஏற்படும்.
முன் காலத்தில் வாசனைப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அதன் மூலப் பொருள்கள் உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.
காற்று தனித்திருந்தது அவ்வேளையில் ஆதியில் சில பறவைகள் பறந்து கொண்டிருந்தன. மாயையின் சாரம் கொண்டிருந்த இரு பறவைகள் தரையிரங்கின. உதிர்ந்த ஒற்றை கிளை கொண்டு கூடு எழுப்பின. உறவுகளுடன் தாளமிட்டன, சப்தமிட்டன, நீர் அருந்தின, மாயப் பிரபஞ்சம் தனக்கானது என்றும் கொண்டாடின. வானில் பறந்த பிறிதொரு நாளில் மரித்துப் போயின. நகர விரிவாக்கத்தில் கூடுகளும் கரைந்தன. காற்று தனித்திருந்தது எவ்வித தடயங்களும் இன்றி.
ஆற்றின் ஒரு கரையினில் நானும் மறு கரையினில் நீயும். மொழிகள் அற்ற நாட்களில் சைகைகளில் பாஷைகள். விளைவுகளில் நகரும் நாட்கள். பாஷைகள் பழகிய பொழுதுகளில் உன் கரை நோக்கி வர என்னை பணிக்கிறாய். என் கரை நோக்கி வர உன்னை பணிக்கிறேன். அவரவர் இடம் விட்டு எதிர் கரை நோக்கி பயணித்த பொழுதுகளில் நதி கடந்திருந்தது.
துலாக் கட்டம் – மயிலாடுதுறையில், ஐப்பசி மாதத்தில், காவிரியில் நடை பெறும் ஒரு விழா
சில பாடல்கள் மழையைத் தூவிச் செல்லும், சில பாடல்கள் வெய்யிலை இறைத்துச் செல்லும்.
சில வானவில்லை விட்டுச் செல்லும்.
அப்படிப்பட்ட பாடல் தான் பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் – எங்கெங்கோ செல்லும்’ என்ற பாடல்.
மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல்.
கவிதைக்கான முழுவடிவமும் இப்பாடலில்.
நான் காண்பது உன் கோலமே, அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்
கல்லானவன் பூவாகிறேன் கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன் மஞ்சமும்
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்.
ஒரு மழைக்கால ஃபில்டர் காபி போல,
அழகிய பனிக்காலையில் பூத்திருக்கும் பூக்களின் மேல் பனித்துளி போல,
பவழ மல்லியின் வாசம் போல,
கரை புரளும் காவிரி போல,
விழாக் கால இசை வாசிப்புகள் போல,
கவிதையில் வாசிப்பு அனுபவம் போல
எத்தனை சொன்னாலும் அதனுள் பொருந்துவதாக அமையும் இசையும் வரிகளும்.
குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.
எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.
பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.
உனக்கான பள்ளி வாகனத்தில் தலையில் மல்லிகையின் வாசத்தோடு நீ. எப்படி அழுது கொண்டு செல்வாயோ என்ற நினைவோடு நான். வாகனத்தில் ஏறி தலையை வெளியே தலையை நீட்டி கூறுகிறாய். ‘நாளைக்கு யாத்திரி சொன்ன கதை மாதிரியே இன்னைக்கும் சொல்லனும்’ என்கிறாய். நகர்ந்து செல்கிறது வாகனம் நகராமல் இருக்கிறது நினைவுகள்.
பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.
மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’. கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண நினைத்தது தவறானது.
புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.
நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.
பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.
புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.
அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.
பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.
ஒருபுள்ளியில் உருவம் அற்று வெற்றிடத்தில் வேண்டுவன தந்து தவித்து, தனித்து நிழலாடி கனவினை விதைக்கிறது உன் வரைபடங்கள். எண்ணப் பகிர்தலுக்கு எதிர் அணியில் நான். காட்சிகள் கவிதையாக்கம் கொள்கின்றன. எட்டும் தூரத்தில் ஒரு குரல் ‘கட்டைல போறவன் தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே’
அம்மா ‘ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும் அப்டின்னு சொல்லுச்சாம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம். இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம். அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம். இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம். அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்’
குட்டி ‘ம்’
அம்மா ‘வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்’
குட்டி ‘ம்’
அம்மா ‘இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம். அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம். அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ‘ நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது’ உடனே ரிஷி மேல பாய போச்சாம். ரிஷி சொன்னாராம், ‘ உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ’
1.
சென்னைக்கு மிக அருகில் சுமார் 700 கி.மி (கன்யா குமரியில் இருந்து 10 கி.மி தூரத்தில்) இடம் விற்பனைக்கு
2.
எங்களிடம் திண்டிவனத்திற்கு அருகில் 100 பிளாட் வாங்குபவர்களுக்கு, 1கிராம் தங்கம் இலவசம்.
3.
எங்களிடம் இன்றே அடுக்கு மாடி குடியிருப்புகள் புக் செய்யுங்கள். சரியாக 2063ல் உங்களிடம் வீடு ஒப்படைக்கப்படும்.
4.
இங்க பாருங்க, இது எங்க நாய் கட்டி வைக்கும் இடம். அடுத்த நாய் வாங்குற வரைக்கும் அத வாடகைக்கு விடறோம். வாடகை – 1,00,000/- 100 மாசம் அட்வான்ஸ். புடிக்கலன்னா சொல்லிடுங்க, அடுத்த பார்டி வெயிட்டிங்.
5.
எங்களிடம் அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு முதல் மாதம் தினமும் 1லி தண்ணீர் இலவசம்.