சம்சயம்

நீண்டநாட்களுக்குப் பின்
குருவுடன் சந்திப்பு.
வாழ்வினை ஒற்றை வார்த்தைகளில்
விளக்கச் சொன்னார்.
வார்த்தைகள் அடுக்கடுக்காய்.

ஆதி,
அண்டம்,
அனு,
அனுபவம்,
அனுதினம்,
அபத்தம்,
அசுயை,
அன்பு,
அசுயை,
அபத்தம்,
அனுதினம்,
அனுபவம்,
அண்டம்,
ஆதி
என்றேன்.
பரிசாய் கிடைத்தது
கனத்த மௌனம்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *