உவாதி

பிஞ்சுக் கைகளால்
ரோஜாப் பூ ஒன்றினை
வரைந்து முடிக்கிறாய்.
பின் வரும் நிமிடங்களில்
அழத் தொடங்குகிறாய்.
காரணம் வினவுகிறேன்.
பூக்கள் வாசனை அற்று இருக்கின்றன என்கிறாய்.
மகளின் வார்த்தைகளின் முடிவில்
தொட்டுத் திரும்புகிறது

எனது இளமைக் காலங்கள்.


*உவாதி – த்யானிப்பவன். திருமந்திரம் – 1202
வடிவ அமைப்பு : சம்யுக்தா செந்தில்

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 17

ஃப்ஸ்ட் செமஸ்டர் மேக்ஸ் அரியரையே இன்னும் முடிக்கல. இந்த புரபசர் எல்லாம் எப்படி ‘Post Dr.’ பண்றாங்க?. இப்படிக்கு மேக்ஸ் புக்கை பரிச்சைக்கு முன் தினம் எந்திரன் ஸ்டைலில் ஸ்கேன் செய்வோர் சங்கம்.
***************************************************************************** 
வாகனத்தில் போகும் போது ‘Horn’ அடித்துவிட்டு, நாமே ஒதுங்கி செல்வது இந்த தாய் திரு தமிழ் நாட்டில் மட்டும் தான். இப்படிக்கு புதுப்பேட்டை போய் வாகனம் வாங்கலாமா என்று 30 மாதங்களாக யோசிப்போர் சங்கம்.
 *****************************************************************************
நாம ஜெராக்ஸ் எடுக்க இவ்வளவு கஷ்ட பட வேண்டியதாக இருக்கு. இவிங்க எப்படி இந்த 750 பக்கம் புத்தகம் எழுதி இருப்பாங்க? இப்படிக்கு எக்ஸாம் முதல் நாள் ஜெராக்ஸ் எடுக்க காத்திருக்கையில் கரண்ட் போனபின் புத்தகம் படிப்பது பற்றி யோசிப்போர் சங்கம்.
***************************************************************************** 
Pre-paid sim card வச்சிகிட்டு rate cutter முடிச்சி 7.01, 9.01 ன்னு முடிற காலுக்கு 1 ரூ இழக்கறவனுக்குத் தான் தெரியும் 1 ரூ வலி. இவன் Rate cutter முடிஞ்து  நண்பனிடன் வாங்கிய பத்து ரூபாய்க்கு recharge செய்து.Call  பேசி. அதில் ஒன்பது ரூபாயை இழந்தவர்கள் சங்கம்.
***************************************************************************** 
நண்பரின் குமுறல்.
பொண்டாட்டிகிட்ட நல்ல பேர எடுக்க முடியாது போலடா.
ஏண்டா?
‘நேத்து ராத்ரி மாடியில காய்ர துணிய எடுத்துகிட்டு வர சொன்னா. ராத்ரி எடுத்துகிட்டு வரல. திட்டுவான்னு காலைல எடுத்துகிட்டு வந்தேன். குளிர்ல எல்லா துணியும் நனைஞ்சி போய் இருக்கு. இத போய் எடுத்துகிட்டு வந்து ஒட்டிக்கி ரெட்டி வேல வக்கிறீங்களே’ அப்படீங்கறா. நான் என்னடா செய்ய?
செத்தாண்டா சேகரு.
***************************************************************************** 
Printer ink எவ்வளவு கெடுதல்ன்னு பேசுறோம். ஆனா, அது பிரிண்ட் ஆன பேப்பரை, பேப்பர் ப்ளேட்டாக பயன் படுத்துகிறோம். இதுல எதாவது கெடுதல் இருக்குமா? இவன் பிரிண்ட் ஆன பேப்பரில் சமோசா சாப்பிட்டு விட்டு, அதில் உள்ள கெமிக்கல் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற துடிப்போர் சங்கம்.
***************************************************************************** 
ஊட்டச்சத்து மிகுந்த குடிநீர். ஒரு வேளை ஏதாவது அரசியல்வாதி இந்த ‘Ad’ ready செய்திருப்பானோ?
11ரூ டிக்கெட்டுக்கு 10 ரூ குடுத்தா 1ரூ சில்லறைய கரிட்டா கேக்கிறான் கண்டக்டர். ஆனா 11ரூ டிக்கெட்டுக்கு 12 ரூ குடுத்தா மீதி சில்லறை இல்லேங்கிறான். அதோட கூடவே நம்மை பிச்சைக்காரனை விட மோசமா பாக்கிறான். இது தான் வாழ்க்கை. இவன் மனைவியிடம் வாங்கிய காசில் தண்ணி அடித்து விட்டு மீதி சில்லறை வாங்காமல் தத்துவவாதி ஆக முயற்சிப்போர் சங்கம்
***************************************************************************** 
சாதாரண பிரசவ செலவில் cesarean டெலிவரி செய்யப்படும். உங்க வியாபார ஆர்வத்திற்கு ஒரு அளவே இல்லையாடா?
***************************************************************************** 
Srusti Montessori School – Drawing, Painting, Music, spoken English/Hindi, abacus etc., உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லயாடா. விட்டா வயத்துல வளர்ர குழந்தைக்கு கூட IIT class க்கு training குடுப்பீங்க போல இருக்குடா.

Loading

சமூக ஊடகங்கள்

வியோமம்

கைகளில் இருக்கும் குழந்தை ஒன்று
விழி உயர்த்தி ஆகாயம் காட்டுகிறது.
ஆகாயத்தின் கூறுகள்
என்னில் பிரதிபலிக்கின்றன
காற்று மண்டலம் தாண்டிய
அது பேசத் துவங்குகிறது.
ஒலிகளின்மூலப் பிரதி நானே,
ஒளிகளும்என்னுள் அடங்கும்என்கிறது.
வார்தைகள் மௌனத்தில் உறைகின்றன.
என்னில்கரையாதவை எவையும் இல்லைஎன்கிறது
‘நானே முதல் படைப்பு.
எல்லை கடந்த பொருள்’ என்றும் கூறுகிறது
உன் உலகம் என் உலகம்
உன் படைப்பு என் படைப்புஎன்கிறது.
‘எனில் எப்பொழுது உன் முழுமையை உணர முடியும்’ என்கிறேன்
‘ஓடு உடைத்தால் நீயே நான்’ என்கிறது.

தொடர்கிறது சங்க நாதம்.

வியோமம் – ஆகாயம், திருமந்திரம் – 1152

புகைப்படம் : Gayu

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சி அனேகதங்காவதம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவன் சுயம்பு மூர்த்தி
விநாயகர் வல்லபையை மணமுடித்த தலம்
குபேரன், தன் முற்பிறவி புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனாதல்,.சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தல், சிவன், குபேரனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்குதல்
 
 
 
 
 
தலம்
அனேகதங்காவதம்
பிற பெயர்கள்
திருக்கச்சி அனேகதங்காவதம்
இறைவன்
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
தீர்த்தம்
தாணு தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,
அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் – 631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2722 2084
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   4 வது தலம்.
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    010
திருமுறை எண்               7
பாடல்

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே
பொருள்
கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால்  தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்
 
கருத்து
 
1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். 
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. 
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது
3.
அட்டமா நாகங்களை – அட்டமா சித்தி
பாடல்
புல்லி இடம்; “தொழுது உய்தும் என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக் கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை,
அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
பொருள்
கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது.. வீடு பேற்றை அளிக்கின்ற இறைவனை தொழுது ‘உய்வோம்’  என்று எண்ணாமல் அவற்றை நிலைத்த பொருள் என்று கொண்டவர்  கோட்டைகளை அழித்தவன் உறையும் தலம் இது. உயிர்கள் இடத்து வினைகளின் பாரபட்சம் பாராமல் அவைகளின் உயிரை நீக்கும் காலனை அழிக்கும் படியாக தனது கால்களால் கொன்றவன்  வாழும் இடம். குளிர்ந்த வனமல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது இதழ்களில் பெண் வண்டுகள் உறங்குகின்ற, ஆரவாரத்தை யுடையது இத்தலம்

புகைப்படம் : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

பரப்பினன்

பஞ்ச பூத கவிதை வரிசையில்காற்று


கனத்த மௌனம் கொண்ட

நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
மற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
‘யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது’ என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்

கலந்திருக்கிறது பிண வாடைகள்.

பரப்பினன்பரப்பினள் என்பதன் ஆண்பால்ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாக விளங்குபவன், திருமந்திரம் – 1070

புகைப்படம்இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி
வடிவம்(பொது)
·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
·   சூலம் தாங்கிய திருக்கரம்
·   தேவியை அணைத்த ரூபம்
·   லிங்கத்தில் மேல் நின்று காலனை சம்ஹாரம் செய்யும் தோற்றம்
·   வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக தோற்றம்
·   சூலம் கீழ் நோக்கிய வடிவம்
வேறு பெயர்கள்
·         காமதகன மூர்த்தி
காலனை யுதைத்தான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·         குறுக்கை, மயிலாடுதுறை
·         நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
·         காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்,கோவை மாவட்டம்
இதரக் குறிப்புகள்
1.   ஸ்வேத கேது என்கிற அரசனுக்கும் மார்கண்டேயர் போலவே நிகழ்வு. திருநெல்வேலி திருத்தலத்தில் – கூற்றுதைத்த நெல்வேலி என்கிற பெரியபுராண பாடல் (886)
2.   கால பயத்தினை நீக்கும் இறைவனில் சக்தி ”சர்வாரிட்டவிநாசினி”

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

புத்தகங்களுக்கு அட்டை போடுதல்

காலை 8 மணி. எழுத்த உட ன் புயல் ஆரம்பம் ஆனது.
அப்பா, இன்னைக்கு புக்ஸ் கொடுக்குறாங்க, மறக்காம வாங்கிட்டு வரணும்,
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
சொல்றீங்களே தவிர, நீங்க செய்ய மாட்டீங்க. (அவங்க அம்மா வாய்ஸ் அப்படீயே…)
சரிடா. வாங்கிகிட்டு வரேன்.
மறுபடியும் சொல்றேன். மறக்காக புக்ஸ் வாங்கிட்டு வந்துடூங்க. இன்னைக்கு விட்டா மறுபடியும் கொடுக்க மாட்டாங்க.உங்களுக்கு எங்க ஸ்கூல் பத்தி தெரியாது. அதால தான் சொல்றேன். நீங்க 12 மணிக்கு மேல போனீங்கன்னா, புக்ஸ் தீர்ந்து போயிடும்.
இருடா, அட்ட போடணும்னு சொல்லுவதானே. அப்ப வச்சிகிறேன்.(Mind voice)
பத்து மணிக்கு எல்லா புக்ஸ்ம் வாங்கி வந்து விட்டேன்.
11.30 விளையாடிவிட்டு வந்தான்.
ஏம்பா, புக்ஸ் வாங்கி கிட்டு வந்துட்டியா?
இன்னும் இல்லடா.
உங்க கிட்ட ஒரு வேலை சொல்லக்கூடாது. நீங்க எப்பவுமே இப்படித்தான். இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல் ஆரம்பிச்சி விடுவாங்க.
மெல்லிய இதழ் புன்னகை என்னுள்.
அப்பா, நீங்க நிச்சயமா வாங்கி கிட்டு வந்து இருப்பீங்க. தேடி கண்டுபிடித்து விட்டு வந்து செல்ல முத்தம் தந்தான். ‘அப்பான்னா அப்பாத்தான்’.
ஆமாம், என்ன wrappers காணும்.
அதான் plastic wrappers கொடுத்து இருக்காங்க தானே. அத வச்சி அட்டை போட வேண்டியது தான். ரொம்ப சிம்பிள். Front லயும் back லயும் insert பண்ணிட்டு இப்படி ஒட்டி விட வேண்டயது தான். இனிமே உங்க கிட்ட அட்டை போட சொல்லி கேட்கவே மாட்டேன்.
முப்பது வருடத்திற்கு மேல் கூடவே இருந்து அட்டை போடும் நிமிடங்களையும் ஒரு plastic wrapper பிரித்து விட்டது.

தந்தையர்களை தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் தொடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆற்று நீரின் ஒட்டத்தில் எது முதல் நீர் எது கடைசி நீர்?

Loading

சமூக ஊடகங்கள்

ஆமம்

கணிப் பொறியில்
நீர் பற்றி கவிதை எழுத
துவங்குகையில்
திரைமேல் சலனங்கள் அற்று
விரைந்து செல்கிறது எறும்பொன்று.


* ஆமம் – உணவு – திருமந்திரம் – 1212
புகைப்படம் :  Mahendiran Thiru


Loading

சமூக ஊடகங்கள்

2038 – Credit cards – கடன்(கார) அட்டை

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)


1.
எங்க credit card company ல மட்டும் ஒரு வசதி செய்து வைத்திருக்கிறோம். அதாவது அவங்க பேர் defaulters list ல வந்தா அடுத்த நாள் 12.01க்கு  எங்க ஆபீஸ்ல இருக்கிற ரூம்க்கு வந்து தன்னைத்தானே 100 தடவை அடிச்சிகிட்டு பெனல்டி பீஸ் கட்டிட்டு போய்டலாம்.
 
2.
சார், இப்ப பாத்திங்கன்னா, கடன்(கார) அட்டைக்கு,  $9876 தான் சார்ஜ் பண்ணுரோம். மத்தவங்க எல்லாம் $ 9999.99  பண்ராங்க. அதால எங்க கிட்ட வாங்குங்க.
(Current Annual fee rate $495 with excellent credit rating)
 
3.
சார் எங்க கிட்ட மட்டும் தான் rate of interest ரொம்ப கம்மி. Just 24% per month. மத்தவங்க எல்லாம் 24.99 வாங்றாங்க(உன் தமிழில் தீய போட்டு கொளுத்த). (Current interest rate varies from 3.05% to 3.15%)
4.
சார், எங்க credit card ல ஒரு வசதி இருக்கு. இப்ப நீங்க அடிக்கடி மொளா(கொய்யால) அடிக்கடி வாங்குவீங்கன்னா அதுக்கு Chilly Credit Card இருக்கு. து. பருப்பு அடிக்கடி வாங்குவீங்கன்னா அதுக்கு moong dal Credit Card இருக்கு. Hajmola அடிக்கடி வாங்குவீங்கன்னா அதுக்கு Hajmola small size Credit Card இருக்கு. அதுல உங்க வீட்டு சமைலறை போட்டா போட்டு(அடேய்ய்ய்ய்ய்) உங்க credit card நீங்களே ரெடி பண்ணிக்கலாம்.
5.
Pre KG Student : அங்கிள் என் கடன் அட்டைக்கு எவ்வளவு லிமிட்?
பதில் : $ 1000 கண்ணா?
Pre KG Student : அட போங்க அங்கிள். என் ப்ரெண்ட் ஒரு கார்டு வாங்கி இருக்கான். $2000 லிமிட். நீங்க குடுக்ற லிமிட்டுக்கு ஒரு நாள்  lays  கூட  லேசில் வாங்க முடியாது.
(Current credit limit for college students app. $400)
 
புகைப்படம் : இணையத் தளம்

Loading

சமூக ஊடகங்கள்

அடையாளம்

அடையாளம் அற்ற
தனித்த இரவில்
தொலைகிறது தனிமைகளும்

சில கண்ணீர் துளிகளும்.


புகைப்படம் :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 16

ஒய்வெடுத்தலில் நினைவுகளை அசைபோடுதலை தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.
************************************************************************************************************************************** 
என் வாகனத்தில் பின்னே நீ.
உனக்கும் எனக்குமான இடைவெளி குறைகிறது.
தாடியினை பற்றி கழுத்தினை திருப்பிமுத்தம் தரவா என்கிறாய்.
மறுதலிக்கிறேன்.
பரவாஇல்லை வைத்துக்கொள் என்று இதழ் பதி….
சனியன் தூங்கறத பாரு அவங்க ஆத்தா மாதிரியே
போனா போகுதும்மா. இன்னைக்கு லீவுதானே தூங்கட்டும்.
உங்கள எல்லாம் வச்சிகிட்டு எப்படிடா Romance பண்றது…
************************************************************************************************************************************** 
ஆறும் ஐந்தும் இருப்பதானால் அது ஆரஞ்சா?. Associate law படி ஐந்தும் ஆறும் ஆரஞ்ச் தானே. பின்  ஏன் அப்படி அழைக்க வில்லை. இப்படிக்கு 3rd semester Discrete Maths பேப்பரை கடைசி  அரியரில் எழுதி பாஸ் செய்ய துடிப்போர் சங்கம்.
************************************************************************************************************************************** 
அடையாளம் அற்ற மரணத்தில் மறைந்திருக்கும் மனித வாழ்வு
************************************************************************************************************************************** 
குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
i am back-yogesh give friend request in FB
************************************************************************************************************************************** 
டூயம் சிம் மொபைல் இருக்கு. அதுல ஒரு நம்பர்ல இருந்து அதுல இருக்குற இன்னொரு நம்பருக்கு எப்படி பேசுவது. கால் வருமா, அதுல நாமளே எப்படி பேசறது; நாமளே எப்படி கேட்க்கிறது. இப்படிக்கு நோக்கியா 1100 வாங்க 24 EMI போடலாமா என்று யோசிப்போர் சங்கம்.
************************************************************************************************************************************** 
படிச்ச உடனே வேலைக்கு application போட்டா உங்களுக்கு Experience இல்லேங்கறாங்க. 55 வயசுக்கு அப்புறம் வேலைக்கு மனு போட்டா வயசான பயல்களுக்கு எதுக்கு வேலைங்கிறாங்க. அப்புறம் நாங்க எப்பதாண்டா வேலைக்கு போறது?. இப்படிக்கு வேலைக்கு application போட பேரனிடம் idea/ காசு கேட்போர் சங்கம்.
************************************************************************************************************************************** 
நாம போட்ட Post -அ  அப்படியே காப்பி பண்ணி போட்டு Sundar Gopalakrishnan FOLLOW Me and you will lots of Updates அழகு ஆங்கிலத்தில் நமக்கு மெசேஜ் போடரவன என்ன செய்யறது.
************************************************************************************************************************************** 
லா.சா.ரா கதைகள் – 2 வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஆகையால் எல்லாமே ஒன்றைக் குறிப்பதுதான்.
“சிலர் ?’
“சிலர்  என்றாலும் அதேதான் “
“பலர் ?’
“பலர்  என்றாலும் அதேதான் “
“அப்போ ஒன்று ?”
” ஒன்று என்றால் ஒன்றேதான். அன்று இன்று, என்றுமே ஒன்று.”
“எது ?”
“அது இது எல்லாம்-“
பல பத்தாண்டுகள் கடந்த பின்னும் சொற்களின் வாசனை இன்னும் மாறாமல் இருக்கிறது. இதுவே அவரது உருவேற்றதின் முழுமை.


Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – ஓணகாந்தன்தளி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – ஓணகாந்தன்தளி
அமைவிடம்பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்
இறைவன்  – சுயம்பு மூர்த்தி
சுந்தரரும், இறைவனில் திருவடி தரிசனமும்
ஓங்கார கணபதி விக்ரகத்தில் இருந்து ‘ஓம்’ என்ற ஒலி.
அசுரர்களின் தலைவன் வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளில் ஒருவனான ஓணன்,  சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தனது ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்ற இடம்.
மற்றொரு சேனாதிபதி காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்ற இடம்.
ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட இடம்.
அசுரர்களின் பத்தி கண்டு சுந்தரர் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டு இறைவனை பொன், பொருள் வேண்டி பாட, அருகில் உள்ள புளிய மரம் பொன் காய்களாக மாறிய இடம்
 
தலம்
ஓணகாந்தன்தளி
பிற பெயர்கள்
திருவோணகாந்தன் தளி
இறைவன்
ஓணகாந்தேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
வன்னி மரம்/புளிய மரம்
தீர்த்தம்
ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
விழாக்கள்
மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை,
காஞ்சிபுரம்- 631 502.
91- 98944 43108
வழிபட்டவர்கள்
ஓணன், காந்தன், சலந்தரன்.
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 235 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   3 வது தலம்.
ஜலந்தேஸ்வரர்
 
 
ஒணகாந்தேஸ்வரர்
 
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               1
பாடல்

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே.
பொருள்
திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே, ‘நெய், பால், தயிர்’ கொண்டு உன்னை வழிபடுபவர்களின் கைகளில் பொருள் ஒன்றும் காணப்படுவது இல்லை. ஐந்து எண்ணிக்கை பற்றி நிற்கும் புலன்களால் ஆட்பட்டு, வருத்தமுற்று அச் சுழற்சியினால் அந்த துன்ப குழியில் விழுந்து, அதில் இருந்து விடுபட முழியாமல் அழுந்திப் போகும் எனக்கு உமது கழல் அணிந்த திருவடிகளைத் தொழுது பொருள் பெற்று மட்டுமே விடுபட முடியும்.அவ்வாறு அத்துன்பத்தில் இருந்து விடுபட எனக்கு வழி ஒன்றை சொல்வீராக.
கருத்து
ஐவர்  – பஞ்ச இந்திரியங்களும் அவற்றால் செய்யப்படும் தொழில்களும்
துய்ய – தூய்மையான
தம்பிரான் தோழர் என்பதாலேயே தனது நிலையையும், தன் சார்ந்து இருப்பவர்ளின் வறுமை நிலையையும் சொல்லி பொருள் கேட்டு விழைகிறார்.
பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               2
பாடல்
திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.
பொருள்
திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே,  ‘நீர் பிறை இருக்குமாறு கட்டிய சடையை உடையவர், அலைகள் தோன்றும் புரளும் கங்கை, உமா தேவிக்கு அஞ்சி என்றும் வாய் திறவாதவள். மூத்த குமாரராகிய கணபதி, வயிறு ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். இளைய குமாரகிய வேலை உடைய குமரன் விளையாட்டுப் பிள்ளை. உமாதேவி உம்மை விடுத்து அடியவர்களை ஆட்கொள்ள மாட்டார். ஆதலால் உங்கள் குடிக்கு அடிமைத் தொழில் செய்ய மாட்டோம்.
கருத்து
இது இறைவனின் திருமேனி வடிவங்களயும், திரு மேனியோடு இருக்கும் உமை, கணபதி மற்றும் குமரனின் வடிவம் குறித்திப் பேசுகிறது.
 
நன்றி – புகைப்படம் : தினமலர்
 

Loading

சமூக ஊடகங்கள்

பரவாதனை

மிகவும் சிறியதான உணவகத்தில்
விலைப் பட்டியல் பார்த்து
ஒரு சிங்கில் பூரிஎன்கிறான் ஒருவன்.
அவனுக்குஒரு பூரி செட்டும் ஒரு தோசையும்என்கிறான்
அவன் நண்பன்.
இமை விலகா அவன் விழிநீரின் ஒசைகள்
என் காதுகளில் மட்டும்.
நிகழ்வு பற்றி எதுவும் அறியாமல்
விரைந்து செல்கிறது ஆடிகாரொன்று.

*பரவாதனைபரவாசனைஎல்லாம் சக்திமயமாக உணர்தல்திருமந்திரம் 1174


புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 15

தூரத்தில் இருக்கும் மரத்தில் அமர்ந்து காலையில் இருந்து ‘க்கூகூகூகூகூகூ’  என்று  அலைவரிசை மாறாமல்  கொண்டிருக்கும் அக்கூ குருவி(ஏன்டா, சரியாதானே பேசறேன்) சுதந்திர நாளினை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறது, 
**************************************************************************************************************************************
உருளைக் கிழங்கு போண்டாவிலும் உ.கிழங்கு உண்டு. மசால் தோசையிலும் உண்டு. ஆனா ஏன் சாதா தோசையை விட மசால் தோசைக்கு  ரூ.10 அதிகமா வாங்குறான். இப்படிக்கு மனைவியிடம் கடன் வாங்கி உ..கிழங்கு போண்டா சாப்பிடுபவர்களிடம் பிடுங்கி தின்று யோசிப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
குழந்தைகளில் ‘ப்ளீஸ்’ என்று கண்களை சாய்த்து தலையை ஆட்டி கேட்கும் குரலில் ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கின்றன.
**************************************************************************************************************************************
ஒரு பொண்ணு ‘wow’  ன்னு status போட்டா 72 லைக் வருது. மனசு ஒடஞ்சி feeling sad ன்னு status போட்டா 1 லைக் வருது,  இப்படிக்கு பத்து லைக் வாங்க ப்ரம ப்ரயத்தனம் செய்வோர் சங்கம்.
Google translation.
A girl ‘wow’ nnu status Bota gets like 72. Otanci heart feeling sad status nnu Bota 1 Like coming up, so you can buy ten Like those prama prayattanam Association.
**************************************************************************************************************************************
‘ஒரு கதை சொல்லுங்கள்’ என்பது மாறி ‘போதும்பா, நிறுத்துங்க,
போரடிக்காதீங்க ‘ என்னும் பொழுதுகளில் வாலிபத்தின் தொடக்கம் நிகழ்கிறது.
**************************************************************************************************************************************
சில தினங்களுக்கு முன்
கல்லூரிப் பேருந்தில் பாட்டு கேட்டுக் கொண்டே செல்கிறேன். வெளியே சிறு தூறல்களாய் மழை. காற்று என் மேனியை தழுவிச் செல்கிறது. பாடல் மாறுகிறது. ‘ எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’. 
பாடலும் அதனோடு இசையும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகிறது. வாழ்வில் இன்னும் வாழவேண்டிய சந்தர்ப்பங்கள் இருப்பதை உணர்கிறேன்.
**************************************************************************************************************************************
ஏன் இந்த பெண்கள் இப்படி கொல கொலன்னு பேசிகிட்டே இருக்கிறார்கன்னு ஆண்களும், ஏன் இந்த ஆண்கள் எதுவுமே இப்படி எதுவுமே கண்டுக்காக இருக்கிறார்கள்ன்னு பெண்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது அனைவரையும் பார்த்து எதுவுமே பேசாமல் வேடிக்கை பார்ப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
 என்னடா நூடுல்ஸ், மைதா மாவ இடியாப்பம் மாதிரி புழிஞ்சி கொஞ்சம் மசாலா போட்டா அது நூடுல்ஸ், அதையும் பித்தளை பாத்திரத்தில் வச்சி கொடுத்தா அது ஸ்டார் ஹோட்டல். போங்கடா, போங்க. இப்படிக்கு பீடி வாங்க காசில்லாமல் பிரியாணிக்கும், நூடுல்ஸ்க்கும் ஆசைப்படுவோர் சங்கம். 
**************************************************************************************************************************************
இன்னைக்கு தேதி 14-10-14 . வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும்.
இப்படிக்கு தேதி பார்த்துக் கொண்டே தன்னையும் குழந்தையாக நினைத்து குழந்தைகள் தினம் கொண்டாட மாத சம்பளம் எதிர் பார்போர் சங்கம்.
(எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை)
**************************************************************************************************************************************
என் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்படது. புற மாறுதல்கள் என்னை சுடுவதில்லை.
**************************************************************************************************************************************
கல்லூரிப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன்.
வெளியே மழை.
‘முதல் மழை எனை நனைத்ததே’ பாடல் ஒலிக்கிறது.
சுற்றுப்புறமும், பாடலும் தனியே ஒரு தள்ளாட்டத்தில் விடுகின்றன.
நினைவுகளை விட கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை என்றுபடுகிறது.
மனது மயங்கிக்கிடக்கிறது.
ஏங்க மணி ஆறு  ஆவுது. எழுந்திரீங்க.சீக்கிரம் காலேஜீக்கு கிளம்புங்க. அப்புறம் பஸ்சை விட்டுடுவீங்க.(யார் இது)
‘அப்பா உங்களுக்கு தெரியாதா. ஸ்கூல் மட்டும் தான் லீவு. உங்க காலேஜூக்கு லீவு இல்ல. கிளம்புங்க சீக்கிரம். நானும் அம்மாவும் நெட்ல படம் பாக்கணும்’  ( இது யாரு)
மனிதர்களின் துக்கங்களில் சந்தோஷம் கொண்டாட ஒரு கூட்டமே அலையுது அப்பா



Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 14

இழப்புகள் ஏற்படுத்தும் காயங்களை விட நினைவுகள் ஏற்படுத்தும் காயம் அதிகமானது.
***************************************************************************************************************************************
வேலைக்கு செல்லத் துவங்குகையில், தாய் கோழி வேகமாக மண்ணைக் கிளறுகிறது. சிறு குஞ்சுகள் உணவை கொத்தி உண்ணத் துவங்குகின்றன. இரை தேடலை எனக்கு முன்பே யாரோ தொடங்கிவிட்டார்கள்.
***************************************************************************************************************************************
விதியின் மீது நம்பிக்கை அற்றவர்கள் திருமணம் செய்து பார்க்கவும்.
***************************************************************************************************************************************
வெளியில் மழை. வீட்டில் கொஞ்சம் நொறுக்குத் தீனி. பில்டர் காபி. நிறைய ராஜா சார் பாடல்கள். கையில் கணையாழியின் கடைசி பக்கங்கள்.
இன்னும் வாழ்வில் சுவாரசியங்கள் இருக்கத்தான் செய்கிறது
***************************************************************************************************************************************
மௌனத்தில் கழியும் நிமிடங்கள் உன்னதமானவை
***************************************************************************************************************************************
சிறகசைப்பின் முற்றுப் பெறுதலில் சூரியன் உதயம் ஆகிறது.
***************************************************************************************************************************************
என்னங்க உங்க வீட்டுக்காரர் எதுவுமே பேசமாட்டேங்கிறார்.
அது எப்பவுமே அப்படித்தான்.
சில நிமிடங்களுக்கு பின்.
அதெல்லாம் என்ன அவாட்ஸ்?
அதுவா அது காலேஜ் படிக்கிறப்போ பேச்சுப் போட்டில வாங்கின பல பரிசுகளாம். அதெல்லாம் தூக்கி போடணும். வேலயத்துப் போய் அடுக்கி வச்சி இருக்கு.
***************************************************************************************************************************************
மரிக்கும் தேகத்தில் மறையாதிருக்கும் நினைவுகள் 
***************************************************************************************************************************************
நோக்கம் பாலினை சூடாக்குவது என்றாலும் அதனை நேரிடையாக செய்யமுடிவதில்லை. அதற்கு ஒரு பாத்திரம் தேவைப்படுகிறது. பாத்திரமும் வெப்பத்தை உள் வாங்குகிறது. அது போல் ஆன்மாக்கள் அடைய வேண்டிய அனுபவ பதிவுகளை இவ்வுடல் மூலமாக வாங்குகிறது.
***************************************************************************************************************************************
கல்லறையில் கட்சிக் கொடிகள். யாருக்காக?

Loading

சமூக ஊடகங்கள்

புதிய தொடக்கம்

கங்கை நீரை
கைகளில் எடுத்து
கலத்தில் இட்ட போது
உடைந்திருந்தது கலமும்,


புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – குழுவுடன் சில நாட்கள் – Team outing

குழுவுடன் சில நாட்கள் – Team outing
‘டீம் அவுட்டிங் குறித்து அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில்’ என்று மெயில் வரும்.
*******************************************************************************************************************************************
பாஸ், மெயில் பாத்திங்களா,
இல்லயே
அட போங்க பாஸ், இந்த வருஷம் டீம் அவுட்டிங் எங்கன்னு மெயில் வந்திருக்கு, பாருங்க.
*******************************************************************************************************************************************
இது டீம் சார்ந்ததாகவோ அல்லது கம்பெனியின் அனைத்து நிலை மனிதர்களும் செல்தாகவோ இருக்கக் கூடும்.
*******************************************************************************************************************************************
இது நிச்சயம் சனி இரவு 8 மணிக்கு மேல் இருக்கும் நிகழ்வுக்கே அழைப்பு விடுக்கப்படும்.
சில வகைகள் :
1. ‘பாதாள லோகம்’ போன்ற திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
2. பக்கத்தில் இருக்கும் நாயர் கடை போன்ற இடங்களில் ‘டீ/டிப்பன்(டேய், போங்கடா, போங்கடா”)
3. இந்தவாரம் ஒரு DJ சிமுகிவி அப்படீன்னு ஒருத்தர் புரோகிராம் பண்ரார். நல்ல இசை நிகழ்ச்சி.
இது போன்ற நிகழ்ச்சிகளில் ‘வருவீர்களா/மாட்டீர்களா’ என்பது போன்ற வினாக்களோடு மெயில் வரும்.
*******************************************************************************************************************************************
இந்த டீம் அவுட்டிங் மகாபலிபுரத்துக்கு பக்கத்துல நடக்குது. நம்ம கம்பெனி புரொகிராமுக்கு மட்டும் தான் ஸ்பான்சர் செய்யுது. சாப்பாடு அவங்கவங்களே  பாத்துக்க வேண்டியதுதான்’
*******************************************************************************************************************************************
இந்த டீம் அவுட்டிங்  உளுந்தூர் பேட்டைகிட்ட இருக்கிற ஒரு வயக்காட்ல நடக்குது. அதனானல எல்லாரும் கார்ல வந்துருங்க. கார் இல்லாதவங்க கார் இருக்கறவங்களோட சேந்து வந்துடுங்க. டோல் சார்ஜ் கார்காரங்களே பாத்துக்கணும்.
*******************************************************************************************************************************************
சில நேரங்களில் குழுக்களுக்கான போட்டிகளும், தனிமனித தெறமய (க்கும்) காட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இதில் ‘நான் ஒரு காட்டுவாசி’ போன்ற எழுத்துக்கள் கிழிக்கப்பட்டு ஒவ்வொருவரிடம் கொடுக்கப்பட்டு எந்த டீம் முதலில் கண்டுபிடிக்கிறது போன்ற விளையாட்டுக்கள் இடம்பெறும்.
தனித்திறம (!!) காட்டும் நிகழ்சியில் யேசுதாஸ் போன்று குரல் உடையவர்களை(நான் உட்பட – வேறு என்ன சொல்ல) அவர்களை பாடவைப்பது. அப்பத்தானே கந்தசாமில வரமாதிரி அவனையே அவன் கட்டையால அடிச்சிக்க முடியும்.
சில வருடங்களுக்கு ஒரு முறை தொலை தூரம் சென்று இரவு தங்கி(கூத்தடித்து என்பது எழுதப்படா விதி) மறுநாள் மாலை(ஞாயிறு இரவு) திரும்பும் நிகழ்வுகளும் உண்டு.
*******************************************************************************************************************************************
மாலை 5 மணிக்கு ஏந்தப்படும் மதுக்கோப்பைகள் மறுநாள் காலை 3 மணிவரை தொடரும் நிகழ்வுகளும் உண்டு.
*******************************************************************************************************************************************
பாஸ், நீங்க சாப்பிட மாட்டீங்களா
பாஸ்(ரொம்ப செல்லமாக, நீ கூப்டும் காரணம் தெரியும்டா) வீட்லே இருந்து வெளியே வந்தாச்சு. வீட்ட மறந்துட்டு ஒரு ரவுண்ட் போங்க, அப்புறம் என்ன?’
*******************************************************************************************************************************************
ஒவ்வொரு டீம் அவுட்டிங்கிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு. பெரிய தலைகள் ஒன்று கூடி இந்த வருஷத்துல எவன போட்டுத்தள்ளலாம்’ என்பதுதான்.
*******************************************************************************************************************************************
மிகப் பெரிய தலைகளுடன் விவாதம் நடக்கும்.
அட்மின் டீம் : இந்த வருஷம் புரொகிராம எங்க வச்சிக்கலாம்.
தலைகள் :  போன வருஷம் போன ஹோட்டல் ஃப்ராடு ஓட்டல், சாப்பாடு பத்துக்கு ஒன்னு ஃப்ரி குடுத்தானக. இந்த வருஷம் பத்துக்கு ஐந்து ஃப்ரி  குடுக்கிற ஓட்டல்லதான் நாம புரொகிராம் நடத்துணும்
*******************************************************************************************************************************************
அடுத்த வருடம்:
அட்மின் டீம் : ??
தலைகள் :  போன வருஷம் போன ஹோட்டல தலைக்கு 121.57 வாங்கிட்டான். நம்ம கம்பெனி வேற சின்ன கம்பெனி. அதால இந்த வருஷம் 121.51 கீழ சாப்பாடு குடுக்ற ஹோட்டலா புடிங்க.
*******************************************************************************************************************************************
இவை அனைத்தும் கம்பெனியில் இருக்கும் ஒவ்வொருவரும் உழைத்து 5 லட்ச ரூபாய் கொடுத்து பதிலுக்கு குச்சி மிட்டாயும், குருவி பொம்மையும் வாங்கும் நிகழ்சிதான்.

