சில பாடல்கள் மழையைத் தூவிச் செல்லும், சில பாடல்கள் வெய்யிலை இறைத்துச் செல்லும்.
சில வானவில்லை விட்டுச் செல்லும்.
அப்படிப்பட்ட பாடல் தான் பட்டாகத்தி பைரவன் படத்தில் வரும் – எங்கெங்கோ செல்லும்’ என்ற பாடல்.
மெல்லிய இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல்.
கவிதைக்கான முழுவடிவமும் இப்பாடலில்.
நான் காண்பது உன் கோலமே, அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்
கல்லானவன் பூவாகிறேன் கண்ணே உன்னை எண்ணி
பூவாசமும் பொன் மஞ்சமும்
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்.
ஒரு மழைக்கால ஃபில்டர் காபி போல,
அழகிய பனிக்காலையில் பூத்திருக்கும் பூக்களின் மேல் பனித்துளி போல,
பவழ மல்லியின் வாசம் போல,
கரை புரளும் காவிரி போல,
விழாக் கால இசை வாசிப்புகள் போல,
கவிதையில் வாசிப்பு அனுபவம் போல
எத்தனை சொன்னாலும் அதனுள் பொருந்துவதாக அமையும் இசையும் வரிகளும்.
அசையா வானவில் என்னுள் இன்றும்.
Thanks Gopal Ji for your kind words/expressions.
Nice of you to introduce the song, i have heard the song before but now it is giving an entirely a different experience in listening
Ravi, thanks for your comments. காவிரியில் நீந்திய நினைவுகள் இன்னும் என்னுள். அதன் காரணமே அவ்வரிகள்.
கரை புரளும் காவிரி is an oxymoron now.
Thanks Sushmitha
Nice lyrics 🙂