உனக்கான பள்ளி வாகனத்தில்
தலையில் மல்லிகையின் வாசத்தோடு நீ.
எப்படி அழுது கொண்டு செல்வாயோ
என்ற நினைவோடு நான்.
வாகனத்தில் ஏறி தலையை வெளியே
தலையை நீட்டி கூறுகிறாய்.
‘நாளைக்கு யாத்திரி சொன்ன கதை மாதிரியே
இன்னைக்கும் சொல்லனும்’ என்கிறாய்.
நகர்ந்து செல்கிறது வாகனம்
நகராமல் இருக்கிறது நினைவுகள்.
Thanks Bhushavali
Beautiful! 🙂
Bhusha's INDIA TRAVELOGUE
Nandrigal pala, Sushmitha
Arpudam 🙂