Loading

சமூக ஊடகங்கள்

அரவான்

காலங்களை ஒத்து
ஈரமாக இருக்கிறது நினைவுகள்.
எப்போதோ எவராலோ
உரைக்கப்பட்ட வார்த்தைகளை
நீ உணராமல் உரைத்திருக்கலாம்.
அப்போது நான் மட்டுமே அறிந்த
மௌனத்தின் உப்பு சுவைவை
நீ அறியாமல் இருக்கலாம்.
பிறிதொரு நாளில்
மீன் விற்பவளின் கைகளில் இருக்கும்
விசிறி காகிதமாய் அலைகின்றன உன் நினைவுகள்.
காகித விசிறிக்கா கட்டுப்படும் ஈக்கள்?

* அரவான்மஹா பாரதப் போருக்கு முன் பலி கொடுக்கப்பட்ட மாபெரும் வீரன்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடர் ஊர்வலம்

பிணங்களோடு எறியப்படும்
அன்று பூத்த பூக்களின்  அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?


புகைப்படம்Ulaganathan Muthukumarasamy 

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி

மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி
வடிவம்(பொது)
·   உருவத் திருமேனி
·   கிழக்கு முகமான தத்புருஷத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·   அழித்தல் தொழிலுக்குரியவர்
·   உமையவள் அற்று தனித்த வடிவம்
·   இடக்காலை மடித்து
·   வலக்காலைத் தொங்கவிட்டு
·   வலக்கை அபய முத்திரை
·   இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலை
·   காமனை எரித்து தகனம் செய்ததால் காம தகன மூர்த்தி
·   யோகத்தில் வெல்ல காமதகனம் அவசியம் என்பதை சூட்சமாய் உணர்த்தும் வடிவம்
·   மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருப்பார்.
·   மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து விதமாக அமைக்கலாம்.
·   சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடிய மன்மதன்
·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
வேறு பெயர்கள்
 
·         காமதகன மூர்த்தி
·         சக்தி ”மோகவிக்நவிநாசினி”
·         காம அந்தக மூர்த்தி
காமனைக் காய்ந்தான்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·         குறுக்கை, மயிலாடுதுறை
·         கங்கைகொண்ட சோழபுரம்
·         மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
·         திருவைகாவூர், சுவாமிமலை
இதரக் குறிப்புகள்
 
1.
நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலத்துளங்கச் சப்பாணி கொட்டும் – கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
2.
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
     கயிலை யாளி காபாலி …… கழையோனி
திருப்புகழ் 577 கரிபுராரி காமாரி  (விராலிமலை)
3.
“காமாரி காமாம் கமலாஸனஸ்தாம்  – காமாக்ஷி ஸ்தோத்திரம்.  ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச் செய்கிறதே
4.
பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும்  சூக்குமப்பஞ்சாட்சர தீட்சை  வரிசையில்  ய      வ     சி       ம     ந என்று அறியப்படும்.
5.
உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி பிரதிஷ்டை முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.
 
புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!