ஆதியில் அவன் பெயர் ‘அவன்’ என்று இருந்தது.
அவனுக்கு மரங்களின் மொழிகளும்,
செடிகளின் மொழிகளும் தெரிந்திருந்தன.
நேசித்த இயற்கையை அவன் நேசித்தான்.
சில மரங்கள் அவனிடம் அன்பைச் செலுத்தின.
சில செடிகள் அவனிடம் துன்பங்களைப் பகிர்ந்தன.
சில மரங்கள் அவனிடம் கதை கேட்டன.
சில செடிகள் அவனிடம் தூங்கின.
சில குறுங் கொடிகளும் அவனிடம் நட்பு கொண்டன.
மரங்களின் நட்பு மற்றவர்களுக்கு புதிராக இருந்தது.
மிகுந்த விலை கொடுத்து
மரங்களையும் செடிகளையும் வாங்குவதாக ஒருவன் தெரிவித்தான்.
செய்தியின் அடுத்த நாளில்
அவன் சென்ற போது மரங்கள் ஊமையாக இருந்தன.
Thanks for your comments.
Really awesome lines. Arumai 🙂